Quantcast
Channel: காம கதைகள் –தமிழ் ஆபாச படங்கள்
Viewing all 849 articles
Browse latest View live

ஐ ஹேட் யூ, பட் – பகுதி 19

$
0
0

ப்ரியா கூலாக சொல்லிவிட்டு தனது பின்புறத்தை அசைத்து அசைத்து திமிராக நடந்து சென்றாள். அவள் செல்வதையே அசோக் வெறுப்பாக பார்த்துக் கொண்டிருந்தான். அவனுடய மனநிலை புரியாத ஹரி..

“என்ன மாப்ள.. உன் ஆளு உன்னையே இந்த ஏறு ஏறிட்டு போகுது..??” என்று கேலியாக கேட்டுவிட,

மேலும் செக்ஸ் கதைகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் :

தமிழ்காமவெறி தளம்

“த்தா.. அவளை இனிமே என் ஆளுன்னு சொன்ன.. செருப்பு பிஞ்சுடும் உனக்கு..!!” என்று அசோக் கோவத்தை அவனிடம் காட்டினான்.

“ம்க்கும்.. எங்கிட்ட மட்டும் நல்லா எகிறு.. அவகிட்ட அப்படியே பம்மு..!!” ஹரியின் கேலியில் இருந்த உண்மை அசோக்கை அடங்கி போக செய்தது.

“வேற என்ன பண்ண சொல்ற..?? பவரும் கண்ட்ரோலும் அவகிட்டல இருக்கு..??” என்றான் வெறுப்பாக.

“ஹ்ம்ம்.. எல்லாம் அந்த பக்கு மண்டையன் செஞ்ச வேலை மாப்ள.. இந்த மக்கு பீஸைலாம் பாஸ் ஆக்கி.. நம்மளலாம் லூஸாக்குறான்..!!” இவர்கள் பேசிக்கொண்டிருக்கும்போதே கோவிந்த் இடையில் புகுந்து,

“அ..அப்போ இன்னைக்கு தண்ணி இல்லையா பாஸ்..??”

என்று பாவமாக கேட்டான். உடனே ஹரியும் அசோக்கும் மெல்ல தங்கள் தலையை திரும்பி, அவனை பார்த்து முறைத்தார்கள். ஹரிதான் அவனை பார்த்து காட்டமாக சொன்னான்.

“ஏண்டா.. உனக்கு கொஞ்சம் கூட சென்ஸே இல்லையா..?? என்ன பேசுறோம்னு தெரிஞ்சுதான் பேசுறியா..?? மனசாட்சியே இல்லாம எப்படி உன்னால இப்படி பேச முடியுது..?? உன்னல்லாம்…”

ஹரி ஏன் அவ்வளவு டென்ஷனானான் என்று புரியாமல் அசோக்கும் கோவிந்தும் விழிக்க, ஹரி இப்போது அசோக்கின் பக்கமாய் திரும்பி, வருத்தமான குரலில் சொன்னான்.

“பாரு மாப்ள இவனை.. என்ன பேசுறான்னு..!! காலைல இருந்து எவ்வளவு கஷ்டப்பட்டு ப்ளான் போட்ருக்கோம்.. கடைசி நேரத்துல நீ வர முடியலைன்றதுக்காக எல்லாத்தையும் கேன்ஸல் பண்றதா..?? எப்படி இவனால இப்படிலாம் நெனைக்க முடியுது..?? சனியன் புடிச்சவன்.. ‘இன்னைக்கு தண்ணி இல்லையா’ன்னு அபசகுனம் புடிச்ச மாதிரி கேட்டுக்கிட்டு இருக்குறான்..??”

ஹரி பேச பேசவே அசோக்கிற்கு அவன் மீது ஆத்திரம் பற்றிக்கொண்டு வந்தது. அவனை அப்படியே எரித்துவிடுவது போல உஷ்ணமாக பார்த்தான். ஆத்திரத்தை அடக்கிக்கொண்டு, பற்களை கடித்தவாறே சொன்னான்.

“த்தா.. ரெண்டு பெரும் என் கண்ணு முன்னாடியே நிக்காதீங்கடா.. நான் கொலைகாரன் ஆகுறதுக்குள்ள இங்க இருந்து ஓடிப் போயிடுங்க..!!”

சொல்லிவிட்டு தன் சிஸ்டம் பக்கமாய் திரும்பி, கீ போர்டை படபடவென தட்டினான். அசோக்கின் பார்வையில் ஹரி சற்றே மிரண்டு போனான். ஆனால் அவன் மனதில் இருக்கும் கோபத்தின் அளவை இன்னும் அறிந்து கொள்ளாதவனாய்..

“என்ன மாப்ள.. இதுக்குபோய் இவ்ளோ டென்ஷன் ஆகுற..?? இப்போ என்ன.. உன்னால குடிக்க முடியலை.. அவ்ளோதான..?? கவலையை விடு.. உனக்கும் சேர்த்து நான் இன்னைக்கு குடிச்சுடுறேன்.. ஓகேவா..??”

கேட்டுவிட்டு ஹரி இளிக்க, அசோக் அதற்கு மேலும் தன் ஆத்திரத்தை கட்டுப்படுத்த முடியவில்லை. பட்டென திரும்பி ஹரியை சேரோடு எட்டி உதைத்தான். அவன் நிலை தடுமாறிப்போய் தனது டேபிள் மீது சரிந்து, மானிட்டரை கட்டிப் பிடித்துக் கொண்டான்.

அத்தியாயம் 11

a-2

அந்த வாரத்தில் ஒருநாள்.. அதிகாலைப்பனி சூழ்ந்த பெங்களூரில்.. குளிருக்கு நடுங்கிக்கொண்டே பஸ்ஸில் இருந்து குதித்தாள்.. செண்பக லக்ஷ்மி.. செல்வியின் தங்கை..!!!! அவள் பெங்களூர் வருவது அசோக்கிற்கு முன்பே தெரியாது. காலையில் படுக்கையிலிருந்து எழுந்தவன், காபிக்காக கிச்சனுக்கு தூக்க கலக்கத்துடனே நடந்து சென்றபோதுதான், டைனிங் டேபிளில் அமர்ந்து இட்லி விழுங்கிக்கொண்டிருந்த செண்பகம் கண்ணில் பட்டாள். திடீரென அவளை பார்த்ததும் ஓரிரு வினாடிகள் ஆச்சரியத்தில் திகைத்த அசோக், அப்புறம்..

“ஹாய் செம்பு..!!” என்றான் ஆச்சரியமும் தூக்க கலக்கமும் கலந்த மாதிரியான குரலிலேயே. சிறு வயதிலிருந்தே அவன் அவளை செம்பு என்று அழைப்பதுதான் வழக்கம்.

“ஹாய் மாமா..!!” என்றாள் அவளும் இட்லியை விழுங்கி விட்டு. சிறு வயதிலிருந்தே அவள் அவனை மாமா என்று அழைப்பதுதான் வழக்கம்.

“எப்போ வந்த..??”

“இப்ப்ப்.. ஜஸ்ஸ்.. ஒப்ப்.. அக்க்க்க்…” அதற்குள் அவள் அடுத்த இட்லியை வாயில் தள்ளியிருக்க, அவளிடமிருந்து வார்த்தைகள் இப்போது தெளிவில்லாமல் வெளியே வந்து விழுந்தன.

“என்ன.. சொல்லாமக் கொள்ளாம திடீர்னு வந்திருக்குற..??”

அசோக்கின் இந்தக் கேள்விக்காவது தெளிவாக பதில் சொல்லிவிடவேண்டும் என்று, செண்பகம் வாயில் இருந்த இட்லியை அவசர அவசரமாய் அரைத்து விழுங்கினாள். அவள் படுகிற அவஸ்தையை காண சகியாத அசோக்,

“சரி சரி.. நீ சாப்பிடு.. அப்புறம் பேசிக்கலாம்..!!”

என்று சலிப்பாக சொல்லிவிட்டு, மெல்ல நடந்து சென்று கிச்சனுக்குள் நுழைந்தான். உள்ளே.. சட்டியின் மூடியை திறந்து இட்லியின் பதம் பார்த்துக் கொண்டிருந்தாள் செல்வி. இவன் வழக்கமாக விழிக்கும் நேரமும், விழித்ததும் நேராக கிச்சனுக்குத்தான் காபிக்கு வருவான் என்பதும் அவளுக்கு முன்பே தெரியும். அதனால் காபி கலந்து தயாராக எடுத்து வைத்திருந்தாள். அசோக் உள்ளே நுழைந்ததுமே எந்த உணர்ச்சியும் காட்டாமல், காபி டம்ளர் எடுத்து அவனிடம் நீட்டினாள். டம்ளரை கையில் வாங்கிய அசோக், காபியை உறிஞ்சாமல், கண்களை மட்டும் ஒரு ஓரத்திற்கு தள்ளி அண்ணியை குறுகுறுவென பார்த்தபடியே, கம்மலான குரலில் கேட்டான்.

“எப்போ வந்தா..??”

“இப்போத்தான்.. ஒரு மணி நேரம் ஆச்சு..!!” செல்வி வேலை கவனத்துடனே பதிலளித்தாள்.

“ஓஹோ..!!”

சொன்ன அசோக் இப்போது தலையை மெல்ல நீட்டி வெளியே எட்டிப்பார்த்தான். இட்லியை சட்னியில் தொட்டு லபக்கென்று தொண்டைக்குள் போடுகிற செண்பகத்தின் மீது எரிச்சலாய் ஒரு பார்வையை வீசினான். இவர்கள் இங்கிருந்து பேசுவது அவளுக்கு கேட்காது என்ற நம்பிக்கையுடன், இந்தப்பக்கம் திரும்பி சற்றே கிண்டலான குரலில் செல்வியிடம் சொன்னான்.

“வந்ததும் வராததுமா.. தட்டு நெறைய இட்லியை போட்டு.. கவக்கு கவக்குன்னு கவ்விக்கிட்டு இருக்குறா..!! உடம்பை கொறைக்கிற மாதிரி ஐடியாவே இல்லையா உங்க தங்கச்சிக்கு..??” அசோக் கேட்க, செல்வி அவனை ஏறிட்டு முறைத்தாள்.

“உன் கொள்ளிக்கண்ணை கொண்டு போய் வேறெங்கயாச்சும் வை.. என் தங்கச்சி மேல வைக்காத..!!”

“ஹாஹா.. இல்லன்னாலும்..!! ம்ம்ம்ம்.. என்ன விஷயமா வந்திருக்குறா..??”

“இன்டர்வ்யூக்கு..!!”

“ஓ..!! எந்த கம்பெனில..??”

“உங்க கம்பெனிலதான்..!!” செல்வி இயல்பாக சொல்ல, அசோக் மெலிதாக அதிர்ந்தான்.

“எங்க கம்பெனிலயா..?? நான்தான் அவ பயோ டேட்டா ஃபார்வர்ட் பண்ணவே இல்லையே..??”

“ஏன்..?? நீ இல்லைன்னா என்ன.. அவளுக்கு வேற ஆளே கெடைக்காதா..??”

செல்வி சொன்னதில் ஒரு உள்க்குத்து இருந்தது. ஆனால் அசோக் அதையெல்லாம் கவனிக்கவில்லை. நெற்றியை சுருக்கியவாறு சற்றே ஆர்வமாக கேட்டான்.

“நான் இல்லன்னா.. வேற யாரு ஃபார்வர்ட் பண்ணினது..??”

“யாரோ.. அவ கூட படிச்ச பையனாம்..!! அவன் மூலமா அப்ளிகேஷன் அனுப்பிருக்கா.. அவங்களும் இன்டர்வ்யூக்கு வர சொல்லிருக்காங்க.. கெளம்பி வந்திருக்குறா..!! இன்டர்வ்யூ போயிட்டு.. இன்னைக்கு நைட்டே கெளம்பி திரும்ப சென்னை போயிடுவா..!! போதுமா..??”

“ஹ்ம்ம்ம்.. ஒருவேளை அவளுக்கு..” அசோக் இழுத்துக்கொண்டிருக்கும்போதே, அவன் கேட்க வந்ததை செல்வி புரிந்து கொண்டாள்.

“வேலை கெடைச்சுட்டா எங்க தங்குவா..?? அதான..??”

“ம்ம்ம்ம்..!!”

“அதெல்லாம் நீ ஒன்னும் கவலைப்பட வேணாம் சாமி.. அவ வெளிலயே தங்கிக்கிறேன்னு சொல்லிட்டா..!!”

அசோக் இப்போது அமைதியானான். நெற்றியை கீறிக்கொண்டு சிலவினாடிகள் யோசித்தான். ‘எப்படியும் இந்த சோத்து சட்டிக்கு நம்ம கம்பனில வேலை கெடைக்கிறதே கஷ்டம்.. அப்படியே ஒருவேளை கெடைச்சாலும்.. வெளில தங்கிக்க போறா.. எப்பயாச்சும் வீட்டுக்கு வருவா.. வந்துட்டு போறா.. வேறெந்த ப்ராப்ளமும் இவளால வர்றதுக்கு சான்ஸ் இல்ல..!!’ – இந்த மாதிரி அவன் மனதில் தோன்றியதும் சற்றே நிம்மதி அடைந்தான். இருந்தாலும் மனதின் ஓரமாய் அரித்துக்கொண்டிருந்த அந்த கேள்வியை, இப்போது சற்றே நக்கலான குரலில் அண்ணியிடம் கேட்டான்.

“ஹ்ம்ம்.. அக்காவும் தங்கச்சியும் சேர்ந்து வேற எதுவும் ப்ளான் பண்ணலைல..??” அசோக்கின் நக்கலில் செல்விக்கு சுருக்கென்று கோபம் வந்தது.

“ஏண்டா.. கொழுப்பா உனக்கு..?? நான் ஏதோ அறிவில்லாம ஒருநா.. ‘என் தங்கச்சியை கட்டிக்கிறியா’ன்னு கேட்டுட்டேன்.. அதுக்காக என்ன வேணா பேசுவியா நீ..??”

“ப்ச்.. இப்ப என்ன பேசிட்டேன்னு இப்டி டென்ஷனாகுறீங்க.??”

“பின்ன என்ன.. இப்போ எதுக்கு தேவை இல்லாம.. அவளையும் சேர்த்து இதுல இழுக்குற..?? எனக்குத்தான் அந்த ஐடியா இருந்தது.. அவளுக்கு உன்மேல அந்த மாதிரி ஒரு நெனைப்பே இல்ல.. போதுமா..??”

படபடவென்று பேசிய செல்வி, சட்டியை திறந்து ஒவ்வொரு இட்லியாக எடுத்து ஹாட்பாக்சுக்குள் போட்டாள். அசோக் மீது இருந்த எரிச்சலில் வாய்க்குள்ளேயே முனுமுனுத்தாள்.

“மனசுக்குள்ள பெரிய மன்மதா ராசான்னு நெனைப்பு..!!”

“என்னது..?? என்ன சொன்னீங்க..??” அசோக் தன் வலது காதை அவள் பக்கமாய் திருப்பியவாறே கேட்க,

“ஆங்..??? காபி ஆறுறதுக்குள்ள அதை குடிச்சு தொலைடா கடன்காரான்னு சொன்னேன்..!!” செல்வி இப்போது அவன் காதே வலிக்கிற அளவுக்கு சத்தமாக சொன்னாள்.

அசோக் படக்கென காதை பொத்திக்கொண்டு, அண்ணியை ஓரிரு வினாடிகள் முறைத்துப் பார்த்தான். அப்புறம் காபியை வாய் வைத்து உறிஞ்சியவாறே திரும்பி, தனது அறைக்கு நடந்தான். ந்யூஸ் பேப்பர் படித்துக்கொண்டே காபி அருந்தினான். பிறகு குளித்து முடித்து வெளியே வந்து.. ஆபீசுக்கு அவன் கிளம்பிக் கொண்டிருக்கையில்.. செல்வி அவனை அழைத்தவாறே அந்த அறைக்குள் நுழைந்தாள்.

“அசோக்கு..!!”

“ம்ம்.. என்ன அண்ணி..!!”

“நீ ஆபீஸ் போறப்போ.. அப்படியே அவளையும் பைக்ல கூட்டிட்டு போயிடுறியா..??” செல்வி இயல்பாக கேட்டாள்.

“ப்ச்.. என்ன வெளையாடுறீங்களா..?? அதுலாம் என்னால முடியாது.. ஆட்டோல போக சொல்லுங்க அவளை..!!” அசோக் வெறுப்பாக சொன்னான்.

“ஹேய்.. அவளுக்கு பெங்களூர் புதுசுடா.. தனியா போக பயப்படுறா..!! இன்னைக்கு ஒருநாள்தான.. கூட்டிட்டு போயேன்.. ப்ளீஸ்..!!”

செல்வியின் குரல் கெஞ்சலாக ஒலித்தது. அசோக் சற்று தயங்கினான். அண்ணியின் முகத்தையே அவஸ்தையாக பார்த்தான். பிறகு ‘ஒருநாள்தானே..?’ என்று மனதில் தோன்றவும், வேண்டா வெறுப்பாக ஒத்துக்கொண்டான்.

“சரி சரி.. கூட்டிட்டு போறேன்..!!”

“ஹ்ம்ம்.. அப்புறம் இன்னொரு விஷயம்..!!”

“என்ன..??”

“இன்டர்வ்யூக்கு வர்றால.. உன் கம்பனி பத்தி கொஞ்சம் டீட்டெயில் கேக்கனும்னு சொன்னா..!!”

“ம்ம்.. ம்ம்.. எல்லாம் பைக்ல போறப்போ கேட்டுக்கலாம்னு சொல்லுங்க..!! ரெடியாயிட்டாளா அவ..??”

“அவ அப்போவே ரெடியாயிட்டா..!! நீ என்ன.. சாப்பிடலையா..??”

“இல்ல.. டைமாச்சு.. கெளம்புறேன்.. ஆபீஸ்ல போய் சாப்பிட்டுக்குறேன்..!!”

அடுத்த ஐந்தாவது நிமிடம் அசோக்கும் செண்பகமும் வீட்டில் இருந்து கிளம்பினார்கள். கிளம்புவதற்கு முன் ராஜேஷ் அசோக்கை தனியாக அழைத்துச்சென்று கிசுகிசுப்பாக சொன்னான்.

“ஒன்னா பைக்ல போறது இருக்கட்டும் அசோக்.. ஆனா.. உங்க ரெண்டு பேருக்குள்ள.. ஒரு கேப் எப்போவும் இருக்கணும்..!! என்ன சொல்றேன்னு புரியுதா..??”

“ம்ம்.. புரியுது புரியுது.. அதுலாம் நீ சொல்லவே வேணாம்..!!” அசோக் இறுக்கமாகவே சொன்னான்.

வீட்டில் இருந்து கிளம்பிய இரண்டாவது நிமிடம், தெருமுனையில் இருக்கும் அந்த பெட்டிக்கடையில் இருவரும் நின்றிருந்தார்கள். அசோக் குபுகுபுவென புகை விட்டுக் கொண்டிருக்க, செண்பகம் அந்த புகை நாசியில் ஏறிவிடாமல் இருக்க துப்பட்டாவால் மூக்கை பொத்தியவாறு பரிதாபமாக நின்றிருந்தாள். அப்படியே அசோக்கை பார்த்து கேட்டாள்.

“நீங்க்க்.. தம்க்கக்ர்த்.. வீக்க்க்.. தெர்ப்ப்க்..”

அசோக் இப்போது உடனடியாய் டென்ஷன் ஆகிப் போனான்.

“அப்டியே அறைய போறேன் உன்னை..!! வந்ததுல இருந்து இப்படியே பேசிட்டு இருக்குற.. சைனாக்காரனுக்கு ஜல்ப்பு புடிச்ச மாதிரி..!! கையை எடுத்துட்டு பேசுடி.. செம்பு..!!” என்று எரிச்சலாக சொன்னான்.

“கையை எடுத்தா.. மூக்குல ஸ்மோக் ஏறுது மாமா..!!”

“அப்படியா..?? மூக்குல ஒரு சைலன்சர் மாட்டிட்டா சரியா போயிடும்..!!”

“என்னது.. சைலன்சரா..??”

“அடச்சை.. கொஞ்சம் தள்ளி நின்னு பேசு..!!”

“ம்ம்ம்..” சொல்லிக்கொண்டே செண்பகம் சற்று தள்ளி நின்று கொண்டாள்.

“ஹ்ம்ம்.. இப்போ சொல்லு..!! என்ன கேட்க வந்த..??”

“இல்ல.. நீங்க தம்மடிகிறது வீட்ல எல்லாருக்கும் தெரியுமான்னு கேட்டேன்..??”

“ம்ம்.. ம்ம்.. எல்லாருக்கும் தெரியும்..!! அப்பா, அம்மா, அண்ணன், அண்ணி.. இவங்க நாலு பேருக்கு மட்டும் தெரியாது.. அவங்ககிட்ட மட்டும் சொல்லிடாத..!!” திருட்டு தம் அடிக்கிறேன் என்பதையே கெத்தாக சொன்னான் அசோக்.

“ம்க்கும்.. அப்புறம் வேற யார்கிட்ட போய் நான் இதை சொல்றது..?? தம்புகிட்டயா..??” செண்பகம் சலிப்பாக சொன்னாள்.

“அதுசரி.. அண்ணிகிட்ட ஏதோ.. என் கம்பனி பத்தி கேக்கனும்னு சொன்னியாமே..??”

“ம்ம்.. ஆமாம்..!!”

“என்ன அது..??”

“அ..அது.. அது..” செண்பகம் சற்றே தயங்க,

“ம்ம்.. கேளு..!!” அசோக் அவளை தூண்டினான்.

“உ..உங்க கம்பனில..”

“ம்ம்.. எங்க கம்பனில..??”

“சாப்பாடுலாம் எப்படி..??” செண்பகம் கேட்டுவிட்டு பற்களை காட்ட, அசோக் அவளை கடுப்புடன் முறைத்தான்.

“எப்படின்னா…?? எனக்கு புரியலை..!!”

“இல்ல.. அங்க கேண்டீன் இருக்கா.. இல்ல நாமளே சாப்பாடு கொண்டு போகனுமா..??”

“ம்ம்..?? கேண்டீன் இருக்கு.. கேஃப்டீரியான்னு சொல்வாங்க..!!”

“ஓ..!! ம்ம்ம்.. நம்ம சாப்பாடு கெடைக்குமா.. இல்ல இந்த ஊர் சாப்பாடுதானா..??”

“எல்லா ஊர் சாப்பாடும் கெடைக்கும்..!! பதினஞ்சு இருபது ஸ்டால் இருக்கு..!!”

“ஹ்ம்ம்.. அப்புறம்….”

“வேறென்ன..??”

“இடியாப்பம் கெடைக்குமா அங்க..??” செண்பகம் விழிகளை விரித்து ஆர்வமாக கேட்க, அசோக் இப்போது பொறுமை இழந்தான்.

“ஏண்டி.. நீ சாஃப்ட்வேர் டெவலப் பண்ற வேலைக்கு வந்திருக்கிறியா..?? இல்ல.. சாப்ட்டு உடம்பை டெவலப் பண்ணலாம்னு வந்திருக்கியா..??”

“சாஃப்ட்வேர் வேலைக்குத்தான்.. ஏன்..??” செண்பகம் முகம் சுருங்கிப் போனவளாய் சொன்னாள்.

“கேக்குற கேள்விலாம் ஒன்னும் சரி இல்லையே..!! இன்டர்வ்யூல இந்த கேள்விலாம் கேட்பாங்கன்னு உனக்கு யார் சொன்னது..??”

“இன்டர்வ்யூக்குலாம் நல்லா ப்ரிப்பேர் ஆகிட்டேன் மாமா.. அதுலலாம் எந்த டவுட்டும் இல்ல..!!”

“இடியாப்பம் கெடைக்கலைன்னா என்ன பண்றதுன்னுதான் இன்னும் ப்ரிப்பேர் ஆகலையாக்கும்..??”

“ஹ்ம்ம்..!!” செண்பகம் அப்பாவியாக சொல்லிவிட்டு கட்டை விரல் நகத்தை பற்களால் கடித்தாள்.

- தொடரும்

மேலும் செக்ஸ் கதைகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் :

தமிழ்காமவெறி தளம்


ஐ ஹேட் யூ, பட் – பகுதி 20

$
0
0

“ம்ம்ம்.. இடியாப்பம்லாம் கெடைக்கும்.. போதுமா..??”

“ம்ம்ம்..!!” செண்பகத்தின் முகத்தில் இப்போது ஒரு திருப்தியும், பிரகாசமும்.

“அவ்வளவுதானா.. வேற ஏதாவது தெரிஞ்சுக்கனுமா..??” அசோக் சலிப்பாகவே கேட்டான்.

மேலும் செக்ஸ் கதைகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் :

தமிழ்காமவெறி தளம்

“ம்ம்ம்.. ம்ம்ம்.. ம்ம்ம்..” என்று நெற்றியை தேய்த்தவாறு கொஞ்ச நேரம் யோசித்த செண்பகம், அப்புறம்

“ஆங்.. டைமிங்லாம் எப்படி..??” என்று கேட்டாள் பட்டென.

“டைமிங்லாம் ஒன்னும் கெடயாது.. எல்லா நேரமும் கேஃப்டீரியா தெறந்திருக்கும்.. நீ நெனச்ச நேரத்துக்கு போய் கொட்டிக்கலாம்..!!”

“ஐயோ.. நான் ஆபீஸ் டைமிங் கேட்டேன் மாமா..!!”

என்று அவசரமாய் சொன்னவள், ‘ஹஹா.. ஹஹா.. ஹஹா..’ என டூத்பேஸ்ட் விளம்பரத்தில் வரும் மாடல் போல லூசுத்தனமாய் சிரித்தாள். அசோக் அவளையே சில வினாடிகள் முறைப்பாக பார்த்தான். அப்புறம் தீர்ந்து போன சிகரெட்டை கீழே போட்டு ஷூ காலால் நசுக்கியவாறே..

“கெளம்பலாமா..??” என்றான் இறுக்கமான குரலில்.

இருவரும் மீண்டும் பைக்கில் கிளம்பினார்கள். மிதமான வேகத்தில் அசோக் பைக்கை செலுத்த, செண்பகம் ஒரு கையால் அவனுடைய தோளை பிடித்துக்கொண்டு சாலையோர கடைகளை வேடிக்கை பார்த்துக்கொண்டே வந்தாள். வண்டி சில்க்போர்டை தாண்டி வலது பக்கம் திரும்பிய போது, அசோக்கின் புஜத்தை சொறிந்தாள்.

“என்ன..??” அசோக் பைக்கை செலுத்திக்கொண்டே கேட்டான்.

“ரெஸ்யூம் பிரிண்ட் அவுட் எடுக்கணும் மாமா.. ஏதாவது கடைல நிறுத்துங்க..!!”

அடுத்த ஐந்தாவது நிமிடம்.. இருவரும் அந்த புக் ஷாப்பில் இருந்தார்கள்..!! அசோக் புத்தகங்களை எல்லாம் வேடிக்கை பார்த்தவாறு நின்றிருக்க.. செண்பகம் எடுத்த பிரிண்ட் அவுட்டையும், ஜெராக்சையும் ஃபைலுக்குள் திணித்துக் கொண்டிருந்தாள்..!!

“முடிஞ்சதா..??” என்று கேட்ட அசோக்கிடம்,

“இவங்களுக்கு ஒரு ட்வென்டி ஃபைவ் ரூபீஸ் குடுங்க மாமா..!!”

“ஏன்.. உன்கிட்ட இல்லையா..??”

“எங்கிட்ட சேன்ச் இல்ல மாமா.. தவுசண்ட் ரூபீசா இருக்கு..!!”

a-3

அசோக் வேண்டா வெறுப்பாக பர்ஸ் திறந்து பணம் எடுத்துக் கொடுத்தான். ‘ஃபைவ் ரூபீஸ் சேன்ச் இல்லா..’ என்ற கடைக்காரனிடம், ‘பரவால.. சாக்லேட் எடுத்துக்குறேன்..!!’ என்றுவிட்டு பாட்டில் திறந்து சாக்லேட் அள்ளிக்கொண்டாள். அதை அப்படியே தனது பேக்கில் போட்டு.. ஜிப்பை இழுத்து மூடியவள்.. தன்னையே முறைத்துக்கொண்டிருந்த அசோக்கிடம் திரும்பி.. ‘கெளம்பலாமா மாமா..??’ என்றாள் புன்னகையுடன்.

மீண்டும் பைக் பயணம்..!! வண்டி எலக்ட்ரானிக் சிட்டி நோக்கி பறந்துகொண்டிருந்தது. செண்பகம் ஏதேதோ கேள்விகள் கேட்டுக்கொண்டே வர, அசோக் அசுவாரசியமாய் பதில் சொல்லிக்கொண்டே வந்தான். ஆபீஸ் வளாகத்தை நெருங்கும்போது செண்பகம் மீண்டும் அசோக்கின் புஜத்தை சொறிந்தாள்.

“என்னடி…??” இப்போது அசோக்கின் குரல் சற்றே எரிச்சலாக ஒலித்தது.

“ஒரு சின்ன ரெக்வஸ்ட் மாமா..!!”

“என்ன..??”

“அங்க வந்து.. மத்தவங்க முன்னாடி.. என்னை செம்புன்னு கூப்பிடாதீங்க.. ப்ளீஸ்..!! செண்பகம்னு கூப்பிடுங்க..!!”

அவள் கெஞ்சலாக சொல்ல, அசோக் இப்போது அவசரமாய் ப்ரேக் அடித்து வண்டியை நிறுத்தினான். ஹெல்மட் கண்ணாடியை மேலே ஏற்றிவிட்டு, அவளை திரும்பி பார்த்தான். செண்பகம் எதுவும் புரியாமல் திருதிருவென விழித்தாள்.

“என்ன மாமா..??” என்றாள் குழப்பமாய்.

“எறங்குடி..!!” அசோக்கின் குரலில் ஒருவித எரிச்சல்.

“எதுக்கு..??”

“எறங்குன்னு சொல்றேன்ல.. எறங்கு..!!”

அசோக் கத்தவும் செண்பகம் பதறிப்போய் பைக்கில் இருந்து கீழே இறங்கிக் கொண்டாள். சிறிது தூரத்தில் தெரிந்த அவர்களது ஆபீஸ் வளாகத்தை நோக்கி சுட்டு விரலை நீட்டி அசோக் சொன்னான்.

“அந்தா தெரியுது பாரு.. அதுதான் எங்க ஆபீஸ்..!! இங்க இருந்து நடந்தே போ.. கேட்ல செக்யூரிட்டி இருப்பாங்க.. உன் இன்டர்வ்யூ கால் லெட்டர் காட்டினா.. அவங்களே உன்னை கைட் பண்ணுவாங்க.. சரியா..?? ‘உனக்கு தெரிஞ்சவங்க யாராவது இங்க வொர்க் பண்றாங்களா’ன்னு யாராவது உன்னை கேட்டாங்கன்னு வச்சுக்கோ.. தப்பி தவறி கூட என் பேரை சொல்லிடாத.. புரியுதா..??”

“ஏன்..??” செண்பகம் நெற்றியை சுருக்கியவாறு கேட்டாள்.

“ப்ச்.. கேள்விலாம் கேட்க கூடாது..!! சொல்லாத.. அவ்வளவுதான்..!!” அசோக் முறைப்பாக சொன்னான்.

“சரி.. சொல்லலை..!!”

“ஹ்ம்ம்.. குட்..!! நான் கெளம்பட்டுமா..??” கேட்டுவிட்டு அசோக் கிக்கரை உதைக்க போக,

“அப்போ நெக்ஸ்ட் எப்போ மீட் பண்றது..??” செண்பகம் அவசரமாய் கேட்டாள்.

“இன்டர்வ்யூ முடிஞ்சதும்.. இதே எடத்துல வந்து நின்னுட்டு கால் பண்ணு..!!”

“ஹையோ.. இன்டர்வ்யூ மூணு நாலு ரவுண்ட் இருக்கே.. ஈவினிங் ஆயிடுமே..!!”

“ஆகட்டும்.. என்ன இப்போ..??”

“இல்ல.. மதிய சாப்பாட்டுக்கு.. பணம்..!!”

“உன்கிட்ட இல்லையா..??”

“தவுசண்ட் ரூபீசா இருக்கு மாமா..!!”

செண்பகம் அப்பாவியாய் சொல்லிவிட்டு வழக்கம்போல கட்டை விரலை கடித்தாள். அசோக் அவளையே ஓரிரு வினாடிகள் எரிச்சலாய் பார்த்துவிட்டு, பாக்கெட் தடவி ஒரு ஐம்பது ரூபாயை எடுத்து அவளிடம் நீட்டினான். வெறுப்புடனே கிக்கரை உதைத்து, ஆக்சிலரேட்டரை முறுக்கினான்.

அத்தியாயம் 12

a-4

அன்று மாலை ஐந்து மணி வாக்கில்.. அசோக்கின் மொபைலுக்கு செண்பகம் கால் செய்தாள்..!! ப்ரியா தந்திருந்த ஒரு வேலையை திருப்தி இல்லாமல் செய்துகொண்டிருந்த அசோக், ஏற்கனவே எரிச்சலில் இருந்தான்..!! அந்த எரிச்சலுடன்தான் கால் பிக் செய்து காதில் வைத்தான்..!!

“ம்ம்.. சொல்லு செம்பு..!!” என்றான் இறுக்கமாக.

“இன்டர்வ்யூ முடிஞ்சது மாமா..!!” செண்பகத்தின் குரலிலோ ஒரு உற்சாகம்.

“என்னாச்சு.. ஊத்திக்கிச்சா..??” அசோக் ஆசையாக கேட்டான்.

“இல்ல இல்ல.. வேலை கெடைச்சிடுச்சு..!!” அவள் இவன் ஆசைக்கு ஆப்பு வைத்தாள்.

“கிழிஞ்சது..!! இவனுகளுக்கு அறிவுன்றதே கெடயாது..!!” அசோக் இப்போது சலிப்பாக சொன்னான்.

“யாரை சொல்றீங்க..??”

“எங்க கம்பனிகாரனுகளுக்குத்தான்..!! ஏற்கனவே ஒரு தடவை.. அழகா இருக்குன்றதுக்காக ஒரு மக்கு பீஸுக்கு வேலைக்கு சேர்த்துத்தான்.. அது இப்போ அழிச்சாட்டியம் பண்ணிட்டு அலையுது..!! ஹ்ம்ம்.. திருந்தவே மாட்டேன்றானுக.. திரும்ப திரும்ப அதே தப்பு பண்றானுக..!!”

அசோக் செண்பகத்தை மக்கு என்று மறைமுகமாக கிண்டல் செய்தான். அது எல்லாம் அவள் மண்டைக்குள் ஏறவில்லை. ஆனால் அவன் சொன்னதில் இருந்த இன்னொரு விஷயத்தை மட்டும் ஷார்ப்பாக கவனித்தவளாய்..

“ஹை.. அப்போ நான் அழகா இருக்கேன்னு சொல்றீங்களா மாமா..??” என்றாள் அசட்டுத்தனமாய்.

“ம்க்கும்.. அதை மட்டும் கரெக்டா கவனி.. நீயும் திருந்தவே மாட்டடி..!! சரி.. எப்போ ஜாயின் பண்ண சொல்லிருக்காங்க..??”

“கரண்ட் கம்பனில ஒன் மன்த் நோட்டீஸ் பீரியட் இருக்குன்னு சொன்னேன்.. அதான்.. ஒன் மன்த் கழிச்சு ஜாயின் பண்ண சொல்லிருக்காங்க..!!”

“ஹ்ம்ம்..எவ்ளோ தந்தாங்க..??”

“ஃபோர் பாயின்ட் டூ..!!”

“நல்ல பேக்கஜ்தான்..!! ம்ம்ம்.. என்ன பண்ணிட்டு இருக்குற இப்போ..??”

“நீங்க சொன்ன இடத்துல நிக்கிறேன் மாமா..!! கெளம்பி வர்றீங்களா..?”

“இங்க பாரு செம்பு.. மாமாக்கு கொஞ்சம் வேலை இருக்கு.. நான் கெளம்ப லேட் ஆகும்..!! நீ என்ன பண்ற.. அப்டியே ஒரு ஆட்டோ புடிச்சு வீட்டுக்கு ஓடிப் போயிடுற..!! ஓகேவா..??” அசோக் கூலாக சொல்ல,

“எ..என்ன மாமா.. இ..இப்படி சொல்றீங்க..??” அடுத்த முனையில் செண்பகம் பதறினாள்.

“ஏன்.. என்னாச்சு..??”

“நான் எப்படி ஆட்டோல போறது..??”

“ஏன்.. போனா என்ன..??”

“எனக்கு கன்னடா தெரியாதே..!!”

“ஓ.. தெலுங்கு மட்டும் தெரியுமாக்கும்..?? எனக்குந்தான் கன்னடாலாம் தெரியாது..!!”

“ப்ச்.. வெளையாடாதீங்க மாமா..!! எங்கிட்ட ஆட்டோக்கு குடுக்குறதுக்கு சேன்ச் கூட இல்லல.. தவுசண்ட் ருபீசா இருக்குது..!! ப்ளீஸ் மாமா.. நீங்களே வந்து வீட்டுல விட்டுடுங்க.. எனக்கு பயமா இருக்கு மாமா.. ப்ளீஸ்.. ப்ளீஸ்.. ப்ளீஸ்..!!”

இன்னும் சிறிது நேரம் விட்டிருந்தால், செண்பகம் அழுதே இருப்பாள். அந்த அளவிற்கு உடைந்து போன குரலில் அசோக்கிடம் கெஞ்சினாள். அவளுடைய கெஞ்சலை அசோக் சிறிது நேரம் தலையை சொறிந்தவாறு கேட்டுக்கொண்டிருந்தான். அப்புறம்..

“ஏய்.. ஏய்.. ச்சீய்.. அழாத..!! நானே கொண்டுபோய் விட்டுத் தொலைக்கிறேன்.. அங்கேயே நில்லு.. இதோ வந்துடறேன்..!!” என்று வேண்டா வெறுப்பாக சொன்னான்.

“ஹ்ம்ம்.. தேங்க்ஸ் மாமா..!!”

செண்பகம் நிம்மதியாக சொன்னாள். காலை கட் செய்து பேகில் போட்டுக்கொண்டாள். தனியாக நின்றவாறு அங்கும் இங்கும் பராக்கு பார்த்துக் கொண்டிருந்தவள் முன்பு, ஒரு பத்து நிமிடத்திற்கெல்லாம் அந்த பைக் சரக்கென்று வந்து நின்றது. வந்ததுமே செண்பகத்தின் மீது எரிந்து விழுந்தான் அசோக்.

“அனகோண்டா சைசுக்கு இருக்குற.. ஆட்டோல போக பயமா இருக்குன்னு அழற..!! உனக்குலாம் வேலை குடுத்திருக்கானுக பாரு..?? எந்த மக்குப்பையன்டி உன்னை இன்டர்வ்யூ பண்ணினது..??”

“ஹாஹா.. பையன் இல்ல மாமா.. பொண்ணு..!!” செண்பகம் சொல்லிவிட்டு பற்களை காட்டி இளித்தாள்.

“சரி.. மக்குப்பொண்ணு..!!”

“ஐயோ.. பாவம் மாமா அவங்க.. திட்டாதிங்க..!!”

“ம்க்கும்.. உனக்குலாம் வேலை குடுத்திருக்காங்கன்னு சப்போர்ட்டா..?? அவங்க என்ன பாவம்.. உனக்கு சம்பளம் குடுக்கப்போற கம்பனிதான் பாவம்..!! ம்ம்ம்ம்.. அதுசரி.. எந்த டீம்ல ஜாயின் பண்ணப்போறேன்னு ஏதாச்சும் சொன்னாங்களா..??”

“ஆங்.. சொன்னாங்க.. ஏதோ.. யூ.பி.ஸி டீமாம்..!!”

செண்பகம் கேஷுவலாக சொல்ல.. அவள் சொன்ன வார்த்தைகள் தந்த அதிர்ச்சியில்.. அசோக் புரை ஏறியவன் மாதிரி ‘ஹக்.. ஹக்.. ஹக்..’ என்று இருமினான்..!! தலையை தட்டிக்கொண்டான்..!! மிரட்சியாய் செண்பகத்தை பார்த்தான்..!!

“என்னாச்சு மாமா..??” செண்பகம் பதறிப்போய் கேட்டாள்.

“ஹேய்.. அது எங்க டீம்டி..!!” அசோக் கத்தினான்.

“ஓ.. அப்படியா..?? அப்போ.. உங்களுக்கு ப்ரியா அக்காவை தெரியுமா..??” செண்பகம் அடுத்த குண்டை தூக்கி போட, அசோக் மேலும் அதிர்ந்தான்.

“என்னடி சொல்ற..?? ப்ரியா உனக்கு அக்காவா..??”

“ஹ்ம்ம்.. அவங்கதான் மாமா எனக்கு ரெஸ்யூம் ஃபார்வர்ட் பண்ணினாங்க.. இன்னைக்கு என்னை டெக்னிக்கல் இன்டர்வ்யூ பண்ணினதும் அவங்கதான்..!!”

“ப்பா.. முடியலை..!! ப்ரியா எப்படி உனக்கு பழக்கம்..??”

“ஹையோ.. அவங்க எனக்கு பழக்கம் இல்ல மாமா.. அவங்க தம்பி கோகுல், என் காலேஜ் ஜூனியர்.. அவன்தான் எனக்கு பழக்கம்.. அக்கா அக்கான்னு ரொம்ப ப்ரியமா இருப்பான்..!! அவன்தான் என் அக்கா இப்போ டெக்லீட் ஆயிட்டாங்க.. உங்களுக்கு ஹெல்ப் பண்ணுவாங்கன்னு சொன்னான்..!! அவன் மூலமாத்தான் ப்ரியா அக்காக்கு ரெஸ்யூம் அனுப்பினேன்..!! அவங்களே என்னை இன்டர்வ்யூ பண்ணி.. அவங்க டீம்ல ஜாயின் பண்ணிக்க சொல்லிட்டாங்க..!! இப்போத்தான் தெரியுது.. அது உங்க டீம்னு..!!”

செண்பகம் சொல்லிக்கொண்டே இருக்க, அசோக்கிற்கு தலை கிறுகிறுக்க ஆரம்பித்தது. ‘என்னடா நடக்குது இங்க..??’ என்று தலையை சொறிந்து கொண்டான். ‘ஒரு வெத்துவேட்டு இன்னொரு வெத்துவேட்டை இன்டர்வ்யூ பண்ணி.. வேலை வேற குடுத்திருக்கு.. வெளங்குன மாதிரிதான் இந்த கம்பனி..!!’ என்று நினைத்துக் கொண்டான். கொஞ்ச நேரம் அந்த அதிர்ச்சியில் திளைத்திருந்த அசோக், அப்புறம் அதை சமாளித்துக்கொண்டு,

“சரி சரி.. வண்டில ஏறு.. கெளம்பலாம்..!!” என்றான்.

செண்பகம் ஏறி அமர்ந்து கொள்ள, அசோக் வண்டியை ஸ்டார்ட் செய்தான். சில்க் போர்ட் நோக்கி விரட்டினான். நடப்பதை எல்லாம் அவனால் நம்பவே முடியவில்லை. ‘இப்படியும் கூட நடக்குமா..?’ என்று ஒருவித ஆச்சரியத்தில் மூழ்கியவனாகவே பைக்கை மிதமான வேகத்தில் செலுத்திக்கொண்டிருந்தான். வரும்போது அவனை கேள்வி கேட்டு இம்சை செய்த மாதிரியே இப்போதும் செண்பகம் அவன் காதுக்கருகே குனிந்து ஏதேதோ கேட்டுக்கொண்டே வந்தாள். அசோக்கும் எரிச்சலுடனே எல்லா கேள்விகளுக்கும் பதில் சொல்லிக்கொண்டே வந்தான்.

“பேங்களூர்ல பேக்கரிலாம் நெறைய இருக்குதுல மாமா..??” என்றாள் திடீரென.

“ஹையோ.. பேங்களூர் பத்தி ஒரு பெரிய உண்மையை கண்டுபிடிச்சுட்டடி செம்பு.. புத்திசாலி..!! இவ்வளவு கடைல பேக்கரி மட்டும் கரெக்டா உன் கண்ணுல பட்டிருக்கு பாரு..!!”

“ப்ச்.. கிண்டல் பண்ணாதீங்க மாமா..!! நெறைய கண்ணுல பட்டது.. அதான் கேட்டேன்..!!”

“ஹ்ம்ம்.. நீ சொல்றது சரிதான்.. இங்க பேக்கரிலாம் ஜாஸ்தி.. பத்துக்கடைக்கு ஒரு பேக்கரி கண்டிப்பா இருக்கும்..!!”

அசோக் சொல்ல, செண்பகம் இப்போது அமைதியானாள். அப்புறம் ஓரிரு நிமிடங்களுக்கு அவள் எதுவும் பேசவில்லை. எதையோ தீவிரமாக யோசித்தாள். அசோக்கும் நிம்மதியாக பைக் ஓட்டிக்கொண்டிருந்தான். ஆனால் அவனுடைய நிம்மதி நீண்ட நேரத்திற்கு நீடிக்கவில்லை. செண்பகம் அவன் முதுகை மீண்டும் சொறிய, அசோக் திரும்பாமலே எரிச்சலாக கேட்டான்.

“என்னடி..??”

“எனக்கு முட்டை பப்ஸ் சாப்பிடனும் போல இருக்கு மாமா..!!” செண்பகம் குழைந்துகொண்டே சொன்னாள்.

“முட்டை பப்ஸா..??” அசோக் டென்ஷன் ஆனான்.

“ஹ்ம்ம்.. ரொம்ப பசிக்குது..!! ஏதாவது பேக்கரில வண்டியை நிறுத்துங்களேன்.. ப்ளீஸ்..!!”

அசோக் மனதிற்குள்ளேயே ‘ஐயோ.. ஐயோ.. ஐயோ..’ என்று தலையில் அடித்துக் கொண்டான். ரோட்டில் அடுத்ததாக எதிர்ப்பட்ட பேக்கரி முன்பாக வண்டியை நிறுத்தினான். செண்பகம் ஆசையாக குதித்து கீழே இறங்கினாள். அசோக் சலிப்புடன் வண்டியை சாய்த்து ஸ்டாண்ட் போட்டான். இருவரும் அந்த பேக்கரிக்குள் நுழைந்தார்கள்.

- தொடரும்

மேலும் செக்ஸ் கதைகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் :

தமிழ்காமவெறி தளம்

ஐ ஹேட் யூ, பட் – பகுதி 21

$
0
0

“பண்ணி.. பண்ணி..!!” பேக்கரிக்காரன் அன்பாக அவர்களை வரவேற்றான்.

“என்ன மாமா.. பன்னின்றாங்க..??” செண்பகம் அசோக்கின் காதோரமாய் கேட்டாள்.

“ம்ம்..?? உன்னைத்தான் சொல்றாங்க..!! கொஞ்சமா தின்னுனா.. கேட்டாத்தான..??” அசோக் நக்கலாய் சொல்லிவிட்டு முன்னால் நடந்தான்

மேலும் செக்ஸ் கதைகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் :

தமிழ்காமவெறி தளம்

சற்றே பெரிய சைஸ் பேக்கரி அது..!! உள்ளே கண்ணாடி பெட்டிகளில் இனிப்புகளும், காரங்களும் பளபளக்க.. வெளியே ஒரு ஜூஸ் ஸ்டால் போட்டிருந்தார்கள்..!! கடைக்கு உள்ளேயே ஒரு பக்கம் நெட்டுக்க.. நான்கு பேர் அமர்கிற மாதிரி டேபிள்கள் நான்கைந்து வரிசையாக இடப்பட்டிருந்தன..!! எல்லா டேபிள்களையும் இப்போது ஆட்கள் ஆக்ரமித்திருக்க, கடைசி டேபிளில் மட்டும் ஒரே ஒருவர் தனியாக அமர்ந்திருந்தார். குனிந்து ந்யூஸ் பேப்பர் வாசித்தவாறு, டேபிள் மீதிருந்த டீயை அவ்வப்போது எடுத்து உறிஞ்சினார். வயதானவர்.. வரதராஜன் என்பது அவர் பேர்..!!

அசோக்கும் செண்பகமும் அவர் அமர்ந்திருந்த டேபிளில்தான் எதிரே சென்று அமர்ந்தார்கள். இவர்கள் சென்று அமர்ந்ததும் வரதாராஜன் ஒருமுறை நிமிர்ந்து இவர்களை பார்த்தார். அப்புறம் மீண்டும் ந்யூஸ் பேப்பரில் மூழ்கினார். இவர்கள் அவரை கண்டுகொள்ளவே இல்லை. அசோக் சுவர் ஓரமாக அமர, செண்பகம் அவனுக்கு பக்கவாட்டில், அவனை நெருக்கியடித்துக் கொண்டு அமர்ந்தாள். அவளுக்கும் சுவருக்கும் இடையில் சிக்கி நசுங்குவது மாதிரி ஒரு உணர்வு ஏற்பட, அசோக் கடுப்பானான். கிசுகிசுப்பான குரலில் அவளிடம் சொன்னான்.

“ஏய்.. கொஞ்சம் அந்தப்பக்கம் தள்ளி உக்காருடி.. குந்தானி..!!”

“இதுக்கு மேல எங்க தள்றது.. சீட்டு சின்னதா இருக்கு மாமா..!!”

செண்பகம் அசைய மறுத்தாள். அசோக் அவளை வெறுப்பாக முறைத்தான். வாய்க்குள் முணுமுணுத்தான்.

“அந்த சீட்டு சின்னதா இருக்கா..?? உன் சீட்டு பெருசா இருக்குன்னு சொல்லு..!!”

“என்னது.. என்ன சொன்னீங்க..??” அவன் சொன்னதன் அர்த்தம் புரியாமல் செண்பகம் கேட்க,

“ஒண்ணுல்ல விடு..!!” அசோக் சமாளித்தான்.

முட்டை பஃப்ஸ் என்று அழைத்து வந்திருந்தாலும்.. அதோடு சேர்த்து சமோசா, கேக், சான்ட்விச், பிஸ்கட் என்று இஷ்டத்திற்கு ஆர்டர் செய்தாள் செண்பகம்..!! அசோக் ஒற்றை சமோசா வாங்கி கடிக்க, செண்பகம் டேபிள் மீது கொண்டு வந்து வைக்கப்பட்ட அனைத்து ஐட்டங்களையும் ஒவ்வொன்றாக எடுத்து மேய்ந்து கொண்டிருந்தாள்.

வரதராஜன் டீயை முடித்துவிட்டு எழுந்தார். காசு கொடுத்துவிட்டு வெளியே நடந்தார். அவர் அந்தப்பக்கம் சென்றதுமே அசோக் இந்தப்பக்கம் செண்பகத்தின் புஜத்தை பற்றி திருகினான். அவள் வாயில் கேக்கோடு அலறினாள்.

“ஆஆஆஆ..!! என்ன மாமா..??”

“எதுக்க போய் உக்காருடி.. போ..!!”

“ஏன்..??”

“மூச்சு விட முடியல எனக்கு.. அப்டியே என்னை போட்டு அமுக்கிக்கிட்டு இருக்குற..!! போ அந்தப்பக்கம்..!!”

செண்பகம் கேக்கை கடித்துக்கொண்டே நகர்ந்து அந்தப்பக்கம் சென்றாள். வரதராஜன் அவ்வளவு நேரமாய் அமர்ந்திருந்த இருக்கையில் சென்று பொத்தென்று அமர்ந்தாள். அமர்ந்த வேகத்திலேயே.. அடியில் ஸ்ப்ரிங் வைத்திருந்த மாதிரி.. ‘ஆஆஆஆ..’ என்று அலறியவாறே துள்ளிக்கொண்டு எழுந்தாள்.

“ஏய்.. என்னாச்சு..??” அசோக் பதற்றமாய் கேட்டான்.

“குத்திடுச்சு மாமா..!!” செண்பகம் புட்டத்தை தடவிக்கொண்டே சொன்னாள்.

“எது குத்துச்சு..??”

அசோக் கேட்டுக்கொண்டிருக்க, செண்பகம் குனிந்து இருக்கையில் கிடந்த அந்த பேப்பர் பொட்டலத்தை கையில் எடுத்தாள். ஆர்வமாக பிரித்தாள்.

“என்னடி அது..??”

“ஏதோ தாலிச்சரடு மாமா..!!”

“எங்க.. குடு..!!”

அசோக் கையில் வாங்கிப் பார்த்தான். சற்றுமுன் தனக்கு எதிரே அமர்ந்திருந்தவர்தான் அதை தவறிப்போய் விட்டிருக்கவேண்டும் என்று நினைத்தான். உடனே படக்கென திரும்பிப் பார்த்தான். வாசலில் வரதராஜன் நின்றிருந்தார். அவருடைய முகத்தை சரியாக கவனிக்காவிட்டாலும், அவர் அணிந்திருந்த சட்டை நிறத்தை வைத்தே அசோக்கால் இங்கிருந்தே அவரை அடையாளம் கண்டுகொள்ள முடிந்தது.

“ஹேய் செம்பு.. அவர்தான் இதை விட்டுட்டு போயிருப்பார்னு நெனைக்கிறேன்..!!”

“ஹ்ம்ம்.. ஆமாம் மாமா.. எனக்கும் அப்படித்தான் தோணுது..!!”

“இரு.. நான் அவர்ட்டயே கேட்டு.. இதை குடுத்திட்டு வர்றேன்..!!” அசோக் எழுந்து கொள்ள,

“சரி மாமா..!!” சன்னமான குரலில் சொன்ன செண்பகம், சமோசாவை கடிக்க குனிந்தாள்.

அசோக் சற்று பொறுமையாகவே நடந்து வெளியே வந்தான். ஆனால் வெளியே வந்ததும்தான் அவனது பொறுமையான நடை எவ்வளவு பெரிய தவறு என்று புரிந்துகொண்டான். வரதராஜன் அதற்குள்ளாகவே தனது ஸ்கூட்டரை ஸ்டார்ட் செய்திருந்தார். அசோக் உடனே பதற்றம் தொற்றிக்கொண்டவனாய்..

“ஹலோ.. ஸார்..” என்று கத்தினான்.

ஆனால் அந்த வார்த்தைகள் வந்து காதில் விழுவதற்கு முன்பே வரதராஜன் வண்டியை விரட்டியிருந்தார். ‘இப்போது என்ன செய்வது..??’ என்று அசோக் ஒரு சில வினாடிகள் எதுவும் புரியாமல் விழித்தான். ‘இந்த பேக்கரி கடைக்காரனிடம் கொடுத்து.. உரியவரிடம் ஒப்படைக்க சொல்லலாமா..?’ என்று யோசித்தான். அப்புறம் அந்த கடை முதலாளியின் முகத்தை பார்த்ததும், அவன் மீதிருந்த நம்பிக்கை போய் அந்த யோசனையை கைவிட்டான். திடீரென ஒரு யோசனை அவன் மனதில் உதித்தது. உடனே தன் பைக் மீது ஏறி அமர்ந்து கிக்கரை உதைத்தான்.

a-5

வரதராஜன் மிதமான வேகத்திலேயே ஸ்கூட்டரை செலுத்திக் கொண்டிருந்தார். ஒரு இரண்டு கிலோ மீட்டர் தூரத்திலேயே அசோக்கால் அவரை விரட்டிப் பிடிக்க முடிந்தது. திடீரென குறுக்கே வண்டியை நிறுத்தி வழிமறித்த அசோக்கை வரதராஜன் சற்றே திகைப்பாக பார்த்தார். அசோக் பைக்குக்கு ஸ்டாண்ட் போட்டுவிட்டு அவரை நோக்கி நடந்து வந்தான்.

“எ..என்ன தம்பி..??” வரதராஜன் பதற்றமாக கேட்டார்.

“நீங்க.. அந்த பேக்கரில் டீ சாப்பிட்டீங்கல்ல..??”

“ம்ம்..ஆ..ஆமாம்..!! நீ..நீங்கதான எதுத்தாப்புல.. ஒரு பொண்ணோட..??”

“ஹ்ம்ம்.. நான்தான்..!!”

“எ..என்ன விஷயம் தம்பி..??”

“நீங்க அந்த பேக்கரில ஏதாவது பொருளை விட்டுட்டு வந்துட்டீங்களா..??”

“எ..என்ன சொல்றீங்க நீங்க..??” வரதராஜன் ஒருகணம் புரியாமல் விழிக்க,

“கொஞ்சம் காஸ்ட்லியான பொருள்.. அது என்னன்னு கரெக்டா சொல்லிட்டீங்கனா.. உங்கிட்ட குடுத்துடுவேன்..!!” அசோக் நிதானமாக சொன்னான்.

வரதராஜனுக்கு அப்புறமும் ஓரிரு வினாடிகள் எதுவும் புரியவில்லை. அப்புறந்தான் திடீரென ஞாபகம் வந்தவராய் தனது பேன்ட் பாக்கெட்டை அவசரமாக தடவிப் பார்த்தார். பார்த்தவர் பக்கென அதிர்ந்து போனவராய் அசோக்கை ஏறிட்டார்.

“தாலிச்சரடு.. என் சம்சாரத்தோட தாலிச்சரடு..!!”

என்றார் பதட்டமாக. அசோக் இப்போது அவரைப் பார்த்து அழகாக புன்னகைத்தான். தன் கைக்குள் மறைத்து வைத்திருந்த அந்த காகிதப் பொட்டலத்தை அவரிடம் நீட்டினான். வரதராஜன் படக்கென அதை வாங்கிக்கொண்டார். அவரசமாய் பிரித்து பார்த்தார். அந்த தாலிச்சரடை பார்த்ததும் அவருடைய கண்களில் ஓர் பிரகாசம். அந்த பொட்டலத்தை கைக்குள் வைத்து அழுத்திப் பற்றிக்கொண்டார். அப்படியே தனது மார்பின் இடது புறமாய் அதை வைத்துக் கொண்டார். விழிகளில் இப்போது நீர் அரும்ப அசோக்கை பார்த்து..

“ரொம்ப நன்றி தம்பி..!!!!” என்றார் நன்றிப்பெருக்குடன்.

“ஐயோ.. இதுக்கெதுக்குங்க நன்றிலாம்..?? உங்களுக்கு சொந்தமான பொருளை உங்ககிட்ட கொண்டு வந்து சேர்த்தேன்.. அவ்ளோதான..??”

“இல்ல தம்பி.. இந்தக்காலத்துல இதுக்கே ஒரு பெரிய நல்ல மனசு வேணும்..!! என் வாழ்நாள் முழுக்க உங்களை நான் மறக்க மாட்டேன்..!! ரொம்ப ரொம்ப நன்றி தம்பி..!!”

“பரவால ஸார்.. விடுங்க..!!”

வரதராஜன் இப்போது மீண்டும் தலையை குனிந்து அந்த தாலி சரடையே வைத்த கண் வாங்காமல் பார்த்தார். அவருடைய விழிகள் ரெண்டும் அகலமாய் விரிந்து போயிருக்க, ஒருமாதிரி உணர்ச்சிவசப்பட்டவராய் காணப்பட்டார். சில வினாடிகள் அந்த மாதிரி அந்த தாலி சரடை வெறித்து பார்த்துக் கொண்டிருந்தவர், அப்புறம் அசோக்கை ஏறிட்டு சொன்னார்.

“என் கல்யாணத்தப்ப.. ஒரு மஞ்சக்கயித்தைத்தான் என் சம்சாரம் கழுத்துல தாலின்னு கட்டுனேன் தம்பி..!! அவளுக்குன்னு நான் வாங்குன மொத தங்கம் இதுதான்.. மொத தங்கம் மட்டும் இல்ல.. கடைசி தங்கமும் இதுதான்..!! அவ போய் இப்போ இருபது வருஷம் ஆச்சு.. இத்தனை நாளா அவ ஞாபகமா இதை பொட்டிக்குள்லையே பத்திரமா வச்சிருந்தேன்.. இன்னைக்குத்தான் வெளில எடுத்தேன்..!! எடுத்த அன்னைக்கே.. தவறிப்போய்..!! நல்லவேளை.. அந்த ஆண்டவனா பாத்து உங்களை அனுப்பி வச்சிருக்கான்..!!” தழதழத்த குரலில் அவர் பேசியதில் அசோக் நெகிழ்ந்து போனான்.

“ஹ்ம்ம்.. இத்தனை நாளா ஞாபாகார்த்தமா வச்சிருந்ததை.. இப்போ வெளில எடுக்குற சூழ்நிலைன்னா..?? ஏதாச்சும் கஷ்டமா உங்களுக்கு..??” அசோக் கவலையாக கேட்க, வரதராஜன் இப்போது புன்னகைத்தார்.

“ஹஹா.. கஷ்டம்லாம் ஒன்னும் இல்ல தம்பி..!! என் பொண்ணுக்கு மாப்பிள்ளை பாத்துட்டு இருக்கேன்.. இதை அழிச்சு அவளுக்கு ஏதாவது நகை செய்யலாம்னு வெளில எடுத்தேன்..!! ஏற்கனவே கொஞ்சம் சேத்து வச்சிருக்கேன்.. இருந்தாலும்.. இன்னும் ஒரு பத்து பவுன் இருந்தா நல்லதுன்னு தோணுச்சு.. அதான்..!! ம்ம்ஹ்ஹ்ம்ம்.. என்ன பண்றது தம்பி.. இந்தக்காலத்துல நல்ல மாப்பிள்ளை கெடைக்கனும்னா.. இந்த மாதிரி நெறைய நகை சேத்து வச்சுக்க வேண்டி இருக்கே..?? ஹாஹா..!!” வரதராஜன் சொல்லிவிட்டு சிரிக்க, அசோக் இப்போது புன்னகையுடன் அவரிடம் கேட்டான்.

“ஒன்னு சொன்னா தப்பா எடுத்துக்க மாட்டீங்களே..??”

“ம்ம்.. சொல்லுங்க தம்பி..!!”

“நெறைய நகை கேக்குறவன் நல்ல மாப்பிள்ளை இல்லைங்க.. உங்ககிட்ட இருந்து எதையும் எதிர்பார்க்காதவன்தான் நல்ல மாப்பிளை..!!”

அசோக் சொன்ன வார்த்தைகளில் இருந்த கூர்மையில் வரதராஜன் ஒருகணம் திகைத்தார். அந்த வார்த்தைகளின் உள் அர்த்தத்தை முழுமையாக உணர்ந்து கொள்ள முனைந்தார். அப்புறம் சற்றே மனத் தெளிவடைந்தவராய் அசோக்கை ஏறிட்டு, புன்னகையும் பெருமிதமுமாக பார்த்தார். அவனுடைய முதுகை இதமாக தடவி..

“புரியுது தம்பி..!! உங்களை சந்திச்சதுல எனக்கு ரொம்ப சந்தோஷம்..!!” என்றார்.

“சரி ஸார்..!! எனக்கு நேரம் ஆச்சு.. நான் கெளம்புறேன்..!! மொதல்ல இந்த தாலிச்சரடை கொண்டு போய் வீட்ல பத்திரமா வைங்க..!! கவலைப்படாதீங்க.. உங்க பொண்ணுக்கு.. உங்ககிட்ட இருந்து நெறைய எதிர்பார்க்காத.. நெஜமான நல்ல மாப்பிள்ளை கெடைப்பான்..!!”

சொல்லிவிட்டு அசோக் திரும்பி நடந்தான். தனது பைக்கில் ஏறி அமர்ந்தான். வண்டியை ஸ்டார்ட் செய்ய போகும்போதுதான், அவ்வளவு நேரமாய் தன் மனதில் குறுகுறுத்துக் கொண்டிருந்த ஒரு விஷயத்தை வரதராஜனிடம் திரும்பி சொன்னான்.

“உங்களை எங்கயோ பாத்த மாதிரி இருக்கு ஸார் எனக்கு.. ஆனா.. எங்கன்னுதான் ஞாபகம் வரலை..!!”

“ஹாஹா.. அப்படியா..?? நான் உங்களை எங்கயும் பாத்த மாதிரி எனக்கு ஞாபகம் இல்லயே..!!”

“ஹ்ம்ம்.. உங்களுக்கு சொந்த ஊர் மதுரைப்பக்கமா..??”

“இல்ல தம்பி.. கிருஷ்ணகிரி.. இங்க வந்து ரொம்ப வருஷம் ஆச்சு..!!”

“ஓ.. ஓகே ஓகே..!! சரி ஸார்.. பாக்கலாம்..!!”

அசோக் வண்டியை கிளப்பினான். ஒரு யு டர்ன் அடித்து திருப்பினான். ‘எங்கே பார்த்திருக்கிறோம் இவரை..??’ என்று சில வினாடிகள் யோசனையுடனே வண்டியை செலுத்தினான். அப்புறந்தான் பேக்கரியில் தனியாக விட்டு வந்த செண்பகம் ஞாபகத்துக்கு வந்தாள். உடனே ஆக்சிலரேட்டரை முறுக்கி வண்டியை ஸ்பீடாக விரட்டினான்.

வரதராஜனை அசோக் பார்த்திருக்கிறான். ப்ரியாவின் பர்சனல் ஃபோட்டோக்களை பார்வையிடுகையில் அதில் ஒரு ஃபோட்டோவில் அவரை பார்த்திருக்கிறான். ஆனால் அது சில வருடங்களுக்கு முன்பு எடுத்த போட்டோ. அதில் கருகருவென நிறைய இருந்த அவரது தலைமுடி, இப்போது வெளுத்துப் போய் வெகுவாக குறைந்து போயிருந்தது. அதனால்தான் அவனுடைய மனதுக்கு சரியாக அவர் பிடிபடவில்லை.

அசோக் பேக்கரியை அடைந்தபோது.. செண்பகம் முகமெல்லாம் வியர்த்து வடிந்து போய் பதற்றமாக காணப்பட்டாள்..!! படபடக்கும் இதயத்துடன் இவனை காணாமல் தவித்துக் கொண்டிருந்தவள்.. இவனை பார்த்ததுமே ‘அப்பாடா..!!!’ என்று ஒரு நிம்மதி பெருமூச்சு விட்டாள்..!! ஆனால்.. அடுத்த நொடியே அவன் மீது ஒரு கோவம் வந்து மனதுக்குள் குடியேற.. கையை மடக்கி அவனுடைய புஜத்தில் ஓங்கி குத்தினாள்..!!

“ஆஆஆ..!!” அசோக் கத்தினான்.

“எங்க போயிட்டீங்க.. என்னை தனியா விட்டுட்டு..!! நான் எப்படி பயந்து போயிட்டேன் தெரியுமா..??”

“அவர் வண்டியை எடுத்துட்டு கெளம்பிட்டார்மா.. வெரட்டி புடிச்சு போய் குடுத்துட்டு வந்திருக்கேன்..!!”

“சொல்லிட்டு போறதுதான..??”

“சொல்றதுகுலாம் நேரம் இல்ல..!! ஒரு அஞ்சு நிமிஷந்தான.. அதுக்குள்ள இப்படி டர் ஆகிப்போய் உக்காந்திருக்குற..??”

“ஆமாம்.. நீங்க பாட்டுக்கு திடீர்னு காணாம போயிட்டீங்க.. பில்லுக்கு கூட பணம் குடுக்கலை..!!”

“அதான் தவுசண்ட் ருபீஸ் வச்சிருக்கேன்னு சொன்னியே.. அதை எடுத்து குடுக்குறதுதான..??” அசோக் கிண்டலாக கேட்க,

“அ..அது.. அது.. தவுசண்ட் ருபீஸ்க்கு இவன்கிட்ட சேன்ஜ் இருக்காதுல..??” செண்பகம் திக்கி திணறி சொன்னாள்.

“ப்ச்.. சேன்ஜ் இருக்காதுன்னு நீயா சொல்லிக்கிறதா..?? அவன்ட்ட குடுத்து பாத்தாத்தான தெரியும்..?? எடு அந்த தவுசண்ட் ருபீசை.. இவன்ட்ட சேன்ச் கேட்டுப் பாக்கலாம்..!!” சொல்லிக்கொண்டே அசோக் அவளுடைய கையில் இருந்த பர்ஸை பறிக்க,

“ஐயையோ.. இவன்ட்ட இருக்காது மாமா..!!” செண்பகம் பதறினாள்.

அசோக் அதற்குள்ளாகவே அவளுடைய பர்ஸை திறந்திருந்தான். பர்சுக்குள் பார்வையை வீசியவன் பலத்த அதிர்ச்சிக்கு உள்ளானான். உள்ளே ஒரு கசங்கிப்போன பத்து ரூபாய் நோட்டும், சில சில்லறை காசுகளும், நிறைய காற்றும் மட்டுமே இடத்தை அடைத்துக்கொண்டு இருந்தன. அதைப்பார்த்து நொந்துபோன அசோக், நிமிர்ந்து செண்பகத்தை ஏறிட்டு, அவளை கேவலமாய் ஒரு பார்வை பார்த்தான். அவளோ கட்டைவிரலை பற்களுக்கு இடையில் வைத்து கடித்தவாறே அசடு வழிந்தாள். அசோக் அந்த பத்து ரூபாய் நோட்டை எடுத்து அவள் முகத்திற்கு முன்பாக ஆட்டிக்காட்டியவாறே கடுப்புடன் கேட்டான்.

“இதுதான் உங்க ஊர்ல தவுசண்ட் ருபீசா செம்பு..??”

“இ..இல்ல மாமா.. அந்த தவுசண்ட் ருபீஸ் இங்க இல்ல..!!” செண்பகம் ஏதோ சமாளிக்க முயன்றாள்.

“வேற எங்க இருக்கு..?? ஏ டி எம் மெஷினுக்குள்ளயா..??” அசோக் பற்களை கடித்தவாறே கேட்டான்.

“ஐயோ.. இல்ல மாமா.. வீட்ல இருக்கு.. எடுத்துட்டு வரலாம்னு நெனச்சேன்..!! அக்காதான்.. செலவெல்லாம் அசோக் மாமா பாத்துப்பாரு.. நீ..” செண்பகம் சொல்லிக்கொண்டிருக்கும்போதே,

“வெறுங்கையை வீசிட்டு போன்னு சொன்னாங்களா..??”

“ஹ்ம்ம்..!!”

செண்பகம் சொல்லிவிட்டு கட்டைவிரலை கடிக்க, அசோக் நொந்து போனவனாய் தலையில் அடித்துக் கொண்டான்.

- தொடரும்

மேலும் செக்ஸ் கதைகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் :

தமிழ்காமவெறி தளம்

ஐ ஹேட் யூ, பட் – பகுதி 22

$
0
0

அத்தியாயம் 13

வந்த வேலை வெற்றிகரமாக முடிந்த திருப்தியில், அன்று இரவே செண்பகம் சென்னைக்கு கிளம்பினாள். அசோக்தான் அவளை மடிவாலா சென்று பஸ் ஏற்றிவிட்டு, வழியனுப்பி வைத்தான். அசோக்கும் செண்பகமும் மடிவாலாவில் ஒரு ப்ரைவேட் ட்ராவல்சில் நின்றுகொண்டிருந்தபோது, ப்ரியாவும் வரதராஜனும் அவர்கள் வீட்டில் அசோக்கைப் பற்றி பேசிக்கொண்டிருந்தார்கள். அன்று நடந்த சம்பவம் பற்றி மகளிடம் உரைத்த வரதராஜன், அசோக் பற்றி மிக பெருமையாக பேசினார். எல்லாம் கேட்ட ப்ரியா அதிசயித்துப் போனாள்.

மேலும் செக்ஸ் கதைகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் :

தமிழ்காமவெறி தளம்

“ச்ச.. இந்தக்காலத்துல கூட இந்த மாதிரிலாம்.. தன்மையான பசங்க இருக்காங்களா..?? ரொம்ப ஆச்சரியமா இருக்கு டாடி..!! க்ரேட் கேரக்டர்..!!!!” என்று அந்தப்பையன் அசோக் என்று தெரியாமல் அவனை புகழ்ந்தவள், அடுத்த நொடியே..

“ம்ம்ஹ்ஹ்ம்ம்.. எங்க டீம்லயும்தான் ஒன்னு இருக்குது.. சரியான தறுதலை..!!” என்று தெரிந்தே அவனை திட்டினாள்.

அசோக்கிற்கும் ப்ரியாவிற்குமான பிரச்சினை நாளொரு மோதலும், பொழுதொரு சண்டையுமாக வளர்ந்து கொண்டேதான் இருந்தது. அவர்கள் சண்டையுடன் சேர்ந்து அவர்களுடைய டீம் டெவலப் செய்த மென்பொருளும் மெல்ல மெல்ல வளர்ச்சி கண்டது. செண்பகம் வந்து சென்ற இரண்டாவது நாள்.. முதல் கட்டமாக சில அடிப்படை அம்சங்கள் கொண்ட மென்பொருளை க்ளயண்டிற்கு டெலிவர் செய்தார்கள். க்ளையன்ட் நிர்ணயித்திருந்த காலக் கெடுவுக்குள்ளேயே அதை செய்து முடித்திருந்தார்கள். அவர்களுடைய கம்பெனி அதை பெரும் வெற்றியாக கொண்டாடியது. க்ளையன்ட் அந்த மென்பொருளின் தரத்தில் மகிழ்ந்து போய் அனுப்பிய வாழ்த்து செய்தி, அவர்களுடைய சந்தோஷத்தை இரட்டிப்பாக்கியது. அந்த வெற்றிக்கு மிக முக்கிய காரணமாக இரண்டு பேரை குறிப்பிட வேண்டும்.

முதல் காரணம் ப்ரியா..!! அசோக் அவளுடைய ஈகோவை தூண்டி விட்டிருந்ததில் அவள் ஒரு வேகம் கொண்டிருந்தாள். இந்த ப்ராஜக்டை வெற்றிகரமாக முடித்துக் காட்ட வேண்டும் என்ற ஒரு வெறியில் இருந்தாள். அவள் ஆன்சைட் சென்றதால் கிடைத்த க்ளையன்ட் கம்பனி பிசினஸ் டீமின் அறிமுகம், ப்ராஜக்டை கையாள்வதில் அவளுக்கு மிகவும் உதவியாக இருந்தது. எந்த தயக்கமும் இல்லாமல் மிக இயல்பாக, அவர்களை இங்கிருந்து அவளால் அணுக முடிந்தது. அதே மாதிரி இங்கே டீமில் இருப்பவர்கள் அனைவரும் தனது நண்பர்கள் எனினும், வேலை விஷயத்தில் ரொம்பவே அக்ரஸிவாக நடந்து கொண்டாள். குவாலிட்டி, டெட்லைன் என்ற இரண்டு விஷயங்களிலும் மிக கடுமையாக நடந்து கொண்டாள். ‘யு ஆர் டூயிங் எ குட் ஜாப் ப்ரியா..!!’ என்று பாலகணேஷ் தனது கட்டை விரலை உயர்த்தி அவளை அடிக்கடி பாராட்டுவார்.

வெற்றிக்கு இரண்டாவது காரணம் வேறு யாரும் அல்ல.. அசோக்கேதான்..!! அவனுக்கு ப்ரோமோஷன் கிடைக்காதது அவனிடம் ஒரு கோவத்தை உண்டு பண்ணியிருந்தாலும், அந்த கோவத்தை அவன் வேலையில் காட்டவில்லை. எப்போதும் போலவே சின்ஸியராக வேலை பார்த்தான். அவனுடைய மாட்யூலை மேற்பார்வையிட்ட கிறிஸ்டோஃபர் ‘இட்ஸ் ப்ரில்லியன்ட் மேன்..!!’ என்று மனமுவந்து பாராட்டினான். ப்ரியா லீட் ஆனது அசோக்கிற்கு ஒரு எரிச்சலை ஏற்படுத்தியிருந்தாலும், ‘அவள் தோற்க வேண்டும்’ என்று குறுக்கு புத்தியுடன் அவன் நடந்து கொள்ளவில்லை. டீம் ஸ்ப்ரிட் அவனை விட்டு விலகவில்லை. ப்ரியாவைத் தவிர மற்றவர்கள் உதவி என்று வருகையில், எப்போதும் போலவே புன்னகையுடன் உதவி செய்தான். வேலையை முடிக்க முடியாமல் மற்றவர்கள் திணறும்போது, கைகொடுத்தான்..!!

சுருக்கமாக சொல்லப்போனால்.. ப்ரியாவின் டீம் மேனேஜ்மன்ட் திறமையும்.. அசோக்கின் டெக்னிக்கல் அறிவுமே.. ப்ராஜக்டின் முதல் கட்டத்தை வெற்றிகரமாக தாண்ட வைத்தன..!!

டீமில் இருக்கும் அனைவரையும் பாராட்டி கம்பனி மேனேஜ்மென்ட் வாழ்த்து சொன்னது. ப்ரியாவுக்கு மட்டும் கொஞ்சம் எக்ஸ்ட்ரா பாராட்டு..!! முதல் இன்னிங்ஸிலேயே செஞ்சுரி அடித்த திருப்தி ப்ரியாவிற்கு..!! ஆனால் வழக்கம்போல சிறுபிள்ளை மாதிரி அவள் சந்தோஷத்தில் துள்ளிக் குதிக்கவில்லை.. ஆர்ப்பாட்டம் செய்யவில்லை..!! அசோக்கிடம் கற்றுக்கொண்ட பாடம், அவளிடம் ஒரு முதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது என்றுதான் சொல்லவேண்டும்..!! அவ்வளவு சந்தோஷத்திலும் கால்கள் தரையில் பட நிற்பது ப்ரியாவிற்கு ஒரு புதுவித உணர்வை கொடுத்தது..!! பிடித்திருந்தது அவளுக்கு அந்த உணர்வு..!!

‘”எல்லாம் டெவலப் பண்ணினது நாம.. இவளுக்கு மட்டும் ஓவர் பாராட்டு..!!”

என்று அசோக் ஹரியிடம் சொல்லி கிண்டல் செய்தது காதில் விழுந்தும், விழுந்த மாதிரி காட்டிக்கொள்ளவில்லை அவள். தலையை குனிந்தவாறே அவர்களை கடந்து சென்றாள். தனது அறைக்கு சென்று.. கண்ணாடி முன் நின்று.. தனிமையில்.. தன்னைத்தானே பார்த்து.. ‘கலக்குறடி ப்ரியா..!!’ என்று மட்டும் சொல்லிக்கொண்டாள்.

இரண்டாவது கட்ட டெவலப்மன்ட் வேலைகளை ஆரம்பித்தபோதுதான், க்ளயன்ட்டிடம் இருந்து ஒரு புதுவித இம்சை வந்தது..!! கடலை எண்ணையை ஊற்றிக்கொண்டு இருக்கும்போதே ‘நல்லெண்ணைதான..?’ என்று கேட்பார்கள் என்று சொன்னேன் அல்லவா..?? அது மாதிரியான இம்சை..!! ஒப்பந்தத்தில் இருந்த அவர்களது தேவைகளில் சில மாற்றங்களை கொண்டு வந்தார்கள்.. புதிதாக சில அம்சங்களை சேர்க்க விரும்பினார்கள்..!! ‘பார்வதி ஓமனக்குட்டன் பத்து பேரை பறந்து பறந்து அடிக்கிற மாதிரி ஒரு ஃபைட் இருந்தா நல்லா இருக்கும்’ என்பது மாதிரி..!! ரெகயர்மன்ட் சேஞ்ச்..!!

க்ளையன்ட் ப்ரபோஸ் செய்த ரெகயர்மன்ட் சேஞ்ச் கொஞ்சம் கிரிட்டிகலான விஷயம்..!! இவர்கள் ஏற்கனவே டெவலப் செய்திருந்த மென்பொருளின் பல அம்சங்களை பாதிக்க கூடியது..!! கவனமாக கையாளப்பட வேண்டியது..!! க்ளையண்டின் யோசனையை இம்ப்ளிமன்ட் செய்வதற்கு முன்பான இம்பாக்ட் அனலைஸிசும்.. இம்ப்ளிமன்ட் செய்ய எந்தவிதமான அணுகுமுறையை பின்பற்றுவது என்பதை முடிவு செய்வதும்.. ப்ரியாவின் தலையில் வந்து விழுந்தது..!! திறமைக்கு சவாலான இந்த புதுவித வேலை ப்ரியாவை திணற வைத்தது..!! உதவிக்கு முதலில் அசோக்கிடம்தான் ஓடி வந்தாள்..!!

“ஹேய்.. இந்த இம்பாக்ட் அனலைஸிஸ்ல கொஞ்சம் ஹெல்ப் பண்ணுடா.. ப்ளீஸ்..!!” ப்ரியா கெஞ்சலாக கேட்க,

“ஹ்ஹ.. என்ன.. உன் வேலையை என் தலைல கட்டப்பாக்குறியா..?? அடுத்தவங்க வேலையை பாக்குறதுக்கு.. எனக்கு என்ன எக்ஸ்ட்ரா சம்பளமா தர்றாங்க..??” அசோக் பிகு செய்தான்.

“ஏன்.. உனக்கு எக்ஸ்ட்ராத்தான தர்றாங்க..??”

“என்ன சொல்ற..??”

“ஆமாம்.. நான் டெக்லீட்னு பேர்தான்.. என்னை விட உனக்குத்தான ஸாலரி அதிகம்..??”

“அதுலாம் நீ சொல்லப்படாது..!! என்னதான் ஸாலரி அதிகமா இருந்தாலும்.. டெக்லீட்ன்ற அந்த கெத்து வருமா..?? எல்லாரையும் என்ன மெரட்டு மெரட்டுற..??”

“ப்ச்.. இதுல என்ன கெத்து இருக்குது..?? உனக்கு குடுத்த வேலையை நீ பாக்குற.. எனக்கு குடுத்த வேலையை நான் பாக்குறேன்..??”

“ஹ்ம்ம்.. நானும் அதைத்தான் சொல்றேன்..!! போ.. உனக்கு குடுத்த வேலையை நீயே பாரு.. என் வேலையை நான் பாக்குறேன்..!!” என்று கூலாக சொன்ன அசோக்,

“ஏற்கனவே ஹெல்ப் பண்ணதுக்கே நான் படுற பாடு பத்தாதா ..” என்று வாய்க்குள் முனகினான்.

அவன் என்ன முனகினான் என்பதை ப்ரியாவால் தெளிவாக கேட்க முடியவில்லை. ஆனால் என்ன சொல்லியிருப்பான் என்று ஓரளவு அவளால் புரிந்து கொள்ள முடிந்தது. கண்களை இடுக்கி அவனையே முறைத்துப் பார்த்தாள்.

“ஓகே.. நானே பாத்துக்குறேன்.. எனக்கு எவன் ஹெல்ப்பும் வேணாம்..!!”

ப்ரியா வீராப்பாக சொல்லிவிட்டு திரும்பி விடுவிடுவென நடந்தாள். ‘ஹேய்.. ப்ரியா..’ என்று அசோக் அழைத்ததை மதியாமல் அந்த இடத்தை விட்டு அகன்றாள்.

‘எவன் ஹெல்ப்பும் வேணாம்..’ என்று ப்ரியா அசோக்கிடம் சொல்லியிருந்தாலும், அவளால் தனியாக அந்த வேலையை முடிக்க இயலவில்லை. வேறு டீம்களை சார்ந்த டெக்லீட்ஸ் சில பேரிடம் ஏற்கனவே அறிமுகம் செய்து கொண்டிருந்தாள். அவர்களுடைய நட்பை இப்போது நாடினாள். இந்த மாதிரியான வேலையில் கவனமாக செய்ய வேண்டிய அம்சங்கள் என்னென்ன என்பதை தெளிவாக கேட்டு அறிந்து கொண்டாள். அதில்லாமல் இவர்கள் ஏற்கனவே டெவலப் செய்த மென்பொருளைப் பற்றிய முழு அறிவும் அவளுக்கு தேவைப்பட்டது. வீட்டுக்கு சென்றும்.. இரவில் பலமணி நேரங்கள் தனியாக லேப்டாப் முன்பு அமர்ந்து.. அடுத்தவர்கள் எழுதிய கோடை அனலைஸ் செய்து அண்டர்ஸ்டாண்ட் செய்து கொண்டாள்..!!

அந்த ஆராய்ச்சி வேலையை முடிக்க அவளுக்கு நான்கு நாட்கள் தேவைப்பட்டன. நான்கு நாட்களின் முடிவில்.. ஒரு அதிகாலை நேரத்திலேயே.. பெரிய அளவிலான ஒரு மீட்டிங் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ப்ரியா தனது அனலைசிஸ் பற்றியும், பின்பற்ற போகிற அப்ரோச் பற்றியும் எல்லோருக்கும் விளக்குவதற்காக ஒரு பிரசன்டேஷன் தயார் செய்திருந்தாள். அதை எல்லோருக்கும் அவள் விளக்கி சரியான அணுகுமுறை என்று சர்டிபிகேட் வாங்க வேண்டும்..!!

சற்றே பிரம்மாண்டமான மீட்டிங் ஹால் அது..!! ப்ரியாவால் லீட் செய்யப்படுகிற டெவலப்மன்ட் டீம் மட்டும் இல்லாமல்.. QA டீம்.. பிசினஸ் டீம்.. ஆர்க்கிடெக்ட்ஸ் டீம்.. அந்தந்த டீம்களின் மேனேஜர்ஸ்.. எல்லாவற்றிற்கும் தலையான பாலகணேஷ் என.. ஹாலில் எக்கச்சக்கமான பேர் இருந்தனர்..!! இதில்லாமல்.. யூ.எஸ்சில் இருந்து களயன்ட் கம்பனியின் சில முக்கியமான புள்ளிகளும்.. வீடியோ கான்பரன்ஸ் மூலமாக.. அந்த மீட்டிங் அட்டன்ட் செய்தனர்..!!

ப்ரியா ஒரு மணி நேரத்துக்கு அந்த பிரசண்டேஷன் கொடுத்தாள். தன்னுடைய ஆய்வை பற்றியும்.. க்ளயன்ட்டின் விருப்பத்தை செயல்படுத்த எளிமையான அணுகுமுறையாக தான் கருதுவதையும்.. தெளிவாக.. நிதானமாக.. அழகிய ஆங்கிலத்தில் எடுத்துரைத்தாள்..!! அனைவரும் அமைதியாகவும், கூர்மையாகவும் அவள் பேச்சை கேட்டுக் கொண்டிருந்தார்கள்..!! அசோக் மட்டும் அசுவாரசியமாய் காட்சியளித்தான்..!!

பிரசண்டேஷன் முடிந்து.. ‘எல்லோருக்கும் புரிந்ததா.. அனைவருக்கும் இதில் சம்மதம்தானா.. வேறு ஏதாவது சந்தேகம் இருக்கிறாதா..??’ என ப்ரியா உதட்டில் ஒரு புன்னகையுடன் ஃபார்மலாக கேட்ட போதுதான் அசோக்..

“ஐ கெஸ் தேர் இஸ் ஸம் ஃப்ளா இன் திஸ் அப்ரோச்..!!”

என்று குரல் கொடுத்துக்கொண்டே எழுந்தான்.. ‘உங்கள் பாட்டில் பிழை இருக்கிறது..!!’ என்று நக்கீரர் எழுந்த மாதிரி..!! அவன் அவ்வாறு எழுந்ததுமே ப்ரியாவிற்கு அடிவயிற்றில் புளி கரைக்க ஆரம்பித்தது.

“என்ன ஃப்ளா..??” என்று உதறலாக கேட்டாள்.

“லெட் மீ எக்ஸ்ப்ளயின்..!!”

என்றவாறு அசோக் மேடை மீது ஏறினான். ப்ரியா கலங்கிப் போனாள். ஹாலில் அமர்ந்திருப்பவர்களுக்கு முதுகு காட்டி அவன் பக்கமாய் திரும்பினாள். மேடையில் நின்ற அசோக்கின் முகத்தை பரிதாபமாக பார்த்தாள். அவனுக்கு மட்டுமே கேட்க கூடிய குரலில் கெஞ்சலாக சொன்னாள்.

“ப்ளீஸ்டா அசோக்.. வேணாண்டா..!!”

a-6

அவளுடைய கெஞ்சலுக்கு பதிலாக அசோக் ஒரு வசீகர புன்னகையை மட்டுமே கொடுத்தான். கையில் ஒரு மார்க்கர் எடுத்துக்கொண்டு வொயிட் போர்டை நெருங்கினான். அவ்வளவு நேரம் ப்ரியா விளக்கியவற்றை சுருக்கமாக மீண்டும் சொன்னவன், அதில் தான் பிழையாக கருதும் விஷயத்திற்கு உடனடியாக வந்தான். அவன் எந்த விஷயத்தை குறிப்பிடுகிறான் என்று தெரிந்ததுமே, ப்ரியாவிற்கு அதில் தான் செய்திருக்கிற தவறும் பட்டென புரிந்து போனது.. அவளுடைய நெஞ்சுக்குழியை பக்கென எதுவோ கவ்வியது போல இருந்தது.. பதறிப்போனாள்..!!

“அசோக் ப்ளீஸ்.. வேணாண்டா.. எல்லாரும் இருக்காங்க.. என் மானத்தை வாங்கிடாத..!!”

என்று ரகசியமாக அவனிடம் இறைஞ்சினாள். அசோக் கண்டுகொள்ளவே இல்லை. தான் சொல்ல வந்ததை தொடர்ந்து சொல்லிக் கொண்டிருந்தான். அவ்வளவு நேரம் ப்ரியா சொன்னதை சரி என்றே கருதிக்கொண்டிருந்தவர்கள் அனைவரும், இப்போது அசோக்கின் பேச்சில் ஆர்வமாகி.. அவன் என்ன சொல்லப் போகிறான் என்பதை உன்னிப்பாக காது கொடுத்து கேட்டுக் கொண்டிருந்தார்கள். ப்ரியா மட்டும் மிரண்டு போனவளாய், எல்லோரையும் பரிதாபமாக தலையை திருப்பி திருப்பி பார்த்துக் கொண்டிருந்தாள். ‘ப்ளீஸ்டா.. ப்ளீஸ்டா..’ என்று சன்னமான குரலில் அசோக்கை கெஞ்சிக்கொண்டே இருந்தாள்.

ஒரு கட்டத்தில்.. அசோக் தனது கெஞ்சலுக்கு காது கொடுப்பான் என்ற நம்பிக்கை ப்ரியாவிற்கு போயிற்று..!! ‘இன்னும் கொஞ்ச நேரம் விட்டால்.. இவன் எனது தவறை எல்லார் முன்பும் வெளிச்சம் போட்டு காட்டி விடுவான்.. ப்ரியாவின் திறமை இவ்வளவுதானா என்று எல்லோரும் என்னை கேலியாக பார்ப்பார்கள்.. இப்போது என்ன செய்வது..??’ என்று அவசரமாக யோசித்தாள். அவளுக்கு வேறு வழி இருக்கவில்லை. அசோக் பேசிக்கொண்டிருக்கையிலேயே இடையில் புகுந்து,

“ஹேய்.. ஸாரி டூ இன்டரப்ட்.. ஆக்சுவல்லி.. வீ ஆர் ரன்னிங் அவுட் ஆஃப் டைம்.. ஷேல் வீ டேக் திஸ் ஆஃப்லைன்..??” (குறுக்கிடுவதற்கு மன்னிக்கவும்.. இந்த மீட்டிங்கிற்கான நேரம் முடிந்து விட்டது.. நாம் இதை தனியே பேசி தீர்வு காணலாமா..??)

என்று புன்னகை தவழும் முகத்துடன், ஸ்டைலான ஆங்கிலத்தில் எல்லோரையும் பார்த்து கேட்டாள். அவள் அவ்வாறு திடீரென கேட்டதும் அசோக் உட்பட அத்தனை பேரும் இப்போது அமைதியாயினர். எல்லா டீம்களின் மேனஜர்களும் அவர்களுக்குள் ஏதேதோ பேசிக்கொண்டார்கள். அனைவரும் கான்ஃபரன்ஸ் காலில் இருக்கும் க்ளையன்டின் விருப்பத்தை எதிர்பார்த்தார்கள். ஒரு சில வினாடிகள் யோசித்த க்ளையன்ட் டீமும் ‘ஓகே..!!’ என்று ஒருமனதாக கரகர குரலில் ஸ்பீக்கரில் சொல்ல.. ப்ரியா இப்போது கண்கள் மூடி ஒரு நிம்மதி பெருமூச்சு விட்டாள்.

ஓரிரு விநாடிகள்தான்..!! அப்புறம் படக்கென தலையை திருப்பி.. அசோக்கை ஒரு உஷ்ணப்பார்வை பார்த்தாள்..!! அவனோ உதட்டில் கசியும் அழகான ஒரு புன்னகையுடன் இவள் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தான்..!!

“வெல்டன் ப்ரியா.. கலக்குற போ..!!” என்று சன்னமாக சொன்னவாறே கையில் இருந்த மார்க்கரை ஓரமாக தூக்கிப் போட்டான்.

மீட்டிங் ஹாலில் இருந்த அனைவரும் கொத்து கொத்தாய் எழுந்து அந்த ஹாலை விட்டு வெளியேறினர். அனைவரும் ப்ரியாவை கடக்கையில் ‘தேங்க்ஸ் ப்ரியா..’ என்றனர். மேனேஜர்கள் ‘குட் செஷன் ப்ரியா..’ என்று பாராட்டினர். எல்லோருக்கும் ப்ரியா அழகாக ஒரு புன்னகையை பரிசளித்துக் கொண்டிருந்தாள். அசோக் மட்டும் அசையாமல் அங்கேயே நின்றிருந்தான்.

எல்லோரும் வெளியேறியதும், ப்ரியாவின் முகம் பட்டென இறுகிப் போனது. ஓரிரு வினாடிகள் அசோக்கை திரும்பி முறைத்தவள், அப்புறம் தனது லேப்டாப் நோக்கி விடுவிடுவென நடந்தாள். அதில் செருகியிருந்த நெட்வொர்க் கேபிள் எல்லாம் ஆத்திரமாக பிடுங்கி எறிந்தாள். கீ போர்டை கோபத்துடன் படபடவென தட்டினாள். அவளுடைய செய்கை அசோக்கிற்கு சிரிப்பை வரவழைத்தது. மெல்ல நடந்து அவளை நெருங்கியவன்..

“இப்போ என்னாச்சுன்னு இவ்ளோ டென்ஷன் ஆகுற..??” என்று கூலாக கேட்டான்.

“பேசாத..!! நெனச்சதை சாதிச்சுட்டல நீ..??” ப்ரியா சூடாக சொன்னாள்.

“ஹாஹா.. நான் என்ன நெனச்சேன்..??”

“எல்லார் முன்னாடியும் என்னை அசிங்கப் படுத்தனும்னு நெனச்ச.. இன்னைக்கு பண்ணிட்ட..!! இப்போ சந்தோஷம்தான.??”

“ப்ச்.. அதான் அழகா எஸ்கேப் ஆயிட்டியே.. அப்புறம் என்ன..?? அதில்லாம.. இதுல என்ன அசிங்கம் இருக்கு..??”

“ஓஹோ..?? வெளையாட்டா இருக்குல உனக்கு இது..?? ஒருநாள் உனக்கு இது நடந்தாத்தான் உனக்கு புரியும்..!! நான் அவ்வளவு கெஞ்சியும்.. உனக்கு கொஞ்சம் கூட என் மேல இரக்கம் வரலைல..?? ஹ்ம்ம்.. பாத்துக்குறேன்.. எனக்கும் நேரம் வரும்.. அப்போ பாத்துக்குறேன்..!!”

அவளுடைய எச்சரிக்கை அசோக்கை எரிச்சலடைய செய்தது. கூலாக இருந்தவன் பட்டென டென்ஷன் ஆனான்.

“ஒய். என்ன மெரட்டுறியா..?? உன்னால என்ன பண்ண முடியுமோ பண்ணிக்கோ.. அப்படி பண்றேன்னு நானும் பாக்குறேன்..!!”

என்று எகத்தாளமாக சொல்லிவிட்டு அந்த அறையை விட்டு வெளியேறினான். ப்ரியா அவன் முதுகையே முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்தாள். அவளுடைய முறைப்பின் விளைவு அடுத்த நாளே வெளிப்பட்டது..!!

அந்த வார இறுதியில்.. அசோக்கின் கல்லூரி நண்பன் ஒருவனுடைய திருமணம் இருந்தது..!! அந்த திருமணத்திற்கு செல்வதற்காக இரண்டு நாட்கள் விடுப்பு வேண்டும் என்று அசோக் முன்கூட்டியே விண்ணப்பித்திருந்தான். ப்ரியாவும் அதை அப்ரூவ் செய்திருந்தாள்..!! அன்று காலையில் அசோக் ஆபீஸ் வந்து தனது மெயில் பாக்ஸ் திறந்து பார்த்தபோது அந்த அப்ரூவல் ப்ரியாவால் கேன்சல் செய்யப்பட்டிருந்தது..!! அந்த மெயில் பார்த்ததுமே அசோக்கிற்கு ப்ரியா மீது சுருக்கென்று கோவம் வந்தது..!! ‘மேரேஜுக்கு சென்று.. பழைய நண்பர்களை எல்லாம் பார்த்து.. நான்கு நாட்கள் களிப்புடன் கழிக்கலாமே..’ என்ற தனது திட்டத்திற்கு ஆபத்து வந்துவிட்டதே என்ற கோவம்..!! ப்ரியாவின் அறைக்குள் புகுந்து அவளுடன் சண்டையிட்டான்..!!

“இப்போ எதுக்கு தேவை இல்லாம என் லீவை கேன்சல் பண்ணின..??” என்று காட்டமாக கேட்டான்.

“தேவை இல்லாமலாம் ஒன்னும் பண்ணல.. அந்த என்ஹான்ஸ்மன்ட் உடனே முடிச்சு குடுக்கனும்னு க்ளையன்ட் கேட்டிருக்காங்க..!!” ப்ரியா பொறுமையாக பதில் சொன்னாள்.

“கேட்டா முடிச்சு குடு..!! அதுக்கு ஏன் என்னோட லீவை கேன்சல் பண்ணின..??”

“நீதான் அந்த என்ஹான்ஸ்மன்ட் பண்ணி முடிக்கணும்..!!” ப்ரியா சொல்ல, அசோக் அதிர்ந்தான்.

“என்ன வெளையாடுறியா..?? கோவிந்த்க்கு அந்த வேலையை குடுக்குற மாதிரிதான ப்ளான்..??”

“ஆமாம்.. அப்படித்தான் ப்ளான் பண்ணிருந்தோம்..!! நீ அன்னைக்கு மீட்டிங்ல வாய் வச்சுட்டு சும்மா இருந்திருந்தா.. அவனுக்குத்தான் போயிருக்கும்..!! அன்னைக்கு நீ பெரிய புடுங்கியாட்டம் பேசினல.. இப்போ இந்த என்ஹான்ஸ்மன்டை முடிக்க நீதான் சரியான ஆள்னு க்ளையன்ட் ஃபீல் பண்றாங்க..!!”

“க்ளையன்ட் ஃபீல் பண்றாங்களா..?? இல்ல.. இந்த வேலையை அசோக்குக்கு குடுக்கலாம்னு நீயா பேசி கன்வின்ஸ் பண்ணி.. அவங்களை அப்படி ஃபீல் பண்ண வச்சியா..??”

“ஏதோ ஒன்னு..!! எனக்கும் இந்த என்ஹான்ஸ்மன்ட்டோட க்ரிட்டிக்காலிட்டி இப்போத்தான் புரியுது..!! இதை பர்ஃபக்டா பண்ணி முடிக்க எனக்கும் உன்னை விட்டா வேற ஆள் இல்ல..!! சேலஞ்சிங்கான வேலை வேணும்னு சும்மா சும்மா வந்து குதிப்பியே.. திஸ் இஸ் யுவர் ஆப்பர்ச்சூனிட்டி.. யூஸ் பண்ணிக்கோ..!! நேத்ராவையும் ஹரியையும் சேர்த்துக்கோ.. ஒன் வீக்ல இதை முடிக்கணும்..!! இது முடிஞ்சாத்தான்.. நெக்ஸ்ட் ஃபேஸ் டெவலப்மன்ட் நாம ஸ்டார்ட் பண்ண முடியும்..!! ட்ரை டூ அண்டர்ஸ்டாண்ட் த சீரியஸ்னஸ்..!!”

“எனக்கு எதைப்பத்தியும் கவலை இல்ல..!! எனக்கு அப்ரூவ் பண்ணின லீவ்.. எனக்கு வேணும்..!!”

“ப்ச்.. சும்மா சின்னப்புள்ளையாட்டம் அடம் புடிக்காத..!! இந்த வேலையை முடிச்சு குடுத்துட்டு.. ரெண்டு நாளுக்கு பதிலா அஞ்சு நாள் கூட லீவ் எடுத்துக்கிட்டு என்ஜாய் பண்ணு..!! என்ன.. புரியுதா..??” ப்ரியாவின் பதிலில் அசோக் எரிச்சலானான்.

“என் ஃப்ரண்டோட மேரேஜ் நாளன்னிக்குடி.. அது முடிஞ்சப்புறம் நான் அஞ்சு நாள் லீவ் எடுத்து என்ன பண்றது..?? வீட்ல தனியா உக்காந்து.. என்னமாத்தான் வருது..??”

“ஃப்ரண்டோட மேரேஜ்தான.. அதுக்கு ஏன் இப்படி குதிக்கிற.. என்னவோ உன் மேரேஜ்க்கே லீவ் தராதது மாதிரி..??”

“என்ன இவ்ளோ கூலா சொல்ற..?? இப்படி எவன் மேரேஜ்ம் அட்டன்ட் பண்ணலைன்னா.. அப்புறம் என் மேரேஜ்க்கு எந்தப்பய வருவான்..?? நானும் பொண்ணும் ஐயரும் மட்டுந்தான் உக்காந்திருக்கணும்..!!”

அவ்வளவு காரசார விவாதத்திலும் அசோக்கின் அந்தப்பேச்சு ப்ரியாவிற்கு சிரிப்பை வரவழைத்தது. அடக்கமுடியாமல் சிரித்து விட்டாள். அந்த சிரிப்பில் அவளுடைய மனசு பட்டென லேசாகி போனது. அசோக்கிடம் எப்போதும் அவளுக்கு இருக்கும் நட்புணர்வு இன்ஸ்டண்டாய் அவளுக்கு திரும்பி வந்தது. ஆனால் அசோக் இன்னும் சீரியசாகத்தான் தன்னை முறைத்துக் கொண்டிருக்கிறான் என்பதை அறியாதவளாய்..

“ஹாஹா.. உனக்கு மேரேஜ்லாம் நடக்கும்னு வேற உனக்கு ஆசை இருக்கா..?? உன்னல்லாம் எவ கட்டிப்பா..??”

என்று கிண்டலாக சொல்லிவிட்டாள். சொல்லிவிட்டு அசோக்கின் முகத்தை ஏறிட்டாள். அவன் முகம் இன்னும் இறுகிப் போய், தன்னையே முறைத்துக் கொண்டிருப்பதை உணர்ந்ததும்தான் ‘தவறாக பேசிவிட்டோமோ’ என்ற நினைவு அவளுக்கு தாமதமாக வந்தது. முகத்தை உடனடியாய் சீரியசாக மாற்றிக்கொண்டு..

“ஹேய்.. ஸாரி அசோக்.. நான் ஏதோ வெளையாட்டுக்கு..” அவள் வருத்தத்துடன் சொல்லிக்கொண்டிருக்கும்போதே,

“பேசாத.. என்னை எவ்வளவு கேவலமா நெனச்சுட்ட நீ..?? எவளும் என்னை கட்டிக்க மாட்டாளா..??” அசோக் சீற்றமாக சொன்னான்.

“ஹேய்.. நான் வெளையாட்டுக்கு சொன்னேன்.. நாம இந்த மாதிரி சொல்லி அடிக்கடி கிண்டல் பண்ணிக்கிறதுதான..??”

“இத்தனை நாளா சொன்னது வேணா வெளையாட்டா இருக்கலாம்.. ஆனா இன்னைக்கு நீ சொன்னது அப்படி இல்ல..!! என்னை ஹர்ட் பண்ணனும்னேதான் சொல்லிருக்குற..!!”

“ப்ச்.. இல்லடா.. நான்தான் சொல்றேன்ல..??” ப்ரியா இப்போது கெஞ்சலாக சொன்னாள்.

- தொடரும்

மேலும் செக்ஸ் கதைகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் :

தமிழ்காமவெறி தளம்

ஐ ஹேட் யூ, பட் – பகுதி 23

$
0
0

“காட்டுறேன்.. நீ நெனைக்கிற அளவுக்கு நான் கேவலமானவன் இல்லன்னு காட்டுறேன்..!!”

அசோக் தன் பாக்கெட்டில் இருந்த செல்போனை அவசரமாய் எடுத்தான். ராஜேஷின் நம்பருக்கு கால் செய்தான். அவன் என்ன செய்கிறான் என்று புரியாமல் ப்ரியா திகைத்துப் போய் பார்த்துக் கொண்டிருந்தாள். ராஜேஷ் காலை பிக் செய்து ஹலோ சொல்வதற்கு முன்பே..

மேலும் செக்ஸ் கதைகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் :

தமிழ்காமவெறி தளம்

“ஏய்.. எனக்கு அர்ஜண்டா ஒரு பொண்ணு வேணும்..!!” என்றான் அசோக் அவசரமாய்.

“டேய்.. நான் ராஜேஷ்டா.. உன் அண்ணன்..!!” அடுத்த முனையில் ராஜேஷ் பதறினான்.

“ஆமாம்.. அதுக்கு என்ன..??” அசோக் புரியாமல் கேட்டான்.

“இல்ல.. திடீர்னு கால் பண்ணி அர்ஜண்டா பொண்ணு வேணும்னு சொல்றியே.. அதான்.. வேற யாருக்கும் பண்ண வேண்டிய காலை எனக்கு பண்ணிட்டியோன்னு..!!”

“அடச்சை..!! நான் கல்யாணம் செஞ்சுக்குறதுக்கு சொன்னேன்டா..!!” அசோக் ராஜேஷிடம் சொல்ல, ப்ரியா இப்போது அசோக்கை உஷ்ணமாக முறைத்தாள்.

“அதான்.. நீயே பாத்துக்குறேன்னு சொல்லிட்டியே..??”

“ஆமாம்.. அப்படித்தான் சொன்னேன்.. ஆனா நான் பாத்தது ஒன்னும் சரி இல்ல.. எல்லாம் திமிர் புடிச்சவளுகளா இருக்காளுக..!!” அசோக் ப்ரியாவை ஓரக்கண்ணால் பார்த்துக்கொண்டே சொன்னான்.

“ஓஹோ..!!”

“நீ என்ன பண்ணுவேன்னு எனக்கு தெரியாது.. கூடிய சீக்கிரம் எனக்கு ஒரு பொண்ணு பாக்குற..!! நீ யாரை கொண்டு வந்து நிறுத்தினாலும்.. நான் அவ கழுத்துல தாலி கட்டுறேன்.. அது யாரா இருந்தாலும் சரிதான்..!! எல்லாம் உன் இஷ்டந்தான்.. புரியுதா..??”

“சரிடா சரிடா.. புரியுது..!! நான் பாத்துக்குறேன்.. விடு..!!”

அசோக் காலை கட் செய்தான். ப்ரியாவை ஏறிட்டு எகத்தாளமாய் ஒரு பார்வை பார்த்தான். ப்ரியா அசோக் மீது எழுந்த கோவத்தில்.. வேகவேகமாக மூச்சு விட்டதில்.. அவளுடைய மார்புகள் விம்மி விம்மி சுருங்க.. இவனையே முறைத்து பார்த்தவாறு நின்றுகொண்டிருந்தாள்..!! ஒரு சில வினாடிகள் இருவரும் அவ்வாறு பார்த்துக் கொண்டிருக்க.. அப்புறம் அசோக் ‘ஹ்ம்ம்..’ என்று சலிப்பாக சொல்லிவிட்டு அந்த அறையை விட்டு வெளியேறினான். ப்ரியா அவன் போவதையே ஆத்திரமாக பார்த்துக் கொண்டிருந்தாள்.

அதே நேரம்.. அங்கே அசோக்கின் வீட்டில்.. ராஜேஷ் தலையை சொறிந்தவாறு அமர்ந்திருந்தான்..!! தம்பி சொன்ன வார்த்தைகளை நம்புவதற்கு.. அவனுக்கு நிறைய நேரம் பிடித்தது..!! ஒரு வழியாய் நம்பிக்கை வந்ததும்.. என்ன செய்யலாம் என்று யோசித்தான்..!! ‘உடனே வேண்டும் என்று வேறு சொல்கிறானே.. இப்போதுதான் அவனுக்கு நான் அண்ணன் என்ற மரியாதையே வந்திருகிறது.. இந்த வாய்ப்பை விடக்கூடாது.. உடனடியாய் இவனை அமுக்கிப் போட வேண்டும்..’ என்று நினைத்தவன், கையிலிருந்த செல்போனை எடுத்து காண்டாக்ட் லிஸ்டில், அவன் எப்போதோ ஸேவ் செய்து வைத்திருந்த ஒரு நம்பரை இப்போது தேடினான். தேடிய நம்பர் கிடைத்ததும் கால் செய்து காதில் வைத்துக்கொண்டான். அடுத்த முனையில் கால் பிக்கப் செய்யப்படும் வரை காத்திருந்தான். பிக்கப் செய்யப்பட்டதும்..

“ஹலோ.. மிஸ்டர் வரதராஜன்..??” என்றான்.

அத்தியாயம் 14

அசோக்கிற்கு திகில் படங்கள் பார்ப்பதென்றால் அலாதி ப்ரியம்..!! அதுவும் நள்ளிரவில்.. கும்மிருட்டுக்குள்.. தனியாக அமர்ந்து பார்க்கவேண்டும்..!! தனது லேப்டாப்பில்.. ஆங்கில மொழியில் வெளியான பேய்ப்படம் ஒன்றை ஓட விட்டு.. காதுக்கு ஹெட்ஃபோன் கொடுத்து.. கண்களிலும் இதயத்திலும் பயம் நிரம்பி வழிய வழிய.. ஒருவித பதைபதைப்புடன் பார்க்கவேண்டும்.. பார்க்கும்போதே இதயம் படக் படக்கென பதறி துடிக்கவேண்டும்.. அதில் அவனுக்கு ஒரு ஆனந்தம்..!!

அன்றும் அந்த மாதிரிதான்.. நேரம் நள்ளிரவு 12 மணியை தாண்டியிருந்தது..!! அசோக் தனது படுக்கையில் கால்களை இறுக்க கட்டிக்கொண்டு அமர்ந்திருந்தான். அவனுக்கு முன்பிருந்த லேப்டாப்பில் புதிதாக வெளியாயிருந்த ஒரு ஆங்கில பேய்ப்படம் ஓடிக்கொண்டிருந்தது. அறையின் இரவு விளக்கு கூட அணைக்கப்பட்டிருக்க, லேப்டாப் மட்டுமே செவ்வக வடிவத்தில் வெளிச்சத்தை உமிழ்ந்து கொண்டிருந்தது. படம் முழுக்கவே அவ்வப்போது வந்த பயமுறுத்தும் காட்சிகளால் அசோக் திகிலடைந்து போயிருந்தான். இப்போது படத்தின் க்ளைமாக்ஸ் ஓடிக்கொண்டிருந்தது. பார்ப்பவர்களை உச்சபட்சமாய் பயமுறுத்தி பார்க்கிற படலம்..!!

இருண்டு போன பேய் பங்களா ஒன்றில் தனியாக மாட்டிக்கொண்ட கதாநாயகன், ஒரு அறைக்குள் இருந்து வினோத ஒலி கிளம்புவதை கேட்கிறான். சுற்றிலும் இருள் மண்டிக்கிடக்க, கையில் இருக்கும் ஒரு சிறிய விளக்குடன் அந்த அறையை நோக்கி மெல்ல மெல்ல ஒவ்வொரு அடியாய் எடுத்து வைக்கிறான். சிறு ஓசை கூட இல்லாமல் ஒரே நிசப்தமாய் காட்சி நகர, அசோக் அந்த காட்சியுடன் மிகவும் ஒன்றிப்போய் பார்த்துக் கொண்டிருந்தான். அவனுடைய விழிகள் விரிந்து போய் லேப்டாப்பை வெறித்துக் கொண்டிருக்க, அவனது இதயம் சுருங்கி விரியும் சப்தத்தை கூட அவனால் தெளிவாக கேட்க முடிந்தது. அப்போதுதான் திடீரென அவனுடைய முதுகுப்பக்கம் கிடந்த செல்போன் வீறிட்டது..!!

“நாக்ரதனா திரனனா தனனா.. தன நாக்ரதனா தன திரனனா திரனா..!!”

‘எந்த நேரமும் பேய் தனது கோர முகத்தை காட்டப்போகிறது..’ என்று திரையையே வெறித்துக் கொண்டிருந்த அசோக், அவனுக்கு பின்பக்கமாக இருந்து செல்போன் திடீரென அலறியதும் அப்படியே குலை நடுங்கிப் போனான். அவனுடைய கட்டுப்பாடின்றியே ‘ஆஆவ்…!!’ என்று கத்திவிட்டான். நாடி நரம்பெல்லாம் இன்ஸ்டண்டாய் ஒரு பய மின்சாரம் ஓட, உடல் உதறல் எடுத்துக் கொண்டது.. குப்பென வியர்த்துப் போனது..!! இருதயம் உச்ச பட்ச வேகத்தில் திடுக் திடுக் என அடித்துக் கொண்டது. மார்பு குபுக் குபுக்கென விரிந்து விரிந்து சுருங்க, மேல்மூச்சு கீழ் மூச்சு வாங்கினான்.

செல்போன்தான் அடித்தது என்று அவன் புத்திக்கு புரிந்த பின்னும், மிரண்டு போன அவனது இதயம் தனது துடிப்பின் வேகத்தை குறைக்க நீண்ட நேரம் எடுத்துக் கொண்டது. அவனுடைய உடலில் எழுந்த பய அதிர்வும் அடங்க சில வினாடிகள் பிடித்தன. கண்களை மூடி சுவாசத்தை சீராக்க முயற்சி செய்தான்.

அவனுடைய மனதும் உடலும் ஓரளவு ஆசுவாசம் அடைந்ததும், ‘இந்த நேரத்துல எந்த எழவெடுத்த நாயி..??’ என்று உலகமாக ஆத்திரத்துடன், இன்னும் நடுங்கும் விரல்களாலேயே அவசரமாய் தன் செல்போனை எட்டி எடுத்தான். எடுத்து டிஸ்ப்ளே பார்த்தவன் இன்னும் அதிகமான ஆத்திரத்துக்கு உள்ளானான். ப்ரியா கால் செய்திருந்தாள்..!!

‘ச்ச.. பகல்லதான் பத்திரகாளி மாதிரி அந்த ஆட்டம் ஆடுறான்னா.. ராத்திரிலயும் ரத்தக்காட்டேரி மாதிரி.. இப்படி ஃபோன் பண்ணி கிலியை கிளப்புறாளே..?? மனுஷனை நிம்மதியாவே இருக்க விடமாட்டாளா..??’ என்று பற்களை நறநறவென கடித்தான். அந்த ஆத்திரத்துடனே கால் பிக்கப் செய்து காதில் வைத்தான். ப்ரியா ஹலோ சொல்வதற்கு முன்பே இவன் அவளை கன்னாபின்னாவென்று திட்ட ஆரம்பித்தான்..!!

“பிசாசு.. பிசாசு.. பேய்.. காட்டேரி..!!”

“ப்ச்.. ஏண்டா திட்டுற..??” அடுத்த முனையில் ப்ரியா எரிச்சலாக கேட்டாள்.

“பின்ன என்ன.. ஃபோன் பண்றதுக்கு உனக்கு வேற நேரமே கெடைக்கலையா..?? நடுச்சாமத்துல ஜகன்மோகினி மாதிரி..!!”

“எ..எனக்கு உன்கிட்ட பேசணும் போல இருந்தது..!!”

“இந்த நேரத்துலயா..??”

“ஹ்ம்ம்..!!”

“ஏன்..??”

“எனக்கு தூக்கமே வரலை..!!”

“ஓ.. தாலாட்டு பாடணுமா நான்..??” அசோக் எரிச்சலும் கேலியுமாய் கேட்டான்.

“இ..இல்ல..!!”

“அப்புறம்..??”

“எ..என்னை மன்னிச்சுட்டேன்னு சொல்லணும்..!!” ப்ரியா ஒருமாதிரி பரிதாபமான குரலில் சொல்ல, இப்போது அசோக் சற்றே ஆத்திரம் தணிந்தான்.

“எதுக்கு மன்னிப்பு..??” என்றான் கம்மலான குரலில்.

112

“நா..நான்.. சத்தியமா உன்னை ஹர்ட் பண்ணனும்னு இன்னைக்கு காலைல அப்படி சொல்லலடா.. எப்போவும் போலதான் வெளையாட்டுக்கு சொன்னேன்..!! நாம பேசிட்டு இருந்த சிச்சுவேஷன் சரி இல்லாததால.. உனக்கு தப்பா தோணிருச்சு..!! நீயே கொஞ்சம் நல்லா யோசிச்சு பாரு அசோக்.. உன்னைப்போய் நான் அப்படிலாம் நெனைப்பனா.. எவ கட்டிப்பான்லாம்.. ம்ம்ம்..?? உனக்கு என்னடா கொறைச்சல்..?? உன்னை கட்டிக்க பொண்ணுகலாம் நான் நீன்னு போட்டி போடுவாங்கன்னு எனக்கு நல்லாவே தெரியும்..!!”

“ம்ம்ஹ்ஹ்ம்ம்.. இதை சொல்லத்தான் இந்த நடுராத்திரில கால் பண்ணினியா..??”

“ஆமாம்..!! அப்புறம்.. உன் லீவ் கேன்சல் பண்ணினது கூட நான் வேணும்னு பண்ணல.. எனக்கு வேற வழி தெரியலை அசோக்.. கிரிட்டிக்கல் வொர்க்.. உன்னை விட்ட எனக்கு வேற யார் இருக்கா.. சொல்லு..!! உனக்கு கண்டிப்பா லீவ் வேணும்னா.. பாலாட்ட பேசு.. அவர் ஓகே சொன்னா.. நான் அப்ரூவ் பண்றேன்..!!”

“பரவால.. நான் அவனுக்கு ஃபோன் பண்ணி வர முடியாதுன்னு சொல்லிட்டேன்..!!”

“ஹ்ம்ம்.. எனக்கு இன்னிக்கு பூரா அதே நெனைப்பாவே இருந்தது அசோக்.. நான் சொன்னதை நீ தப்பா எடுத்துக்கிட்டியேன்னு நெனச்சு நெனச்சு.. எந்த வேலையுமே ஓடலை..!! இப்போ படுத்து இவ்வளவு நேரம் ஆகியும் தூக்கமே வரலை.. எவ்வளவு நேரந்தான் சும்மா கண்ணை மூடிட்டே கெடக்குறது..?? அதான்.. உன்கிட்டயே பேசிடலாம்னு தோணுச்சு..!!”

“ஹ்ம்ம்..!!”

“நான் உன்னை ஹர்ட் பண்ணனும்னு நெனச்சு சொல்லலடா..!! நீ அப்படி தப்பா நெனச்சிருந்தா.. அதுக்காக நான் மன்னிப்பு கேட்டுக்குறேன்..!! என்னை மன்னிச்சுடு அசோக்.. ப்ளீஸ்..!!”

ப்ரியாவின் குரல் மிகவும் கெஞ்சலாக ஒலித்தது. அவள் இந்த மாதிரி நள்ளிரவு கால் செய்து, தன் மனதில் இருந்ததை தெளிவு படுத்தி மன்னிப்பு கேட்டதில், அசோக் சற்றே நெகிழ்ந்து போனான். அவன் மனதில் இருந்த ஈகோமூட்டம் இப்போது கொஞ்சமாய் விலக, காதல்மதி மெல்ல எட்டிப் பார்த்தது. தானுந்தான் அவள் சாதாரணமாக சொன்னதை சீரியசாக எடுத்துக்கொண்டு, ஓவர் ரியாக்ட் செய்துவிட்டோமோ என்று தோன்றியது. ஆனால் மனதில் ஏற்பட்ட அந்த நெகிழ்ச்சியை குரலில் காட்டிக்கொள்ளாமல்,

“பரவால விடு..!!” என்றான் இறுக்கமாக.

“இல்ல.. என்னை மன்னிச்சுட்டேன்னு சொல்லு..!!”

“ப்ச்.. அதான் விடுன்னு சொல்றேன்ல.. விடு..!!”

என்று அசோக் எரிச்சலாக சொல்ல, ப்ரியா அமைதியானாள். இப்போது அசோக் ஏதோ நினைவுக்கு வந்தவனாய், தன் குரலின் இறுக்கத்தை தளர்த்திக்கொண்டு இதமாக கேட்டான்.

“சாப்டியா..??”

“ம்ம்.. சாப்டேன்..!!”

“சரி.. ஃபோனை வச்சுட்டு போய் தூங்கு.. போ..!!”

“எனக்கு தூக்கம் வரலை..!!”

“ம்ம்.. என்ன பண்ணலாம்னு சொல்ற இப்போ..??”

“கொஞ்ச நேரம் பேசிட்டு இருக்கலாமா..??”

“என்ன பேசுறது..??”

“சும்மா.. ஏதாச்சும்..!!”

“ஹ்ம்ம்ம்.. சரி.. பேசு..!!”

“நல்லா தூங்கிட்டு இருந்தியோ.. ஃபோன் பண்ணி டிஸ்டர்ப் பண்ணிட்டனா..??”

“இல்ல இல்ல.. இன்னும் தூங்கல.. மூவி பாத்துட்டு இருந்தேன்..!!”

“ஓ.. என்ன மூவி..??”

“வுமன் இன் ப்ளாக்னு ஒரு ஹாலிவுட் மூவி..!!”

“யார் நடிச்சது..??”

“ஆக்டர்ஸ் பேர்லாம் தெரியலை..!!”

“ஹ்ம்ம்.. அது ஏன் அப்படி டைட்டில் வச்சிருக்காங்க.. வுமன் இன் ப்ளாக்னு..??”

“ம்ம்ம்..?? படத்துல.. உன்னை மாதிரியே அழகான ஒரு பொண்ணு.. ப்ளாக் ட்ரஸ் போட்டுக்கிட்டு அப்பப்போ வந்துட்டு போவா..!!” சற்றுமுன் அவளை பேய் என்றதை இப்போது அசோக் வேறுவிதமாக சொன்னான்.

“ஓ..!! அதெதுக்கு அப்பப்போ வந்துட்டு போறா.. அடிக்கடி வர வேண்டியதுதான..??” அது புரியாமல் ப்ரியாவோ அப்பாவியாக கேட்டாள்.

“அவ அப்படித்தான்..!!”

அசோக் சொல்லிவிட்டு மனதுக்குள் சிரித்தான். லூசு என்று திட்டினான்.. அதுவும் மனதுக்குள்தான்..!! அப்புறம் இருவரும் நீண்ட நேரம் பேசிக்கொண்டிருந்தார்கள். வெறுப்பு அகன்று நட்பு திரும்பியவர்களாய்.. உறக்கம் மறந்து உள்ளம் மலர்ந்தவர்களாய்..!!

இரவு நெடுநேரம் அந்த மாதிரி பேசிக்கொண்டிருந்ததால்.. அன்று நடந்த சண்டையின் காரணமாய் அவர்களுக்கிடையே ஏற்பட்டிருந்த இறுக்கம்.. அடுத்த நாள் அவர்கள் சந்திக்கையில் வெகுவாக குறைந்திருந்தது..!! இயல்பு நிலை ஓரளவிற்கு திரும்பியிருந்தது..!!

அன்று காலை சில்க்போர்ட் சிக்னலில் இருவரும் எதிரெதிரே நின்றுகொண்டிருந்தார்கள்.. அசோக் தனது பைக்கிலும்.. ப்ரியா தனது ஸ்கூட்டியிலும்..!! தூரத்தில் இருந்தே ப்ரியா அசோக்கை கவனித்துவிட்டாள். ஆனால் அசோக் இவளை கவனிக்கவில்லை. முதலில் அசோக்கிற்கு க்ரீன் சிக்னல் விழுந்து, அவன் ரைட் டர்ன் எடுத்து எலக்ட்ரானிக் சிட்டி சாலையில் பைக்கை செலுத்தினான். விரைவிலேயே ப்ரியாவிற்கும் சிக்னல் விழ, அவள் அவசரமாய் லெஃப்ட் டர்ன் எடுத்து ஸ்கூட்டியை விரட்டினாள்.

மிதமான வேகத்தில் பைக்கை செலுத்திக் கொண்டிருந்த அசோக், திடீரென தனக்கு பக்கவாட்டில் ‘கீங்.. கீங்..’ என்று அந்த ஹார்ன் சத்தம் கேட்டதும் தலையை திருப்பி பார்த்தான். அசோக்கின் வேகத்துக்கு ஈடுகொடுத்து ஸ்கூட்டியை செலுத்திக்கொண்டிருந்த ப்ரியா, ஹெல்மட் கண்ணாடியை மேலே ஏற்றிவிட்டு இவனைப் பார்த்து புன்னகைத்துக் கொண்டிருந்தாள். ஆச்சரியமான அசோக்கும் இப்போது பதிலுக்கு அவளைப் பார்த்து புன்னகைத்தான். அவளிடம் ஏதோ பேசுவதற்காக வாயெடுத்தான். ஆனால் அதற்குள் ப்ரியா..

தனது ஸ்கூட்டியின் ஆக்சிலரேட்டரை சரக்கென முறுக்கி, வண்டியை சாலையில் சீறிப்பாய விட்டாள். அசோக்கை தாண்டி கொஞ்ச தூரம் சென்று, அவர்களுக்கிடையே சில மீட்டர்கள் இடைவெளி வந்ததும், தனது வலது கையை நீட்டி, அவளுடைய கட்டை விரலை கவிழ்த்து இவனுக்கு காட்டினாள். அசோக்கிற்கு சிரிப்பு வந்தது. உடனடியாய் அவனுக்குள்ளும் ஒருவித குழந்தைத்தனமான ஈகோ வந்தது. ‘என்கிட்டயா உன் வேகத்தை காட்டுற.. இருடி.. இதோ வர்றேன்..’ என்று மனதுக்குள் நினைத்தவனாய், தனது பைக்கின் ஆக்சிலரேட்டரை பற்றி திருகினான். ஸ்பீடா மீட்டர் முள் சர்ரென க்ளாக்வைஸில் வட்டம் அடித்து மேலே செல்ல, அவனுடைய பைக் ஜிவ்வென்று முன்னோக்கி பாய்ந்தது.. ப்ரியாவின் ஸ்கூட்டியை மெல்ல மெல்ல நெருங்கியது..!!

அசோக்கின் பாய்ச்சலை ரியர்வ்யூ மிரரில் கவனித்து புன்னகைத்தாள் ப்ரியா. அவளும் அந்த போட்டியை விட மனம் இல்லாதவளாய்.. உச்சபட்ச வேகத்தில் தனது வண்டியை செலுத்தினாள்..!! ஆனால்.. அசோக்கின் வேகம் சற்று கூடுதலாய் இருக்க.. இருவருக்கும் இடையிலான இடைவெளி கொஞ்சம் கொஞ்சமாய் குறைந்து கொண்டே வந்தது..!! இப்போது இரண்டு வண்டிகளுமே ஒரே நேர்க்கோட்டில் வந்தன.. காற்றை கிழித்தவாறு விர்ரென சீறிப்பாய்ந்தன.. சாலையில் சென்ற வாகனங்களை புயல்வேகத்தில் கடந்து பறந்தன..!! ப்ரியாவை கொஞ்சம் கொஞ்சமாய் கடந்து சென்று முன்னேறிய அசோக், ‘ஹேய்…!!!’ என்று முஷ்டியை மடக்கி குழந்தைத்தனமாய் குதுகலித்தான்..!!

அப்புறம் கொஞ்ச நேரத்திற்கு.. அவர்கள் இருவரும் தங்களது சிறுபிள்ளைத்தனமான ஈகோவை தார்ச்சாலையில் ஓடவிட்டு போட்டியிட்டுக்கொண்டார்கள்..!! இருவரும் மாறி மாறி ஒருவரை ஒருவர் முந்துவதும்.. முந்தியதுமே கூக்குரல் இடுவதும்.. அடுத்து வருகிற சிக்னலில் சிக்கி ஒன்றிணைவதும்.. பிறகு சிக்னல் விழுந்ததும் சீறிப் பாய்வதுமாக..!! அந்த மாதிரி ரேஸ் விட்டுக்கொண்டே ஆபீஸ் வந்தடைந்தார்கள்..!!

ஆபீஸ் வளாகத்தை நெருங்கியும் கூட இருவரும் வேகத்தை குறைக்கவில்லை..!! வண்டியில் பறந்து கொண்டே.. இருவரும் கழுத்தில் தொங்கிய ஐடி கார்டை உயர்த்தி காட்ட.. கேட் அவசரமாய் திறந்து கொண்டது..!! இருவருக்கும் பொதுவாய் செக்யூரிட்டி அடித்த சல்யூட்டை கண்டுகொள்ளாமலேயே.. வளாகத்துக்கு உட்புறமான சிமென்ட் சாலையில் ஒன்றாக சீறிப் பாய்ந்தார்கள்..!! பார்க்கிங் ஏரியாவை அடைந்து.. சடன் ப்ரேக் அடித்து.. சரக் சரக்கென.. அடுத்தடுத்து வண்டியை நிறுத்தினார்கள்.. ஹெல்மட் கழற்றி புன்னகைத்தார்கள்.. குறும்பு கொப்பளிக்கும் விழிகளால் நேருக்கு நேர் பார்த்துக் கொண்டார்கள்..!!

“இடியட்..!!” ப்ரியா இதழில் கசிந்த சிரிப்புடனே சொன்னாள்.

“ஸ்டுபிட்..!!” அசோக் உதட்டை பிதுக்கியவாறு கேலியாக சொன்னான்.

அதன்பிறகு ஒரு பத்து நிமிடங்கள் கழித்து.. அவர்கள் டீம் உறுப்பினர்கள் கேஃப்டீரியாவில் காலை உணவிற்காக ஒன்றாக குழுமியிருந்தார்கள். நேத்ரா மட்டும் மிஸ்ஸிங்..!! அனைவரும் ஆளுக்கொரு பண்டத்தை வாங்கி, அதை அவ்வப்போது ஸ்பூனால் விண்டு வாயில் போட்டுக்கொண்டே பேசிக்கொண்டிருந்தார்கள்..!! ப்ரியா வீட்டிலேயே சாப்பிட்டுவிட்டு வந்துவிடுவதால் எதுவும் தனியாக வாங்கிக்கொள்ளவில்லை.. அடுத்தவர்கள் தட்டில் இருப்பதை அவ்வப்போது எடுத்து கொறித்துக் கொண்டாள்.. அசோக் ஒரு ஜூஸ் மட்டும் வாங்கி உறிஞ்சிக் கொண்டிருந்தான்..!!

அவர்கள் கம்பனியில் ஆண்டுக்கு ஒரு முறை ஆனுவல் டே கொண்டாடுவார்கள்..!! ஆபீஸில் அன்று முழுவதும் யாரும் எந்த வேலையும் செய்யமாட்டார்கள்..!! ஆட்டம், பாட்டம், கூத்து, கும்மாளம் என்று கம்பனியே புதுச்சாயம் பூசிக்கொள்ளும்..!! வருடம் முழுதும் வேலை வேலை என்று திரிபவர்களுக்கு.. அந்த ஒருநாள் மிகவும் இளைப்பாறுதலாய் இருக்கும்..!! அந்த ஆனுவல் டே அடுத்த வாரம் வருகிறது.. அதைப்பற்றித்தான் அவர்கள் இப்போது பேசிக்கொண்டிருந்தார்கள்..!! அசோக் ஹரியிடம் கேட்டான்..

- தொடரும்

மேலும் செக்ஸ் கதைகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் :

தமிழ்காமவெறி தளம்

ஐ ஹேட் யூ, பட் – பகுதி 24

$
0
0

“ஏண்டா.. எப்போவும் சோனு நிகம், சாதனா சர்கம்னு செலப்ரிடி யாரையாவது கூட்டிட்டு வருவானுக.. இந்த வருஷம் நம்மளையே ஆடிப்பாட சொல்லிட்டானுக..??” அசோக்கின் கேள்விக்கு ஹரி கேலியான குரலில் பதில் சொன்னான்.

“எல்லாம் காஸ்ட் கட்டிங் மச்சி.. காஸ்ட் கட்டிங்..!!”

“ம்க்கும்.. இதுலயுமா காஸ்ட் கட்டிங்..??”

மேலும் செக்ஸ் கதைகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் :

தமிழ்காமவெறி தளம்

“என்ன மச்சி இப்படி கேக்குற..?? இப்போலாம் ஐடி கம்பனிஸ் காஸ்ட் கட்டிங் பண்றோம்ன்ற பேர்ல.. எதெதுன்னு வெவஸ்தையே இல்லாம எல்லாத்துலயும் கைவைக்க ஆரம்பிச்சுட்டானுக.. டாய்லட் பேப்பர் மொதக்கொண்டு இவ்ளோ காஸ்ட்லியான பேப்பர் வாங்கணுமான்னு யோசிக்கிறானுக மச்சி..!! இன்ஃப்லேஷன்றானுக.. ஸ்லோடவுன்றானுக.. மார்க்கெட் க்ராஷ்ன்றானுக.. எகனாமி க்ரைசிஸ்ன்றானுக.. என்ன சொல்றானுகன்னே ஒரு எழவும் புரியலை..!!”

“ஹ்ம்ம்…!!”

“பேன்ட்ரில இருந்த காபி கப்லாம் போன மாசம் மாத்தினானுக.. ஞாபகம் இருக்கா..??”

“ஆ..ஆமாம்.. ஞாபகம் இருக்கு..!!”

“பெருசா இருந்த கப்லாம் சின்னதா மாத்திட்டானுக..!! வொய்..??? காஸ்ட் கட்டிங்..!!!! பாலை மிச்சம் பண்றானுகளாம்.. பக்கோடா வாயனுக..!!”

“ஓ..!! இதுல இப்படி ஒரு சைக்காலஜி இருக்கோ..??”

“ம்ம்ஹ்ஹ்ம்ம்… இண்டஸ்ட்ரியே ஒன்னும் சரியில்ல மச்சி..!! போற போக்கை பாத்தா.. இன்னும் கொஞ்ச நாள்ல.. நாமள்லாம் கோவணத்தை கட்டிக்கிட்டு கோட் அடிக்கிற நெலமை வந்தா கூட ஆச்சரியப் படுறதுக்கு இல்ல..!!”

“ஹாஹாஹாஹா..!!”

212

அசோக் அவ்வாறு சிரித்துக் கொண்டிருக்கும்போதுதான் நேத்ரா கேஃப்டீரியாவுக்குள் நுழைந்தாள். ஓரிரு வினாடிகள் சுற்றும் முற்றும் பார்த்தவள், அப்புறம் இவர்கள் அமர்ந்திருந்த இடத்தை கண்டு கொண்டதும், நேராக இவர்களை நோக்கி விறுவிறுவென நடந்து வந்தாள். அவளுடைய முகம் கடுகடுவென இருந்தது. ஏதோ கோபத்தில் இருக்கிறாள் என்று தெளிவாக தெரிந்தது. வேகமாக நடந்து இவர்களை நெருங்கியவள், குனிந்து சான்ட்விச் கடித்துக்கொண்டிருந்த கோவிந்தின் தலையில் ‘நங்..’ என்று ஒரு குட்டு வைத்தாள்.

“ஆஆஆஆஆ…!!”

சான்ட்விச் நிரம்பிய வாயுடன் கோவிந்த் கத்தினான். அவன் கத்தவும், மற்ற எல்லோரும் குபுக்கென எழுந்த சிரிப்பை அடக்க முடியாமல் சிரித்து விட்டார்கள். எல்லோரும் சிரித்து முடித்தபிறகும், ஹரி மட்டும் ‘ஹாஹாஹாஹா..!!’ என்று கூடக்கொஞ்ச நேரம் சிரித்தான். தலையை நிமிர்த்தி ஹரியை அப்படியே முறைத்து பார்த்த கோவிந்த், இப்போது நேத்ராவை ஏறிட்டு சற்று எரிச்சலாகவே கேட்டான்.

“ஹேய்.. வாட் ஹேப்பன்ட் டூ யூ..?? எதுக்கு இப்போ தேவை இல்லாம அடிச்ச..??”

நேத்ரா பதில் சொல்லாமல் காலியாக கிடந்த சேரில் அமர்ந்து கொண்டாள். அமர்ந்த பிறகும் எதுவும் பேசாமல் கோவிந்தையே முறைத்துப் பார்த்தாள். ‘கேக்குறன்ல..?? சொல்லு..’ என்று கோவிந்த் திரும்ப கேட்டும் புண்ணியம் இல்லை. இப்போது ப்ரியா பொறுக்க முடியாமல் நேத்ராவிடம் கேட்டாள்.

“ஹேய்.. என்னாச்சு நேத்ரா.. ஏன் இப்படி டென்ஷனா இருக்குற..??”

“பாரு ப்ரியா.. என்னை கேக்காம.. சிங்கிங் காம்படிஷனுக்கு என் பேரை குடுத்திருக்கான்..!!” நேத்ரா ஒருவழியாய் வாய் திறந்து பேசினாள்.

“ஓ.. அவ்ளோதான மேட்டர்..??” எல்லோருக்கும் சப்பென்று போனது.

“ப்ச்.. நான் எவ்ளோ சீரியஸா பேசிட்டு இருக்கேன்.. அவ்ளோதானான்னு எல்லாம் கூலா கேக்குறீங்க..??”

“ஹேய் நேத்ரா.. இதுல என்னப்பா இருக்கு..??” கோவிந்த் இப்போது நேத்ராவிடம் பாவமாக கேட்டான்.

“என்ன இருக்கா..?? அறை வாங்கப்போற எங்கிட்ட..!! அதெப்படி நீ எங்கிட்ட கேக்காம என் பேரை குடுக்கலாம்..??” நேத்ரா அவனிடம் எரிந்து விழுந்தாள்.

“கேட்டா நீ குடுக்க விட மாட்ட.. அதான் நானா குடுத்தேன்..!!”

“நீ என் பேரை குடுத்தது எனக்கு புடிக்கல.. போய் என் பேரை வாபஸ் வாங்கு.. போ..!!”

“ப்ச்.. ஏன் இப்படி பேசுற..?? நீதான் நல்லா பாடுவல.. அப்புறம் என்ன..??”

“நான் ஏதோ சும்மா ஜாலியா பாடுறேன்..!! அதுக்காக.. ஸ்டேஜ்ல போய் பாடுறதுலாம்.. எனக்கு புடிக்கல.. எனக்கு ஒருமாதிரி இருக்கு..!! ப்ளீஸ் கோவிந்த்.. நீயே போய் என் பேரை அந்த லிஸ்ட்ல இருந்து ரிமூவ் பண்ண சொல்லிடு.. ப்ளீஸ்..!!”

“ம்ஹூம்.. அதுலாம் முடியாது.. நீ பாடனும்..!!”

“என்னால பாட முடியாது.. போதுமா..??”

நேத்ரா கோபமாக சொல்லிவிட்டு, பார்வையை வேறெங்கோ திருப்பிக் கொண்டாள். எல்லோரும் என்ன சொல்வதென்று தெரியாமல் அமைதியாக இருந்தார்கள். கோவிந்த் கொஞ்ச நேரம் நேத்ராவின் முகத்தையே கூர்ந்து பார்த்துக் கொண்டிருந்தான். அப்புறம் ஒரு பெருமூச்சை வெளிப்படுத்திவிட்டு மெல்லிய குரலில் பேச ஆரம்பித்தான்.

“இங்க பாரு நேத்ரா.. நான் சும்மா உன்னை சீண்டுறதுக்காக உன் பேரை குடுக்கலை..!! உனக்கு ஸ்வீட்டான வாய்ஸ் இருக்கு.. ரொம்ப அழகா பாடுற..!! இந்த விஷயம் எங்களுக்கு மட்டும் தெரிஞ்சா போதுமா..?? இந்த கம்பனில இருக்குற எல்லாருக்கும் தெரிய வேணாமா..?? இது ஒரு ஆப்பர்ச்சூனிட்டி..!! உனக்கு இருக்குற டேலன்ட்டை உள்ளயே வச்சிருந்தா.. அதனால என்ன யூஸ்.. சொல்லு பார்ப்போம்..?? அதை வெளிச்சம் போட்டு காட்டுறதுதான்.. அந்த டேலன்ட்டுக்கு நீ தர்ற மரியாதை..!! எனக்கு ஆசையா இருந்தது நேத்ரா.. நீ அவ்ளோ பேர் முன்னாடி ஸ்டேஜ்ல பாடனும்.. எல்லாரும் உன் வாய்ஸ் கேட்டு என்ஜாய் பண்ணனும்.. நல்லாருக்குன்னு கை தட்டனும்.. உன்னை பாராட்டனும்.. இதெல்லாம் பாக்கனும்னு எனக்கு ரொம்ப ஆசையா இருந்தது..!! அதான் உன்னை கேக்காம.. நானா உன் பேரை குடுத்துட்டேன்.. நான் செஞ்சது தப்புனா.. ஐம் ரியல்லி வெரி ஸாரி..!! பட்.. பாட மாட்டேன்னு மட்டும் சொல்லாத நேத்ரா.. ப்ளீஸ்..!!”

நிதானமாக பேசிய கோவிந்த் கெஞ்சலாக முடித்தான். எல்லோரும் ஒருவித வியப்புடன் அவன் பேசுவதையே கேட்டுக் கொண்டிருந்தனர். நேத்ராவும் இப்போது கோவிந்தின் முகத்தையே இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தாள். அவளுக்குள் ஏதோ ஒரு உணர்ச்சி பொங்குவது போலிருக்க, உதடுகளை கடித்து கட்டுப்படுத்தியவாறே, அவனை அமைதியாக பார்த்துக் கொண்டிருந்தாள். இப்போது அவளுக்கு அருகில் இருந்த கவிதா அவளுடைய தோளைப் பற்றி உலுக்கினாள்.

“ஹேய்.. கோவிந்த் சொல்றதுதான் கரெக்ட்..!! நீ இந்த காம்படிஷன்ல கலந்துக்கிட்டே ஆகணும் நேத்ரா..!!” என்றாள்.

“யெஸ்.. யு ஹேவ் டு பார்ட்டிஸிப்பேட்..!!!” மற்றவர்களும் இப்போது கோரஸாய் சொன்னார்கள். ஹரி மட்டும்..

“அதுசரி.. அப்படினா.. ஆனுவல் டே அன்னைக்கு ஆடிட்டோரியம் பக்கத்துல லோபர்மைட் டேப்லட் சில்லறைல வித்தா.. பெத்த லாபம் பாக்கலாம்னு சொல்லுங்க..!!” என்றான்.

“எ..என்ன சொல்றீங்க..??” கவிதா புரியாமல் கணவனை கேட்டாள்.

“ஆமாம்.. இவ பாடுறதை கேட்டு அன்னைக்கு எத்தனை பேருக்கு வாந்தி பேதி புடுங்கப் போகுதோ..??”

ஹரி கேலியாக சொல்ல, நேத்ரா இப்போது கடுப்புடன் அவனை ஏறிட்டு முறைத்தாள். டேபிளில் இருந்த உப்பு டப்பாவை எடுத்து அவன் மீது சரக்கென வீசினாள். அவன் அதை கேட்ச் பிடித்துக்கொள்ள, இவள் சீற்றமாக சொன்னாள்.

“யூ…!!! என் வாய்ஸ் என்ன அவ்வளவு கேவலமா..?? பாக்கலாம்.. நான் பாடத்தான் போறேன்.. ஆனா யாருக்கும் நீ சொன்ன டேப்லட் தேவைப்படாது..!! உனக்கு வேணும்னா.. நாலு ஜெலுசில் கொண்டு வா.. வயித்தெரிச்சலை கண்ட்ரோல் பண்ணிக்க தேவைப்படும்..!!”

“ஹாஹா.. பாத்தீங்களா.. நீங்கல்லாம் எவ்ளோ கெஞ்சுனீங்க..?? நான் ஒருத்தன் இப்படி கலாய்ச்சதும்.. எப்படி ரோஷமா ஒத்துக்கிட்டா பாத்தீங்களா..??”

ஹரி அப்படியே பிளேட்டை திருப்பி போட, இப்போது எல்லோரும் அவனை புன்னகையும் நட்புமாய் பார்த்தார்கள். நேத்ரா மட்டும் சற்றே வெட்கமுற்றவளாய் தலையை கவிழ்த்துக் கொண்டாள். பிறகு அப்படியே தன் கருவிழிகளை ஒரு சுழற்று சுழற்றி ஓரத்துக்கு தள்ளி.. கோவிந்தை பார்த்தாள்..!!

இப்போது கவிதா திடீரென ஏதோ ஞாபகம் வந்தவளாய் சேரில் இருந்து எழுந்து கொண்டாள்.

“ஹையோ.. கட்லட் ஒன்னு ஆர்டர் பண்ணினேன்பா.. மறந்தே போயிட்டேன்.. பேசிட்டு இருங்க.. நான் போய் வாங்கிட்டு வந்துடுறேன்..!!”

என்றவாறு ஃபுட் கவுன்ட்டர் நோக்கி நடந்தாள். ஹரி அதற்காகத்தான் காத்திருந்தவன் மாதிரி, அசோக்கிடம் திரும்பி சன்னமான குரலில் சொன்னான்.

“மச்சி.. உனக்கு ஒரு மேட்டர் தெரியுமா..??”

“எனக்கு என்னடா தெரியுது..?? உலகத்துல நடக்குற எல்லா மேட்டரும் உன் ஒருத்தனுக்கு மட்டுந்தான் தெரியுது.. அது எப்படித்தான் நீ தெரிஞ்சுக்குறியோ.. எனக்கு ஒன்னும் புரியலை..!! ஹ்ம்ம்.. என்ன மேட்டர்.. சொல்லு..!!”

“நம்ம டீம்ல புதுசா ஒரு பொண்ணு ஜாயின் பண்ண போகுது மச்சி..!!”

“ஓ.. அப்படியா..??” அசோக் தெரிந்தும் தெரியாதவன் போல நடித்தான்.

“ஆமாண்டா.. தமிழ் பொண்ணுதான்..!! ப்ரியாதான் அந்தப்பொண்ணை இன்டர்வ்யூ பண்ணது.. ஏன் ப்ரியா.. அசோக்ட்ட சொல்லலை..??”

“இன்டர்வ்யூலாம் எடுக்க ஆரம்பிச்சுட்டியா ப்ரியா..?? சொல்லவே இல்லை..??” அசோக் ப்ரியாவிடம் சற்றே கேலியாக கேட்டான்.

“ப்ச்.. சொல்லக்கூடாதுன்னுலாம் ஒன்னும் இல்ல.. எனக்கு அது பெரிய விஷயமா தோணலை..!!” ப்ரியா கெத்தாக சொன்னாள்.

“ஓ..!!” அசோக் அவளை ஓரக்கண்ணால் ஏளனமாக பார்த்தான்.

“ஆனா.. சும்மா சொல்லக்கூடாதுடா..!!” ஹரி இடையில் புகுந்து சொன்னான்.

“எதை..??”

“அந்தப் பொண்ணை சொன்னேன் மச்சி..!! இன்டர்வ்யூ வந்த அன்னைக்கு அந்த பொண்ணை நான் பாத்தேன்.. எங்கிட்டதான் கேஃப்டீரியாவுக்கு வழி கேட்டுச்சு..!!”

“ஓ.. நீதானா அது..??” அசோக்கின் கிண்டலை ஹரி கவனிக்கவில்லை. தொடர்ந்து பேசிக்கொண்டிருந்தான்.

“பொண்ணுன்னா அதுதாண்டா பொண்ணு..!! என்ன ஒரு அடக்கம்.. என்ன ஒரு அமைதி.. என்ன ஒரு டீசன்சி..!!” என்று பெருமிதமாக சொன்னவன், அப்புறம் ப்ரியாவை பார்த்து முகத்தை சுளித்துக்கொண்டே சொன்னான்.

“இதுங்களுந்தான் இருக்குதுங்களே..??”

“ஏய்.. என்ன கொழுப்பா..?? அடங்குடா..!!” ப்ரியா முஷ்டியை மடக்கி காட்டினாள்.

“பாரு.. இதுங்க அடங்காம திரிஞ்சுக்கிட்டு.. நம்மள அடங்க சொல்லுதுங்க.. பொண்ணுகளா இதுகல்லாம்..??”

ஹரி சொல்லிக்கொண்டிருக்கும்போதே, கவிதா கட்லட் வாங்கிகொண்டு அவனை நெருங்கியிருந்தாள். ஆனால் ஹரி அதை கவனிக்கவில்லை. அவனை மனைவியிடம் மாட்டிவிடும் எண்ணத்துடன் பிரியா வில்லத்தனமாக அந்தக் கேள்வியை கேட்டாள்.

“இதுகல்லாம்னா கவிதாவையும் சேர்த்துத்தான் சொல்றியா..??”

“ஹாஹா.. இதுல என்ன சந்தேகம்..?? அந்த அடங்காப்பிடாரி லிஸ்ட்ல நம்பர் ஒன்னே என் வொய்ஃப்தான..??”

அவன் சொல்லி முடிக்கும் முன்பே அவனுடைய நடு மண்டையில் நங்கென்று ஒரு குட்டு வைத்தாள் கவிதா. ஹரி ‘ஆஆஆஆ…’ என்று தலையை தேய்த்தவாறு வலியில் அலறி துடிக்க, எல்லோருமே வாய் விட்டு சிரித்தார்கள். கோவிந்த் மட்டும் கொஞ்ச நேரம் எக்ஸ்ட்ராவாய், ஹரியை நோக்கி கையை நீட்டி நீட்டி சிரித்தான். இப்போது ஹரி கோவிந்தை ஏறிட்டு கடுப்புடன் முறைத்தான்.

“அங்க என்ன பார்வை..?? இந்தப்பக்கம் திரும்புங்க.. என் மூஞ்சியை பாத்து சொல்லுங்க.. நான் அடங்காப்பிடாரியா..??” கவிதா கோவத்தில் சிவந்து போன முகத்துடன் கேட்டாள்.

“ஐயோ.. இல்லம்மா.. உன்னைப் போய் நான் அப்படிலாம் சொல்வனா..?? நீ பின்னாடி நின்னதை நான் முன்னாடியே கவனிச்சுட்டேன்.. சும்மா இதுங்களுக்காக அப்படி காமடி பண்ணினேன்..!!” ஹரி பரிதாபமாக சமாளிக்க முயன்றான்.

“இல்ல கவிதா.. பொய் சொல்றான்.. நாமள்லாம் அடங்கா பிடாரிங்கலாம்.. பொண்ணுன்னா அந்தப்பொண்ணு மட்டுந்தான் பொண்ணாம்..!!” ப்ரியா போட்டுக் கொடுத்தாள்.

“எ..எந்தப்பொண்ணு..??”

“நம்ம டீம்ல புதுசா ஜாயின் பண்ணப்போற பொண்ணு..!!”

“ஓ..!! யார் அவ..?? அவளை எப்படி உங்களுக்கு தெரியும்..??” கவிதா கணவனை பார்த்து சீற்றமாக கேட்டாள்.

“அட அவளைப்பத்தி எனக்கு ஒன்னும் தெரியாதுமா..!! இ..இன்டர்வ்யூ வந்த அன்னைக்கு வழி சொன்னேன்.. அவ்ளோதான்..!! அ..அவ பேர் கூட இப்போ எனக்கு சரியா ஞாபகம் இல்ல.. ஏதோ.. செந்தாமரையோ செங்கமலமோ..??” ஹரி தலையை தடவியவாறு தடுமாற்றமாய் சொல்ல..

“செண்பகம்.. செண்பக லக்ஷ்மி..!!”

அசோக் மெல்லிய குரலில் சொல்லிவிட்டு ஸ்ட்ராவில் ஜூஸை உறிஞ்ச ஆரம்பித்தான். இப்போது எல்லோரும் அவனை ஏறிட்டு வியப்பாக பார்த்தார்கள். ப்ரியாதான் ஆச்சரியத்தை அடக்க முடியாதவளாய் ஒருவித குறுகுறுப்புடன் கேட்டாள்.

“ஹேய்.. உனக்கு எப்படி அவ பேர் தெரியும்..??”

“ஹ்ஹ.. பேபியா இருக்குறப்போ இருந்தே அவளை எனக்கு தெரியும்.. பேர் தெரியாம இருக்குமா..??” அசோக் கூலாக சொல்ல, எல்லோருடைய முகத்திலுமே ஒருவித ஆச்சரியம் படர்ந்தது. பிரியாவுக்கும் அதே ஆச்சரியம்.

“எ..என்ன சொல்ற நீ..??”

“அவ என் சொந்தக்கார பொண்ணுதான் ப்ரியா.. கொஞ்சம் தூரத்து சொந்தம்..!!”

“ஓ..!! சொந்தக்கார பொண்ணுன்னு சொல்ற.. நம்ம கம்பனில ஜாயின் பண்ணப்போறா.. ஏன் எங்கிட்ட சொல்லவே இல்ல..??”

“ப்ச்.. சொல்லக்கூடாதுன்னுலாம் ஒன்னும் இல்ல.. எனக்கு அது பெரிய விஷயமா தோணலை..!!”

ப்ரியா சற்றுமுன் கெத்தாக சொன்ன வார்த்தைகளையே அசோக் இப்போது திருப்பிக் கொடுக்க, அவள் ஒருவித எரிச்சலுடன் அவனை பார்த்தாள். வாயை இறுக்க மூடிக்கொண்டாள். அப்புறம் எல்லோரும் சாப்பிட்டு முடித்து, கை கழுவிக்கொள்ளும்போதுதான் மீண்டும் ஆரம்பித்தாள்.

- தொடரும்

மேலும் செக்ஸ் கதைகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் :

தமிழ்காமவெறி தளம்

ஐ ஹேட் யூ, பட் – பகுதி 25

$
0
0

“என் தம்பிதான் அந்த பொண்ணோட ரெஸ்யூம் ஃபார்வர்ட் பண்ணினான் அசோக்..!!”

“அப்படியா..??”

“ஆமாம்.. அவனுக்கு இவ காலேஜ் சீனியராம்..!!”

மேலும் செக்ஸ் கதைகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் :

தமிழ்காமவெறி தளம்

“ஓஹோ..?? இந்த விஷயம் எனக்கு தெரியாம போச்சே.. சரி.. நான் அவகிட்ட கேக்குறேன்..!!”

“ஹ்ம்ம்.. அடுத்த மாசம் ஜாயின் பண்றால..??”

“இல்ல.. கொஞ்சம் எர்லியராவே ஜாயின் பண்ணிடுவா போல இருக்கு.. அவங்க கம்பனில சீக்கிரமே ரிலீவ் பண்றாங்களாம்.. காலைல பேசுறப்போ சொன்னா..!!”

“ஓ..!!”

மனதில் ஏதோ ஒரு உறுத்தல் எழ, ப்ரியா அமைதியாகிப் போனாள். கை கழுவிட்டு வெளியே வந்தார்கள். அவர்களுடைய தளத்துக்கு செல்ல, அனைவரும் லிஃப்ட் நோக்கி நடையை போட்டபோது, உள்ளுக்குள் இருந்த அந்த குறுகுறுப்பை அடக்க முடியாமல், அசோக்கிடம் மெல்லிய குரலில் கேட்டாள்.

“சொ..சொந்தக்கார பொண்ணுனா.. உனக்கு என்ன முறை வேணும் அசோக்..??”

“ஏன் கேக்குற..??’

“சு..சும்மாதான்.. தெரிஞ்சுக்கலாமேன்னு..!!”

“எனக்கு அக்கா பொண்ணு.. மாமா மாமான்னுதான் கூப்பிடுவா.. அவ அக்காவைத்தான் என் அண்ணனுக்கு முடிச்சிருக்கோம்..!!”

“ஓ..!!!!!”

ப்ரியாவுக்கு மனதில் இருந்த உறுத்தல் இப்போது இன்னும் பெரிதானது. செண்பகத்தின் மீது ஒரு இனம்புரியாத பொறாமை அவளுடைய உள்ளத்தில் உருவானது. ‘அந்த செண்பகத்துக்கு பதிலாக நான் இவனுடைய முறைப்பெண்ணாக இருந்திருக்க கூடாதா..?’ என்று ஏக்கம் வந்தது. ‘மாமா மாமா என்று இவனை கொஞ்சி கொஞ்சி கூப்பிடலாமே..?’ என்று ஆசை எழுந்தது. அந்த ஆசையுடனும் ஏக்கத்துடனுமே அசோக்கை ஓரக்கண்ணால் ஒரு பார்வை பார்த்தாள்.

அத்தியாயம் 15

எல்லோரும் லிஃப்ட் ஏறி அவர்களுடைய தளத்திற்கு சென்று, அன்றைய வேலையை கவனிக்க ஆரம்பித்தார்கள். நேத்ரா அன்று முழுக்க அசோக்கைப்போட்டு அரித்தெடுத்தாள். பாட்டுப்போட்டியில் கலந்து கொள்வதாக முடிவு செய்திருந்தாள் அல்லவா..?? அது விஷயமாகத்தான்..!! அசோக்கிற்கு அந்தக்காலம் முதல் இந்தக்காலம் வரை வந்த தமிழ் திரை இசை பாடல்கள் எல்லாம் அத்துபடி..!! அவள் இவனை அணுகியதற்கு அதுதான் காரணம்..!!

“ஹேய்.. ‘கண்டுகொண்டைன் கண்டுகொண்டைன்’னல்லி ஒந்து ஸாங்கு இதியல்லா..?? சித்ரா ஸோலோ ஸாங்கு..!!” என்று ‘கண்ணாமூச்சி ஏனடா..?’ பாடலை கேட்டாள்.

“ஆமாம்.. இருக்கு..!!”

“ஆ சாங்கு MP3 நன்க் பேக்கு..!!”

“அது எதுக்கு உனக்கு..??”

“காம்படிஷன்கே ப்ராக்டிஸ் மாட் பேக்கு..!!”

“தமிழ் சாங்கா பாடப்போற..?? உனக்குத்தான் தமிழ் புடிக்காதுல..??”

“ஹூ டோல்ட்..?? ஐ லைக் டமில் வெரி மச்..!!”

என்று இதழில் புன்னகையும், முகத்தில் மலர்ச்சியுமாய் சொன்ன நேத்ராவை அசோக் வித்தியாசமாக பார்த்தான். அப்புறம் அந்த பாடலின் MP3 தேடிப்பிடித்து டவுன்லோட் செய்து அவளுடைய மொபைலுக்கு ப்ளூடூத் மூலம் ட்ரான்ஸ்ஃபர் செய்தான்.

“ஹேய்.. அந்த சாங் லிரிக்ஸ்.. இங்க்லீஷ் ஃபான்ட்ல வேணும்..!!” கேட்டாள் நேத்ரா. அனுப்பி வைத்தான் அசோக்.

“ஹேய்.. ஐ வான்ட் டு நோ த மீனிங்ஸ் ஆப் தீஸ் வேர்ட்ஸ்..!!” கேட்டாள் நேத்ரா. அனுப்பி வைத்தான் அசோக்.

“உதடுகள்னா எனக்கு தெரியும்.. ஈரமாய் வாழ்கன்னா.. என்ன மீனிங்..??” நேத்ரா புரியாமல் கேட்க, அசோக் அவஸ்தையாய் நெளிந்தான்.

“ஹையோ.. ஏண்டி இப்டி தமிழ்ப்பாட்டை சூஸ் பண்ணி.. என் உசுரை வாங்குற..??”

“ஹேய்.. சொல்லு..!! மீனிங் தெரிஞ்சாத்தான் ஒரு ஃபீலோட பாட முடியும்..!!”

நேத்ரா விடாப்பிடியாக இருக்க, வேறு வழியில்லாமல் அசோக் வெட்கத்துடனே அந்த வரிகளுக்கு விளக்கம் கொடுத்தான். அசோக்தான் அவ்வாறு அவஸ்தைப்பாட்டானே ஒழிய, அவன் சொன்ன விளக்கத்தை கண்களில் மின்னலும் உதட்டில் புன்னகையுமாய் நேத்ரா கேட்டுக்கொண்டாள். திடீரென..

“ஐ மிஸ் யூன்றதை தமிழ்ல எப்படி சொல்றது அசோக்..??” என்று அவள் ஆர்வமாய் கேட்க அசோக் நெற்றியை சுருக்கினான்.

“ஏன் கேக்குற..??”

“ஹேய்.. சொல்லேன்.. ப்ளீஸ்..!!”

“தெ..தெரியல.. நான் உன்னை மிஸ் பண்றேன்னு சொல்லு.. புரிஞ்சுப்பாங்க..!!”

என்று எரிச்சலாக சொன்னான். சொல்லிவிட்டு நேத்ராவை ஏறிட்டு வியப்பாய் ஒரு பார்வை பார்த்தான். ‘என்னாச்சு இவளுக்கு..??’ என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டான்.

ஆனுவல் டே வந்தது..!!! அவர்களுடைய ஆபீசே விழாக்கோலம் பூண்டு காட்சியளித்தது..!! கம்பனி வளாகத்திற்குள் எங்கு பார்த்தாலும்.. கலர்கலராய் பலூன்களும்.. காகிதப்பூ தோரணங்களும் தொங்கின..!! ஆங்காங்கே விழா பற்றிய அறிவிப்பு போஸ்டர்கள் ஜிகினா பூச்சோடு மின்னின..!! ராட்சச வடிவ ஸ்பீக்கர்களில் ‘தேரி மேரி.. மேரி தேரி.. ப்ரேம் கஹானி ஹே முஷ்கில்..’ என ஷ்ரேயா கோஷல் உச்சஸ்தாயில் உருகிக்கொண்டிருந்தார்..!! கம்பனிக்குள் எதிர்ப்படுகிற முகங்களில் எல்லாம் ஏதோ ஒரு புன்னகையும்.. புத்துணர்வும்..!!

க்யூபிக்கல் டெகரேஷன் போட்டி அறிவிக்கப்பட்டிருந்தது. அனைவரும் தாங்கள் ஆண்டு முழுதும் அமர்ந்து வேலை செய்யும் இடத்தை, தங்களுக்கு பிடித்த வகையில் அலங்காரம் செய்து அழகு பார்த்தார்கள். போஸ்ட் ஆபீஸ், போலீஸ் ஸ்டேஷன், வொர்க் ஷாப், வொயின் ஷாப் என்று ஏதோ ஒரு தீம் வைத்துக்கொண்டு, அதற்கு தொடர்புடைய பொருட்களால் தங்கள் இடத்தை அலங்கரித்து வைத்திருந்தனர்..!! ஒரு பையன் தனது இடத்தில் செடி கொடிகள், இழை தழைகள் எல்லாம் போட்டு நிரப்பி.. அவனும் காட்டுவாசி கெட்டப்பில் கறைபிடித்த பற்களோடு வந்து.. கம்ப்யூட்டரில் ப்ரோக்ராம் எழுதிக் கொண்டிருந்தான்..!!

கலாச்சார உடைகள் அணிந்து வரும் போட்டியும் இருந்தது. வெவ்வேறு மாநிலத்தில் இருந்து பெங்களூர் வந்து வேலை பார்ப்பவர்கள், இன்று அவரவர் மாநில கலாச்சார உடைகளை அணிந்து வந்து, அலுவலகத்தையே வண்ணமயமாய் மாற்றியிருந்தனர்..!! குஜராத் குர்தாக்கள்.. ராஜஸ்தானி சோளிகள்.. ஆந்திர பஞ்சகட்சைகள்.. கேரளத்து முண்டுகள்..!! தமிழகத்து தாவணி பாவாடைகளையும் ஆங்காங்கே காண முடிந்தது..!!

ஆடிட்டோரியத்தை ஒட்டி இருந்த அந்த ஸ்மோகிங் ஸோனில் அசோக்கும், ஹரியும் புகை வழியும் வாயுடன் நின்றிருந்தார்கள்..!! மேல் பட்டன் நீக்கப்பட்டு, காலர் பின்னுக்கு தள்ளப்பட்ட சட்டையும்.. கொஞ்சம் தொடையும், கொஞ்சம் கால்ச்சட்டையும் தெரியுமாறு ஏற்றிக்கட்டப்பட்ட வேஷ்டியுமாய் நின்றிருந்தார்கள்..!! இப்போதுதான் நடனப்போட்டியில் ‘வேணாம் மச்சான் வேணாம்.. இந்த பொண்ணுக காதலு..!!’ என்று இருவரும் குத்தாட்டம் போட்டு களைத்திருந்தார்கள்..!! ஆடிய களைப்பை புகை போட்டு ஆற்றிக் கொண்டிருந்தார்கள்..!!

“இன்னிக்கும் மீட்டிங்க போட்டு.. கெட்ட ஏழரையை கூட்டுராய்ங்க மாப்ள..!!” என்று அசோக் மதுரை தமிழ் பேசிக்கொண்டிருந்தான்.

“கிளிப்பச்சை கலர் கெடைக்கல மாப்ள.. பஞ்சுமுட்டாய் கலர்தான் கெடைச்சுச்சு..!!” என்று ஹரி அணிந்து வந்திருந்த சட்டை பற்றி அதிருப்தி தெரிவித்துக் கொண்டிருந்தான்.

அப்போதுதான் அந்த இடத்திற்கு ப்ரியா அவசர நடையில் வந்து சேர்ந்தாள். அவள் முகத்தில் ஒருவித டென்ஷன் தென்பட்டது. அசோக்கும் ஹரியும் அவளை குழப்பமாய் பார்த்துக் கொண்டிருக்கும்போதே, அவள்..

312

“ஹேய்.. நேத்ராவை யாராவது பாத்தீங்களா..??” என்று கவலையாய் கேட்டாள்.

“இல்ல ப்ரியா.. நாங்க பாக்கலையே.. என்னாச்சு..??”

“அங்க சிங்கிங் காம்படிஷன் ஸ்டார்ட் ஆயிடுச்சுடா.. இவ பேரை கூப்பிட்டாங்க.. இவளை ஆளை காணோம்..!!”

“ஓ..!!”

“என் பக்கத்துலதான்டா இருந்தா.. திடீர்னு காணாம போய்ட்டா.. எங்க போனான்னு தெரியலை..!!”

“அவ நம்பருக்கு கால் பண்ணி பாத்தியா..??”

“ஹ்ம்ம்.. பண்ணிப்பாத்தேன்.. என்கேஜ்டா இருக்கு.. எடுக்க மாட்டேன்றா..!! அங்க திரும்ப திரும்ப இவளை கூப்பிட்டுட்டு இருக்காங்க.. டிஸ்குவாலிஃபை பண்ணிருவாங்களோன்னு பயமா இருக்கு..!!” ப்ரியா கவலையாக சொல்ல, அசோக் சில வினாடிகள் தன் நெற்றியை தேய்த்தவாறு யோசித்தான். அப்புறம் ஹரியிடம் திரும்பி,

“மாப்ள.. நீ போய் அவனுகளை கொஞ்சம் வெயிட் பண்ண சொல்லு..!! அவ இங்கதான் எங்கயாச்சும் இருப்பா.. நானும் ப்ரியாவும் போய் ஆளை இழுத்துட்டு வர்றோம்..!!” என்றான்.

“ஓகே மாப்ள..!!”

என்ற ஹரி உடனே சிகரட்டை காலில் போட்டு நடுக்கிவிட்டு, ஆடிட்டோரியம் நோக்கி அவசரமாய் சென்றான். அசோக் ஏற்றிக்கட்டியிருந்த வேஷ்டியை தளர்த்திவிட்டு, எதிர் திசையில் ப்ரியாவுடன் நேத்ராவை தேடி சென்றான். ஓட்டமும் நடையுமாய் அசோக்கை பின் தொடர்ந்தவாறே ப்ரியா சொன்னாள்.
“ஆரம்பத்துல இருந்தே அவளுக்கு இதுல இன்ட்ரஸ்ட் இல்ல அசோக்.. அதான் லாஸ்ட் மொமன்ட்ல எஸ்கேப் ஆகிட்டா போல இருக்கு..!!”

“ச்ச.. ச்ச.. அப்படிலாம் இல்ல..!! அதுக்கப்புறம் அவ மனசை மாத்திக்கிட்டா ப்ரியா.. இந்த காம்படிஷன்ல ப்ரைஸ் வின் பண்ணனும்னு ஹண்ட்ரட் பர்சன்ட் ஸ்ட்ராங்கா இருந்தா..!! எனக்கு நல்லா தெரியும்..!!”

“ஹ்ம்ம்..!!”

“அதுசரி.. இந்த கோவிந்த் பயலுக்கு என்னாச்சு.. இன்னும் வரலையா அவன்..??”

“இல்லடா.. இன்னும் வரல.. என்னாச்சுன்னு தெரியல..!!”

அசோக்கும் ப்ரியாவும் சேர்ந்து, வளாகத்துக்குள் ஆங்காங்கே வளர்க்கப்பட்டிருந்த பூங்காக்களில் நேத்ராவை தேடிப்பார்த்தார்கள். அவர்கள் வேலை பார்க்கும் தளத்திற்கு சென்று அவளுடைய இடத்தில் பார்த்தார்கள். லிப்ட் ஏறி மேலே சென்று கேஃப்டீரியாவில் தேடினார்கள். எங்கும் அவள் ஆளைக்காணோம்..!!

தேடிக்களைத்துப்போய் இருவரும் மீண்டும் ஆடிட்டோரியம் நோக்கி சென்றபோதுதான்.. தூரத்தில் பார்க்கிங் ஏரியாவுக்கு அருகில்.. தனியாக நின்றிருந்த நேத்ரா அவர்கள் கண்ணில் பட்டாள். தனது செல்போனில் யாருடனோ பேசிக்கொண்டிருந்தாள். அவளை பார்த்ததும் இருவருக்கும் ஒருவித நிம்மதி ஏற்பட, அவசரமாய் அவளை நெருங்கினார்கள்.

“ஹேய் நேத்ரா.. உன்னை எங்கல்லாம் தேடுறது..?? உன் பேரை அங்க திரும்ப திரும்ப அனவுன்ஸ் பண்ணிட்டு இருக்குறாங்க.. நீ இங்க என்ன பண்ணிட்டு இருக்குற..??”

அசோக்கின் குரலில் ஒருவித எரிச்சல் தொனித்தது. ஆனால் அதை சட்டை செய்யாமல் ஃபோனில் தொடர்ந்து பேசிக்கொண்டிருந்த நேத்ரா, ஒருசில வினாடிகளிலேயே

“ஓகே.. ஓகே.. ஓகே.. பை..!!” என்று பேச்சை முடித்து, காலை கட் செய்தாள். அவளுடய முகம் ஒருமாதிரி பொலிவிழந்து போய் வாடியிருந்தது.

“ப்ச்.. கேக்குறேன்ல.. சொல்லு.. இங்க என்ன பண்ணிட்டு இருக்குற..?? யார் ஃபோன்ல..??” அசோக் அவளை அவசரப்படுத்தினான்.

“கோ..கோவிந்த்..!!” நேத்ரா உணர்ச்சியே இல்லாத குரலில் சொன்னாள்.

“ஓ..!! என்ன சொல்றான்.. வருவானா வரமாட்டானாமாம்..??”

“வ..வரமாட்டான்.. அவனுக்கு உடம்பு சரியில்ல..!!” நேத்ரா சொல்ல, அசோக்கும் ப்ரியாவும் இப்போது மெலிதாக அதிர்ந்தார்கள்.

“எ..என்னாச்சு..??” ப்ரியாதான் கவலை தோய்ந்த குரலில் கேட்டாள்.

“நேத்து நைட்டுல இருந்து பயங்கர ஃபீவராம்.. ‘இங்க வரணும்னு ஆசையா இருக்கு.. ஆனா எந்திரிக்க கூட முடியலை’ன்னு சொல்றான்..!!”

“ஓ..!!”

கோவிந்த் மீது ஒருவித பச்சாதாபத்துடன் சொன்ன ப்ரியா, ஓரிரு வினாடிகள் அமைதியாக நேத்ராவின் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தாள். அப்புறம் அவசரமாய் சொன்னாள்.

“சரி நேத்ரா.. நீ வா.. அங்க எல்லாம் உனக்காக வெயிட்டிங்..!! டைம் முடியப்போகுது.. கமான்..!!!”

நேத்ரா எதுவும் பேசவில்லை. அவர்கள் முகத்தை ஏறிடுவதை தவிர்த்து வேறெங்கோ வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள். அவளுடைய அமைதி அசோக்கிற்கும், ப்ரியாவிற்கும் ஒருவித குழப்பத்தை ஏற்படுத்தியது. எதுவும் புரியாதவர்களாய், நேத்ராவின் கலக்கமான முகத்தையே வியப்பும் குழப்பமுமாய் பார்த்துக் கொண்டிருந்தார்கள். அவர்கள் அவ்வாறு பார்த்துக் கொண்டிருக்கும்போதே..

நேத்ராவின் கண்கள் இரண்டும் பட்டென கலங்கின.. கண்ணீர் துளிகளை கசிய ஆரம்பித்தன..!! முதலில் ஒன்றிரண்டு முத்துக்களாய் உருண்டோடி வந்த துளிகள்.. ஓரிரு வினாடிகளிலேயே பொலபொலவென கொட்ட ஆரம்பித்தன..!! அவளும் உடைந்து போய் உதடுகள் கடித்து விசும்ப ஆரம்பித்தாள்..!! அசோக்கும் ப்ரியாவும் பதறிப் போனார்கள்..!!

“ஹேய்.. நேத்ரா.. எ..என்ன இது..??” அசோக் பதட்டமாய் கேட்டான்.

“அ..அவன் ரூம்ல அவன் ஃப்ரண்ட்ஸ் கூட யா..யாருமே இல்ல அசோக்.. த..தனியா என்ன கஷ்டப்படுறானோ..??”

கலங்கிய கண்களும், விசும்புகிற மூக்கும், துடிக்கிற உதடுகளுமாய் நேத்ரா பரிதாபமாக சொன்னாள். அவள் சொல்லிய விதத்திலேயே அசோக்கிற்கும், ப்ரியாவிற்கும் அதுவரை புரியாமல் இருந்த விஷயம் இப்போது தெளிவாக புரிந்து போனது..!! ஒருவித அதிர்ச்சி தொற்றிக்கொண்டவர்களாய் நேத்ராவின் முகத்தையே இமைக்காமல் பார்த்தார்கள். அசோக்தான் சற்று தைரியத்தை வரவழைத்துக்கொண்டு அந்தக் கேள்வியை கேட்டான்.

“கோ..கோவிந்தை நீ லவ் பண்றியா நேத்ரா..??”

நேத்ரா அந்தக்கேள்விக்கு சில வினாடிகள் பதில் எதுவும் சொல்லவில்லை. அமைதியாக அழுதுகொண்டிருந்தவள், அப்புறம் படபடத்த தன் உதடுகளை பற்களால் கடித்து அடக்கியவாறு, ‘ஆமாம்..’ என்பதுபோல தனது தலையை மெல்ல அசைத்தாள். அசோக்கும் ப்ரியாவும் இப்போது மெலிதாக முகம் மலர்ந்தார்கள். எந்த மாதிரி ரியாக்ட் செய்வது என்று புரியாமல், சந்தோஷமும், கவலையும் கலந்த மாதிரியாக அவளை ஒரு பார்வை பார்த்தார்கள். இப்போது நேத்ரா பட்டென ப்ரியாவின் கையை பிடித்துக்கொண்டு, சற்றே கெஞ்சலாக சொன்னாள்.

“ப்ரியா.. உன் வண்டியை தர்றியா..?? எனக்கு அவனை உடனே பாக்கணும் போல இருக்கு..!!”

“எ..எடுத்துட்டு போ.. ஆ..ஆனா.. அங்க..” ப்ரியா தடுமாறிக்கொண்டிருக்க, அசோக் சற்று தெளிவான குரலில் நேத்ராவிடம் சொன்னான்.

“ஹேய் நேத்ரா.. இன்னைக்கு காம்படிஷன்ல நீ பாடனும்னு கோவிந்த் ரொம்ப ஆசைப்பட்டான்.. அங்க உன் பேரை..” இப்போது அசோக்கை இடைமறித்து நேத்ரா பட்டென சொன்னாள்.

“ஹையோ.. என்னால இப்போ பாட முடியாது அசோக்.. புரிஞ்சுக்கோ.. ப்ளீஸ்..!!”

- தொடரும்

மேலும் செக்ஸ் கதைகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் :

தமிழ்காமவெறி தளம்

ஐ ஹேட் யூ, பட் – பகுதி 26

$
0
0

ஹேய்.. ஒன் வீக்கா நீ கஷ்டப்பட்டு ப்ராக்டிஸ் பண்ணினதுலாம்…”

“ஸோ வாட்..???? அவனுக்காகத்தான் பாட நெனச்சேன்.. அவனுக்கு புடிக்கும்னுதான் அந்த பாட்டை சூஸ் பண்ணேன்.. கஷ்டப்பட்டு ப்ராக்டிஸ் பண்ணேன்.. என் பாட்டை கேட்டு எல்லாரும் கை தட்டுறப்போ, நான் மட்டும் அவன் முகத்தை பாக்கனும்னு ஆசைப்பட்டேன்..!! இப்போ அவனே அங்க இல்ல.. அங்க போய் நின்னுக்கிட்டு யாருக்காக என்னை பாட சொல்ற..??”

மேலும் செக்ஸ் கதைகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் :

தமிழ்காமவெறி தளம்

நேத்ரா ஆடிட்டோரியம் நோக்கி கைநீட்டி ஆவேசமாக கத்தினாள். அசோக்கும் ப்ரியாவும் உறைந்து போனவர்களாய் அவளையே பார்த்துக்கொண்டிருந்தார்கள். அவள் இப்போது தனது ஆவேசம் நீங்கி, சற்றே உடைந்து போன குரலில் சொன்னாள்.

“இப்போ ஃபோன் பண்ணி பேசுறப்போ கூட.. ‘என்னைப்பத்தி வொர்ரி பண்ணிக்காத.. நீ போய் பாடு.. டோன்ட் மிஸ் திஸ் ஆப்பர்ச்சூனிட்டி..’ன்னு சொல்றான்..!! அ..அவன்.. அவன் இல்லாம நான் எப்படி பாடுவேன் அசோக்..??”

அசோக்கும் ப்ரியாவும் பேச்சிழந்து போய் நின்றிருந்தார்கள். நேத்ராவையே பிரமிப்பாக பார்த்தார்கள். சில வினாடிகள்..!! அப்புறம் ப்ரியா தனது கைப்பை திறந்து வண்டிச்சாவியை எடுத்து அவளிடம் நீட்டினாள். ‘கெளம்பு நேத்ரா..!!’ என்றாள். நேத்ரா சாவியை வாங்கிக்கொண்டு அவசரமாய் ஸ்கூட்டி நோக்கி நடந்தாள். அசோக்கும் ப்ரியாவும் அவளை பின்தொடர்ந்தார்கள். நேத்ரா வண்டியில் ஏறி அமர்ந்ததும், அருகில் நின்றிருந்த அசோக் மெல்லிய குரலில் அவளிடம் கேட்டான்.

44

“அவனும் உன்னை லவ் பண்றானா நேத்ரா..??”

“இ..இல்ல.. தெரியல..!!”

“உன் லவ்வை இன்னும் அவன்கிட்ட சொல்லலையா..??”

“இன்னைக்கு சொல்லிடுவேன்.. அவன் என்ன சொன்னாலும் சரி..!! இனிமேயும் மனசுக்குள்ளயே வச்சுக்கிட்டு.. எ..என்னால முடியாது அசோக்..!!”

உறுதியான குரலில் சொன்ன நேத்ரா, ஆக்சிலரேட்டரை முறுக்கி சர்ரென ஸ்கூட்டியுடன் பறந்தாள். அவள் கண்ணில் இருந்து மறையும்வரை அசோக்கும் ப்ரியாவும் அவள் பறந்த திசையையே வெறித்துக் கொண்டிருந்தார்கள். அப்புறம் மெல்ல தலையை திருப்பி ஒருவர் முகத்தை ஒருவர் ஏறிட்டு, ஏக்கமாய் ஒரு பார்வையை பரிமாறிக் கொண்டார்கள்.

அத்தியாயம் 16

எப்போது எவரிடம் எவ்வாறு காதல் வரும் என்று எவர் அறியக்கூடும்..?? நேத்ராவுக்கும் அதுதான் நேர்ந்தது..!! அலுவலகத்தில் தனித்துவிடப்பட்ட கோவிந்த் மீது ஒரு பச்சாதாபம் கொண்டுதான் அவனுடன் பேச ஆரம்பித்தாள். அவனுடன் பேச ஆரம்பிக்கையில் அவனைப்பற்றி எந்தவித எதிர்பார்ப்பும் இல்லை அவளுக்கு..!! ஆனால் அவனிடம் பேசியபிறகு.. அமைதியாக சுற்றித்திரியும் அவனுக்குள் இருக்கும் நல்ல குணங்களை அறிந்தபிறகு.. அவன் தன்மீது கொண்டிருப்பது தூய்மையான அன்பென உணர்ந்தபிறகு.. அவளுடய இதயம் காதல்க்கடலில் அமிழ்வதை அவளால் தடுக்க முடியவில்லை.. தடுக்கவும் அவள் விரும்பவில்லை..!!

கோவிந்த் நேத்ரா மீது காட்டிய அன்பிற்கும் காரணம் இருக்கிறது..!! நொந்து போயிருக்கிற மனதுக்கு ஆறுதலாய் இரண்டு வார்த்தைகள் கிடைத்தால் அதன் மதிப்பே தனி..!! யாரும் அண்டாமல் ஒருவித விரக்தியுடன் தனித்து திரிந்த கோவிந்திற்கு, முதன்முதலாய் வலிய வந்து தன்னை அணுகிய நேத்ராவை உடனே பிடித்துப் போனதில் ஆச்சரியம் இல்லை..!! அவள் பேசிய ஆறுதல் மொழிகளே, அவள் மீதான அன்பாய் உருமாறி, அவனிடமிருந்து பதிலுக்கு வெளிப்பட்டன.. அவள் மேல் அக்கறை எடுத்துக்கொள்ள தூண்டின..!! நேத்ராவின் பக்கமாய் தனது மனம் சாய்வதை அவனும் உணர்ந்தே வைத்திருந்தான்..!! அதனால்தான்.. தனது அறை தேடிவந்து கண்களில் நீருடன் காதலை சொன்ன நேத்ராவிடம், பதிலுக்கு கண்ணீர் உகுத்து தன் காதலையும் அவனால் அறிவிக்க முடிந்தது..!!

நேத்ரா அன்று பகல் முழுக்க கோவிந்தின் அறையிலேயே தங்கி இருந்து அவனை கவனித்துக் கொண்டாள். மருத்துவரிடம் அழைத்து சென்றாள்.. மதிய உணவு தயார் செய்து கொடுத்தாள்.. மாத்திரைகளை விழுங்க செய்தாள்..!! சாப்பிட்டுவிட்டு களைத்துப்போய் அவன் உறங்க, அருகில் அமர்ந்து கண்கொட்டாமல் இவள் பார்த்துக் கொண்டிருந்தாள். உறங்கி எழுகையில் அவனுடைய உடல்நிலையும் ஓரளவு தேறியிருந்தது.

அசோக்கும் ப்ரியாவும் அன்று மாலை சீக்கிரமே ஆபீசில் இருந்து கிளம்பினார்கள். நீண்ட நாட்களுக்கு பிறகு ஒன்றாக ஒரே பைக்கில் பயணம்..!! கோவிந்தை பார்த்து நலம் விசாரித்துவிட்டு.. நேத்ரா எடுத்து சென்ற ப்ரியாவின் வண்டியை திரும்ப பெற்றுக்கொண்டு.. அப்படியே நேத்ராவின் காதல் கனிந்ததா என்று அறிந்துகொள்வதும்.. அவர்களது திட்டம்..!! காலிங்பெல் அடித்த அவர்களுக்கு நேத்ராதான் வந்து கதவு திறந்து விட்டாள். அவர்களை பார்த்ததும் முகம் மலர்ந்து போய், ஒரு வெட்கப் புன்னகையை நேத்ரா வீச, அதிலிருந்தே நடந்ததை அறிந்து கொண்டார்கள் அசோக்கும், ப்ரியாவும்..!!

கோவிந்தும் நேத்ராவும் காதலில் இணைந்தது.. அசோக்கிற்கு பெருமகிழ்ச்சியை கொடுத்தது.. ப்ரியாவிற்கோ பெருமகிழ்ச்சியுடன் சேர்த்து, ஒரு சிறுஏக்கத்தையும் கொடுத்தது..!! ‘இப்போத்தான் லவ் பண்ண ஆரம்பிச்சா.. இவளுக்கு அதுக்குள்ள செட் ஆயிடுச்சு.. நானும் இத்தனை நாளா லவ் பண்றேன்.. எனக்கு என்னைக்கோ..??’ என்பதுபோல..!! ‘லவ்வை சொல்றதுக்கு இவளுக்கு இருந்த தைரியம்.. ஏன் எனக்கு இல்ல..??’ என்று தன் மீதே ஒரு எரிச்சல்..!! அப்புறம் உடனே ‘ஆமாம்.. அன்னைக்கு ஒரு வார்த்தை சொல்லிட்டன்னு.. அண்ணனுக்கு ஃபோன் போட்டு.. உடனே எனக்கு ஒரு பொண்ணு பாருன்னு சொல்றான்.. இந்த லூசுப்பயலை நம்பி எந்த நம்பிக்கைல லவ்வை சொல்றது..??’ என்று அசோக் மீது ஒரு கடுப்பு..!! சற்று யோசித்தபிறகு ‘துணிஞ்சு சொல்லிடலாமா.. பதிலுக்கு அவன் என்ன சொன்னாலும் பரவால்லன்னு..’ என்று மனதில் ஒரு குறுகுறுப்பு..!!

அசோக்கும் ப்ரியாவும் கொஞ்ச நேரம் கோவிந்திடம் பேசிக்கொண்டிருந்தார்கள். ‘நான் இன்னும் கொஞ்ச நேரம் கழிச்சு கெளம்புறேன்..’ என்று நேத்ரா சொல்ல, இவர்கள் மட்டும் அங்கிருந்து கிளம்பினார்கள். வெளியில் வந்து அவரவர் வாகனங்களை நெருங்கையில்..

“காஃபி டே போயிட்டு போலாமா அசோக்.. ரொம்ப நாள் ஆச்சு.. நாம சேர்ந்து போய்..!!”

என்று ப்ரியா ஆசையாக கேட்டாள். காஃபி அருந்திக்கொண்டே காதலை சொன்னால் நன்றாக இருக்குமே என்று நினைத்தாளோ என்னவோ..?? ஆனால்.. அசோக்கோ ப்ரியாவின் மனதை அறியாதவனாய்..

“ஹேய்.. ஸாரி ப்ரியா.. செண்பகம் நாளைக்கு ஜாயின் பண்றால.. இன்னைக்கு ஊர்ல இருந்து வர்றா.. அவளை போய் ரிசீவ் பண்ணி வீட்டுக்கு கூட்டிட்டு போகணும்..!! அண்ணி மதியமே கால் பண்ணினாங்க.. உன்கிட்ட சொல்ல மறந்துட்டேன்..!! அல்ரெடி இப்போவே லேட் ஆயிடுச்சு.. நாம இன்னொரு நாள் போகலாம்.. சரியா..??” என்று வருத்தமான குரலில் சொன்னான்.

“ம்ம்.. ஓகே.. நோ ப்ராப்ளம்..!!”

என்றாள் ப்ரியா ஏமாற்றத்தையும், எரிச்சலையும் மறைத்துக்கொண்டு. மனதில் எழுந்த ஆசையை அவன் மறுதலித்துவிட்டானே என்பதால் வந்த ஏமாற்றம்..!! செண்பகத்தின் பேரை அவன் உச்சரிக்க கேட்டதால் வந்த எரிச்சல்..!! இருவரும் ஹெல்மட் மாட்டிக்கொண்டு வண்டியில் ஏறி அமர்ந்தார்கள். வண்டியை கிளப்பி எதிரெதிர் திசையில் பறந்தார்கள்.

53

அசோக் கலாசிப்பாளையத்தை அடைந்தபோது, செண்பகம் வந்து சேர்ந்திருந்தாள். தோளில் ஒரு பேக்.. அதை விட பெரிய சைஸில் காலடியில் ஒன்று..!! தனக்கருகே வந்து ப்ரேக் அடித்து நிற்கும் பைக்கை அவள் கவனிக்கவில்லை. பரிதாபமாக முகத்தை வைத்துக்கொண்டு, பக்கவாட்டில் இருந்த ஒரு பானிபூரி கடையை ஏக்கமாய் பார்த்துக் கொண்டிருந்தாள். அசோக் அவளுக்கு பின்பக்கமாக சென்று அவளுடைய தலையில் ‘சத்..’ என்று ஒரு அடிபோட, உடனே ஷாக்காகி திரும்பி பார்த்தாள். அசோக் என்று தெரிந்ததும் முகம் மலர்ந்து புன்னகைத்தாள்.

“ஹாய் மாமா..!!”

“வந்து ரொம்ப நேரமாச்சா..??”

“இ..இல்ல.. இப்போத்தான்.. ஃபைவ் மினிட்ஸ் ஆச்சு..!!”

“நான் வந்தது கூட தெரியாம.. எங்க பராக்கு பாத்துட்டு இருக்குற..??”

“ஒ..ஒண்ணுல்ல.. சு..சும்மா.. அப்படியே..” செண்பகம் அசடு வழிந்தாள். அசோக் புன்னகைத்தான். அப்புறம் அவளை சீண்டும் எண்ணத்துடன்..

“ஹ்ம்ம்.. பானிபூரி சாப்பிடலாமா செம்பு..??” என்று கேஷுவலாக கேட்டான்.

“ஓகே மாமா.. சாப்பிடலாம்..!!” என்று செண்பகம் முகமெல்லாம் பிரகாசமாகவும், வாயெல்லாம் பல்லாகவும் சொன்னாள். அசோக் உடனே தனது நெற்றியை கீறிக்கொண்டு ஏதோ யோசிப்பது மாதிரி நடித்தபடியே,

“இல்ல செம்பு.. இவன்ட்ட பானிபூரி நல்லா இருக்காதுன்னு நெனைக்கிறேன்.. நாம போற வழில ஒரு கடை இருக்கு.. சூப்பரா போட்டு தருவான்.. அங்க போய் சாப்பிடுவோம்.. சரியா..??” என்று கேட்க,

“ஹ்ம்ம்.. சரி மாமா..!!” முகம் வாடிப்போய்.. குரலில் உற்சாகம் குறைந்து போய்.. தலையாட்டினாள் செண்பகம்.

இருவரும் பைக்கில் கிளம்பினார்கள். மார்பில் ஒன்றும் மடியில் ஒன்றுமாய் இரண்டு பேகையும், தவறி விழுந்துவிடாமல் கவனமாக பிடித்துக்கொண்டே, பாவமாக முகத்தை வைத்துக்கொண்டு, பைக் ப்ரேக் அடித்து நிற்கும் தருணத்திற்காக ஆர்வமாக காத்திருந்தாள் செண்பகம். பைக் நிற்கவே இல்லை.. சென்றது.. சென்றது.. சென்று கொண்டே இருந்தது..!! ஒரு கட்டத்தில் செண்பகம் பொறுமை இழந்து போய்..

“இன்னும் ரொம்ப தூரம் போகனுமா மாமா..??” என்று சலிப்பாக கேட்டாள்.

“இல்ல இல்ல.. இதோ வந்துருச்சு.. நம்ம வீடு..!!” என்று வீட்டுக்கு முன்பாக பைக்கை ப்ரேக் அடித்து நிறுத்தினான் அசோக். செண்பகம் ஷாக்காகி போனாள்.

“வீடா..???? வீட்டுக்கே வந்துட்டமா..????” அதிர்ச்சியும் ஏமாற்றமுமாம் கேட்டாள்.

“ஆமாம்.. ஏன்..??”

“போற வழில பானிபூரி சாப்பிடலாம்னு சொன்னீங்க..??”

“ஷ்ஷ்ஷ்.. ஐயோ.. மறந்தே போச்சு செம்பு..!! நீயாவது ஞாபகப் படுத்திருக்கலாம்ல..??” அசோக் நல்லவன் மாதிரி நடித்தான்.

“நான் சொல்லலாம்னுதான் நெனச்சேன்.. நீங்க திட்டுவீங்களோன்னு பயமா இருந்தது.. அதான் சொல்லல..!!”

“ப்ச்.. இதுக்குலாம் எதுக்கு திட்டப்போறேன்..?? ஹையோ.. போடி.. எல்லாத்தையும் ஸ்பாயில் பண்ணிட்ட நீ..!!” பழியை தூக்கி அவள் மீதே போட்டான் அசோக்.

“ப..பரவால மாமா.. விடுங்க..!!”

பரிதாபமாக சொன்ன செண்பகத்தை பார்க்க அசோக்கிற்கு பாவமாக இருந்தது. மனதிற்குள் சிரித்துக் கொண்டான். அவள் கையிலிருந்த பேக் ஒன்றை தான் வாங்கிக்கொண்டு, மெல்லிய குரலில் சொன்னான்.

“சரி.. நாளைக்கு கண்டிப்பா பானிபூரி சாப்பிடலாம்.. ஓகேவா..??”

“ஹ்ம்ம்.. ஓகே மாமா..!!” செண்பகம் ஓரளவு சந்தோஷம் திரும்பியவளாய் சொன்னாள்.

அடுத்த நாள்.. அவர்கள் கம்பனியில்.. அசோக்கின் டீமில்.. செண்பகமும் சேர்ந்து கொண்டாள்..!! அவள் தங்கிக்கொள்வதற்கு மடிவாலா ஏரியாவில் ஏதாவது லேடீஸ் ஹாஸ்டல் கிடைக்குமா என அசோக்கே தினமும் அட்வர்டைஸ்மன்ட் பார்த்து தேடுதல் வேட்டை நடத்தினான். ஹாஸ்டலில் இடம் கிடைக்கும்வரை தனது வீட்டில் அவளை தங்கிக்கொள்ள அனுமதித்தான். செண்பகமோ நிரந்தரமாக அவன் வீட்டில் டேரா போடலாம் என்று எண்ணினாள்.

“நான் இங்கயே தங்கிக்கிறேனே மாமா..??” என்று கெஞ்சலாக கேட்டாள்.

“ஏன்.. என்னாச்சு..??” அசோக் புருவத்தை சுருக்கியவாறு கேட்டான்.

“எனக்கு பி.ஜி.ல தங்க புடிக்கல..!!”

“ஒன்னும் கவலைப்படாத செம்பு.. மாமா உனக்காகத்தான் நல்ல சாப்பாடு போடுற பி.ஜி.யா.. மைக்ரோஸ்கோப் வச்சு தேடிட்டு இருக்குறேன்.. உனக்கு ஒரு பிரச்னையும் இருக்காது..!!”

“ஐயோ.. அதுக்காக சொல்லல மாமா..!!”

“ம்ம்.. அப்புறம்..??”

“எல்லாம் நாலாயிரம் ஐயாயிரம்னு கேக்குறாங்க.. தேவை இல்லாத தெண்ட செலவுதான..?? வேணுன்னா.. ஒன்னு செய்யலாமா..??”

“என்ன..??”

“நான் வேணா.. தங்குறதுக்கு தவுசண்ட் ருபீஸ்.. திங்கிறதுக்கு தவுசண்ட் ருபீஸ்.. உங்ககிட்ட குடுத்துடுறேன்..!!”

“எந்த தவுசண்ட் ருபீஸ்..?? எப்போவும் உன் பர்ஸ்ல இருக்குமே.. அந்த தவுசண்ட் ருபீஸா..??” அசோக் கிண்டலாக கேட்டான்.

“ஐயோ.. அது இல்ல மாமா.. ரியல் தவுசண்ட் ருபீஸ்.. ஒரிஜினல் தவுசண்ட் ருபீஸ்..!! ஓகேவா..??”

“அதுலாம் சரிப்பட்டு வராது செம்பு.. நீ பி.ஜி.ல தங்கிக்கோ.. அதுதான் எல்லாருக்கும் நல்லது..!! புரியுதா..??” அசோக் பிடிவாதமாக மறுக்க,

“ம்ம்.. சரி மாமா..!!” செண்பகம் எரிச்சலுடன் ஒத்துக்கொண்டாள்.

அசோக்கின் பிடிவாதம் செண்பகத்துக்கு எரிச்சலை ஏற்படுத்தியது என்றால், ஆபீசில் ப்ரியாவுக்கோ வேறுவிதமான எரிச்சல்..!! செண்பகம் ஜாயின் செய்த முதல் மூன்று நாட்கள் அசோக்குடன் பைக்கிலேயே ஆபீசுக்கு வந்தாள். அவளுக்கு இது புது இடம், புது டீம் என்பதால் அசோக் எப்போதும் அவள் அருகிலேயே இருந்து அவளுக்கு உதவி செய்து கொண்டிருந்தான். அடிக்கடி அவர்களை சேர்ந்து பார்க்க நேரிட்ட ப்ரியாவுக்கோ, ஏனோ அது ஒருவித எரிச்சலை கிளப்பிவிட்டது. அதில்லாமல் நேத்ராவும், கோவிந்தும் வேறு உரிமையாக விரல்கள் கோர்த்து சுற்றி திரிந்து, அவள் மனதில் ஒருவித ஏக்கத்தை கிளறிவிட்டார்கள்.

செண்பகம் ஜாயின் செய்த மூன்றாம் நாள் இரவு.. அவர்கள் ஆபீசின் டூவீலர் பார்க்கிங் பகுதியில்.. ஸ்கூட்டி ஸ்டார்ட் ஆகாமல் மக்கர் செய்ய.. ப்ரியா அதனுடன் போராடிக் கொண்டிருந்தாள்..!! ‘ம்ம்க்குக்குக்குக்கும்.. ம்ம்க்குக்குக்குக்கும்..’ என்று கனைத்ததே ஒழிய, ஸ்டார்ட் ஆவது மாதிரி தெரியவில்லை. அப்போதுதான் ஏதோ ஜோக்குக்கு சிரித்தவாறே அசோக்கும், செண்பகமும் லிஃப்டில் இருந்து வெளிப்பட்டார்கள். ப்ரியா ஓரக்கண்ணால் அவர்களையே பார்த்துக் கொண்டிருந்தாள். இருவரும் பைக்கில் ஏறினார்கள். சர்ரென இவள் இருந்த திசை நோக்கி வந்த பைக், வழியில் இவளை கண்டதும் ப்ரேக்கிட்டு நின்றது.

“என்னக்கா.. என்னாச்சு..??” செண்பகம் கவலையாக கேட்டாள்.

“ஸ்டார்ட் ஆகல..” ப்ரியா சொல்லிக்கொண்டிருக்கும்போதே,

“யூ.எஸ் டாலர்ஸ்ல வாங்குன.. யூஸ்லஸ் வண்டில..?? அப்டித்தான் இருக்கும்..!!”

தன் மனதில் அந்த ஸ்கூட்டி மீதிருந்த ஒருவித கடுப்பை, அசோக் கேலியாக உதிர்த்தவாறே, அவனுடைய பைக்கை சீறவிட்டான். வண்டியில் பறந்துகொண்டே ‘ஹேவ் ஃபன் ப்ரியா.. வித் யுவர் ஓட்டை வண்டி..!!!!’ என்று கத்தினான். செண்பகம் சிரிப்பை அடக்கமுடியாமல் சிரித்துவிட்டாள். அதே நேரம் பேலன்ஸ்க்காக அசோக்கின் தோளை பற்றினாள்.

அவர்கள் போவதையே ப்ரியா வெறுப்புடன் பார்த்துக் கொண்டிருந்தாள். அசோக்கின் பின்னால் அமர்ந்து இதேமாதிரி அவள் பறந்ததெல்லாம் இப்போது அவளுக்கு ஞாபகம் வந்தது. ‘ச்ச.. தம்பி சொன்னான்னு இவளுக்கு வேலை கெடைக்க ஹெல்ப் பண்ணினேன்.. இவ என் எடத்தையே புடிங்கிக்கிட்டாளே..’ என்பது மாதிரி செண்பகம் மீது ஒரு எரிச்சல் வந்தது. அந்த எரிச்சலுடனே, ஸ்டார்ட் ஆகாத ஸ்கூட்டியை ஆத்திரமாக உதைத்தாள்.

அப்புறம் ஒருவழியாக அந்த மாதிரி உதைத்து உதைத்தே ஸ்கூட்டியை கிளப்பி கடுப்புடனே வீடு வந்து சேர்ந்தாள். ஆனால்.. மூன்று நாட்களாக அவள் மனதில் ஏற்பட்டிருந்த எரிச்சலை ஒரே நொடியில் போக்குமாறு, ஒரு இனிய செய்தி அவள் வீட்டில் அன்று இரவு காத்திருந்தது.

சோபாவில் அமர்ந்திருந்த ப்ரியா கால்களை கட்டிக்கொண்டு முன்னும் பின்னும் ஆடிக்கொண்டே இருந்தாள். அவளுக்கு அருகே அமர்ந்திருந்த வரதராஜன் அவளுக்கு சாதத்தை பிசைந்து ஊட்டிவிட்டுக்கொண்டே ஆரம்பித்தார்.

“உன்கிட்ட கொஞ்சம் பேசனும்மா ப்ரியா..!!”

“என்ன விஷயம் டாடி..??”

“எல்லாம் உன் கல்யாண விஷயமாத்தான்மா..!!”

“ஹையோ.. மறுபடியும் ஆரம்பிச்சுட்டீங்களா..?? நான்தான் இன்னும் கொஞ்ச நாள் போகட்டும்னு சொன்னேன்ல டாடி..!!” ப்ரியா சலிப்பாக சொன்னாள்.

- தொடரும்

மேலும் செக்ஸ் கதைகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் :

தமிழ்காமவெறி தளம்


ஐ ஹேட் யூ, பட் – பகுதி 27

$
0
0

“ஒரு நல்ல வரன் வந்திருக்கும்மா.. மதுரைக்கார பையன்.. பெங்களூர்லதான் வேலை பாக்குறாரு..!!”

“ப்ச்.. இந்த மதுரைக்கார பசங்களே ரொம்ப திமிர் புடிச்சவனுகளா இருப்பானுக டாடி.. என் ஆபீஸ்ல கூட ஒன்னு இருக்குது.. அராத்து புடிச்சது..!! எனக்கு சுத்தமா புடிக்காது.. ப்ளீஸ் டாடி.. வேணாம்..!!”

“அடடடடா.. நான் சொல்றதை கொஞ்சம் பொறுமையா கேளும்மா..!!”

மேலும் செக்ஸ் கதைகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் :

தமிழ்காமவெறி தளம்

“என்ன சொல்லப்போறீங்க..?? வயசு ஏறிக்கிட்டே போகுது.. பவுன் வெலை கூடிக்கிட்டே போகுது.. கூட்ஸ் வண்டிலாம் கூவிக்கிட்டே போகுது.. அதான..??”

“ஐயோ.. அது இல்லம்மா..!!”

“அப்புறம்..??”

“என்னை கொஞ்சம் பேச விடுறியா..??” வரதராஜன் பொறுமை இழக்கவும்,

“சரி.. பேசுங்க..!!” பிரியா மனம் இறங்கினாள்.

‘இந்தா..’ என்று வரதராஜன் சாதத்தை பிசைந்து நீட்ட, அவள் ‘ஆ’வென வாய் திறந்து வாங்கிக் கொண்டாள். மகளுக்கு சாப்பாடு ஊட்டிவிட்டுக்கொண்டே வரதராஜன் ஆர்வமாக சொல்ல ஆரம்பித்தார். ப்ரியாவும் வாயை அசை போட்டுக்கொண்டே அசுவாரசியமாய் கேட்க ஆரம்பித்தாள்.

“ப்ரோக்கர்ட்ட உன் ஃபோட்டோ குடுத்திருந்தேன்னு சொன்னேன்ல..??”

“ஆமாம்..”

“நாலு மாசம் முன்னாடி இந்த பையனோட அண்ணன் உன் ஃபோட்டோவும், என் ஃபோன் நம்பரும் வாங்கிருக்காரு..!! ‘கூடிய சீக்கிரம் அவங்க உங்களுக்கு ஃபோன் பண்ணி பேசுவாங்க’ன்னு ப்ரோக்கர் எங்கிட்ட சொல்லிருந்தாரு.. நானும் கொஞ்ச நாள் பாத்தேன்.. அவங்கட்ட இருந்து எந்த தகவலும் வரல.. அப்புறம் நானே அவருக்கு ரெண்டு தடவை கால் பண்ணி பாத்தேன்.. பதில் ஒன்னும் சரியா வரலை.. நானும் அவ்வளவுதான்னு நெனச்சு அதை அப்படியே விட்டுட்டேன்..!!”

“ஹையோ.. பயங்கர ப்ளேடு போடுறீங்க டாடி.. சீக்கிரம் சொல்லி முடிங்க..!!”

“இரும்மா..!! ம்ம்ம்.. அவ்வளவுதான்னு நெனச்சு விட்டுட்டனா..?? இப்போ.. ரெண்டு வாரம் முன்னாடி.. திடீர்னு அவரே எனக்கு கால் பண்ணினாரு.. ‘உங்க பொண்ணை எங்களுக்கு புடிச்சிருக்கு.. ஜாதகம் அனுப்பி வைங்க.. பாத்துட்டு சொல்றோம்’னு சொன்னாரு.. நானும் அனுப்பி வச்சேன்..!! அவங்களும் ஒன்னுக்கு ரெண்டு ஜோசியரா உன் ஜாதகத்தை எடுத்துட்டு போய் பாத்திருக்காங்க.. ரெண்டு ஜோசியருமே ‘அருமையான வரன்.. எல்லா பொருத்தமும் பிரம்மாதமா இருக்கு.. இந்த இடத்தை முடிங்க.. அமோகமா இருக்கும்’னு சொல்லிருக்காங்க..!!”

“ஐயோ..!! இந்த ஜோசியம்லாம் பயங்கர ஃப்ராடு டாடி.. அதைலாம் நம்பக்கூடாது.. இந்தியால இருக்குற இந்த மாதிரி மூட பழக்கத்தை பத்தி.. இத்தாலில இருக்குற ஒரு பெரிய ரைட்டர் ஒரு பெரிய புக் எழுதிருக்காரு.. அந்த புக் எவ்ளோ ஸேல் ஆகி இருக்கு தெரியுமா..?? உங்களுக்கு எங்க அதுலாம் தெரிய போகுது..??”

“ஹாஹா.. இத்தாலி பத்தி எனக்கு என்னம்மா கவலை..?? என் பொண்ணு கழுத்துல ஏறப்போற தாலி பத்திதான் எனக்கு கவலை..!! நான் சொல்றதை கொஞ்சம் முழுசா கேளும்மா..!!”

“ம்ம்.. சொல்லுங்க..!!”

“பையனோட அண்ணன் நேத்து கால் பண்ணினாரு.. அவங்க குடும்பத்துல எல்லாருக்கும் ரொம்ப திருப்தின்னு சொன்னாரு.. பையனோட ஃபோட்டோ அனுப்பி வைக்கிறோம்.. உங்க பொண்ணுக்கு புடிக்குதான்னு கேட்டுட்டு சொல்லுங்கன்னு சொன்னாரு..!!”

“நீங்க என்ன சொன்னீங்க..??”

“கேளு.. இன்னைக்கு அந்த பையனோட ஃபோட்டோ கூரியர்ல வந்தது.. கவரை பிரிச்சு பாத்தா.. எனக்கு ஒரே ஷாக்கு..!!”

“ஏன்.. பையனுக்கு பொக்கை வாயா..??”

“ஐயயே.. ஏன்மா இப்படி இருக்குற நீ..??”

“ஓகே ஓகே.. கண்டின்யூ..!!”

“பையன் யார் தெரியுமா.. அன்னைக்கு நான் ஒரு தம்பியை பத்தி சொல்லிட்டு இருந்தன்ல..??”

“எந்தத் தொம்பி..??”

“அதான்மா.. உன் அம்மாவோட தாலிச்சரடு தொலஞ்சு போய்.. எடுத்துக்குடுத்தார்னு..!!”

“ஆ..ஆமாம்..!!” ப்ரியாவிடம் இப்போதுதான் மெலிதாக ஒரு ஆர்வம் பிறந்தது.

“அதே தம்பிதான்மா..!! எனக்கு அந்த தம்பிதான் மாப்ளைன்னு தெரிஞ்சப்போ.. எவ்ளோ சந்தோஷமா இருந்தது தெரியுமா..??”

“ஓ..!!”

“ரொம்ப நல்ல இடம்மா.. நம்மவிட ரொம்ப வசதியான குடும்பம்.. அன்னைக்கு ஒரு அஞ்சு நிமிஷம் பேசுனதுல இருந்தே மாப்பிள்ளை தங்கமானவர்னு எனக்கு தெரிஞ்சு போச்சு.. இந்த இடம் அமைஞ்சா டாடி ரொம்ப நிம்மதியா இருப்பேன்மா..!! மாப்ளையும் ரொம்ப அழகா லட்சணமா இருக்காரு.. ஃபோட்டோ பாரு.. உனக்கு கண்டிப்பா புடிக்கும்..!!”

வரதராஜன் சொல்லிக்கொண்டே டீப்பாய் மீது இருந்த அந்த கவரை எடுத்து ப்ரியாவிடம் நீட்டினார். ப்ரியா ஒருவித ஆர்வத்தின் பிடியில் இருந்தாள். அசோக்தான் தன் கணவன் என்று அவளுடைய மனதில் பதிந்து போயிருந்தாலும், தன்னை சந்திக்காமலே தன்னிடம், ‘க்ரேட் கேரக்டர்..’ என்று பாராட்டுப்பெற்ற அந்த மூஞ்சியை பார்க்கவேண்டும் போலிருந்தது அவளுக்கு. எனவே கவரை பிரித்து ஃபோட்டோவை வெளியே எடுத்தாள். பார்த்தாள்..!!

ஃபோட்டோவை பார்த்த ப்ரியா எந்த மாதிரி உணர்ச்சிக்கு உள்ளாகியிருப்பாள் என்று நான் உங்களுக்கு சொல்லத்தேவை இல்லை..!! அந்த மாதிரி ஒரு இன்ப அதிர்ச்சியை ப்ரியா தன் வாழ்நாளில் சந்தித்ததே இல்லை. தனது மனதில் இருந்த உருவத்தையே.. தந்தை மாப்பிள்ளை என கையில் கொடுக்க.. அவளுடைய உடல் முழுவதிலும் ஒரு சிலிர்ப்பு.. உள்ளம் முழுவதிலும் ஒரு பரவசம்.. முகம் முழுவதிலும் ஒரு பிரகாசம்..!! மனதுக்குள் ஒரு சந்தோஷ ஊற்று பீறிட்டு கிளம்ப.. வார்த்தைகள் கூட சரியாக வந்து விழவில்லை அவளுக்கு.. திணறலாய் சொன்னாள்..!!

“டாடி.. இ..இது.. இவன்..”

“என்னம்மா.. என்னாச்சு..??”

“இ..இவனை எனக்கு தெரியும் டாடி.. இவன் பேர் அசோக்..!! என் கூட வொர்க் பண்றவன்தான்.. ஆறு வருஷமா இவனை எனக்கு தெரியும்..!!”

“ஆஹா..!! இதைப் பார்டா…. நான் உனக்கு ஷாக் குடுத்தா.. நீ எனக்கு அதைவிட பெரிய ஷாக் குடுக்குற.. ஹாஹா…!! ம்ம்ம்ம்.. ஆறு வருஷம்னா.. அப்போ என்னை விட உனக்கு மாப்பிள்ளையை பத்தி நல்லா தெரியும்னு சொல்லு..!!”

“ஹ்ம்ம்.. நல்லா தெரியும் டாடி..!!”

“எப்படி.. நல்ல பையன்தான..??”

“ந..நல்ல பையன்தான்..!!”

“பிடிச்சிருக்கா..??” வரதராஜன் பேச்சுவாக்கில் இயல்பாய் கேட்க,

“பிடிச்..” ப்ரியா அவசரமாய் சொல்லிவிட்டு அப்புறம் பாதியில் நிறுத்தினாள். அவள் மனதில் இப்போது லேசாக ஒரு குழப்பம். சில விடை தெரியாத கேள்விகள்.

“ஹாஹா.. ஏன்மா பாதில நிறுத்திட்ட.. பிடிச்சிருக்குன்னுதான் முழுசா சொல்லேன்..!!”

“நான் சொல்றது இருக்கட்டும் டாடி..!! பையனுக்கு என்னை புடிச்சிருக்கான்னு அவங்ககிட்ட கேட்டீங்களா..??”

“அதை பத்தி நீ ஒன்னும் கவலைப்பட வேணாம்மா.. உன் சம்மதம் மட்டுந்தான் இப்போ பாக்கி.. மாப்ளையோட சம்மதம் உன்னை பாக்குறதுக்கு முன்னாடியே கெடைச்சிடுச்சு.. ஹாஹாஹாஹா..!!” வரதராஜன் சொல்லிவிட்டு சிரிக்க,

“எ..என்ன டாடி சொல்றீங்க..??” ப்ரியா தலையை சொறிந்தவாறு கேட்டாள்.

“ஆமாம்மா..!! அவங்க அண்ணன் சொன்னாரு.. பையன் அப்படியே குடும்பத்துக்கு அடங்கி நடக்குறவராம்.. பெரியவங்க வார்த்தையை தட்டவே மாட்டாராம்.. அண்ணன், அண்ணி மேல அம்புட்டு மரியாதையாம்.. அவங்களா பாத்து எந்த பொண்ணை செலக்ட் பண்ணாலும் அவருக்கு சம்மதம்தானாம்.. இந்தக்காலத்துல இப்படி ஒரு அடக்கமான புள்ளையை..”

வரதராஜன் சொல்லிக்கொண்டே போக, ‘ம்க்கும்.. கிழிஞ்சது கிருஷ்ணகிரி..’ என்று ப்ரியா மனதுக்குள்ளேயே தந்தையின் அறியாமையை எண்ணி தலையில் அடித்துக் கொண்டாள். ‘அவனா அடக்கமான புள்ளை.. அவனை மாதிரி ஒரு அடங்காத தடிமாட்டை நான் பாத்ததே இல்ல..’ என்று நினைத்துக்கொண்டாள்.

“இங்க பாருங்க டாடி.. இந்தக்கதைலாம் வேணாம்.. நாளைக்கு அவங்களுக்கு ஃபோன் பண்ணி.. ‘மாப்ளை பொண்ணோட ஃபோட்டோவை பாத்தாரா.. இந்த கல்யாணத்துல அவருக்கு சம்மதமா’ன்னு தெளிவா கேட்டுடுங்க..!! என்ன.. புரியுதா..??”

“அது சரிம்மா.. நாளைக்கு நான் ஃபோன் பண்ணினா.. ‘உங்க பொண்ணு என்ன சொல்றா’ன்னு அவங்க என்னை திருப்பி கேட்பாங்களே.. அதுக்கு நான் என்ன பதில் சொல்றது..??”

வரதராஜன் கிடுக்கிப்பிடியாய் ஒரு கேள்வி கேட்கவும், ப்ரியா பட்டென அமைதியானாள். முகத்தில் சற்றே வெட்கம் படர, தலையை லேசாக கவிழ்த்துக்கொண்டாள். மகளுடைய வெட்கத்தைப் பார்த்து வரதராஜன் மெலிதாக புன்னகைத்தார். அப்புறம் அவரே மெல்லிய குறுகுறுப்பான குரலில் கேட்டார்.

“அப்போ.. அவங்ககிட்ட… என் பொண்ணுக்கு சம்மதம்னு சொல்லிடவா..??”

“ம்ம்..!!” ப்ரியா வெட்கத்துடன் தலையாட்ட, வரதராஜனின் புன்னகை மிகவும் பெரிதானது.

“அப்படி சொல்லுடி என் ராஜாத்தி..!!” என்று சந்தோஷ மிகுதியில் சோற்றுக்கையுடனே மகளின் கன்னத்தை பிடித்து கொஞ்சினார்.

61

ப்ரியாவுக்கு அன்று இரவு தூக்கமே இல்லை. மனம் முழுக்க நிறைய சந்தோஷமும், சிறு சிறு குழப்பங்களும்..!! நடப்பதெல்லாம் நனவா இல்லை கனவா என தன்னைத்தானே அடிக்கடி கிள்ளிப் பார்த்துக் கொண்டாள். அசோக்கின் ஃபோட்டோவை தந்தைக்கு தெரியாமல் தன் அறைக்கு எடுத்து சென்று, இரவு விளக்கின் வெளிச்சத்தில் இமைக்காமல் பார்த்து ரசித்துக் கொண்டிருந்தாள். மனதுக்குள்ளேயே கொஞ்சலாக பேசி அவனிடம் உரையாடினாள்.

அதேநேரம் அவளுடைய மனதுக்குள் ஒருவித குழப்ப விவாதமும் நடந்து கொண்டிருந்தது. ‘நான்கு மாதங்கள் முன்பே எனது ஃபோட்டோ அங்கே போயிருக்கிறது என்றால்.. அசோக் என் ஃபோட்டோவை பார்த்தானா இல்லையா..?? இல்லை.. பார்த்திருக்க மாட்டான்.. பார்த்திருந்தால் அந்த செய்தி எப்போதோ என்னிடம் வந்து சேர்ந்திருக்குமே..?? அதுசரி.. நான்கு மாதங்களாக அவர்கள் ஏன் அப்பாவை தொடர்பு கொள்ளவில்லை..?? திடீரென ஏன் தொடர்பு கொண்டார்கள்..??’

அந்த கடைசி கேள்வி மனதில் எழுந்ததும், அன்று அவளுக்கும் அசோக்கிற்கும் நடந்த சண்டையும், அதன்பிறகு அவன் ஃபோனில் அண்ணனை அழைத்து பேசியதும் அவளுடைய நினைவுக்கு வந்தது..!! உடனே படபடவென பாதி கேள்விகளுக்கு விடை தெரிந்து போனமாதிரி இருந்தது..!! ‘ஆமாம்.. அப்படித்தான் இருக்கவேண்டும்.. முன்பு ஏதோ ஒரு காரணத்துக்காக என் ஃபோட்டோவை பார்க்காமலே, அசோக் கல்யாணம் வேண்டாம் என்று சொல்லியிருக்கிறான்.. அப்புறம் அன்று அவன் பேசியதும், அவனுடைய அண்ணன் அப்பாவை திரும்ப தொடர்பு கொண்டிருக்கிறார்.. அசோக் அன்று சொன்னதை வைத்து ‘மாப்பிள்ளைக்கு சம்மதம்’ என்று அவரும் இவரிடம் சொல்லியிருக்கிறார்.. கூட்டி கழித்து பார்த்தால், அசோக்கிற்கு இன்னும் விஷயமே தெரியாது போலிருக்கிறது..!!’

ப்ரியா நெற்றியை கீறிக்கொண்டு தீவிர சிந்தனையில் ஆழ்ந்தாள். சடசடவென சில முடிவுகள் எடுத்தாள். ‘அசோக்கின் சம்மதம் தெரிந்து கொள்ள அப்பாவை எதிர்பார்க்க தேவை இல்லை.. நாமே நாளை அவனிடம் மனம் விட்டு பேசி விட வேண்டியதுதான்.. அவனுக்கு என் மீது கோபம் இருக்கலாம்.. இத்தனை நாளாய் அவனிடம் நடந்து கொண்ட முறைக்காக தயக்கமில்லாமல் மன்னிப்பு கேட்டுவிட வேண்டும்.. அவன் மீது எவ்வளவு காதல் வைத்திருக்கிறேன் என்று வெட்கமில்லாமல் சொல்லிவிட வேண்டும்.. என்னை மனைவியாக ஏற்றுக்கொள்ளடா என்று மனம் விட்டு பேசிவிட வேண்டும்..!!’

அந்த மாதிரி தெளிவாக ஒரு முடிவெடுத்ததும், ப்ரியாவின் மனம் குழப்பம் நீங்கி அமைதியானது. மீண்டும் அசோக்கை பற்றிய காதல் நினைவுகள் மனதை நிறைக்க ஆரம்பித்தன. அவனுடைய புகைப்படத்தை மார்பின் மீது போட்டுக்கொண்டு, கண்கள் மூடி கல்யாணக்கனவு காண ஆரம்பித்தாள்.

அத்தியாயம் 17

இரவு தூங்க தாமதம் ஆனாலும், காலையில் சீக்கிரமே ப்ரியா எழுந்துவிட்டாள். எப்போதும் பெங்களூர் குளிருக்கு அவசர அவசரமாய் தலையில் தண்ணீர் மொண்டு ஊற்றுபவள், அன்று ஆற அமர அரை மணி நேரமாக குளித்தாள். குளிர்ந்த நீர் உடலில் ஏற்படுத்துகிற ஜில்லென்ற சிலிர்ப்பை இமைகள் மூடி ரசித்தாள். நீரில் நனைந்த தன் அங்கங்களை ஒவ்வொன்றாக கூர்ந்து கவனித்தாள். அவளது அங்கங்கள் அனைத்தும் திடீரென அழகாய் மாறிவிட்டதாக அவளுக்கு தோன்றியது. அனைத்துக்கும் சொந்தக்காரனை மனதில் நிறுத்தி.. கண்கள் மூடி.. கைகள் விரித்து.. ஷவரில் இருந்து சிதறுகிற நீரில்.. சுகமாய் நனைந்தாள்..!!

வெளியே வந்து உடை அணிந்து கொண்டாள். அவள் புடவை அணிந்து கொள்வது மிகவும் அரிது. பெரும்பாலும் சுடிதார்தான்.. அதையும் அக்கறை இல்லாமலே உடுத்திக் கொள்வாள்..!! அன்று ஏனோ அவளுக்கு புடவை அணிந்து செல்லவேண்டும் போலிருந்தது. ஆரஞ்சு நிறத்தில் ஒரு புடவையை எடுத்து அணிந்து கொண்டாள். அதே நிறத்தில் ப்ளவுசும்..!! கோதுமை நிறத்தில் மின்னும் அவளது தேகத்திற்கு அந்த நிறப்புடவை இன்னும் வண்ணம் கூட்டியது.

கண்ணாடி முன் நின்று நீண்ட நேரமாய் அலங்காரம் செய்து கொண்டாள். தலையை பின்னாமல் காற்றில் அலைபாய விட்டாள். மெலிதாக மேக்கப் போட்டுக் கொண்டாள். கொஞ்சமாய் உதட்டுச்சாயம் பூசிக்கொண்டாள். புருவத்திற்கு மையிட்டாள். இமைகளை கூர் தீட்டினாள். எப்போதும்போல குட்டியாய் ஒரு ஸ்டிக்கர் பொட்டை நடுநெற்றியில் ஒட்டிக்கொண்டாள். எல்லாம் முடிந்ததும் திருப்தி அடைந்தவளாய், உடலை முன்னும் பின்னும் திருப்பி திருப்பி கண்ணாடியில் பார்த்துக் கொண்டாள். அவளுடைய கற்பனையில் இருந்து கிளம்பி கண்ணாடியில் தோன்றிய அசோக்கிடம், மனதாலேயே பேசினாள்.

‘ஒய்.. திருடா.. ஈகோ புடிச்ச இடியட் மடையா..!! புடிச்சிருக்கா என்னை.. ப்ரியாவை பிடிச்சிருக்கா உனக்கு..?? பாரு.. எவ்ளோ அழகா இருக்கேன் பாரு.. எல்லாம் யாருக்குன்னு சொல்லு பார்ப்போம்.. உனக்குத்தாண்டா லூசு..!! ஹ்ம்ம்ம்… என்னடா சொல்லப்போற இன்னைக்கு.. லவ் பண்றேன்னு சொன்னா என்ன சொல்வ.. ம்ம்..?? மவனே.. முடியாதுன்னு மட்டும் சொல்லு.. அப்டியே அந்தக்கண்ணை நோண்டி எடுத்துடுறேன்..!! ஹாஹாஹாஹா… உன்னை லூசுன்னு சொல்லிட்டு நான் லூசு மாதிரி உளறிட்டு இருக்கேன் பாரு.. உன்னால என்னென்னலாம் பண்றேன்..??’

“என்னம்மா பண்ற..??” வரதராஜனின் குரல் ப்ரியாவை நனவுலகுக்கு மீட்டு வந்தது.

“ஒண்ணுல்ல டாடி.. இதோ வந்துட்டேன்..!!”

“சீக்கிரம் வாம்மா.. டைமாச்சு..!!”

“இதோ.. ஒரு நிமிஷம் டாடி..!!”

ப்ரியா மீண்டும் ஒருமுறை கண்ணாடியில் தன் உடலை பார்த்து கொண்டாள். அவசரமாய் பேக் எடுத்து தோளில் மாட்டிக்கொண்டாள். செல்போன் எடுத்துக்கொண்டாள். அறையை விட்டு வெளிப்பட்டாள். அலங்காரம் செய்த அழகு சிலையாக வெளிவந்த மகளை பார்த்து, வரதராஜன் ஒருகணம் பிரம்மித்துப் போனார். மறுகணமே முகம் மலர்ந்து புன்னகைத்தார்.

“என்னம்மா.. இன்னைக்கு புதுசா புடவைலாம்..??”

“ஏன் டாடி.. நல்லா இல்லையா..??”

“ஐயோ.. பிரம்மாதமா இருக்கும்மா.. மகாலக்ஷ்மி மாதிரி இருக்குற..!!”

“நெஜமாவா..?? புடவைல நான் நல்லாருக்கனா..??”

“என் பொண்ணுக்கு என்னம்மா கொறைச்சல்.. அவ என்ன ட்ரஸ் போட்டாலும்.. தேவதை மாதிரி இருப்பா..!!” வரதராஜன் மகளை மனதார புகழ,

“ஹையோ.. போங்க டாடி..!!” பிரியா நாணத்தில் முகம் சிவந்தாள்.

“ஹாஹா..!! ஹ்ம்ம்.. இப்போ எனக்கு எல்லாம் புரியுது..!!”

“என்ன புரியுது..??”

“இன்னைக்கு ஏன் இந்த ஸ்பெஷல் அலங்காரம்னு..!!”

“ஏ..ஏன்..??”

“ஆபீஸ்ல இன்னைக்கு மாப்ளையை சந்திச்சு பேசுற மாதிரி ப்ளான்.. கரெக்டா..??”

“ஐயோ.. அ..அதெல்லாம் ஒன்னும் இல்ல டாடி.. நா..நான் சும்மா… சாதாரணமாத்தான் இதெல்லாம்..!!” பிடுங்கித் தின்னுகிற வெட்கத்துடன் ப்ரியா தடுமாற்றமாக சொன்னாள்.

“ஹாஹா.. சரிம்மா விடு..!! ம்ம்ம்ம்.. அப்புறம் இன்னொரு விஷயம்..!!”

“என்ன டாடி..??”

“ஃபோன்ல பேசுறதை விட.. இன்னைக்கு நேர்லயே அவங்க வீட்டுக்கு ஒரு எட்டு போயிட்டு வரலாம்னு இருக்கேன்மா.. போயிட்டு வரவா..??”

“சரி டாடி.. போயிட்டு வாங்க..!!”

- தொடரும்

மேலும் செக்ஸ் கதைகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் :

தமிழ்காமவெறி தளம்

ஐ ஹேட் யூ, பட் – பகுதி 28

$
0
0

சிறிது நேரத்தில் வரதராஜனும், ப்ரியாவும் வீட்டில் இருந்து கிளம்பினார்கள். அவளுடைய ஸ்கூட்டி முதல்நாள் கொடுத்த ஸ்டார்ட்டிங் ட்ரபுளை சரி செய்ய, மதியத்திற்கு மேல் ஏதாவது சர்வீஸ் ஸ்டேஷன் எடுத்து செல்லுமாறு நேற்றே அப்பாவிடம் சொல்லியிருந்தாள். அதனால் வரதராஜனின் ஸ்கூட்டரிலேயே இருவரும் கிளம்பினார்கள். வழக்கம்போல சில்க்போர்டில் மகளை இறக்கிவிட்டு மடிவாலா திரும்பினார் வரதராஜன். கம்பனி பஸ்சுக்காக காத்திருந்தாள் ப்ரியா.

மேலும் செக்ஸ் கதைகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் :

தமிழ்காமவெறி தளம்

காத்திருந்த நேரத்தில் அசோக்கின் நினைவுகள் அலை அலையாய் மனதில் பொங்க ஆரம்பித்தன. ஆபீஸ் செல்லும் வரைக்கும் கூட அவளுக்கு இப்போது பொறுமை இல்லை. அவனுடன் உடனே பேசவேண்டும் போலிருந்தது. செல்போன் எடுத்து அசோக்கின் நம்பருக்கு கால் செய்தாள். காதில் வைத்துக் கொண்டாள். கால் பிக்கப் செய்யப்பட்டது. குரலில் ஒரு மென்மையை கூட்டிக்கொண்டு இவள் ‘ஹலோ..’ சொல்ல, அடுத்த முனையில் அசோக் ஹலோ சொல்வதற்கு பதிலாக வீட்டில் இருந்த யாருடனோ பேசினான்.

“ஏய்.. ஒரு நிமிஷம் உன் டோரை லாக் பண்ணு.. எனக்கு ஒரு இம்பார்ட்டன்ட் கால் வருது.. பேசிட்டு வர்றேன்..!!” என்று கோவமாக சொன்னவன் அப்புறம் ஃபோனில்,

“ஹேய் ப்ரியா.. என்ன இது.. காலங்காத்தால கால் பண்ணிருக்குற..??” என்று உற்சாகமாக கேட்டான்.

“ஒ..ஒண்ணுல்ல அசோக்.. சும்மாதான்..” ப்ரியா சொல்லிக்கொண்டிருக்கும்போதே,

“டேய்.. நான் கேக்குறதுக்கு மொதல்ல பதில் சொல்லுடா.. ஃபோன்ல அப்புறம் பேசலாம்..!!” என்று அந்தப்பக்கம் அசோக் அண்ணனின் குரல் காட்டமாக ஒலித்தது.

“ஏய்.. முக்கியமான கால்னு சொல்றேன்ல.. கொஞ்சம் பொறுக்க முடியாதா உனக்கு..??”

அசோக் அண்ணனிடம் சீறினான். தவறான நேரத்தில் கால் செய்துவோட்டோமோ என்று ப்ரியாவிற்கு இப்போது ஒரு புரியாத உணர்வு.

“யா..யார் அது அசோக்..??” என்று தயக்கமாக கேட்டாள்.

“என் அண்ணன்.. ஒரு மாதிரியான ஆளுன்னு உன்கிட்ட சொல்லிருக்கன்ல.. அவன்தான்..!!” அசோக் கேலியாக சொல்ல,

“டேய்.. யாருடா ஒரு மாதிரி.. யாரு ஒரு மாதிரி..??” ராஜேஷ் கத்தினான்.

“உன்னைத்தாண்டா சொல்றேன்..!!” அசோக்கும் பதிலுக்கு கத்தினான்.

“ஏ..ஏன் கத்துறாரு..??” ப்ரியா புரியாமல் கேட்டாள்.

“அவன் கத்தலம்மா.. காலைலயே ஆப்பத்தை தின்னுட்டு ஏப்பத்தை விட்டுட்டு இருக்கான்..!!” அசோக்கின் குரலில் ஒரு நையாண்டி.

“ஏண்டா.. நான் கரடியா கத்துறது உனக்கு ஏப்பம் விடுற மாதிரி இருக்கா..?? எவ்வளவு கொழுப்பு இருக்கணும் உனக்கு..?? மொதல்ல அந்த ஃபோனை கட் பண்ணுடா.. கட் பண்ணு..!! இங்க பாரு.. என்கிட்ட பேசு..!!” ராஜேஷ் டென்ஷனாக சொன்னான். அவன் சொல்லிக்கொண்டிருக்கும்போதே,

“டேய்.. அவர்தான் சொல்றார்லடா.. இப்போ அந்த ஃபோனை கட் பண்ணப் போறியா.. இல்லை நான் உடைச்சு அடுப்புல போடட்டுமா..??”

என்று ஒரு பெண்ணின் ஆத்திரமான குரல் கேட்டது. அவனுடைய அண்ணியாக இருக்கும் என்று ப்ரியா எண்ணிக்கொண்டாள். இவர்கள் கத்துவது பத்தாமல் ‘சித்தி ஃபோட்டோ.. சித்தி ஃபோட்டோ..!!’ என்று ‘டம்.. டம்..’ என்று எதையோ தட்டிக்கொண்டு ஒரு குழந்தை வேறு வீறிட்டது. ப்ரியா இப்போது பொறுமை இழந்தாள்.

“ஓகே அசோக்.. நான் வேணா கால் கட் பண்ணிடுறேன்..!!” என்றாள் அவசரமாக.

“ஹேய் ப்ரியா.. இரு இரு.. பரவால.. என்ன விஷயம்னு சொல்லு..??”

“இட்ஸ் ஓகே அசோக்.. நீ ஆபீஸ் வா.. பேசிக்கலாம்..!!” ப்ரியா சலிப்பாக சொல்லவும், அசோக் ஓரிரு வினாடிகள் தயங்கிவிட்டு..

“ஹ்ம்ம்.. சரிப்பா..!!” என ஒத்துக்கொண்டான்.

ப்ரியா காலை கட் செய்தாள். கொஞ்ச நேரம் அடுத்த முனையில் நடந்த அமளிதுமளியில் அவளுக்கு காதெல்லாம் ‘டொய்ங்ங்ங்..!!!’ என்று சவுண்டு கேட்பது போல இருந்தது. வலது காதுக்குள் சுண்டு விரலை நுழைத்து நன்றாக குடைந்து விட்டுக்கொண்டாள். ‘உஃஃப்ப்ப்… உஃஃப்ப்ப்…’ என்று வாய்வழியாக உஷ்ணமூச்சு விட்டாள். ‘ஹப்பா… என்னா ஃபேமிலிடா இது.. கல்யாணம் பண்ணிக்கிட்டு இதுக கூட எப்படி நான் காலம் தள்ளப்போறேன்..??’ என்று கவலையாய் யோசித்தாள். அடுத்த சில வினாடிகளிலேயே அவர்களுடைய கம்பனி பஸ் வந்து நிற்க, ஓடிச்சென்று ஏறிக்கொண்டாள்.

அவள் பஸ்ஸில் ஏறிக்கொண்டதற்கு சிறிது நேரம் முன்பாக.. அசோக்கின் வீடு..!!

அசோக் தனது அறையில் இருந்து வெளிப்பட்டு ஹாலுக்குள் நுழைந்தான். செல்வி கிச்சனில் கரண்டியுடன் பிஸியாக இருந்தாள். டைனிங் டேபிளில் செண்பகம் அமர்ந்திருந்தாள். அவளுடைய கையில் குமுதம் விரித்து வைக்கப்பட்டிருந்தது. அவளது வாயில் தேங்காய்ப்பாலில் குளித்த ஆப்பம் அரைபட்டுக் கொண்டிருந்தது. அசோக் ஒரு சேரை இழுத்து போட்டுக்கொண்டு ஓரமாக கிடந்த அந்த டேபிள் முன்பு அமர்ந்தான். டேபிள் மீதிருந்த லேப்டாப்பை திறந்தான். செண்பகம் இப்போது தலையை திருப்பி அசோக்கை பார்த்து கேட்டாள்.

“என்ன மாமா.. ஆபீசுக்கு இன்னைக்கு வரலையா..??”

“வர்றனே.. ஏன் கேக்குற..??”

“இல்ல.. கேஷுவல் ட்ரஸ்ல இருக்கீங்களே.. அதான் கேட்டேன்..!!”

“ட்ரஸ் சேன்ஜ் பண்றதுக்கு எவ்வளவு நேரம் ஆகப் போகுது..?? மொதல்ல நீ தின்னு முடி.. நீ தின்னு முடிக்கிறதுக்குள்ள.. திருவண்ணாமலை கிரிவலமே சுத்தி வந்துறலாம்..!!” என்று அசோக் கிண்டலாக சொல்ல,

“ம்க்கும்..!!” கடுப்பான செண்பகம், குமுதத்திலும் ஆப்பத்திலும் கவனத்தை செலுத்த ஆரம்பித்தாள்.

லேப்டாப் திறந்த அசோக் முதல் வேலையாக அந்த ஃபோல்டரை ஓப்பன் செய்தான். அதிலிருந்த நூற்றுக்கணக்கான ப்ரியாவின் ஃபோட்டோக்களில், அவனுடைய ஃபேவரிட் ஃபோட்டோவை ஓப்பன் செய்தான். காதலியின் அழகை கண்கொட்டாமல் ரசிக்க ஆரம்பித்தான். அவன் காலை நேரங்களில் இந்த மாதிரி ப்ரியா தரிசனம் செய்வது இயல்பான ஒன்றுதான்.

தம்பு ஸ்கூலுக்கு கிளம்பி ரெடியாக இருந்தான். சாப்பிட்டுவிட்டு வெறுமனே அமர்ந்திருந்தவன், அசோக் லேப்டாப்பை திறந்ததும் எழுந்து அவனருகே வந்து நின்றுகொண்டான். சிறுவன்தானே என்று எண்ணி ப்ரியாவை ரசிப்பதை கண்டின்யூ செய்தான் அசோக். ‘சித்தி.. உன் சித்தி..’ என்று அவனிடம் கிசுகிசுப்பான குரலில் சொன்னான். இருவரும் ரகசியமாக ப்ரியாவை ரசிக்க ஆரம்பித்தார்கள்.

அப்போதுதான் ராஜேஷ் அந்த அறைக்குள் பிரவேசித்தான். அவன் முகத்தில் ஒரு சீரியஸ்னஸ்..!! நேராக அசோக்கை நோக்கி வந்தவன்,

“டேய்.. கொஞ்சம் கையை எடு..!!” என்றான்.

“எதுக்குடா..??”

எதுவும் புரியாமலே அசோக் லேப்டாப்பில் இருந்து கைகளை விலக்கிக் கொண்டான். ராஜேஷ் டேபிள் மீது கிடந்த மேகசின்ஸ், சிடிக்கள், பொம்மைகள், இன்னும் பிற குப்பைகளை கிளறி எதையோ தேடினான். அப்புறம்..

“கொஞ்சம் இந்தப்பக்கம் வா..!!” என்றான் அசோக்கிடம்.

“என்னடா தேடுற..??”

அசோக் கேட்டுக்கொண்டே டேபிளை விட்டு சற்று நகர்ந்து கொண்டான். அவனுடைய லேப்டாப் இன்னும் மூடாமல் திறந்தேதான் இருந்தது. அதைக் கவனிக்கவெல்லாம் பொறுமை இல்லாத ராஜேஷ், டேபிளின் ட்ராவை திறந்தான். உள்ளே கைவிட்டு கிளறினான். ‘ப்ச்… ச்சே.. எங்க போச்சு..??’ என்று சலிப்பை உதிர்த்தான்.

“ஹேய்.. என்ன தேடுறன்னு கேக்குறன்ல..??” அசோக்கின் குரலில் இப்போது ஒரு எரிச்சல் ஏறியிருந்தது.

“கொஞ்சம் காலை எடுடா..!!”

ராஜேஷ் அவனுக்கு பதில் சொல்லாமல், அப்படியே பட்டென்று தரையில் அமர்ந்தான். டேபிளின் கீழ்ப்பாகத்தில் இருந்த கப்போர்டுகளை எல்லாம் வரிசையாக ஒவ்வொன்றாக திறந்து பார்த்தான். உள்ளே அடுக்கியிருந்த புத்தகங்களுக்குள் கைவிட்டு தேடுதல் வேட்டையை தொடர்ந்தான். ‘எங்க வச்சிருப்பேன்..??’ என்று அவ்வப்போது தலையை சொறிந்து கொண்டான்.

“டேய்.. சொல்லுடா.. என்னடா தேடுற..??”

அசோக் உச்சபட்ச கடுப்புடன் கேட்டான். அப்புறமும் ராஜேஷ் அவனுக்கு பதில் சொல்லாமல் கப்போர்டுக்குள் கைவிட்டு துழாவிக்கொண்டிருக்க, அசோக் இப்போது பொறுமை இழந்தான். காலடியில் மண்டியிட்டு அமர்ந்திருந்த அண்ணனையே முறைப்பாக பார்த்தான். அப்புறம் அவனது பார்வை, தரையில் ஊன்றப்பட்டு விரிந்திருந்த அண்ணனின் ஐந்து கைவிரல்கள் மீது படிந்தது. அசோக் இப்போது தனது வலது காலை மெல்ல நகர்த்தினான். ராஜேஷின் கைவிரல்கள் மீது காலை வைத்து, ‘நறுக்க்..’ என்று அழுத்தி ஒரு மிதி மிதித்தான். உடனே..

“ஆஆஆஆ…!!” என்று அலறிக்கொண்டும் கையை உதறிக்கொண்டு ராஜேஷ் எழுந்தான்.

6a

“என்ன தேடுறன்னு கேட்டுட்டே இருக்குறேன்.. சொல்லவே மாட்டன்ற..??” அசோக் எரிச்சலாக கேட்டான்.

“அதுக்காக மிதிப்பியா..??” ராஜேஷ் கைவிரல்களுக்கு காற்று ஊதிக்கொண்டே கேட்டான்.

“வேணுன்னுலாம் ஒன்னும் மிதிக்கல.. தெரியாம பட்டுருச்சு..!! சரி சொல்லு.. என்ன தேடுற..??”

“ஃபோட்டோடா..!!”

“என்ன ஃபோட்டோ..??”

“அந்த பொண்ணோட ஃபோட்டோ..!!”

“எந்த பொண்ணோட ஃபோட்டோ..??”

“அதாண்டா.. நாலு மாசம் முன்னாடி உனக்கு பாத்த பொண்ணு.. நீ கூட பாக்காமலே தூக்கி போட்டுட்டு போனியே..??”

“அதை எதுக்கு இப்போ தேடுற..??”

“அந்தப் பொண்ணைத்தான் உனக்கு கட்டி வைக்கிறதா நான் முடிவு பண்ணிருக்குறேன்.. ஜாதகம் கொண்டு போய் ஒன்னுக்கு ரெண்டு ஜோசியரா கேட்டாச்சு.. பொருத்தம்லாம் பிரம்மாதமா இருக்கு.. அந்தப்பொண்ணோட அப்பாகிட்ட நானும் உன் அண்ணியும் எல்லாம் பேசி முடிச்சுட்டோம்.. உன்கிட்டயும் அந்த பொண்ணோட ஃபோட்டோவ காட்டிட்டா எனக்கு ஒரு வேலை முடிஞ்சுடும்.. கல்யாண வேலையை ஆரம்பிச்சுடலாம்.. அதான் தேடிட்டு இருக்குறேன்..!!” புன்னகையும் பெருமிதமாகவும் சொன்ன ராஜேஷை, அசோக் ஒருமுறை ஏற இறங்க பார்த்தான். அப்புறம் முகத்தை சுளித்தவாறே கேலியாக கேட்டான்.

“ஏண்டா.. லூசா நீ..??”

“என்னது..?? லூசா..????” ராஜேஷ் ஷாக்காகி போனான்.

“பின்ன என்ன..?? யாரை கேட்டு நீங்களா முடிவு பண்ணுனீங்க..??”

“நீதானடா அன்னைக்கு சொன்ன..??”

“என்ன சொன்னேன்..??”

“உடனே எனக்கு ஒரு பொண்ணு பாரு.. எந்தப்பொண்ணா இருந்தாலும் நான் தாலி கட்டுறேன்னு..!!”

அண்ணனின் கேள்விக்கு அசோக் பதில் சொல்ல தடுமாறிக் கொண்டிருக்கும்போதே, ஆப்பம் தின்றுகொண்டிருந்த செண்பகம் எழுந்து ஓடிவந்தாள். வாயெல்லாம் பல்லாக கேட்டாள்.

“ஹை.. அசோக் மாமா..!! உங்களுக்கு கல்யாணமா..?? அக்கா என்ன பண்றாங்க..??”

“ஆங்.. அடுப்பங்கரைல ஆப்பம் சுடுறாங்க..!!” அசோக் டென்ஷனாகி கத்தினான். அவன் கத்திக்கொண்டு இருக்கும்போதே அந்தப்பக்கம் செல்வி,

“டேய்.. உங்க சண்டைல தேவை இல்லாம என்னை இழுத்த.. ஆப்பக்கரண்டியாலே ரெண்டு பூசை போடப்போறேன் பாரு இப்போ..!!” என்று கிச்சனில் இருந்து அலறினாள். அசோக் அதை கண்டுகொள்ளாமல், செண்பகத்திடம் சீறினான்.

“ஏய்.. போடீ.. போய் திங்கிற வேலையை பாரு.. போ..!!” செண்பகம் மிரண்டு போய் டைனிங் டேபிள் நோக்கி நகர,

“அவளை ஏண்டா திட்டுற.. நான் கேட்டதுக்கு பதில் சொல்லு..!!” ராஜேஷ் மறுபடியும் ஆரம்பித்தான்.

“என்ன கேட்ட..??”

“அன்னைக்கு நீதான கல்யாணத்துக்கு பொண்ணு பாக்க சொன்ன..??”

“அ..அது.. அது நான் அன்னைக்கு ஏதோ ஒரு கோவத்துல சொல்லிட்டேன்..!!” அசோக் சமாளிக்க முயன்றான்.

“என்னது.. கோவத்துல சொல்லிட்டியா..?? ஏண்டா.. கோவத்துல கன்னாபின்னான்னு திட்டுவாங்கன்னு கேள்விப் பட்டிருக்கேன்.. கல்யாணத்துக்கு பொண்ணு பாக்க சொல்றது என்னடா புதுப்பழக்கமா இருக்கு..??”

“ஐயோ.. உன் மேல கோவம் இல்லடா..!!”

“அப்புறம் யார் மேல..??”

“அது உனக்கு சொன்னா புரியாது.. நீ பாத்த பொண்ணெல்லாம் என்னால கட்டிக்க முடியாது.. போதுமா..?? ஆளை விடு..!!”

“என்னடா இவ்வளவு கூலா சொல்லிட்டு இருக்குற.. உன்னை நம்பி நான் அந்த மனுஷன்ட்ட என்னன்னவோ சொல்லிட்டேன்..!!”

“என்ன சொன்ன..??”

“பெரியவங்க வார்த்தையை நீ தட்டமாட்ட.. அண்ணன் அண்ணி மேல ரொம்ப மதிப்பு.. அவங்களா பாத்து எந்தப்பொண்ணை சொல்றாங்களோ.. அந்தப்பொண்ணு கழுத்துல தாலி கட்டுவன்னு..!!”

“உன்னை யார் அப்படி இல்லாததும் பொல்லாததுமா.. மனசாட்சியே இல்லாம பொய் சொல்ல சொன்னது..??”

அசோக் கேட்டதில் ராஜேஷ் அப்படியே வாயடைத்துப் போனான். இப்போது செல்வி கிச்சனில் இருந்து தோசைக்கரண்டியுடன் ஓடிவந்தாள்.

“ஏண்டா.. நீயே பொண்ணு பாக்க சொல்லிட்டு.. இப்ப மாத்தி மாத்தி பேசுனா என்ன அர்த்தம்..??”

“ஆங்.. நான் சொன்னது உங்களுக்கு புரியலைன்னு அர்த்தம்..??”

“என்ன புரியலை..??”

“ஆமாம்.. நான் சும்மா ஜாலியா சொன்னதை சீரியஸா எடுத்துக்கிட்டு.. நீங்களா பொண்ணு பாத்தா அதுக்கு நானா பொறுப்பு..??” அசோக் கூலாக சொல்ல இப்போது ராஜேஷ் டென்ஷன் ஆனான்.

“ஏண்டா.. நீ ஜாலி பண்ணி வெளயாட இங்க என்ன கிரிக்கெட் மேட்சா நடக்குது.. கல்யாண விஷயம்டா..!!”

ராஜேஷ் கத்திக்கொண்டு இருந்தபோதுதான் டேபிள் மீது கிடந்த அசோக்கின் செல்போன் சிணுங்கியது. உடனே தலையை திருப்பியவன், அப்போதுதான் தனது லேப்டாப் இன்னும் திறந்தே இருப்பதையும், ப்ரியா அதில் சிரித்துக் கொண்டிருப்பதையும் கவனித்தான். அதே நேரம் ராஜேஷும் அந்தப்பக்கமாய் பார்வையை திருப்ப, அதற்குள் அசோக் அவசரமாக ஓடிச்சென்று லேப்டாப்பை அறைந்து மூடினான். செல்போனை எடுத்து டிஸ்ப்ளே பார்த்தவன் ப்ரியா என்று தெரிந்ததும், உற்சாகமாக கால் பிக்கப் செய்ய, அதற்குள்

“கேக்குறதுக்கு பதில் சொல்லுடா..!!” ராஜேஷ் கத்தினான்.

“ஏய்.. ஒரு நிமிஷம் உன் டோரை லாக் பண்ணு.. எனக்கு ஒரு இம்பார்ட்டன்ட் கால் வருது.. பேசிட்டு வர்றேன்..!!” என்றான் அசோக். அப்புறம் ஃபோனை காதுக்கு கொடுத்து,

“ஹேய் ப்ரியா.. என்ன இது.. காலங்காத்தால கால் பண்ணிருக்குற..??” என்று புன்னகையுடன் கேட்டான்.

“டேய்.. நான் கேக்குறதுக்கு மொதல்ல பதில் சொல்லுடா.. ஃபோன்ல அப்புறம் பேசலாம்..!!” ராஜேஷ் இப்போது பொறுமை இழக்கலானான்.

“ஏய்.. முக்கியமான கால்னு சொல்றேன்ல.. கொஞ்சம் பொறுக்க முடியாதா உனக்கு..??” அண்ணனிடம் திரும்பி கத்திய அசோக், அதற்குள் ஃபோனில் ஏதோ கேள்வி கேட்கப்பட,

“என் அண்ணன்.. ஒரு மாதிரியான ஆளுன்னு உன்கிட்ட சொல்லிருக்கன்ல.. அவன்தான்..!!” என்றான் கேலியாக.

“டேய்.. யாருடா ஒரு மாதிரி.. யாரு ஒரு மாதிரி..??” ராஜேஷ் டென்ஷனாகி கத்தினான்.

“உன்னைத்தாண்டா சொல்றேன்..!!” அசோக்கும் செல்ஃபோனை பொத்திக்கொண்டு சீறினான். அப்புறம் கையை எடுத்துக்கொண்டு ஃபோனில்,

“அவன் கத்தலம்மா.. காலைலயே ஆப்பத்தை தின்னுட்டு ஏப்பத்தை விட்டுட்டு இருக்கான்..!!” என்று கிண்டலாக சொன்னான்.

“ஏண்டா.. நான் கரடியா கத்துறது உனக்கு ஏப்பம் விடுற மாதிரி இருக்கா..?? எவ்வளவு கொழுப்பு இருக்கணும் உனக்கு..?? மொதல்ல அந்த ஃபோனை கட் பண்ணுடா.. கட் பண்ணு..!! இங்க பாரு.. என்கிட்ட பேசு..!!” ராஜேஷ் அவ்வாறு சொல்லிக்கொண்டிருக்கும்போதே,

“டேய்.. அவர்தான் சொல்றார்லடா.. இப்போ அந்த ஃபோனை கட் பண்ணப் போறியா.. இல்லை நான் உடைச்சு அடுப்புல போடட்டுமா..??”

செல்வியும் பொறுமை இழந்து சூடாக கேட்டாள். ஆளாளுக்கு கத்திக்கொண்டிருக்க, அது போதாதென்று.. அவ்வளவு நேரம் சித்தியின் படத்தை ரசித்துக்கொண்டிருந்த தம்புவும், திடீரென லேப்டாப் மூடப்பட்டதில் கடுப்பாகி, ‘சித்தி ஃபோட்டோ.. சித்தி ஃபோட்டோ..!!’ என ‘டம்.. டம்..’ என்று லேப்டாப்பை தட்டியவாறே அவனும் அலறினான். ஆனால் அதை எல்லாம் யாரும் கவனித்ததாக தெரியவில்லை. இந்த அமளிதுமளி எல்லாம் கேட்டு அடுத்த முனையில் என்ன சொல்லப்பட்டதோ..

“ஹேய் ப்ரியா.. இரு இரு.. பரவால.. என்ன விஷயம்னு சொல்லு..??” அசோக் அவசரமாக சொன்னான். அப்புறம் ஓரிரு வினாடிகள் தயங்கிவிட்டு..

“ஹ்ம்ம்.. சரிப்பா..!!” என்றவாறே காலை கட் செய்தான். கட் செய்த வேகத்தில் அண்ணனையும் அண்ணியையும் பார்த்து சீற்றமாக கேட்டான்.

- தொடரும்

மேலும் செக்ஸ் கதைகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் :

தமிழ்காமவெறி தளம்

ஐ ஹேட் யூ, பட் – பகுதி 29

$
0
0

“உங்களுக்குலாம் என்னாச்சு இன்னைக்கு.. நிம்மதியா ஒரு ஃபோன் கூட பேச விட மாட்டேன்றிங்க..?? கால் பண்றவங்க நம்ம ஃபேமிலியை பத்தி என்ன நெனைப்பாங்க..??”

“பார்டா.. ஃபேமிலியை பத்தி பெருசா அக்கறையாலாம் பேசுது புள்ள..?? இவருக்கே எந்த அக்கறையும் கெடையாதாம்.. இவுக அடுத்தவுகளை சொல்ல வந்துட்டாக..!!” செல்வி கிண்டலாக சொன்னாள்.

மேலும் செக்ஸ் கதைகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் :

தமிழ்காமவெறி தளம்

“ஏன்..?? எனக்கு என்ன அக்கறை இல்ல..??”

“அக்கறை இருக்குறவனா இருந்தா.. இப்படி நாங்க பாத்த பொண்ணை வேணாம்னு சொல்லிருப்பியா..??” செல்வி கேட்க, இப்போது செண்பகம் அசோக்கின் சப்போர்ட்டுக்கு வந்தாள்.

“அக்கா.. என்னக்கா இது..?? மாமாவை ஏன் தேவை இல்லாம திட்டுற..?? கல்யாணம்ன்றது அவங்கவங்க இஷ்டப்படி நடக்கணும்.. எதுக்கு எல்லாருமா சேந்து அவரை கம்பல் பண்றீங்க..??”

“அடிப்போடி அறிவு கெட்ட சிறுக்கி.. இவன் அடிக்கிற கூத்துலாம் உனக்கு ஒரு மண்ணும் தெரியாது.. நீ கொஞ்ச நேரம் வாயை மூடிக்கிட்டு கம்முனு இரு..!!” என்று தங்கையிடம் எகிறினாள் செல்வி. அசோக் இப்போது செண்பகத்திடம் திரும்பி சொன்னான்.

“விடு செம்பு.. இதுகளுக்குலாம் ஒன்னும் புரியாது..!! சாப்பிட்டல நீ.. கெளம்பு.. ஆபீசுக்கு லேட்டாயிடுச்சு.. நான் ட்ரஸ் சேன்ஜ் பண்ணிட்டு வந்துடுறேன்..!!” சொல்லிவிட்டு அசோக் தனது அறையை நோக்கி நடக்க, ராஜேஷ் இப்போது கடுப்பாகி கத்தினான்.

“டேய்.. இப்படி எந்த முடிவும் சொல்லாம போனா.. என்னடா அர்த்தம்..??”

“என் முடிவை அப்போவே சொல்லிட்டேன்.. நீங்க பாத்த பொண்ணை என்னால கட்டிக்க முடியாது.. முடியாது.. முடியவே முடியாது..!! எனக்கு வரப்போறவளை நானே சூஸ் பண்ணிக்கிறேன்..!!”

என்று அசோக்கும் பதிலுக்கு கத்தினான். தனது அறைக்குள் நுழைந்து, கதவை ஆத்திரமாக அறைந்து சாத்தினான்.

அப்புறம் ஒரு ஐந்து நிமிடத்திலேயே.. ராஜேஷும் செல்வியும் ஆளுக்கொரு மூலையில் அமர்ந்து முறைத்துப் பார்த்துக்கொண்டிருக்க.. அசோக்கும் செண்பகமும் வீட்டில் இருந்து கிளம்பினார்கள். செண்பகம் பின்னால் ஏறிக்கொள்ள, அசோக் மனதில் இருந்த கோபத்தை கிக்கரிடம் காட்டினான். உதைக்கப்பட்ட வேகத்திலேயே பைக் சீறிப்பாய ஆரம்பித்தது. செண்பகம் மிரண்டு போய் அசோக்கின் தோளை இறுக்கமாக பற்றிக்கொண்டாள்.

வீட்டில் நடந்த ரகளை பற்றியே எண்ணிக்கொண்டு கொஞ்ச நேரம் பைக்கை விரட்டிய அசோக்கிற்கு, அப்புறம் மெல்ல ப்ரியாவின் ஞாபகம் வந்தது. உடனே மனதில் ஒரு இதமான உணர்வு பரவியது. ‘எதற்காக கால் செய்தாள்..?? என்றும் இல்லாத அதிசயமாய் இன்று காலையிலேயே..?? அதுவும் ஹஸ்கியான அந்த ஹலோவிலேயே என்ன ஒரு ரொமாண்டிக் ஃபீல்..?? ச்சே.. வீட்ல இருக்குற ரெண்டு சனியன்களும் சேந்து எல்லாத்தையும் கெடுத்துடுச்சுங்க..!!’

அசோக் அந்த மாதிரி குழம்பிக்கொண்டே பைக்கை விரட்டிய அதே நேரம்.. கம்பனி பஸ்ஸின் ஜன்னலோரமாய் அமர்ந்திருந்த ப்ரியா.. ஆபீசுக்கு சென்றதும் அசோக்கிடம் அவள் பேசப்போகிற காதல் மொழிகளை.. இப்போதே மனதுக்குள் ஒத்திகை பார்த்துக் கொண்டாள்.. வெட்கப்பட்டு தனக்குத்தானே சிரித்துக்கொண்டாள்..!!

அத்தியாயம் 18

காதல் வயப்படுதல் யாருக்கும் எளிதுதான்..!! ‘எனக்கு சொந்தமான உயிர்’ என்கிற மாதிரியான உணர்வு கிளம்புகிறார்போல.. எதிர்பாலர் ஒருவரை கண்டுவிட்டால்.. உள்ளம் காதலிக்க ஆரம்பித்து விடுகிறது..!! இனி மீதம் உள்ள வாழ்க்கையை இவருடன் கழித்தால்.. இன்பத்தில் தினம் திளைக்கலாமே என்று கனவு காண ஆரம்பித்து விடுகிறது..!! அவ்வாறு கனவு காணுதலை போல.. அந்த காதலை உரைத்தல் அவ்வளவு எளிதல்ல..!! மனதில் உள்ள காதலை உரியவரிடம் உரைக்கவே.. ஒரு முரட்டு தைரியமோ.. அல்லது ஒரு அசட்டு தைரியமோ வேண்டும்..!!

காதலை சொல்லும் தைரியம் மட்டுமே அந்த காதலின் வெற்றிக்கு போதாது.. அதை சொல்லுகிற விதமும் மிக மிக முக்கியம்..!! முறைப்படி உரைக்க தவறிய காதலர்களால்.. முறிந்து போன காதல்களும் நிறைய உண்டு..!!

தனது காதலை அசோக்கிடம் சொல்லிவிடவேண்டும் என்ற தைரியம் ப்ரியாவுக்கு வந்திருந்தது.. அதை சொல்கிற விதம் பற்றிதான் இப்போது அவளது கவலை இருந்தது..!! ஆபீசுக்கு வந்து அசோக்கிற்காக காத்திருந்தவள்.. கைப்பை திறந்து கண்ணாடி எடுத்து.. அதில் தனது முகத்தை அடிக்கடி பார்த்துக் கொண்டாள்.. நெற்றியில் வந்து விழுந்திருந்த ஒற்றை கூந்தல் கற்றையை ஓரமாக ஒதுக்கி விட்டாள்..!! உபயோகிக்கப் போகிற வார்த்தைகளை சற்றே உற்று ஆராய்ந்தாள்.. ‘மனசுன்னு சொல்லலாமா.. இதயம்னு சொல்லலாமா..?? எது எஃபக்டிவா இருக்கும்..??’

இது மட்டுமில்லாமல்.. தான் சொல்லப்போகும் செய்தி கேட்டு அசோக் எந்த மாதிரி எதிர்வினை புரிவானோ என்கிற பயமும் அவளுக்கு இருந்தது..!! ‘அவனுக்கும் எனக்கும் ஆறு வருட அறிமுகமாய் இருக்கலாம்.. சண்டையிட்டிருந்தாலும் கூட ‘சாப்பிட்டியா..??’ என்று கேட்கிற கனிவை என் மீது அவன் காட்டியிருக்கலாம்.. எங்கள் குடும்பத்தினர் இப்போது எங்கள் இருவரையும் இணைத்துவைக்க எடுத்திருக்கும் முடிவறிந்து ஆச்சரியமுறலாம்..!! ஆனால்.. அதற்காகவெல்லாம் அவன் என் காதலை ஏற்றுக் கொள்ளவேண்டும் என்று அவசியம் இல்லையே.. அவனுக்கும் கொஞ்சமாவது அந்த எண்ணம் இருக்க வேண்டுமே.. தோழியாக பார்த்தவளை காதலியாக பார்க்க முடியாது என்று அவன் சொல்லிவிட்டால்..??’

இந்த மாதிரி இதயத்தில் ஒரு படபடப்புடனே ப்ரியா அசோக்கிற்காக காத்திருந்தாள்..!! தனது கண்ணாடி அறைக்குள் இருந்தவாறே.. அவன் வந்துவிட்டானா என்று அவ்வப்போது தலையை நீட்டி பார்த்துக் கொண்டிருந்தாள்..!!

ப்ரியாவின் இதயம் படபடப்பில் சிக்கியிருந்தது என்றால்.. அசோக்கின் இதயம் எதிர்பார்ப்பில் மூழ்கி கிடந்தது..!! ‘எதை சொல்ல என்னை காலையிலேயே கைபேசியில் அழைத்தாள்..?? எப்போதும் போல் இல்லாமல்.. அவளுடைய குரலில் இன்று ஒரு மாற்றம் தெரிந்ததே.. என்ன அது..??’ அந்த மாதிரி ஒரு சிந்தனையுடனே அசோக் ஆபீஸ் வந்து சேர்ந்தான்..!! அவன் ஆத்திரத்தில் இருக்கிறான் என்று எண்ணிக்கொண்ட செண்பகமும் அதிகம் பேசி அவனை தொந்தரவு செய்யவில்லை. அவள் அவ்வப்போது கேட்ட கேள்விகளுக்கும் அசோக் அசிரத்தையாகவே பதில் சொல்லிக்கொண்டு வந்தான்..!!

தாங்கள் பணி செய்யும் தளத்திற்குள் நுழைந்த அசோக்.. உடன் வருகிற செண்பகத்தை கண்டுகொள்ளாமலே.. அவசரமாக நடந்து தனது இடம் சென்று அமர்ந்தான்..!! கணினி திறந்தான்.. கம்யூனிகேட்டர் நுழைந்து முதல் வேலையாக ப்ரியாவிற்கு ‘ஹாய் ப்ரியா..’ என்று பிங்கினான்..!! அவளுடைய பதிலுக்காக காத்திருந்தான்.. உடனே பதில் வந்தது..!!

a0

“ஹாய் அசோக்..!!”

பதில் வந்தது கம்யூனிகேட்டரில் இருந்து அல்ல.. அவன் காதுக்கருகே இருந்து..!! அவன் வந்ததை உள்ளிருந்தே கவனித்திருந்த ப்ரியா, தனது அறையை விட்டு எழுந்து வந்திருந்தாள்.. இவன் கம்யூனிகேடரில் ஹாய் சொல்ல.. அவள் இவனுக்கு பின்பக்கமாக அந்து ஹாய் சொன்னாள்..!! எழுத்தில் பதில் வரும் என்று எண்ணி.. திரையை வெறித்திருந்த அசோக்.. குரலில் பதில் வந்ததும்.. கூடவே ப்ரியாவின் மேனி நறுமணம் கலந்து வந்ததும்.. படக்கென தலையை திருப்பி பார்த்தான்..!!

திரும்பி பார்த்தவன் ஒருகணம் திகைத்துப் போனான்.. வியப்பில் அவனது விழிகள் விரிந்து கொண்டன..!! காதலில் மனம் விழுந்து விட்டால், காதலி முகம் கண்களுக்கு அழகாய் தெரிவது இயல்புதான்..!! ஆனால்.. அதையும் தாண்டி ப்ரியா இன்று தேவதை போல ஜொலிப்பதை அவனால் உணர முடிந்தது..!! அவளுடைய அசத்துகிற அழகு அவனது கண்களை வன்மையாக தாக்க.. அவன் தனது சுவாசத்தை இழுத்து பிடித்துக்கொள்ள வேண்டி இருந்தது..!!

“வா..வ்..!!” என்று திணறலாக வாய் பிளந்தான்.

“என்ன வாவ்..??” ப்ரியா குரலில் குறும்புடன் கண்களை சிமிட்டியவாறே கேட்டாள்.

“யூ.. யூ லுக் ஆவ்சம் டுடே..!!!”

“நெஜமா..???”

“சத்தியமா..!! என்னன்னு சொல்லத்தெரியல.. ஆ..ஆனா.. ரொம்ம்ம்ப அழகா இருக்குற இன்னைக்கு..!!”

“ஹ்ம்ம்.. தேங்க்ஸ்..!!”

“அப்புறம்.. இன்னைக்கு என்ன ஸ்பெஷல்..??”

“ஒ..ஒன்னும் இல்லையே.. ஏன் கேக்குற..??”

“இல்ல.. புதுசா.. புடவைலாம் கட்டிக்கிட்டு ஆபீஸ் வந்திருக்கியே.. அதான் ஏதாவது விஷேஷமான்னு..”

“அதெல்லாம் ஒண்ணுல்ல.. சும்மாதான்..!!”

“ஹ்ம்ம்.. காலைலேயே கால் பண்ணிருந்த போல..??” அசோக் இயல்பாக கேட்க, ப்ரியா இப்போது சற்றே தடுமாற்றமாய் சொன்னாள்.

“ஆ..ஆமாம்.. அதுக்குத்தான் இப்போ வந்தேன்..!! உ..உன்கிட்ட கொஞ்சம் பேசணும் அசோக்..!!”

“ம்ம்.. பேசு..!!” அசோக்கின் குறும்பான குரலில் சொன்னதற்கு, ப்ரியா உதடுகள் பிரித்து புன்னகைத்தாள்.

“ஹாஹா.. இங்க இல்ல..!!”

“அப்புறம்..??”

“தனியா..!!”

ப்ரியா அந்த ‘தனியா..!!’விற்காக, குரலில் ஒரு கிறக்கத்தையும், கண்களில் ஒருவித மின்னலையும் தனியாக சேர்த்துக்கொண்டு சொல்ல.. அசோக்கின் இதயம் படக்கென்று சொடுக்கிவிடப்பட்டது..!! அவளுடைய முகத்தையே வியப்பாக பார்த்தான். ப்ரியா இப்போது அசோக்கின் புஜத்தில் மெலிதாக இரண்டு தட்டு தட்டியவாறே, ‘வா..’ என்றுவிட்டு முன்னால் நடந்தாள். அவள் அவ்வாறு அங்கிருந்து நகர்ந்த பின்னர்தான், அசோக் அதுவரை இழுத்துப் பிடித்து வைத்திருந்த சுவாசத்தை சுதந்திரமாக வெளியிட்டான். இமைகளை ஒருமுறை நிம்மதியாக மூடி திறந்தான். பிறகு சேரில் இருந்து எழுந்து அவசரமாய் அவளை பின்தொடர்ந்தான்.

ப்ரியாவின் அன்றைய மயக்கும் தோற்றத்திலும், அவள் பேச்சிலிருந்த ஒருவித போதையிலும், அசோக்கின் மூளை சற்றே குழம்பி போயிருந்தது. அவனுக்கு முன்னால் நளினமாக அசைந்து அசைந்து செல்கிற ப்ரியாவின் பின்னழகை தவறான எண்ணத்துடன் வெறிக்க தூண்டியது. ஒரு கணம் அந்த அழகை வாய் பிளந்து ரசித்தவன், அடுத்தகணமே தலையை உதறிக்கொண்டு எச்சில் கூட்டி விழுங்கினான்.

அவளுடைய பின்னால் சென்று கொண்டிருக்கும்போதே, ‘எதற்காக இப்போது தனியாக அழைத்து போகிறாள்..?’ என்ற கேள்வியும் அவன் மனதில் ஓடிக்கொண்டேதான் இருந்தது. ‘இன்று இவளுடைய பார்வையும் பேச்சுமே சரி இல்லையே.. ஒருவேளை.. தனியாக கூட்டிச்சென்று என்னை காதலிக்கிறேன் என்று சொல்லப் போகிறாளோ..??’ அசோக்கின் மனதில் அப்படி ஒரு எண்ணம் தோன்றியதற்கே, அவனுக்கு உடலும் உள்ளமும் ஜில்லென்று குளிர்ந்து போனது. அப்புறம் உடனே, ‘ஹ்ம்ம்.. ரொம்பத்தான் கற்பனை உனக்கு..!!’ என்று தன்னைத்தானே கேலி செய்து கொண்டான். பிறகு ‘கற்பனையாக இருந்தால் என்ன.. அப்படி ஒரு நினைவே எவ்வளவு சந்தோஷமாக இருக்கிறது..!!’ என்றும் தனியாக நினைத்துக்கொண்டு மனதுக்குள் சிரித்தான்.

ஆறு பேர் அமரக்கூடிய வகையில் ஒரு டேபிள்.. அதன் மீது கான்ஃபரன்சில் யாரையும் அழைக்கும் வசதிக்காக ஒரு டெலிஃபோன்.. சுவற்றில் அறையப்பட்டு, டெக்னிக்கல் கிறுக்கல்களுடன் காணப்பட்ட ஒரு வொயிட் போர்ட்.. இவை மட்டுமே அடங்கிய ஒரு சின்ன மீட்டிங் ரூம் அது..!! டீமில் இருக்கும் மெம்பர்கள் அனைவரும் ஒன்றாக கூடி பேசவேண்டும் என்று எண்ணினால் உபயோகப்படுத்திக் கொள்கிற ரூம்..!! அந்த ரூமைத்தான் தனது காதலை சொல்ல தேர்ந்தெடுத்திருந்தாள் ப்ரியா..!!

அசோக் உள்ளே நுழைவதற்காக அறையின் கண்ணாடி கதவை திறந்து காத்திருந்தவள், அவன் நுழைந்ததும் அந்த கதவை மென்மையாக சாத்தி மூடினாள். கருவிழிகளை ஒரு ஓரமாக தள்ளி அசோக்கின் முகத்தை ஏக்கமாக ஒரு பார்வை பார்த்தாள். ‘என் காதல் மனதை என்ன செய்ய காத்திருக்கிறான் இவன்..??’ என்று அவள் மனதில் உச்சபட்சமாய் எழுந்த படபடப்பை அடக்கிக்கொண்டு,

“உக்காரு..!!” என்றாள் புன்னகையுடன்.

இன்னும் குழப்பம் நீங்காதவனாகவே அசோக் மெல்ல அமர்ந்துகொண்டான். ப்ரியா நடந்து சென்று அவனுக்கு எதிரே கிடந்த சேரில் அமர்ந்தாள். மீண்டும் இவன் முகத்தை ஏறிட்டு ஒரு ஏக்கப்பார்வையை வீசினாள். அர்த்தம் புரிந்து கொள்ள இயலாத அந்த மயக்கும் பார்வை அசோக்கை என்னவோ செய்தது. அந்த பார்வையை தாங்க இயலாதவனாய், அங்கு நிலவிய அமைதியை குலைத்தவாறு அசோக் கேட்டான்

“சொ..சொல்லு ப்ரியா.. அப்படி என்ன எங்கிட்ட தனியா பேசணும்..??”

“அ..அது.. அது இருக்கட்டும்.. காலைல நான் உனக்கு கால் பண்றப்போ என்ன.. உங்க வீட்ல அப்படி ஒரு சவுண்டு..?? ஏதாவது சண்டையா..??” ப்ரியா உடனே பேச்சை ஆரம்பிக்க தயங்கியவளாய் இலகுவான குரலில் கேட்டாள்.

“ப்ச்.. அதுவா..??? அது எங்க வீட்டுல எப்போவும் நடக்குறதுதான்..!! சப்பை மேட்டருக்காகலாம் சண்டை போட்டுப்போம்.. சண்டை போடுறது எங்களுக்கு ஒரு ஹாபி மாதிரி..!!”

“ஹாஹா..!!”

“ஹ்ம்ம்.. என் அண்ணனும் அண்ணியும் இருக்காங்களே.. சுத்தமா என் மனசை புரிஞ்சுக்கவே மாட்டாங்க ப்ரியா..!! எனக்கு எதெதுலாம் புடிக்காதோ.. அதெல்லாம் தெளிவா பண்ணுவாங்க.. நானும் புடிச்சு கன்னாபின்னான்னு திட்டி விட்ருவேன்..!!”

“ஹாஹா.. ஹ்ம்ம்.. இன்னைக்கு என்ன பிரச்னை..??”

“ப்ச்.. அது ஒரு பெரிய கதை..!! நான் ஏதோ கோவத்துல ஒன்னு சொல்லப்போக.. அதை அவங்க சீரியஸா எடுத்துக்கிட்டு.. என்னன்னவோ பண்ணி… ச்ச.. செம டென்ஷன் ஆயிடுச்சு எனக்கு..!!”

“கோவத்துல அப்படி என்ன சொன்ன..??” ப்ரியா ஏதோ ஆர்வம் பிறந்தவளாய் கேட்க, அசோக் பொறுமை இழந்தவனாய்

“ஹேய்.. அதுவா இப்போ முக்கியம்..?? நீ ஏதோ பேசனுன்னு சொன்னியே.. அதை மொதல்ல சொல்லு..!!” என்று விஷயத்திற்கு வந்தான்.

“அது.. அ..அது..” ப்ரியா எப்படி ஆரம்பிப்பது என்று தயங்கினாள்.

“ஹ்ம்ம்.. சொல்லு..!!”

அசோக் இப்போது இன்னும் ஆர்வமானான். ப்ரியா மேலும் சில வினாடிகள் தயங்கிவிட்டு அப்புறம் ஒரு முடிவுக்கு வந்தவளாய்.. ஒரு பெருமூச்சை வெளிப்படுத்திவிட்டு.. நாவால் உதட்டை ஈரமாக்கிவிட்டு.. ஆரம்பித்தாள்..!!

“எ..என்னைப் பத்தி நீ என்ன நெனைக்கிற அசோக்..??”

“என்ன நெனைக்கிறேன்னா..?? புரியலை..!!”

“என் மேல உனக்கு எதுவும் கோவமா..??” ப்ரியாவின் கேள்வி அசோக்கிற்கு ஒரு புன்னகையை வரவழைத்தது.

“ஏன் கேக்குற..??” என்றான் லேசான குறும்புடன்.

ப்ரியா அவனுடைய கேள்விக்கு பதில் சொல்ல வாயெடுக்கும்போதுதான், அசோக்கின் பேன்ட் பாக்கெட்டில் இருந்த செல்போன் ‘கிர்ர்ர்ர்… கிர்ர்ர்ர்…’ என்று வைப்ரேட் ஆனது. அவன் அதை உடனே வெளியே எடுத்தான். டிஸ்ப்ளே பார்த்தவன், அப்புறம் பட்டன் அழுத்தி பிஸி டோன் அனுப்பிவிட்டு, ஃபோனை சட்டை பாக்கெட்டில் போட்டுக்கொண்டான். ப்ரியாவை ஏறிட்டு கேட்டான்.

“ம்ம்.. சொல்லு ப்ரியா..!! எதுக்கு கோவமான்னு கேக்குற..??”

“இல்ல அசோக்.. நாம முன்னாடி மாதிரி இல்ல.. இப்போலாம் அடிக்கடி சண்டை போட்டுக்குறோம்.. அதான்..!!”

“அ..அதனால..??”

அசோக் கேட்டுக்கொண்டிருக்கும்போதே அவனுடைய செல்போன் மீண்டும் பதறியது. அவன் மறுபடியும் அதை எடுத்து பார்த்தான். மீண்டும் அதே நம்பர். அசோக் இப்போது ‘ப்ச்..’ என்று சலிப்பை உதிர்த்தான். திரும்பவும் காலை கட் செய்ய அவன் முனைய..

“யார் ஃபோன்ல..??” ப்ரியா கேட்டாள்.

“தெரியல ப்ரியா.. ஏதோ அன்னோன் நம்பரு..!!”

“எடுத்து பேச வேண்டியதுதான..??”

“பரவால விடு.. அப்புறம் பேசிக்கலாம்.. நீ சொல்லு..!!”

“ப்ச்.. சொன்னா கேளு.. அதை மொதல்ல அட்டன்ட் பண்ணி பேசு.. இல்லனா.. திரும்ப திரும்ப கால் பண்ணி டிஸ்டர்ப் பண்ணிட்டு இருப்பாங்க..!!”

ப்ரியாவும் சலிப்பாகவே சொன்னாள். அசோக் ஓரிரு வினாடிகள் தயங்கினான். அப்புறம் கால் பிக்கப் செய்து காதில் வைத்துக் கொண்டான்.

“ஹலோ..!!” என்றான் சற்றே எரிச்சலுடன்.

“ஹலோ.. அசோக் தம்பிங்களா..??” என்றது அடுத்த முனை.

- தொடரும்

மேலும் செக்ஸ் கதைகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் :

தமிழ்காமவெறி தளம்

ஐ ஹேட் யூ, பட் – பகுதி 30

$
0
0

“ஆமாம்..!! நீங்..” அசோக் முடிப்பதற்கு முன்பே

“ஹலோ தம்பி.. எப்படி இருக்கீங்க.. நல்லா இருக்கீங்களா..??” அடுத்த முனை அவசரப்பட்டது.

“நான் நல்லாருக்குறது இருக்கட்டும் ஸார்.. மொதல்ல நீங்க யார்னு சொல்லுங்க..!!”

மேலும் செக்ஸ் கதைகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் :

தமிழ்காமவெறி தளம்

“ஹாஹா.. என்னை ஞாபகம் இல்லையா தம்பி..??”

“ப்ச்.. ஃபோன்ல உங்க வாய்ஸ் மட்டுந்தான் ஸார் வரும்.. மூஞ்சிலாம் வராது..!!”

“ஹாஹா.. நல்லா தமாஷா பேசுறீங்க..!! ரெண்டு வாரம் முன்னாடி நாம ரெண்டு பேரும் சந்திச்சுக்கிட்டோம்.. இப்போ ஞாபகம் வருதா..??”

“ச..சந்திச்சுக்கிட்டோமா..?? இ..இல்லைங்க.. எ..எனக்கு சரியா..” இப்போது அசோக் குழப்பத்தில் தடுமாற,

“ந.. ஞா..ப்ப்.. பா..க்க்…” அடுத்த முனையில் வாய்ஸ் ப்ரேக் ஆனது.

“ஸார்.. உங்க வாய்ஸ் ப்ரேக் ஆகுது.. !!”

“நா.. பா..க்க்… ஞா..ப்ப்.”

“ஹலோ.. ஹலோ.. இங்க கொஞ்சம் சிக்னல் வீக்கா இருக்கு.. ஒரு நிமிஷம் இருங்க.. நான் வெளில வர்றேன்..!!”

அசோக் சேரில் இருந்து எழுந்து கொண்டான். வெளியில் சென்று பேசிவிட்டு வருவதாக ப்ரியாவிடம் சைகை செய்தான். அவளும் ‘போய் பேசி விட்டு வா..!!’ என்று அனுமதி அளிப்பது போல இமைகளை மெல்ல மூடி திறந்தாள். அசோக் அந்த அறையை விட்டு வெளியே வந்தான். அந்த அறையை ஒட்டியே இருந்த எக்ஸிட் கதவுக்கு ஐடி கார்டை காட்ட, அது பட்டென்று திறந்து கொண்டது. வெளிப்பட்டு பால்கனிக்குள் பிரவேசித்தான்.

“ஹ்ம்ம்.. இப்போ சொல்லுங்க ஸார்..!!”

“என் பேர் வரதராஜன் தம்பி.. ரெண்டு வாரம் முன்னாடி நாம சந்திச்சுக்கிட்டோம்.. நான் தவறவிட்ட தாலிச்சரடை திரும்ப எங்கிட்ட கொண்டு வந்து குடுத்தீங்களே.. இப்போ ஞாபகம் வருதா..??” அந்தப்பக்கம் வரதராஜன் சொல்ல, இங்கே அசோக்கிற்கோ பயங்கர ஆச்சரியம்.

“அட.. நீங்களா ஸார்..??? நான் யாரோன்னு நெனச்சு.. ஹாஹா..!! ஹ்ம்ம்.. நல்லா ஞாபகம் இருக்கு.. சொல்லுங்க ஸார்.. எப்படி இருக்கீங்க..??”

“நான் நல்லாருக்கேன் தம்பி.. நீங்க எப்படி இருக்கீங்க..??”

“நானும் நல்லா இருக்கேன் ஸார்..!! வாட் எ சர்ப்ரைஸ் திஸ் இஸ்..?? நீங்க எனக்கு கால் பண்ணுவீங்கன்னு நான் கொஞ்சம் கூட எதிர்பாக்கல..!! அதுசரி.. என் நம்பர் எப்படி உங்களுக்கு கெடைச்சது..??”

“சொல்றேன் தம்பி.. அதுக்கு முன்னாடி உங்ககிட்ட இன்னொரு விஷயம் சொல்லணும்..!!”

“எ..என்ன..??”

“உ..உங்க அண்ணனும் அண்ணியும் உங்களுக்கு ஒரு பொண்ணு பாத்தாங்கல்ல..?? அ..அந்தப்பொண்ணு வேற யாரும் இல்ல தம்பி.. என் மகதான்..!!” வரதராஜன் தயங்கி தயங்கி சொல்ல, அசோக்கை ஒருவித ஆச்சரியமும், அதிர்ச்சியும் ஒரே நேரத்தில் தாக்கின.

“ஓ..!!”

“நேத்து உங்க அண்ணன் உங்களோட ஃபோட்டோ அனுப்பினதும்தான்.. நீங்கதான் பையன்னு எனக்கு தெரியவந்தது..!!”

வரதராஜன் சொல்லிமுடித்து அமைதியாக இருக்க, அசோக்கிற்கு இப்போது என்ன பேசுவதென்றே புரியவில்லை. இந்த மாதிரி ஒரு சூழ்நிலையை அவன் எதிர்பார்த்திரவே இல்லை. ஒருவித அவஸ்தை உணர்வுடன் தலையை சொறிந்தவன், அப்புறம் சற்றே வருத்தமான குரலில் சொன்னான்.

“ஸார்.. எனக்கு என்ன சொல்றதுன்னே புரியலை..!! நான் சும்மா வெளையாட்டுக்கு சொன்னதை.. என் அண்ணன் சீரியஸா எடுத்துக்கிட்டு.. எனக்கு பொண்ணு பாக்க ஆரம்பிச்சுட்டான்.. ஆனா நான்..”

“ம்ம்.. அண்ணன்ட்ட பேசினேன் தம்பி.. அவர் சொன்னாரு.. உங்களுக்கு இந்த கல்யாணத்துல விருப்பம் இல்லைன்னு..!! ஆனா.. எனக்கு அப்படியே விட்டுட மனசு இல்ல..!! நீங்க எனக்கு ஏற்கனவே அறிமுகம் ஆகி இருக்குறதால.. உங்ககிட்ட கொஞ்சம் பேசிப்பாக்கலாம்னு தோணுச்சு.. அதான் அண்ணன்கிட்ட உங்க நம்பர் வாங்கி..”

“எங்கிட்ட பேசுறதுக்கு என்ன ஸார் இருக்குது..??”

“இல்ல தம்பி.. நீங்கதான் பையன்னு தெரிஞ்சதும், நான் ரொம்ப சந்தோஷமா இருந்தேன்.. என் பொண்ணுக்கு ஒரு நல்ல வாழ்க்கை அமைய போகுதுன்னு ரொம்ப நிம்மதியா இருந்தது..!! ஆனா இப்போ..”

“ஹ்ம்ம்..!!”

“சொல்றேன்னு தப்பா எடுத்துக்காதீங்க தம்பி.. உங்க மனசுல ஏதாவது எதிர்பார்ப்பு இருந்தா.. தயங்காம எங்கிட்ட சொல்லுங்க..!! எனக்கு என் பொண்ணு வாழ்க்கைதான் ரொம்ப முக்கியம்..!!”

“ஹையோ.. என்ன ஸார் நீங்க..?? அப்படிலாம் எதுவும் இல்ல..!! இந்த பிரச்னையே வேற..!!”

“வேற என்ன தம்பி பிரச்னை..?? எங்கிட்ட சொல்லலாம்னா சொல்லுங்க..!!” வரதராஜன் தயங்காமல் கேட்டுவிட, அசோக்தான் சற்று தடுமாறினான். அப்புறம் தயங்கி தயங்கியே சொன்னான்.

“நா..நான்.. நான் வேற ஒரு பொண்ணை ரொம்ப நாளா லவ் பண்றேன் ஸார்.. அதான் பிரச்னை..!!”

“ஓ..!!” வரதராஜனின் குரலில் ஒருவித ஏமாற்றம் அப்பட்டமாக தெரிந்தது.

“டைம் எல்லாம் கரெக்டா செட் ஆறப்போ.. நானே வீட்ல சொல்லலாம்னு இருந்தேன்.. அதுக்குள்ளே அவங்க அவசரப்பட்டு.. பொண்ணு பாக்க ஆரம்பிச்சு.. அதான் இந்த தேவையில்லாத கன்ஃப்யூஷன்லாம்..!!”

“ஹ்ம்ம்.. புரியுது தம்பி.. இது நான் கொஞ்சம் எதிர்பார்த்ததுதான்..!!”

“எ..என்ன எதிர்பார்த்தீங்க..??”

“ஒருவேளை காதல் விவகாரமா இருக்குமோ.. அதான் கல்யாணம் வேணாம் சொல்றீங்களோன்னு..!!”

“ஹ்ம்ம்.. ஆமாம் சார்.. அதான் இந்தக் கல்யாணத்துல எனக்கு இஷ்டம் இல்லைன்னு சொன்னேன்..!! இந்த விஷயம் இன்னும் எங்க வீட்டுக்கு தெரியாது.. ப்ளீஸ் ஸார்.. நீங்க எதுவும் சொல்லிடாதீங்க..!!”

“இல்ல தம்பி.. நான் சொல்லல.. எனக்கெதுக்கு அந்த வேலை..!!”

“ஹ்ம்ம்… அப்புறம்.. நீ..நீங்க.. நீங்க எதுவும் கவலைப்படாதீங்க ஸார்.. உங்க பொண்ணுக்கு என்னை விட நல்ல மாப்ளையா கெடைப்பான்..!!” அசோக் அவருக்கு ஆறுதலாக சொன்னான்.

“ஹாஹா.. சரி தம்பி.. உங்க வாக்கு பலிக்கட்டும்..!!”

வரதராஜன் ஒரு மாதிரியான விரக்தி சிரிப்புடன் சொன்னார். அசோக் அதற்குமேல் என்ன பேசுவது என்று புரியாமல் அமைதியாக இருக்க, சில வினாடிகளில் வரதராஜனே ஆரம்பித்தார்.

“வீட்ல சீக்கிரம் சொல்லிடுங்க தம்பி.. லேட் பண்ணாதீங்க.. உங்களுக்கும் வயசு ஏறிக்கிட்டே போகுதுல..?? வீட்ல எல்லாரோட சம்மதத்தோடவும்.. அந்தப்பொண்ணு கூடவே உங்க கல்யாணம் நடக்கனும்னு.. நான் ஆண்டவனை வேண்டிக்கிறேன்..!!”

“தேங்க்ஸ் ஸார்.. சீக்கிரமே சொல்லிடுறேன்..!! கல்யாணத்துக்கு உங்கள கண்டிப்பா கூப்பிடுவேன்.. நீங்களும் மறக்காம வந்துடனும்..!!” அவர் மகளுடைய திருமணத்திற்கு அவருக்கே அழைப்பு விடுத்தான் அசோக்.

“ஹாஹா.. கண்டிப்பா தம்பி..!! நானும் என் பொண்ணு கல்யாணப் பத்திரிகை உங்களுக்கு அனுப்புறேன்.. நீங்களும் கட்டாயம் கலந்துக்கனும்..!!” வரதராஜனும் நடக்கப்போவது புரியாமல் பேசினார்.

“ஓகே ஸார்.. கண்டிப்பா வர்றேன்..!!”

“ஹ்ம்ம்.. பொண்ணு கொஞ்சம் குண்டா இருந்தாலும்.. நல்ல முக லட்சணம்தான் தம்பி.. உங்களுக்கு நல்ல பொருத்தமாதான் இருந்தது..!!” வரதராஜன் திடீரென சொன்னார்.

“யா..யாரை சொல்றீங்க..??” அசோக் குழப்பமாக கேட்டான்.

“அதான் தம்பி.. அன்னைக்கு உங்ககூட வந்த பொண்ணு.. அந்தப் பொண்ணைத்தான நீங்க விரும்புறீங்க..??”

வரதாராஜன் செண்பகத்தை மனதில் நினைத்துக்கொண்டு அந்தக்கேள்வியை கேட்டுக்கொண்டிருக்கும்போதே, அந்தக் கேள்வியை அசோக் சரியாக புரிந்துகொள்ள முடியாத வகையில், அவனுக்கு பின்பக்கமாக இருந்து வந்த அந்த ‘லொட்.. லொட்..’ சப்தம் அவனுடைய கவனத்தை சிதற செய்தது. அசோக் திரும்பி பார்த்தான். கண்ணாடி தடுப்புக்கு அந்தப்பக்கமாக ப்ரியா நின்றுகொண்டிருந்தாள். ‘என்னாச்சு..?? சீக்கிரம் வா..!!’ என்பது போல பொறுமையற்றவளாய் இவனைப்பார்த்து சைகை செய்தாள். இவனும் ‘இரு.. இரு.. இதோ வந்துடறேன்..’ என்பது மாதிரி சைகையாலே அவளுக்கு பதில் சொல்லிவிட்டு, சற்றே பரபரப்பு தொற்றிக்கொண்டவனாய் மீண்டும் ஃபோனுக்கு காது கொடுத்தான்.

“என்ன தம்பி.. நான் சொன்னது கரெக்ட்தான..??” வரதராஜன் கேட்க,

“ஆங்.. கரெக்ட்தான் ஸார்..!!” அசோக் அவனையும் அறியாமல் அவனுக்கே ஆப்பு வைத்துக் கொண்டான்.

“ஹாஹா.. கரெக்டா கண்டுபுடிச்சிட்டேன் பாத்தீங்களா..??” வரதராஜன் பேசியதை கவனிக்காமல், அசோக் இப்போது அவசரமாக..

“ஸார்.. எனக்கு இங்க கொஞ்சம் முக்கியமான வேலை இருக்கு.. நாம இன்னொரு நாளைக்கு பொறுமையா பேசலாமா.. ப்ளீஸ்..??” என்றான்.

“தம்பி தம்பி.. ஒரே ஒரு நிமிஷம்.. உங்ககிட்ட இன்னொரு முக்கியமான விஷயம் சொல்லணும்.. என் பொண்ணு கூட உங்க கம்பனிலதான்..” வரதராஜன் ஆரம்பிக்க, அசோக் அவரை இடைமறித்தான்.

“ஸார்.. ப்ளீஸ் ஸார்.. என் பாஸ் என்னை இங்க கூப்பிட்டுட்டே இருக்குறா.. அவ சரியான லூஸு ஸார்.. என்னைக்காவதுதான் அவளுக்கு மூளைலாம் ஒழுங்கா வேலை செய்யும்..!! இன்னைக்குத்தான் கொஞ்சம் புத்தி சுவாதீனத்தோட பேசுறா.. இப்போ நான் போகலைன்னா.. அப்புறம் வேதாளம் மறுபடியும் முருங்கை மரம் ஏறுனாலும் ஏறிரும்..!! சரியா.. நாம இன்னொரு நாள் பேசலாம்.. பை..!!”

“ஹாஹா.. சரி தம்பி.. இன்னொரு நாள் பேசலாம்..!!”

அசோக் காலை கட் செய்தான். ஐடி கார்ட் ஸ்வைப் செய்து மீண்டும் உள்ளே சென்றான். ப்ரியா மீட்டிங் அறைக்குள் சென்று அமர்ந்திருந்தாள். அசோக்கும் அந்த அறைக்குள் நுழைந்தான். அவள் முகத்தில் எரிச்சல் கொப்பளிக்கும் என்று எண்ணியிருந்த அசோக் ஏமாந்து போனான். ப்ரியா இன்னும் அதே முக மலர்ச்சியுடனும், இதழ் புன்னகையுடனுமே அமர்ந்திருந்தாள். இவனை பார்த்ததும்..

“யார் ஃபோன்ல..??”

“அது ஒரு பெருசு.. செம ப்ளேட் போட்டுருச்சு..!!” சொல்லிக்கொண்டே அசோக் அவளுக்கு எதிரே அமர்ந்தான்.

“ஹ்ம்ம்.. ராங் நம்பர் மாதிரி ஆரம்பிச்ச..?? அப்புறம் பாத்தா சிரிச்சு சிரிச்சு ரொம்ப நேரம் பேசிட்டு இருக்குற..??”

“ஹாஹா.. ராங் நம்பர் இல்ல.. தெரிஞ்சவர்தான்..!! சரி அவரை விடு.. நம்ம மேட்டருக்கு வா..!! ஹ்ம்ம்ம்… எங்க விட்டோம்..?? ஆங்.. எதுக்கு உன் மேல எனக்கு கோவமான்னு கேட்ட..??”

“நான் கேட்டதுக்கு காரணம் இருக்கு அசோக்.. அதை அப்புறம் சொல்றேன்..!!”

“ஏன்.. இப்போ சொன்னா என்ன..??”

“ப்ச்.. அப்புறம் சொல்றேன்றன்ல.. கேட்டதுக்கு மட்டும் பதில் சொல்லு..!!”

ப்ரியா சொல்லவும், அசோக் சில வினாடிகள் அவளுடைய முகத்தையே அமைதியாக பார்த்தான். மெலிதாக புன்னகைத்தான். அப்புறம் நெற்றியை சுருக்கி யோசிப்பது மாதிரி பாவ்லா செய்துகொண்டே ஆரம்பித்தான்.

“ஹ்ம்ம்.. என்ன சொல்றது..?? கோவம் கொஞ்சம் இருக்கு.. ஆனா..”

அசோக் சொல்லிக்கொண்டிருக்கும்போதே அவர்கள் பேச்சுக்கு மீண்டும் ஒரு இடையூறு..!! இந்தமுறை இவர்கள் அமர்ந்திருந்த அறைக்கதவு ‘லொட்.. லொட்..’ என்று தட்டப்பட்டது. இருவரும் தலையை திருப்பி பார்த்தார்கள். வெளியே கவிதா நின்றுகொண்டிருந்தாள். ப்ரியா ‘உள்ள வா..’ என்பது போல சைகை செய்ய, அவள் கைப்பிடி திருகி அந்த அறைக்குள் நுழைந்தாள்.

“என்ன கவிதா..??” ப்ரியா கேட்டாள்.

“உன் மொபைல் அங்க அடிச்சுட்டே கெடக்குது ப்ரியா.. அதான் சொல்லலாம்னு வந்தேன்..!!”

“ஓ.. மொபைலை ரூம்லேயே விட்டு வந்துட்டனா.. ச்ச..!!” ப்ரியா தலையில் தட்டிக்கொண்டாள். அப்புறம் அசோக்கிடம் திரும்பி,

“ஹேய்.. வெயிட் பண்ணு அசோக்.. இதோ வந்துடறேன்..!!” என்றுவிட்டு எழுந்து வெளியே சென்றாள்.

ஓட்டமும் நடையுமாக சென்று தனது அறைக்குள் நுழைந்தாள். டேபிள் மீது அலறிக்கொண்டிருந்த செல்போனை அவசரமாய் எடுத்து கால் பிக்கப் செய்தாள். காதில் வைத்துக் கொண்டதுமே,

“சொல்லுங்க டாடி..!!” என்றாள்.

“என்னம்மா.. வேலையா இருந்தியா..??” அடுத்த முனையில் வரதராஜனின் குரல் சோர்வாக ஒலித்தது.

“கொஞ்சம் வேலைதான்.. பரவால சொல்லுங்க..!! என்ன.. திடீர்னு கால் பண்ணிருக்கீங்க..??”

“அ..அது.. அது வந்து..” அவர் தயங்கினார்.

“ஹ்ம்ம்.. சொல்லுங்க டாடி..!!”

“எ..எப்படி அதை சொல்றதுன்னு எனக்கு தெரியலைம்மா.. சொல்றதுக்கே ரொம்ப கஷ்டமா இருக்கு..!!” அப்பாவின் குரலில் ஒரு அதீத கவலை தொனிக்க,

“என்னாச்சு டாடி..??” ப்ரியா இப்போது சற்றே கலவரமாய் கேட்டாள்.

“நே..நேத்து சொல்லிட்டு இருந்தன்ல.. அ..அந்த எடம் நமக்கு அமையலம்மா..!!” வரதராஜன் தயங்கி தயங்கி சொன்னார்.

“எ..என்ன டாடி சொல்றீங்க..??”

“ஆமாம்மா.. பையன் வீட்டுக்கு நேராவே போயிட்டு வர்றேன்னு காலைல சொல்லிருந்தன்ல..?? கொஞ்ச நேரம் முன்னாடி.. வரலாமான்னு கேக்குறதுக்காக பையனோட அண்ணனுக்கு கால் பண்ணினேன்.. அவரு ‘வரவேணாம்.. இந்த சம்பந்தம் அமைய நாங்க குடுத்து வைக்கலை..’ன்னு சொல்லிட்டாரு..!!”

“ஏ..ஏன் அப்டி சொன்னாரு..??” எகிறுகிற இதயத்துடிப்புடன் ப்ரியா கேட்டாள்.

“என் தம்பிக்கு உங்க பொண்ணை புடிக்கலைன்னு சொன்னாரு..!!” வரதராஜன் சொல்ல, ப்ரியாவின் இதயத்தை இப்போது பக்கென்று ஒரு பயம் வந்து கவ்வியது.

“அ..அவன்.. அவன் என் ஃபோட்டோ பாத்தானாமா..??” வார்த்தைகள் அவளிடம் இருந்து தடுமாற்றமாய் வெளிப்பட்டன.

“அது தெரியலைம்மா.. ஆனா.. அவர் ஏன் உன்னை புடிக்கலைன்னு சொன்னாருன்னு.. எனக்கு தெரிஞ்சு போச்சு..!!”

“ஏ..ஏன்..??” ப்ரியா குழப்பமும் கவலையுமாய் கேட்டாள்.

“அந்த தம்பி வேற ஒரு பொண்ணை விரும்புதும்மா.. அது அவங்க வீட்டுக்கு இன்னும் தெரியாது.. அதான் எல்லா கொழப்பமும்..!!”

“அ..அதெப்படி உங்களுக்கு தெரியும்..??”

“அந்த தம்பிதான்மா சொல்லுச்சு..!! அவங்க அண்ணன்ட்ட நம்பர் வாங்கி.. இப்போத்தான் அந்த தம்பிட்ட பேசினேன்..!!”

“இப்போவா..????”

“ஆமாம்மா.. பேசி முடிச்சுட்டு உடனே உனக்கு ஃபோன் அடிக்கிறேன்..!!”

வரதராஜன் சொல்ல, ப்ரியா கண்களை சுருக்கிக்கொண்டு, தனது நெற்றியை பற்றி பிசைந்தாள். ‘அப்படியானால்.. சற்றுமுன் அசோக்கிற்கு வந்த கால் அப்பாவிடம் இருந்தா..?? அவன் ப்ளேடு, பெருசு என்று சொன்னதெல்லாம் அப்பாவைத்தானா..??’

“ந..நல்லா தெளிவா கேட்டீங்களா டாடி..?? வேற ஒரு பொண்ணை லவ் பண்றேன்னு சொன்னானா..??” ப்ரியா நெஞ்சில் வேதனையும் குரலில் நப்பாசையுமாய் கேட்டாள்.

“ஆமாம்மா.. தெளிவா கேட்டுட்டுத்தான் சொல்றேன்.. என்ன காரணம்னு தெரிஞ்சுக்கத்தான அந்த தம்பிக்கு நான் ஃபோனே பண்ணினேன்.. அதை தெளிவா கேக்காம இருப்பனா..?? அந்தப்பொண்ணை கூட நான் பாத்திருக்கேன்மா..!!”

“எ..எந்தப் பொண்ணை..??” ப்ரியா உதறலாக கேட்டாள்.

“அந்த தம்பி விரும்புற பொண்ணைம்மா..!! அன்னைக்கு அவர்கூட ஒரு பொண்ணு பைக்ல வந்தான்னு சொன்னேன்ல.. அந்தப் பொண்ணுதான்..!! அந்தப்பொண்ணைத்தான் அவர் ரொம்ப நாளா விரும்புறாராம்..!!”

வரதராஜன் சொல்லிக்கொண்டே போக.. ப்ரியா இப்போது அப்படியே நொறுங்கிப் போனாள்..!! அவளுடைய இதயத்தில் யாரோ ஈட்டியை பாய்ச்சியது மாதிரி இருந்தது அவளுக்கு..!! கால்கள் வலுவிழந்து போனவளாய் பொத்தென்று சேரில் அமர்ந்தாள்.

‘அவ்வளவுதானா..?? அவன் எனக்கு இல்லையா..?? வேறொருத்திக்கு சொந்தமானவனா என் அசோக்..?? எல்லாம் முடிந்து போயிற்றா..?? என் காதலுக்கு நேர்ந்த கதி இதுதானா..?? இத்தனை நாளாய் கண்ட கனவெல்லாம் கானல் நீரா..??’

ப்ரியாவுக்கு கண்களில் பொசுக்கென்று கண்ணீர் முட்டிக்கொண்டு வந்தது. உதடுகளை கடித்து அவள் கட்டுப்படுத்த முயன்றும், உடைப்பெடுத்து கன்னம் வழியாக ஓடியது. அவள் அவசரமாய் அந்த கண்ணீரை தன் புஜத்தில் துடைத்துக் கொண்டாள். மூக்கை ஒருமுறை உறிஞ்சிக் கொண்டாள்.

அசோக்கின் மீது இப்போது அவளுக்கு வேறொரு விதமான கோவமும் திடீரென வந்தது. ‘இத்தனை நாளாய் யாரையோ காதலித்துக் கொண்டு.. அந்த விஷயத்தை கூட என்னிடம் சொல்லவில்லையே அவன்..?? என்னை காதலியாக நினைக்கத்தான் அவனுக்கு மனதில்லை என்றால்.. நல்ல தோழியாக கூட அவன் என்னை கருதவில்லை போலிருக்கிறதே..?? அப்படி கருதியிருந்தால் அவனுடைய காதலை பற்றி என்னிடம் மறைத்திருப்பானா..?? எனக்கு தெரியாமல் எந்த பெண்ணை அப்படி ரகசியமாக காதலிக்கிறான்..?? ஒருவேளை.. ஒருவேளை..’ ப்ரியாவின் மனதில் ஒரு குறுகுறுப்பு எழ,

“அ..அந்தப்பொண்ணு எப்படி இருந்தா டாடி..??” தன் அழுகையை மறைத்துக்கொண்டு மெல்லிய குரலில் கேட்டாள்.

“நல்லா குண்டா இருந்ததும்மா.. அவரை மாமா மாமான்னு கூப்பிட்டுச்சு..!!”

‘சந்தேகமே இல்லை.. செண்பகமேதான்..!! காதலிக்கிறார்களா இருவரும்..?? மாமா மாமா என்று அவள் அவனிடம் குழையும்போதே எனக்கு புரிந்திருக்க வேண்டும்..!! ச்சே.. எவ்வளவு ஏமாளியாக இருந்து விட்டேன்..??’ ப்ரியா அவ்வாறு வேதனையாக நினைத்துக் கொண்டிருக்கும்போதே, வரதராஜன் ஒரு பெருமூச்சுடன் சொன்னார்.

“ஹ்ஹ்ம்ம்ம்.. ஒருவேளை நீ அந்த தம்பியை சந்திச்சு பேச நெனச்சிருக்கியோன்னு தோணுச்சுமா ப்ரியா.. தேவை இல்லாம இன்னொரு கொழப்பம் வரவேணாம்னுதான் இப்போ அவசரமா உனக்கு ஃபோன் பண்ணுனேன்..!!”

‘ஆமாம்.. அப்பா சொல்வதும் சரிதான்.. அவனுடைய மனதை அறிந்து கொள்ளாமல் என்னுடைய காதலை அவனிடம் சொல்ல துணிந்து விட்டேன்..!! நல்லவேளை.. அவனிடம் எதுவும் சொல்லவில்லை.. நான் வெட்கமில்லாமல் ‘ஐ லவ் யூ..’ என்று அவனிடம் வழியப்போய்.. அதைக்கேட்டு அவன் கைகொட்டி சிரித்திருந்தால்..?? என் நிலைமை எவ்வளவு அவமானகரமானதாக இருந்திருக்கும்.. கேவலம்தானே..?? இல்லை.. இந்த விஷயம் அசோக்கிற்கு தெரியவே கூடாது..!!’

- தொடரும்

மேலும் செக்ஸ் கதைகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் :

தமிழ்காமவெறி தளம்

ஐ ஹேட் யூ, பட் – பகுதி 31

$
0
0

“அவன் வேலை பாக்குற கம்பனிலதான் நானும் வேலை பாக்குறேன்னு அவன்கிட்ட சொல்லிட்டீங்களா டாடி..??”

“இல்லம்மா.. அதை சொல்றதுக்குள்ளதான்.. அவரோட லூஸு பாஸ் கூப்பிடுறான்னு ஓடிப் போயிட்டாரு.. ஒரே தமாஷ் போ.. ஹாஹா..!!” எரிகிற தீயில் எண்ணெய் வார்ப்பது போல, வரதராஜன் சொல்லிவிட்டு சிரித்தார்.

மேலும் செக்ஸ் கதைகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் :

தமிழ்காமவெறி தளம்

“என்னது..?? லூஸு பாஸா…??” ஏற்கனவே அசோக் மீது இருந்த கோவத்துடன், இப்போது உச்சபட்சத்தில் ஒரு கடுப்பும் சேர்ந்து கொள்ள, ப்ரியா கத்தினாள்.

“ஆமாம்மா.. அந்த தம்பியோட பாஸ் ஏதோ ஒரு லூஸாம்.. அந்த பொண்ணுக்கு எப்போவாவதுதான் மூளை ஒழுங்கா வேலை செய்யுமாம்..!! அவர் சொன்னதை கேட்டு.. அவ்வளவு கஷ்டத்திலயும் எனக்கு சிரிப்பு வந்துடுச்சுமா..!! ஹாஹா..!!”

மகளின் மனநிலை புரியாமல் வரதராஜன் சிரிக்க, ப்ரியாவால் அதற்கு மேலும் தாங்கிக்கொள்ள முடியவில்லை. காலை ஆத்திரமாக கட் செய்தாள். செல்போனை தூக்கி ஓரமாய் விட்டெறிந்தாள். இரு கைகளையும் டேபிளில் பரப்பி, படக்கென அதிலேயே தன் தலையை கவிழ்த்து படுத்துக் கொண்டாள். அவளுடய நெஞ்சம் குமுற ஆரம்பிக்க, கண்களில் நீர் பொங்கிக்கொண்டு வந்தது. ‘ஓ…!!’ என வாய் விட்டு அலறி அழ வேண்டும் போலிருந்தது அவளுக்கு. ஆபீஸாக போயிற்றே என்று அழுகையை கட்டுப்படுத்திக் கொண்டாள்.

‘லூஸா நான்..?? ஆமாண்டா.. லூஸுதான்.. உன் மேல இவ்வளவு காதல் வச்சிருக்கேன்ல.. என்னைப்பாத்தா உனக்கு லூஸாத்தான் தெரியும்..!! ஏண்டா இப்படி செஞ்ச..?? என்னை விட அந்த பூசணிக்காயைத்தான் உனக்கு புடிச்சிருக்கா..?? புடிச்சிருந்தா வீட்டுல சொல்லி கல்யாணம் பண்ணிக்க வேண்டியதுதான..?? ஏன் பொண்ணு பாக்க சொல்லி.. என் மனசுல ஆசையை கெளப்பி விட்ட..??’

நேற்றிலிருந்து மத்தாப்பாய் பூரித்துக்கொண்டிருந்த ப்ரியாவின் மனம், இப்போது புஸ்வானமாய் அணைந்து நமத்துப் போயிருந்தது. ‘செண்பகம் அவனுடைய அண்ணியின் தங்கைதானே.. அவளை காதலித்தால் வீட்டில் சொல்லி திருமணம் செய்துகொள்ளாமல்.. ஏன் தயங்குகிறான்..?? அதில் என்ன பிரச்னை அவனுக்கு..??’ என்று ஒரு கேள்வி எழுந்தது. உடனே ‘எங்க வீட்டுக்கும் என் அண்ணி வீட்டுக்கும் பெரிய தகராறு..’ என்று அசோக் எப்போதோ சொன்னதும், ‘என் அண்ணனும் அண்ணியும் இருக்காங்களே.. சுத்தமா என் மனசை புரிஞ்சுக்கவே மாட்டாங்க’ என்று அவன் சற்றுமுன் சொன்னதும் நினைவுக்கு வர, அந்தக் கேள்விக்கும் அவளுக்கு பதில் கிடைத்து போனது. ‘இவனுடைய விளையாட்டு.. எனக்கு வேதனையாக முடிந்து போனது..’ என்று நினைத்துக் கொண்டாள்.

தான் இத்தனை நாளாய் கண்ணும் கருத்துமாய்.. பார்த்து பார்த்து பயிர் செய்த காதல் தோட்டம்.. இப்போது புயலில் சிக்கி உருக்குலைந்து போனதாய் அவளுக்கு தோன்றியது..!! சிறு வலியை கூட தாங்காத அவளது இதயம்.. இப்போது திராவகம் வீசப்பட்டு பொசுங்குவது போல துடிதுடித்தது..!! ‘அசோக் தனக்கில்லை..!!’ என்று அவள் நினைக்க நினைக்க.. அழுகை பொத்துக்கொண்டு வந்தது..!!

கண்களில் வழிந்த நீரை புஜத்திலேயே துடைத்துவிட்டு நிமிர்ந்தபோதுதான், அசோக் அவளுடைய அறைக்குள் நுழைந்தான். இவள் முகத்தை சகஜமாக மாற்றிக்கொள்ள முயல, அவன் உதட்டில் புன்னகையும், குரலில் கேலியுமாய் கேட்டான்.

“ஹேய் லூஸு.. என்னை அங்க வெயிட் பண்ண சொல்லிட்டு.. நீ என்ன இங்க வந்து படுத்து தூங்கிட்டு இருக்குற..??”

அவ்வளவுதான்..!! அந்த ‘ லூஸு’ என்ற வார்த்தை ப்ரியாவுக்கு சுர்ரென ஒரு ஆத்திரத்தை கிளப்பிவிட்டது. பட்டென சேரில் இருந்து எழுந்தாள். முகமெல்லாம் கோவத்தில் சிவந்து போக, அசோக்கை பார்த்து சீற்றமாய் சொன்னாள்.

“மைன்ட் யுவர் டங்..!!!! இனிமே என்னை லூஸுன்னு சொன்ன.. மரியாதை கெட்டுப் போயிடும்..!!”

ப்ரியாவின் சூடான வார்த்தைகளில்.. அவ்வளவு நேரம் புன்முறுவலுடன் இருந்த அசோக்கின் முகம்.. பட்டென சுருங்கிப் போனது..!! ‘என்ன ஆயிற்று இவளுக்கு திடீரென..?’ என்று குழப்பமுற்றவனாய், தடுமாற்றமாக கேட்டான்.

“ஹேய்.. என்னாச்சு உனக்கு.. ஏன் இப்போ டென்ஷன் ஆகுற..?? நான் எப்போவும் கூப்பிடுறதுதான..??”

“இனிமே கூப்பிடாத..!! இந்த லூஸு, ஸ்டுபிட்லாம் ஆபீசுக்கு வெளில வச்சுக்கோ..!! இங்க நான் உன் பாஸ்.. அதுக்கு உண்டான மரியாதையை குடுக்கணும்..!! இல்லனா உன்னைப்பத்தி நான் மேனேஜ்மன்ட்ல கம்ப்ளயின்ட் பண்ண வேண்டி இருக்கும்.. அண்டர்ஸ்டாண்ட்..??”

ப்ரியா ஆத்திரத்துடன் ஆட்காட்டி விரலை காட்டி.. அவனை எச்சரிப்பது போல சொல்ல சொல்லவே.. அசோக்கின் முகம் கொஞ்சம் கொஞ்சமாய் இறுக ஆரம்பித்தது..!! சற்றுமுன் ஆசையும் ஏக்கமுமாய் பார்த்த அதே ப்ரியாவின் முகத்தை, இப்போது வெறுப்பாக முறைத்தான். கண்களை இடுக்கி அவளை உஷ்ணமாக பார்த்தவன், பற்களை கடித்தவாறு சொன்னான்.

“ஓ..!! TL மேடத்துக்கு மரியாதை வேணுமா..?? குடுத்துட்டா போச்சு..!!” என்றவாறு கைகளை மார்புக்கு குறுக்காக பணிவுடன் கட்டிக்கொண்டான். குரலில் ஒரு போலி மரியாதையை கூட்டிக்கொண்டு..

“மன்னிச்சுடுங்க மேடம்.. இனி உங்களை நான் லூஸுன்னு கூப்பிட மாட்டேன்.. அப்படி கூப்பிட்டா நான்தான் இனிமே லூஸு..!! போதுமா..??” என்றான்.

a17

அவனுடைய செய்கை ப்ரியாவுக்கு அழுகையை தூண்டுவதாய் இருந்தது. கட்டுப்படுத்திக் கொண்டாள். தலையை கவிழ்த்துக்கொண்டு அமைதியானாள். அவளுடைய அமைதியை பார்த்து, அசோக்கே தொடர்ந்து பேசினான்.

“எங்கிட்ட ஏதோ தனியா பேசணும்னு சொன்னீங்களே.. அது மட்டும் என்னன்னு சொல்லிடுங்க மேடம்..!! சொல்லிட்டா.. நான் என் எடத்துக்கு போய் என் வேலையை பார்ப்பேன்..!!”

அசோக் கேலியான குரலில் கேட்க, ப்ரியா இப்போது அப்படியே தளர்ந்து போனாள். ஒருவித தடுமாற்றத்துடன் சேரில் மெல்ல அமர்ந்து கொண்டாள். அசோக்கின் முகத்தை ஏறிட்டு பரிதாபமாக ஒரு பார்வை பார்த்தாள்.

‘இதோ.. கேட்கிறான்.. என்ன சொல்வது இப்போது..?? நேற்றிலிருந்து எத்தனை எத்தனை வார்த்தைகளை புரட்டி புரட்டி போட்டு.. வாக்கியங்களை பார்த்து பார்த்து மாலை போல கோர்த்து கோர்த்து வைத்திருந்தேன்..?? அதிலிருந்து ஒற்றை வார்த்தையை இப்போது இவனிடம் கூற இயலுமா..?? இதோ.. கேட்கிறான்.. என்ன சொல்வது இப்போது..??’ மனதில் புரண்ட உணர்ச்சி அலைகளை, ப்ரியா கட்டுப்படுத்திக் கொண்டவாறே..

“டைம் ஷீட் என்டர் பண்ணிட்டியா..??” என்றாள் உணர்ச்சி செத்துப்போன குரலில்.

“அதை கேட்கவா தனியா கூட்டிட்டு போன..??”

“ம்ம்.. ஆமாம்..!!”

“இல்ல.. நீ ஏதோ மறைக்கிற..??”

“ப்ச்.. நான்தான் சொல்றன்ல..?? அதை கேக்கத்தான் கூட்டிட்டு போனேன்..!! சொல்லு.. என்டர் பண்ணிட்டியா..??”

“இல்ல.. இன்னும் பண்ணல..!!”

“மொதல்ல அதைப்போய் பண்ணு.. பாலா உடனே பண்ண சொன்னாரு..!!”

“அதுக்கென்ன இப்போ அவசரம்.. ஃப்ரைடே பண்ணினா பத்தாது..??” அசோக்கின் கேள்வியில் ப்ரியா இப்போது பொறுமை இழந்தாள்.

“டூ வாட் ஐ ஸே..!!” என்று எரிச்சலாக கத்தினாள். இப்போது அசோக் முகத்தை உர்ரென்று வைத்துக்கொண்டு ப்ரியாவையே சில வினாடிகள் முறைத்துப் பார்த்தான். அப்புறம்,

“திருந்தவே மாட்டேல நீ..?? ச்ச..!!”

என்று வெறுப்பாக கத்திவிட்டு திரும்பி விடுவிடுவென நடந்தான். ஆத்திரத்துடன் கதவை பிடித்து இழுத்து, அந்த அறையை விட்டு வெளியேறினான். அவன் செல்வதையே ஏக்கமாக பார்த்துக் கொண்டிருந்த ப்ரியாவுக்கு, அழுகை முட்டிக்கொண்டு வந்தது. கண்களில் நீர் திரையிட.. கை நீட்டி.. டேபிள் மீதிருந்த அந்த வாட்சை எடுத்தாள்..!! பதிக்கப்பட்ட கற்களுடன் பளீரென்று பளிச்சிட்ட அந்த வாட்சை பரிதாபமாக பார்த்தாள்..!!

அத்தியாயம் 19

ஆபீஸில் அன்று முழுவதும் ப்ரியா ஒரு விரக்தி மனநிலையுடனே இருந்தாள். அவளுடைய அறைக்குள்ளேயே அடைந்து கிடந்தாள். ஈடுபாடு இல்லாமலே கீ போர்ட் தட்டி கோட் அடித்தாள். அவ்வப்போது அவளையும் மீறி கண்ணோரமாய் கண்ணீர் வழியும். உடனே புறங்கையால் துடைத்துக்கொண்டு, மூக்கை விசும்பிக்கொள்வாள். தலையை உயர்த்தி, தூரமாய் அமர்ந்து தீவிரமாய் வேலை பார்த்துக் கொண்டிருக்கிற அசோக்கை ஏக்கமாய் பார்ப்பாள். அன்று மதிய உணவுக்கு கூட டீமோடு சேர்ந்து செல்லவில்லை அவள்..!! சென்றிருப்பாள்.. அவளை அழைக்க வந்தது வேறு ஆளாய் இருந்திருந்தால்..!!

“நாங்கலாம் லஞ்ச்க்கு போறோம்க்கா.. வர்றீங்களா..??” என்று புன்னகையுடன் வந்து கேட்ட செண்பகத்தை எரிச்சலாகத்தான் அவளால் ஏறிட்டு பார்க்க முடிந்தது.

“இ..இல்ல.. எனக்கு பசியில்ல.. நீங்க போங்க.. நான் அப்புறமா சாப்பிட்டுக்குறேன்..!!” என்றுதான் அவளால் சொல்ல முடிந்தது.

மாலையில்தான் அலுவல் சம்பந்தமாக அசோக்கிடம் ஏதோ கேட்க வேண்டி இருந்தது. எழுந்து செல்ல மனசில்லை. கம்யூனிகேடர் திறந்து பார்த்தாள். ‘ASHOK AWAY’ என்று காட்டியது. சில வினாடிகள் அந்த கம்யூனிகேடரையே கடுப்புடன் முறைத்தவள், அப்புறம் சேரில் இருந்து எழுந்து கொண்டாள். அறையை விட்டு வெளியேறி அசோக்கின் இடத்திற்கு சென்றாள். மானிட்டருக்கு தலையை கொடுத்தவாறு அமர்ந்திருந்த ஹரியிடம் இறுக்கமான குரலில் கேட்டாள்.

“எங்க போயிட்டான்..??”

“ஸ்குவாஷ் ஆட போறேன்னுட்டு போனான் ப்ரியா..!!” ஹரி மானிட்டரில் இருந்து பார்வையை நகரத்தாமலே சொன்னான்.

‘ஸ்குவாஷா..?? யார் கூட..??’ என்று கேட்க வாயெடுத்த ப்ரியா, பிறகு கேட்காமலேயே நிறுத்தினாள். தலையை சுழற்றி ஒரு பார்வை பார்த்தாள். டீமில் அனைவரும் அவரவர் இடத்தில் இருந்தார்கள்.. அசோக்கையும் செண்பகத்தையும் தவிர..!! அவர்கள் இரண்டு பேருந்தான் ஜோடியாக சென்றிருக்கிறார்கள் என்பது எளிதாக அவளுக்கு புரிந்து போனது. உடனே.. என்னவென்று சொல்ல முடியாத ஒரு எரிச்சலில் அவளுடைய உடல் திகுதிகுவென எரிய ஆரம்பித்தது..!! காலியாக இருந்த அசோக்கின் இருக்கையையே கொஞ்ச நேரம் வெறித்து பார்த்தாள். அப்புறம் ஒரு முடிவுக்கு வந்தவளாய், அவளுடைய அறைக்கு விடுவிடுவென நடந்தாள்.

அறைக்குள் நுழைந்தவள், கப்போர்ட் திறந்து அந்த பேகை எடுத்துக் கொண்டாள். வெளியே வந்து.. மீண்டும் ‘டக்.. டக்.. டக்..’ என வேகமாய் நடந்து அந்த தளத்தின் அடுத்த மூலைக்கு சென்றாள். அங்கிருந்த ட்ரஸிங் ரூம் புகுந்து தாழிட்டுக்கொண்டாள். அணிந்திருந்த புடவையை பரபரவென அவிழ்த்து எறிந்தாள். பேக் திறந்து அந்த கருப்பு நிற டி-ஷர்ட்டையும், வெள்ளை நிற ஷார்ட்சையும் எடுத்து அவசரமாய் உடுத்திக் கொண்டாள். கால்களுக்கு ஷூ அணிந்து, லேஸை பிடித்து சரக்கென இழுத்தாள். ஹேர்பாண்ட் எடுத்து கூந்தலுக்கு மாட்டி.. முடிக்கற்றையை ‘பட் பட்’ என்று கீழே பிடித்து இழுத்து.. டைட் ஆக்கிக் கொண்டாள். தனது இறுக்கமான முகத்தை கண்ணாடியில் ஒருமுறை பார்த்துக் கொண்டாள். ஸ்குவாஷ் ராக்கெட்டை கையில் எடுத்து.. வலது காலை சற்றே பின்னுக்கு உயர்த்தி.. அந்தக்கால் ஷூவை ராக்கெட்டால் ரெண்டு தட்டு தட்டிவிட்டு.. புயலாய் கிளம்பினாள்..!!

அதே நேரம்.. ஸ்குவாஷ் கோர்ட்டில்.. அசோக் செண்பகத்திற்கு அந்த விளையாட்டை கற்றுத் தருகின்ற பேரில்.. அவளைப்போட்டு பாடாய் படுத்திக் கொண்டிருந்தான்..!!

“ஏண்டி.. பால் வர்றப்போ அதை திரும்ப அடிக்கனும்னு சொன்னா.. விட்டுட்டு பப்பரக்கான்னு பாத்துக்கிட்டு நிக்கிற..??” அசோக் பற்களை கடித்தவாறு கேட்டான்.

“ட்ரை பண்ணேன் மாமா.. முடியலை..!!” செண்பகம் பரிதாபமாக சொன்னாள்.

“ஓடிப்போய் எடுக்கணும்.. நீ அசைஞ்சு அசைஞ்சு போறதுக்குள்ள.. அது அஞ்சு தடவை பவுன்ஸ் ஆயிடுது..!!”

“ஓடத்தான் செஞ்சேன்.. அது அப்டீக்கா போகுது.. நான் என்ன பண்ணுவேன்..??”

“அப்டீக்கா போகாம.. ‘என்னை அடிங்க ப்ளீஸ்..’னு உன்னை தேடியா வரும்..??”

“போங்க மாமா.. எனக்கு இந்த கேம் பிடிக்கல.. வேற ஏதாவது உக்காந்துட்டு வெளையாடுற கேம் ஆடலாம்..!!”

“உக்காந்துக்கிட்டா..?? ஏன்.. படுத்து கொட்டாவி விட்டுக்கிட்டே வெளையாடுற மாதிரி ஏதாவது கேம் ஆடலாமே..??”

“அப்படியுமா கேம் இருக்கு..??”

“அப்படியே அறைஞ்சன்னா பாத்துக்கோ..!! பால் எடுத்து போடுடி.. சர்வீஸ் போடுறேன்.. உன் எடத்துக்கு போ..!!”

“வேணாம் மாமா.. வெளையாண்டது போதும்..!!”

“என்னது.. போதுமா..?? ஆரம்பிச்சு அஞ்சு நிமிஷம் கூட ஆகல.. அதுக்குள்ளே போதும்னு சொல்ற..??”

“அஞ்சு நிமிஷம் கூட ஆகல.. ஆனா அதுக்குள்ள எனக்கு எப்படி வேர்த்து ஊத்துது பாருங்க..!! டயர்டாயிடுச்சு மாமா.. முடியல..!!”

“இங்க பாரு செம்பு.. உன் உடம்பு எளைக்கிறதுக்கு இதை விட நல்ல வழி.. வேற எதுவும் இல்ல..!! சொல்றதை கேளு.. டெயிலி ஒரு மணி நேரம் என்கூட ஸ்குவாஷ் ஆடு.. ஹன்சிகா மாதிரி பொதுபொதுன்னு இருக்குறவ, அனுஷ்கா மாதிரி சிக்குன்னு மாறிடுவ..!! போ.. இன்னும் கொஞ்ச நேரம்..!!”

“ஹன்சிகாக்கு என்ன கொறைச்சலு..??” செண்பகம் அவளுடைய இடத்துக்கு நகர்ந்துகொண்டே மெல்லிய குரலில் கேட்டாள்.

“எதுவும் கொறைச்சலுன்னு சொல்லல.. எல்லாம் நெறைச்சலுன்னுதான் சொல்றேன்.. போ போ..!!” அசோக் கேலியாக சொல்லிக்கொண்டே சர்வீஸ் போட தயாரானான்.

அப்புறம் கொஞ்ச நேரத்திற்கு இருவரும் தீவிரமாக, மன ஈடுபாட்டுடன் ஸ்குவாஷ் ஆடிக்கொண்டிருந்தார்கள். செண்பகம்தான் தனது கனத்த தேகத்தை தூக்கிக்கொண்டு ஓடி விளையாட மிகவும் கஷ்டப்பட்டாள். அசோக் அவளை ஐந்து நொடிக்கொரு முறை திட்டிக்கொண்டும், கேலி செய்துகொண்டுமே லாவகமாக பந்தடித்துக் கொண்டிருந்தான். வேண்டும் என்றே, அவள் அங்கும் ஓடி சென்று பந்தை அடிக்கும் வகையில் அவளை அலையவிட்டான்.

ஆட்ட சுவாரசியத்தில் அவர்கள் இருவரும் மூழ்கிப் போயியிருந்த நேரத்தில்தான், ப்ரியா அங்கு வந்து சேர்ந்தாள். கண்ணாடி கதவுக்கு வெளியே நின்றவாறு, அவர்கள் இருவரும் விளையாடுவதையே சிறிது நேரம் முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்தாள். முன்பு இதே கோர்ட்டில்.. அவளும் அசோக்கும்.. வளர்ந்துவிட்ட குழந்தைகளாய்.. சிரிப்பும் கேலியுமாய்.. நேரம் போவதே தெரியாமல் விளையாடிய நினைவுகள் எல்லாம் இப்போது அவளுக்கு வந்தது..!! இன்று அவள் இடத்தில் இன்னொருத்தி அவனுடன் சேர்ந்து விளையாடுவதை பார்த்து.. அவளுடைய காதல் மனம் பொறுமியது..!! ஒருவித பொறாமை உணர்வுதான்.. தவறென்று அவளுடைய மூளை கண்டித்தாலும்.. அவளது மனம் அந்த கட்டளைக்கு கட்டுப்பட மறுத்தது..!!

கைவிரல்களை மடக்கி அந்த கண்ணாடி கதவை ‘லொட்.. லொட்..’ என்று தட்டினாள். செண்பகம்தான் முதலில் அந்த சப்தம் கேட்டு திரும்பி பார்த்தாள். ப்ரியாவை பார்த்து லேசாக ஆச்சரியமுற்றவள், அப்புறம் கதவை நோக்கி நடந்து வந்தாள். இப்போது அசோக்கும் திரும்பி பார்த்தான். ப்ரியா வந்திருப்பதை உணர்ந்ததும் சற்றே குழப்பமாய் நெற்றி சுருக்கினான். செண்பகம் கதவை திறந்துவிட ப்ரியா உள்ளே நுழைந்தாள். நுழைந்தவள் அசோக்கை திரும்பி கூட பார்க்காமல், செண்பகத்திடம் இறுக்கமான குரலில் கேட்டாள்.

“உன்கிட்ட ஒரு பி.ஓ.ஸி பண்ணிக்காட்ட சொல்லி கேட்டிருந்தனே.. என்னாச்சு..??” ப்ரியாவின் இந்த திடீர் கேள்வியை எதிர்பாராத செண்பகம்,

“அ..அது.. அது பண்ணிட்டு இருக்கேன்க்கா..!!” தடுமாற்றமாய் சொன்னாள்.

“குடுத்த வேலையை முடிக்காம இங்க வந்து ஜாலியா வெளையாடிட்டு இருக்கியா..?? இங்க பாரு செண்பகம்.. நீ இன்னும் ப்ரோபேஷன் பீரியட்லதான் இருக்குற.. நீ வொர்க் பண்ற விதம் சாடிஸ்ஃபாக்ட்ரியா இருக்குன்னு நான் ரிப்போர்ட் குடுத்தாத்தான்.. உன் வேலையை கன்ஃபார்ம் பண்ணுவாங்க.. ஞாபகம் இருக்குல..??” ப்ரியாவின் குரல் மிரட்டலாய் ஒலிக்க,

“இ..இருக்குக்கா.. நா..நாளைக்கு முடிச்சுர்றேன்..!!” செண்பகம் நிஜமாகவே மிரண்டு போய் சொன்னாள்.

“நாளைக்கா..?? எனக்கு இன்னைக்கு வேணும்..!!”

“இ..இன்னைக்கேவா..??”

“ஆமாம்.. கெளம்பு.. போ.. போய் வேலையை பாரு..!!”

செண்பகம் ப்ரியாவின் முகத்தையே மருட்சியாக ஒரு பார்வை பார்த்தாள். ஏமாற்றம் அப்பிய முகத்துடன் அசோக்கை ஒருமுறை திரும்பி பார்த்துக் கொண்டாள். பிறகு பிரியாவை ஏறிட்டு,

“ச..சரிக்கா..!!” என்று மெல்ல தலையாட்டினாள்.

கதவு திறந்து செண்பகம் தயங்கி தயங்கி வெளியேற, கண்களை இடுக்கியவாறு அவள் முதுகையே ப்ரியா வெறித்துக் கொண்டிருந்தாள். அவள் சென்றதும்தான் தலையை சுழற்றி அசோக்கின் முகத்தை கூர்மையாக ஒரு பார்வை பார்த்தாள். அவனோ இவளை எரித்துவிடுவது போல முறைத்துக் கொண்டிருந்தான். இவள் பார்த்ததும் அவனும் ‘ச்ச..’ வெறுப்பை உமிழ்ந்துவிட்டு, கோர்ட்டை விட்டு வெளியேறும் எண்ணத்துடன் கதவு நோக்கி நடக்கலானான். அவன் ப்ரியாவை கடக்கிற சமயத்தில், அவள் எள்ளலான குரலில் கேட்டாள்.

- தொடரும்

மேலும் செக்ஸ் கதைகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் :

தமிழ்காமவெறி தளம்

ஐ ஹேட் யூ, பட் – பகுதி 32

$
0
0

“நீ எங்க கெளம்பிட்ட..??”

“எனக்கும் வேலை இருக்குது.. நான் போறேன்..!!” அசோக் சற்றே வெறுப்பாக சொன்னான்.

“உன் வேலைய நாளைக்கு முடிச்சா போதும்.. வா.. ஒரு கேம் ஆடலாம்..!!”

மேலும் செக்ஸ் கதைகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் :

தமிழ்காமவெறி தளம்

“எ..எனக்கு மூட் இல்ல..!!” அசோக் சலிப்பாக சொல்ல.

“இவ்வளவு நேரம் அவ கூட வெளையாட மட்டும் மூட் இருந்ததோ..??” ப்ரியா சூடாக கேட்டாள்.

“ஆமாம்.. அப்படியே வச்சுக்கோ..!! உன்கூட வெளையாட எனக்கு புடிக்கலை.. போதுமா..??”

“ஹாஹா.. என்கூட வெளையாண்டா தோத்துடுவ.. பயம்..!! அப்படித்தான..??” ப்ரியா அவனுடைய தன்மானத்தை சீண்டி வலை விரித்தாள்.

“ஏய்.. யா..யாருக்கு பயம்..?? எனக்கு எவளை பாத்தும் பயம் இல்ல..!!” அசோக்கும் வீறாப்புடன் அந்த வலையில் சிக்கிக்கொண்டான்.

“அப்போ வா.. வெளையாடலாம்..!!” சொல்லிவிட்டு ப்ரியா அசோக்கின் கண்களையே கூர்மையாக பார்த்தாள். அவளையே முறைத்துக்கொண்டிருந்த அசோக்கும் கொஞ்சம் கூட தயங்கவில்லை.

“ஓகே.. வெளையடாலாம்..!!” என்றான்.

ப்ரியா அசோக்கைப் பார்த்து ஒரு கேலிப்புன்னகையை உதிர்த்தவாறே, அவளுடைய வலது கையை நீட்டி, திறந்திருந்த கண்ணாடி கதவை அடைத்து தாழிட்டாள். கையிலிருந்த ராக்கெட்டால் கீழே கிடந்த பந்தை ஸ்கூப் செய்து அசோக்கின் பக்கமாய் வீச, அவன் அதை கேட்ச் பிடித்துக் கொண்டான்.

“சர்வீஸ் போடு..!!”

சொன்ன ப்ரியா நகர்ந்து சென்று கோர்ட்டின் மையப்பகுதியில் நின்றுகொண்டாள். முதுகை வளைத்து.. சற்றே முன்புறமாக குனிந்து.. இரண்டு கையாலும் ராக்கெட்டை வலுவாக பிடித்தவாறு.. கண்களை இடுக்கி சுவற்றை கூர்மையாக வெறித்தாள்..!!

அசோக் அவனுடைய இடத்திற்கு நகர்ந்தான். பந்தை தூக்கி போட்டு சர்வீஸ் செய்தான். பந்து சுவற்றில் மோதி திரும்ப வந்தது. ப்ரியாவை நோக்கி சென்றது. அவள் அதற்காகத்தான் காத்திருந்தாள். உடம்பில் இருக்கும் மொத்த வலுவையும் தன்னுடைய வலது கையில் திரட்டி, பற்களை கடித்துக்கொண்டு, சரெக்கென்று ஓங்கி ஒரு அடி அடித்தாள். பந்து மின்னல் வேகத்தில் சுவரை நோக்கி பறந்தது. அதே வேகத்தில் அசோக்கை நோக்கி திரும்ப வந்தது. அவன் சுதாரித்துக் கொள்வதற்கு கொஞ்சமும் அவகாசம் கொடுக்காமல், அவனுடைய அடிவயிற்றில் சென்று ‘தொம்..!!!’ என அடித்தது.

“ஆஹ்ஹ்க்க்க்க்…!!!!!!”

அசோக் வலியில் முனகியவாறே அடிவயிறை பிடித்துக் கொண்டான். கண்களுக்கு முன் நட்சத்திரங்கள் பறப்பது மாதிரி அவனுக்கு ஒரு உணர்வு. அவன் முகம் சுருக்கி வலியில் துடிக்க, ப்ரியா உணர்ச்சியற்ற முகத்துடன் அவனை வெறித்து பார்த்தாள். அவளுடைய கண்களில் மட்டும் ஒருவித குரூர திருப்தி. உதட்டில் மெலிதான புன்னகையுடன் கேலியாக கேட்டாள்.

a2-1

“பால் வர்றப்போ அதை திரும்ப அடிக்கனும்னு தெரியாது.. காட்டிட்டு நிக்கிற..??”

“ஏ..ஏய்.. எ..என்னடி இவ்ளோ ஸ்பீடா அடிக்கிற..??” அசோக் அடிவயிற்றில் வேதனையுடன் திக்கி திணறி கேட்டான்.

“வேற எப்படி அடிக்கிறது.. அதான கேம்..?? நோகாம வெளையாடனும்னா.. செண்பகம் மாதிரி ஏதாவது சின்னப்புள்ளைங்க கூடதான் போய் விளையாடனும்..!!”

ப்ரியா கிண்டலாக சொல்ல, அசோக் இப்போது அவளை ஏறிட்டு முறைத்தான். அவளுடைய வார்த்தைகள் அவனுடைய ரோஷத்தை கிளப்பி விடுவதாக இருந்தன. கீழே கிடந்த பந்தை எடுத்து அவளிடம் தூக்கி போட்டான்.

“சர்வ் பண்ணு..!!”

என்று கெத்தாக சொல்லிவிட்டு, அடிவயிற்றில் ஒரு அவஸ்தையுடனே நடந்து சென்று, அவளுடைய சர்வீசை எதிர்கொள்ள தயாராக போய் நின்றான். ப்ரியா ஓரக்கண்ணால் அசோக்கை ஒரு கேலிப்பார்வை பார்த்தபடியே சர்வீஸ் போட்டாள். அசோக் திரும்ப அடித்தான். ப்ரியா இப்போது மீண்டும் மின்னல் போல பந்துக்கு ஒரு அடி போட, அது அசோக்கின் முகத்தை நோக்கி ‘விரர்ர்ர்ர்….’ என்று விரைந்து வந்தது. பந்தின் வேகத்துக்கு தன்னால் எதிர்நிற்க முடியாது என்பதை அசோக் தாமதமாகவே உணர்ந்து கொண்டான். காற்றைக் கிழித்துக்கொண்டு பறந்து வருகிற பந்தின் பாதையில் இருந்து விலகிக்கொள்ள நினைத்தவன், முகத்தை திருப்பினான். பந்து அவனுடைய தலையில் ‘நச்ச்..!!’ என்று அடித்து மேல்நோக்கி ராக்கெட் மாதிரி கிளம்பியது. அவனுக்கு தலையை சுற்றி மின்மினிகள் பறந்தன.

“ஆஆஆஆஹ்…!!” என்று அலறினான்.

அப்புறம் கொஞ்ச நேரத்திற்கு அவன் அவ்வாறு அலறிக்கொண்டே இருக்க வேண்டி இருந்தது. ப்ரியாவின் கைகள் ப்ளாஷ் அடிப்பது போல பளிச் பளிச்சென்று வெட்டிக்கொண்டே இருந்தன. பந்து புல்லட் வேகத்தில் சுவரை நோக்கி பறப்பதும், திரும்ப அசுர வேகத்தில் விரைந்து வந்து அசோக்குடைய உடலின் ஏதாவது ஒரு பகுதியை வன்மையாக தாக்குவதுமாக இருந்தது. ‘ஐயோ.. அம்மா..’ என்று முக்கலும், முனகலுமாகவே அசோக் அந்த அடிகளை வாங்கிக்கொண்டான்.

“ஏ..ஏண்டி இப்படி வெறி புடிச்ச மாதிரி ஆடுற..??” அசோக் பரிதாபமாக கேட்க,

“எல்லாம் ஒழுங்காத்தான் ஆடுறாங்க.. போடு போடு..!!” ப்ரியா அலட்சியமாக சொன்னாள்.

ப்ரியாவின் மின்னல் வேக ஆட்டத்திற்கு தன்னால் ஈடுகொடுக்க முடியவில்லை என்று அசோக்கிற்கு தெளிவாக புரிந்தது. ஆனால் போட்டியில் இருந்து விலகிக்கொள்ளவும் அவனுடைய ஈகோ இடம் தரவில்லை. எப்படியாவது சமாளித்து விட வேண்டும் என்ற எண்ணத்துடன் ஆட்டத்தை தொடர்ந்தான். ஆனால் அவளை சமாளிப்பது அவ்வளவு எளிதாக இல்லை. பந்தாலேயே உடம்பெல்லாம் ‘சொத்..சொத்..’ என்று அடி வாங்கி முனகத்தான் அவனால் முடிந்தது.

அசோக் சொன்ன மாதிரி ப்ரியா ஒரு வெறியுடன்தான் இருந்தாள். அவன் மீதான அவளுடைய ஏக்கம்.. அந்த ஏக்கம் நிறைவேறாத ஏமாற்றம்.. அந்த ஏமாற்றம் அவளுக்களித்த அழுகை.. அந்த அழுகை அவளுக்குள் கிளப்பிவிட்ட ஆத்திரம்..!! எல்லாமுமாய் சேர்ந்து வெறியாக உருமாறி.. அவளுடைய ஸ்குவாஷ் ராக்கெட் மூலமாக வெளிப்பட்டது..!! பாயிண்டுகள் எடுக்கவேண்டும் என்பதெல்லாம் அவளுடைய நோக்கமாக இருக்கவில்லை. அசோக்கிற்கு அடிவிழுவது மாதிரி குறிபார்த்து பந்தடிப்பதுதான் அவளது குறிக்கோளாக இருந்தது..!!

அந்த மாதிரி விளையாட்டு என்கிற போர்வையில்.. ப்ரியா அசோக்கின் உடம்பை பதம் பார்த்துக் கொண்டிருக்கையில்தான்.. ஒருமுறை ப்ரியா சுவற்றில் அடித்த பந்து ஏவுகணை மாதிரி அசோக்கின் முகத்தை குறிவைத்து சீறிக்கொண்டு வந்தது. பந்தை அடித்துவிடவேண்டும் என்று அசோக் தனது ராக்கெட்டை வீசினான். ஆனால் படுவேகத்தில் பறந்து வந்த பந்து அவனுடைய ராக்கெட் வீச்சுக்கு தப்பி, அவனுடைய வலது கண்ணிலேயே வந்து ‘டமார்..’ என அறைந்தது. அவ்வளவுதான்..!!

“அம்மாஆஆஆ..!!”

என்று கத்திக்கொண்டே அசோக் கையிலிருந்த ராக்கெட்டை நழுவவிட்டான். இரண்டு கைகளாலும் கண்ணை பொத்திக்கொண்டு, அப்படியே கால்கள் மடங்க தரையில் சரிந்தான். ‘ஆ… ஆ… ஆ…’ என வேதனையாக முனகினான். நெளிந்தான்.

ப்ரியா எந்த சலனமும் இல்லாமல் அமைதியாக நின்றிருந்தாள். வேகவேகமாய் மூச்சு விட்டதில், அவளுடைய மார்புகள் மட்டும் குபுக் குபுக்கென ஏறி இறங்கிக்கொண்டிருந்தன. அவளுடய கண்கள், அவளது காலடியில் சுருண்டு விழுந்து கிடக்கும் காதலனை ஒருவித வெறித்த பார்வை பார்த்தன. அவள் மனதில் இப்போது ஒரு திருப்தி.. அசோக்கை அடித்து வீழ்த்திவிட்ட திருப்தி.. காலையில் இருந்து நெஞ்சுக்குள் சேமித்து வைத்திருந்த அழுத்தத்தையும், ஆத்திரத்தையும் வெளிப்படுத்திவிட்ட திருப்தி..!! அவளுடைய உதடுகளில் மீண்டும் அந்த குரூர புன்னகை..!!

ஆனால்.. ஒருசில விநாடிகள்தான் அந்த புன்னகை அவளிடம் நீடித்திருந்தது..!! அடுத்த கணமே அவளுடைய காதல் மனது விழித்துக் கொண்டது.. அசோக்கை பார்க்க பாவமாக இருந்தது..!! உடனே கையிலிருந்த ராக்கெட்டை கீழே போட்டுவிட்டு, மண்டியிட்டு அமர்ந்தாள். குப்புற கிடந்த அசோக்கிடம் குனிந்து அவனுடைய தலையை இதமாக தடவி, அவனுடைய முகத்தை தனது கைகளால் மென்மையாக தாங்கியவாறே சொன்னாள்.

“எங்க காட்டு.. பாக்கலாம்..!!”

“ப்ச்.. போடீ..!!” அசோக் கடுப்புடன் அவளுடைய கைகளை தட்டிவிட்டான். “ஷ்ஷ்ஷ்.. ஆஆஆ..!!” என வலியில் முனகினான்.

“ஏய்.. காட்டுன்றன்ல.. காட்டுடா..!!”

ப்ரியா அவனுடைய கைகளை வலுக்கட்டாயமாக பற்றி விலக்கினாள். அசோக்கிற்கு அடிபட்ட கண்ணை திறக்க முடியவில்லை. அந்த கண்ணில் இருந்து பொலபொலவென்று கண்ணீர் கொட்டியது. ஒரு கண் மூடியிருக்க, ஒரு கண்ணை மட்டும் திறந்து ப்ரியாவை பரிதாபமாக பார்த்தான். அவனை அந்த போஸில் பார்க்க ப்ரியாவிற்கு சிரிப்பு வந்தது. ஆனால் அந்த சிரிப்பை கட்டுப்படுத்திக்கொண்டு,

“அபப்டியே.. கண்ணை தெறக்க ட்ரை பண்ணு..!!” என்றாள்.

“முடியலைடி.. வலிக்குது.. ம்மாஆஆ..!!”

“ஹ்ம்ம்.. சரி.. மொதல்ல நீ எந்திரி.. வா…!!”

ப்ரியா அசோக்கின் ஒரு கையை எடுத்து தன் தோளில் போட்டுக்கொண்டாள். அவனுடைய இடுப்பை வளைத்து பிடித்து, அவன் எழுந்துகொள்வதற்கு உதவினாள். கைத்தாங்கலாக கூட்டிச்சென்று கோர்ட்டுக்கு வெளியே கிடந்த ஒரு சேரில் அமரவைத்தாள். அவனை அங்கேயே அமர சொல்லிவிட்டு அவசரமாக நடந்து சென்றாள். ஓரிரு நிமிடங்களிலேயே கையில் ஒரு துணிப்பந்தோடு திரும்பவந்தாள். ஐஸ்கட்டிகளை உள்ளடக்கி சுற்றப்பட்ட துணிப்பந்து..!!

a4

அசோக் ‘ஆஹ்.. ஆஹ்..’ என்று அவஸ்தையாக முனகிக்கொண்டிருக்க.. ப்ரியா அவனது வீங்கிய கண்ணை சுற்றி ஐஸ் ஒத்தடம் கொடுத்துக்கொண்டே சொன்னாள்.

“ஹ்ஹ்ம்ம்ம்.. ஓவரா ஆட்டம் போட்டா.. இப்படித்தான் அடி கெடைக்கும்..!!” அவள் சொன்னதும் அசோக்குக்கு சுருக்கென்று கோவம் வந்தது.

“நான் எங்கடி ஓவரா ஆட்டம் போட்டேன்..”

என்று கத்தியவன், தொடர்ந்து ‘லூஸு’ என்றும் கத்த நினைத்திருந்தான். ஆனால் காலையில் அவள் சீறியது ஞாபகம் வர, அப்படியே வாய்க்குள்ளேயே அந்த வார்த்தையை போட்டு மென்றான். ஆனால்.. ப்ரியா புரிந்து கொண்டாள்.. அடுத்து என்ன சொல்ல நினைத்திருப்பான் என்று.. அவன் கத்தியது பாதியிலேயே தடைப்பட்டுவிட்டது மாதிரி ஒரு உணர்வு அவளுக்கு..!! அவனுடய கண்ணோரமாய் துணிப்பந்தை வைத்து அழுத்தியவாறே..

“பரவால.. சொல்லிக்கோ..!!” என்றாள் மெல்லிய குரலில். அதற்கு மேலும் அசோக்கால் அடக்கிக்கொள்ள முடியவில்லை.

“லூஸு..!!!!” என்று வாய்விட்டு கத்தின பிறகுதான் அவனுக்கு நிம்மதியாக இருந்தது.

அவன் கத்தியதற்கு ப்ரியா மெலிதாக புன்னகைத்துக் கொண்டாள். கவனமாக அவனுடய கண்ணுக்கு கொஞ்ச நேரம் ஒத்தடம் கொடுத்தாள். ஒத்தடம் கொடுத்தது அசோக்கின் கண்ணில் ஏற்பட்டிருந்த வேதனையை வெகுவாக குறைத்தது. ஓரிரு நிமிடங்களுக்கு அப்புறம் மெல்ல கண்ணை திறந்து பார்த்தான். இமைகளை ஒருமாதிரி சுருக்கி சுருக்கி விழித்தான்.

“ப்ச்.. ஒன்னும் இல்லடா.. ஓவரா ஸீன் போடாத..!!” ப்ரியா நக்கலாக சொன்னாள்.

“அடிங்.. பண்றதையும் பண்ணிட்டு.. நான் ஓவர் ஸீன் போடுறனா..??”

“நான் என்ன பண்ணினேன்.. வெளையாட்டுனா அடிபடுறது சகஜம்தான்.. அதுக்கு நான் என்ன பண்ணுவேன்..??”

“வெளையாட்டுலாம் இல்ல.. நீ வேணும்னே பண்ணுன.. எனக்கு நல்லா தெரியும்..!! வெறியாட்டம் ஆடிட்டு.. வெளையாட்டாம்ல வெளையாட்டு..!!” அசோக் கடுப்புடன் சொல்ல, ப்ரியா அதை கண்டுகொள்ளாமல் கூலாக சொன்னாள்.

“சரி விடு.. வா.. இன்னொரு கேம் ஆடலாம்..!!”

“எதுக்கு..?? இன்னொரு கண்ணையும் நொள்ளையாக்குறதுக்கா..??”

“ஹாஹா.. நான்தான் வேணுன்னு பண்ணலைன்னு சொல்றேன்ல..??”

“நீ வேணுன்னு பண்ணுனியோ.. வேணாம்னு பண்ணுனியோ..!! எனக்கு ஸ்குவாஷ் மேல இருந்த ஆசையே போச்சு..!!”

“ஓ..!! அப்போ இனி நீ ஸ்குவாஷ் ஆட மாட்ட..??” ப்ரியா அசோக்கை கூர்மையாக பார்த்தவாறு கேட்டாள்.

“ஏழேழு ஜென்மத்துக்கும் ஆட மாட்டேன்.. யப்பா..!!” அசோக் தலையை உதறியவாறே சொன்னான்.

“ஹ்ம்ம்.. ஓகே.. நல்ல முடிவு..!! நாளைப்பின்ன.. வேற யார் கூடவாவது வெளையாடுனேன்னு தெரிஞ்சது..??”

“என்ன பண்ணுவ..??”

“ஒண்ணுல்ல.. ‘நாம ரெண்டு பேரும் ஒரு கேம் ஆடலாம் வா..’னு கூப்பிடுவேன்..!!”

ப்ரியா குறும்பாக சொல்லிவிட்டு சிரிக்க, அசோக் அவளையே முறைத்து பார்த்தான்.

அத்தியாயம் 20

அப்புறம் வந்த சில நாட்கள் அசோக்கிற்கும், ப்ரியாவிற்கும்.. அந்த மாதிரி வெறுப்பும், முறைப்புமாகவே கழிந்தன..!!

அறத்திற்கு மட்டும் அல்லாது மறத்திற்கும் அன்புதான் துணை என்கிறார் வள்ளுவர்..!! அன்பை வெளிப்படுத்த பலவிதங்கள் உண்டு.. கோவம் அதில் ஒரு பிரதான வகை..!! சாப்பிட அடம்பிடிக்கும் குழந்தையை கன்னத்தில் அறை போட்டு சாதத்தை வாயில் திணிக்கிறாள் அம்மா.. கன்னத்தில் விழுந்த அறை மறம் என்றால்.. அதற்கான காரணம் அன்பல்லவா..?? கன்னத்தில் அறைந்துவிட்டு சாதத்துடன் சேர்த்து அன்பையும் அல்லவா பிசைந்து ஊட்டுகிறாள்..?? அசோக்கை ப்ரியா அடித்து வீழ்த்தியதற்கும் அத்தகைய அன்புதான் காரணம்..!!

இத்தனை நாளாய் அசோக் தனக்கு உரியவன் என்றே நம்பியிருந்தாள். இப்போது அவன் வேறொருத்திக்கு சொந்தமானவன் என்று தெரிந்ததும், அவன் மீதான அவளுடைய காதல் கொஞ்சமும் குறைந்து போகவில்லை. மாறாக வேறொரு விதமாக அது அதிகரிக்கத்தான் செய்தது. அசோக்கையும் செண்பகத்தையும் சேர்த்து வைத்து பார்க்கையில் அவளுடைய மனதில் ஒரு பொசஸிவ் உணர்வு பொங்குகிறதே.. அந்த விதத்தில்..!! ஏதாவது அதிசயம் நடந்து இவன் தன்னுடன் இணைந்து விடமாட்டானா என ஏங்குகிறாளே.. அந்த விதத்தில்..!! ஆனால்.. அந்த காதலை அவள் வெளிப்படுத்துகிற விதந்தான் பிரச்சினைக்குரியதாக இருந்தது..!!

எதையும் மனதில் வைத்துக்கொள்ளாமல் எப்போதும் போலதான் நடந்து கொள்வாள். அசோக் மீதான அவளுடைய காதலை மிக இயல்பாகவே வெளிப்படுத்துவாள். காலையில் ஆபீஸ் வந்ததும் அசோக்கின் இடத்திற்கு சென்று,

“காலைல கோயிலுக்கு போனேன்டா.. உனக்கு நல்ல புத்தி குடுக்கனும்னு சாமியை வேண்டிக்கிட்டேன்..!!”

என்று கேலியும், சிரிப்புமாக சொல்லிக்கொண்டே அவனுடைய நெற்றியில் திருநீறு பூசிவிடுவாள். அவனும் முகத்தை முறைப்பாக வைத்துக்கொண்டு அவளுக்கு நெற்றி காட்டுவான். இருவரும் உருகி உருகி பேசிக் கொள்ளாவிட்டாலும், இலகுவான மனநிலையுடன் ஏதாவது பேசிக் கொண்டிருப்பார்கள்.

அப்புறம் காபி பிரேக்கின்போது.. செண்பகம் தனது கைக்குட்டையால் அசோக்கின் நெற்றியில் இருக்கும் திருநீறை ஒழுங்கு படுத்துவதை ப்ரியா காண நேரிடும்.. அவ்வளவுதான்..!! செண்பகம் இயல்பாய் செய்த ஒரு காரியம்.. ப்ரியா தனது இயல்பை தொலைக்க காரணமாகிவிடும்..!! கண்களை இடுக்கி இருவரையும் முறைத்துப் பார்ப்பாள். அசோக் மீதான அவளுடைய காதல் அப்புறம் அன்று முழுவதும் கோவமாகத்தான் வெளிப்படும். அந்த கோவத்தை காட்ட அவள் உபயோகப் படுத்திக்கொள்வது அவளுடைய பதவியைத்தான்..!! அவனுக்கு அவள் பாஸ் என்கிற வசதியைத்தான்..!!

உதாரணத்திற்கு சொல்ல வேண்டும் என்றால்.. அந்த திருநீறு விஷயம் நடந்த அன்று இரவு.. அசோக்கும் செண்பகமும் வேலை முடிந்து வீட்டுக்கு கிளம்ப தயாராகிக் கொண்டிருந்தார்கள். அதே நேரம் ப்ரியாவும் வேலையை முடித்து தனது அறையில் இருந்து வெளிப்பட்டாள். இவர்கள் இருவரும் ஜோடியாக கிளம்புவதை பார்த்ததும், அவளுடைய மனம் குரங்கு போல தாவ ஆரம்பித்து விட்டது. மனதில் ஒரு இனம்புரியாத எரிச்சலும், கோவமும்..!! ஆட்டையை கலைத்துவிட வேண்டும் என்று உடனடியாய் ஒரு ஆதங்கம்..!! நேராக அசோக்கின் இடத்திற்கு சென்று.. முக்கியத்துவமே இல்லாத ஒரு வேலையை குறிப்பிட்டு..

“அதை இன்னைக்கு முடிச்சு செக்கின் பண்ணிட்டு போ..!!” என்றாள் வில்லத்தனமாக.

அசோக் எரிச்சலானான். கடுப்பாக அவளை முறைத்தான். விவாதம் செய்தான். ப்ரியா பிடிவாதமும் கடுமையாகவும் இருக்க, கடைசியில் வேறு வழியில்லாமல் ஒத்துக்கொண்டான். அவனை நம்பி கிளம்பி தயாராக இருந்த செண்பகத்தை பரிதாபமாக பார்த்தான். ப்ரியா அவனுடைய பார்வையின் அர்த்தத்தை புரிந்துகொண்டவளாய்,

“கவலைப்படாத.. நான் அவளை ட்ராப் பண்ணிடுறேன்.. நீ வேலையை முடிச்சுட்டு போ..!!” என்று அசோக்கிடம் சொல்லிவிட்டு, அப்புறம் செண்பகத்திடம் திரும்பி,

“வா செண்பகம்.. நாம கெளம்பலாம்..!!” என்றாள்.

செண்பகமோ அசோக்கை ஏமாற்றமாக பார்த்தாள். அவஸ்தையாய் நெளிந்தாள். தன் மீது எப்பொழுதும் சிடுசிடுவென எரிந்து விழும் ப்ரியாவுடன், சேர்ந்து செல்ல தயங்கினாள். ப்ரியா விடவில்லை.

“ப்ச்.. வான்னு சொல்றேன்ல.. வா..!!”

என்று அவளுடைய புஜத்தை பற்றி தரதரவென இழுத்து சென்றாள். ‘வாடி.. மாமன் முதுகுல தொங்கிக்கிட்டேதான் போவியாக்குகும்..??’ என்று மனதுக்குள் ஏளனமாக கேட்டுக்கொண்டாள்.

- தொடரும்

மேலும் செக்ஸ் கதைகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் :

தமிழ்காமவெறி தளம்

ஐ ஹேட் யூ, பட் – பகுதி 33

$
0
0

வண்டியில் கோணபன அக்ரஹாரத்தை தாண்டி செல்கையில்.. இயல்பான குரலில் ப்ரியா ஆரம்பித்தாள்.. செண்பகத்தின் மனதை அறிய தூண்டில் போட்டு பார்த்தாள்..!!

“என் ஃப்ரண்ட் ஒருத்தி சென்னை ஐ.பி.எம்ல வொர்க் பண்றா செண்பகம்..!! அவளும் டீம்லீட்தான்.. அவங்க டீம்க்கு ஒரு ரிசோர்ஸ் தேவைப்படுது.. யாராவது தெரிஞ்ச ஆளு இருந்தா சொல்லுடின்னு கேட்டுட்டே இருக்கா.. அவ சொன்ன ப்ரோஃபைல் எக்ஸாக்டா உனக்கு மேட்ச் ஆகுது..!!”

மேலும் செக்ஸ் கதைகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் :

தமிழ்காமவெறி தளம்

“ஓ..!!”

“உனக்கு இன்ட்ரஸ்ட் இருக்கா..?? நல்ல டீம்.. வொர்க்லாம் எக்சலன்ட்டா இருக்கும்.. உன் கேரீர்க்கு ரொம்ப யூஸ்ஃ புல்லா இருக்கும்.. நல்ல ஆப்பர்ச்சூனிட்டி..!! ஸி.டி.ஸி.யும் இங்க விட ரெண்டு லட்சம் ஜாஸ்தியா கெடைக்கும்.. என்ன சொல்ற..??”

“இ..இல்லக்கா.. வேணாம்..!! எனக்கு பெங்களூர்ல இருக்கனும்னுதான் இன்ட்ரஸ்ட்..!!”

செண்பகம் தனது இயல்பான விருப்பத்தை சொல்ல, ப்ரியாவுக்கு மனதுக்குள் பரபரவென ஒரு எரிச்சல் கிளம்பியது. ‘தெரியுண்டி.. நீ போக மாட்டேன்னு எனக்கு நல்லா தெரியும்.. தெரிஞ்சுக்கிட்டேதான் கேட்டேன்..!! நீங்க ரெண்டு பேரும் ஒண்ணா ஊர் சுத்துறதுக்கும்.. சேந்து கூத்தடிக்கிறதுக்கும்.. என் மூலமாவே ரெஸ்யூம் ஃபார்வர்ட் பண்ணி இந்த கம்பனிக்குள்ள நொழைஞ்சவளாச்சே நீ..?? நீயா பெங்களூர் விட்டு கெளம்புவ..?? வேலை கெடைக்கிற வரை ரெண்டு பேருமே எப்புடி கமுக்கமா இருந்தீங்க..?? வேலை கெடைச்சதுந்தான உங்க திருட்டுத்தனம் எனக்கே புரியுது..!! கோடி ரூவா குடுத்தாலும் நீ போகமாட்டன்னு எனக்கு தெரியும்..!!’ என்று மனதிற்குள்ளேயே செண்பகம் மீது வெறுப்பை உமிழ்ந்தவள், வண்டியை சரக்கென்று சடன் ப்ரேக் அடித்து நிறுத்தினாள்.

“எ..என்னக்கா..?? என்னாச்சு..??” குழப்பமாய் கேட்ட செண்பகத்திடம்,

“ஹேய்.. ஸாரி செண்பகம்.. எனக்கு சிங்கசந்த்ரால ஒரு முக்கியமான வேலை இருக்கு.. இப்போதான் ஞாபகம் வந்தது..!! நான் இப்படி ரைட் எடுக்குறேன்.. நீ ஏதாவது ஆட்டோ பிடிச்சு வீட்டுக்கு போயிடு..!!” என்று கூலாக சொல்லிவிட்டு, பாதிவழியிலேயே அவளை இறக்கிவிட்டு பறந்தாள் ப்ரியா.

ப்ரியாவுடைய மனதில் இருந்த வலியை அவள் ஒருத்தியால் மட்டுமே புரிந்து கொள்ள முடியும். அவளுடைய காதல் கானல் நீராய் போனதில் அவளுக்குள் எழுந்த ஏமாற்றம், அவளுடைய மனதையும் மூளையும் வெகுவாக பாதித்திருந்தது. எந்த நேரமும் ஒரு உணர்ச்சி அழுத்தத்தின் பிடியிலேயே இருந்தாள். டீமில் உள்ளவர்களிடம் காரணம் இல்லாமல் எரிந்து விழுந்தாள். ஆனால்.. வீட்டுக்கு சென்றால் வேறுவிதமாக மாறிவிடுவாள். அவளுடைய உற்சாகமும் துள்ளலும் அடங்கிப்போய், அமைதியும் விரக்தியுமாய் திரிந்தாள். மகளுடைய மாற்றத்தை வரதராஜனால் உடனடியாக புரிந்து கொள்ள முடிந்தது.

???????????????????????????????????

“ஏன்மா.. எப்போவும் எதையோ பறிகுடுத்த மாதிரியே இருக்குற..??” என்று அன்பாக கேட்டார்.

“இ..இல்லையே.. நான் எப்போவும் போலதான் இருக்குறேன்..!!” ப்ரியா சமாளிக்க முயன்றாள்.

“ஹ்ம்ம்.. அந்த எடம் அமையாம போனதுல உனக்கு எதுவும் வருத்தமாமா..??”

“ச்சேச்சே.. அதெல்லாம் ஒன்னும் இல்ல டாடி..!! யாருக்கு யாருன்னு எழுதி வச்சபடிதான நடக்கும்..?? அதுக்காகலாம் கவலைப்பட்டு என்ன ஆகப் போகுது.. எனக்கு ஒன்னும் வருத்தம்லாம் இல்ல டாடி..!!”

மனதில் கொள்ளை கொள்ளையாய் இருந்த வருத்தத்தையும், ஏமாற்றத்தையும் மறைத்துக்கொண்டு, ப்ரியா பொய் சொன்னாள். அப்படியே அப்பாவுடைய மடியில் தலைசாய்த்து படுத்துக் கொண்டாள். அவரும் இவளுடைய தலையை இதமாக கோதிவிட்டவாறே சொன்னார்.

“கவலைப்படாதமா.. கூடிய சீக்கிரம் அப்பா உனக்கு இன்னொரு நல்ல மாப்ளையை தேடி கொண்டு வர்றேன்..!!”

“டாடி ப்ளீஸ்.. எனக்கு இப்போதைக்கு கல்யாணம் வேணாம்.. இன்னும் கொஞ்ச நாள் போகட்டும்..!!”

“ஐயோ.. ஏன்மா அப்படி சொல்ற..??”

“ப்ளீஸ் டாடி.. என்னை எதுவும் கேக்காதீங்க..!!”

முட்டிக்கொண்டு வருகிற கண்ணீரை அடக்கிக்கொண்டே ப்ரியா சொன்னாள். மகளுடைய காதலை மறைமுகமாக கெடுத்துவிட்டோம் என்பதை அறியாமலே வரதராஜன் அவளுக்காக உருகினார். அவளுடைய நெற்றியில் முத்தமிட்டு அன்பை பொழிந்தார்.

ப்ரியாவின் வீட்டில் இப்படி என்றால்.. அசோக்கின் வீட்டில் நிலைமை வேறு விதமாக இருந்தது..!! அசோக்கின் நிலை மிகவும் கவலைக்கிடமாக இருந்தது..!! பெண் பார்த்த விஷயத்தில் அசோக் பல்டி அடித்ததில் இருந்தே, ராஜேஷும் செல்வியும் அவனை மதிப்பதே இல்லை. அவனை பார்க்க நேரிடும்போதெல்லாம் முறைப்பையே வெளிப்படுத்தினர். அந்த பிரச்னையன்று அவன் சொன்னதையே குத்திக்காட்டி பேசினார்கள்..!!

??????????????????????????????????????

மடிக்கணினி மூலமாக இணையத்தை தொடர்புகொள்ள முடியாத எரிச்சலுடன், அசோக் அண்ணனிடம் வந்து கேட்டான்.

“ஹேய்.. நெட் கனெக்ட் ஆகலடா..!!”

“என்னை பாத்தா கஸ்டமர்கேர் ஆள் மாதிரியா தெரியுது உனக்கு..??” ராஜேஷின் குரலில் ஆரம்பத்திலேயே ஒரு கிண்டல்.

“ப்ச்.. போன மாச இன்டர்னட் பில்க்கு செக் ஒன்னு குடுத்தனே.. என்னாச்சு..??”

“அதுவா..?? அந்த டேபிள்ல பத்திரமா வச்சிருக்கேன் பாரு..!!”

“என்னது..?? டேபிள்ல பத்திரமா வச்சிருக்கியா..?? டெபாசிட் பண்ண சொல்லித்தான உன்கிட்ட குடுத்தேன்..??”

“ஆமாப்பா.. நீ இன்னைக்கு டெபாசிட் பண்ணுன்னு சொல்வ.. அப்புறம் நாளைக்கே ‘ஒரு கோவத்துல டெபாசிட் பண்ண சொல்லிட்டேன்’னு சொல்லி சண்டை போடுவ.. எதுக்குடா வம்புன்னு நான் செக்கை பத்திரமா வச்சிருக்கேன்..!! உன் பேச்சை நம்பி.. இனி நான் எந்த வேலையும் செய்ற மாதிரி இல்ல..!!”

அலட்சியமாக சொல்லிவிட்டு எழுந்து செல்கிற அண்ணனை, அசோக் கடுப்பாக பார்த்தான். அப்புறம் அந்த செக்கை தூக்கிக்கொண்டு அவனே பி.எஸ்.என்.எல் ஆபீசுக்கு ஓடினான். ராஜேஷ் இப்படி என்றால் செல்வி வேறு மாதிரி அசோக்கை நோகடித்தாள்.

அன்று அசோக்கின் கல்லூரி நண்பன் ஒருவன் அவர்கள் வீட்டிற்கு வந்திருந்தான். இருவரும் டிவி பார்த்துக்கொண்டே கதையடித்துக் கொண்டிருந்தார்கள். ‘காபி போடுங்க அண்ணி..!!’ என்று அசோக் சொல்லி அரை மணி நேரம் ஆயிற்று. காபி ஹாலுக்கு வந்த பாடில்லை. சந்தேகமுற்ற அசோக் எழுந்து வீட்டுக்குள் சென்று பார்த்தான். கிச்சனில் செல்வியை ஆளைக் காணோம். உள்ளறைக்குள் துணி மடித்துக் கொண்டிருந்தாள்.

“என்ன அண்ணி.. வீட்டுக்கு கெஸ்ட் வந்திருக்காங்க.. நீங்க இங்க வந்து உக்காந்திருக்கீங்க..??”

“அங்க வந்து நான் என்ன பண்ணப்போறேன்.. நான் ஏதாவது எதார்த்தமா பேசுவேன்.. அது உனக்கு புடிக்காது.. ‘ஏன் இப்படி குடும்ப மானத்தை வாங்குறீங்க’ன்னு கத்துவ.. எனக்கெதுக்கு வம்பு..?? நீயே உன் பிரண்டுட்ட பேசி பேசி.. நல்லா நம்ம குடும்ப மானத்தை காப்பாத்து..!!” செல்வி கேலியாக சொல்ல, அசோக் அவளை முறைத்தான்.

“சரி.. காபி போட்டு குடுத்துட்டாவது.. இங்க வந்து உக்காந்துக்கலாம்ல..??”

“ஆமாம்.. நீ காபி போட சொல்வ.. போட்டு எடுத்துட்டு வந்தா.. ‘நான் என்ன காபியா கேட்டேன்.. காராபூந்தில கேட்டேன்’னு சொல்வ..!! மாத்தி மாத்தி பேசுவ.. உன்கூடலாம் என்னால போராட முடியாதுடா சாமி..!! எது வேணுன்னாலும்.. நீயே போட்டுக்கோ..!!”

சலிப்பாக சொல்லிவிட்டு மடித்த துணியுடன் பீரோ நோக்கி செல்கிற அண்ணியை, அசோக் எரிச்சலாக பார்த்தான். அப்புறம் கிச்சன் சென்று கையெல்லாம் சுட்டுக்கொண்டு காபி போட்டான்.

ப்ரியா மீது கொண்ட காதலுக்காக அசோக் தனது வீட்டில் இருப்பவர்களை பகைத்துக் கொண்டான். ஆனால்.. அந்த ப்ரியாவோ ஆபீஸில் செய்கிற அட்டூழியங்கள் அவனுக்கு வேதனையையே கொடுத்தன..!! தன் மீது மட்டும் இல்லாமல்.. தனக்கு உறவுக்காரி என்ற காரணத்துக்காக செண்பகம் மீதும் அவள் வெறுப்பை உமிழ்வதாக அவனுக்கு தோன்றியது..!! ப்ரியாவின் மீதான ஒரு இனம்புரியாத வெறுப்பு அதிகரித்துக்கொண்டே சென்றது..!! அந்த மாதிரி அவனுடைய வெறுப்பை அதிகமாக்கிய இன்னொரு சம்பவம்..

மென்பொருளின் முதல்கட்ட டெலிவரிக்காக.. க்ளையன்ட் கம்பனியில் இருந்து.. அவர்கள் டீமில் இருப்பவர்களுக்கு தனித்தனியாக நற்சான்றிதழ்கள் அனுப்பி வைத்தார்கள்..!! யாராருக்கு சான்றிதழ் வழங்கவேண்டும் என்ற பட்டியலை அவர்களுக்கு அனுப்பி வைத்தது ப்ரியாதான்..!! அதில் செண்பகம் பெயரை சேர்க்காமல் விட்டுவிட்டாள்..!! டீமில் எல்லோர் கையிலிருக்கும் சான்றிதழகை செண்பகம் சற்றே ஏக்கமாக பார்க்க.. அசோக்கிற்கு பொறுக்க முடியவில்லை..!! ப்ரியாவிடம் சென்று சண்டை பிடித்தான்..!!

“ஏன் ப்ரியா இப்படி பண்ணின..??”

“என்ன பண்ணினேன்..??”

ப்ரியா விஷயம் தெரிந்துகொண்டே முறைப்பாக கேட்டாள். ‘தன் காதலிக்கு சர்ட்டிஃபிகேட் கிடைக்காத ஆத்திரத்தில் சப்போர்ட்டுக்கு வந்திருக்கிறானா..??’ என்று இன்ஸ்டண்டாய் அசோக்கின் மீது அவளுக்கு ஒரு எரிச்சல்..!!

“அந்த லிஸ்ட்ல செண்பகம் பேரையும் ஆட் பண்ணிருக்கலாம்ல..?? அவளுக்கும் அந்த சர்ட்டிஃபிகேட் கெடைச்சிருக்கும்ல..??” அசோக்கின் கேள்விக்கு அவள் தயாராகத்தான் இருந்தாள்.

“ப்ச்.. ஃபர்ஸ்ட் ஃபேஸ் டெலிவரி முடிஞ்சப்புறந்தான் அவ டீமுக்குள்ளயே வந்தா.. அவளை எப்படி அந்த லிஸ்ட்ல சேக்குறது..?? அது தப்பு..!!”

“இந்த சின்ன விஷயத்துக்குலாமா ரூல்ஸ் அண்ட் ரெகுலேஷன்ஸ் பார்ப்ப..?? இதுலாம்.. ஜஸ்ட்.. டீமுக்குள்ள ஒருத்தொருக்கொருத்தர் பண்ணிக்கிற சின்ன சின்ன ஹெல்ப்தான..?? டீம்ல எல்லாருக்கும் கெடைக்கிறப்போ.. அவளுக்கு மட்டும் இல்லைன்னா.. அது அவளுக்கு கஷ்டமா இருக்காதா..?? அந்த சர்டிஃபிகேட் வச்சு அவ பெருசா ஏதும் சாதிக்கப் போறது இல்ல.. ஆனா ஏதோ ஒரு வகைல அவ கேரீர்க்கு அது ஒரு அட்வாண்டேஜா இருந்திருக்கும்..!! அதை நீ ஸ்பாயில் பண்ணிட்ட..!!”

“நான் எதையும் ஸ்பாயில் பண்ணல.. என்ன பண்ணணுமோ அதைதான் பண்ணேன்.. எது சரியோ அதைதான் செஞ்சேன்..!!”

“அப்படி என்ன அவ மேல உனக்கு வெறுப்பு..??”

“எனக்கு யார் மேலயும் விருப்பும் இல்ல.. வெறுப்பும் இல்ல..!! உனக்கு அவளை புடிக்கும்னா.. நீயே நல்லா கொஞ்சிக்கோ.. எல்லாரையும் வந்து கொஞ்ச சொல்லாத..!!” ப்ரியா சூடாக சொல்ல, அசோக் நொந்து போனான்.

“நீ செய்றது தப்புன்னு உனக்கு தோணலையா ப்ரியா..??” குரலில் சற்றே ஏக்கம் தொனிக்க கேட்டான்.

“இல்ல.. தோணலை..!!” ப்ரியா வெடுக்கென சொல்ல, அசோக் வெறுப்பாக அவளை பார்த்தான்.

“ம்ம்ம்ம்…!!! என்னை ‘ஈகோ புடிச்சவன்.. ஈகோ புடிச்சவன்..’ன்னு சொல்வல..?? என்னை விட உனக்குத்தான் அது பலமடங்கு இருக்கு..!!”

“எனக்கா..?? ஈகோவா..?? ஹாஹா..!!” ப்ரியா ஏளனமாக சிரித்தாள்.

“சிரிக்காத..!! எல்லாத்துக்கும் ஒரு நாள் ஃபீல் பண்ணத்தான் போற..!!”

அசோக் ஆத்திரமாய் சொல்லிவிட்டு அந்த அறையை விட்டு வெளியேறினான். அதன்பிறகு ப்ரியா வெகுநேரம் எங்கேயோ வெறித்துப் பார்த்தவாறு அமர்ந்திருந்தாள்.

அவளுக்கு புரியாமல் இல்லை..!! அவள் டெக்லீட் ஆனபோது.. அசோக் சவால் விட்டபோது.. அடிக்கடி அவன் சீண்டியபோது.. அவளுக்குள் ஒரு ஈகோ எழுந்தது..!! பிறகு அன்று நள்ளிரவு மன்னிப்பு கேட்டபிறகு அவர்களுக்கு இடையிலான உறவு சகஜ நிலைக்கு திரும்பியது..!! ஆனால்.. செண்பகத்தின் வருகைக்கு பின்.. அவளும் அசோக்கும் காதலிக்கிறார்கள் என்று அவளுக்கு சொல்லப்பட்ட பின்.. செண்பகம் மீது எழுந்த பொசஸிவ் உணர்வு.. தூங்கிக்கொண்டிருந்த ப்ரியாவின் ஈகோ உணர்வை மீண்டும் விழித்துக் கொள்ள செய்துவிட்டது..!!

எல்லாம் அவளுக்கு புரியத்தான் செய்தது..!! சில நேரங்களில்.. ‘ஏன் இப்படி எல்லாம் செய்கிறோம்.. அவர்களுடைய காதலை இலகுவாக ஏன் எடுத்துக் கொள்ளக்கூடாது..?? எதையும் மனதில் வைத்துக்கொள்ளாமல்.. இயல்பாக இருக்கலாமே..??’ என்று கூட அவளுக்கு தோன்றும்..!! ஆனால்.. அசோக் மீது அவள் வைத்திருக்கும் அதீத காதல்.. அவளை அப்படி இயல்பாக இருக்க விடாது..!! அவளையும் மீறி அவர்கள் மீது கோபமாக வெளிப்பட்டு விடும்.. அது அசோக்கின் பார்வையில் தவறாக தோன்றும்..!!

இந்தமாதிரி சூழ்நிலையில்தான் ஒருநாள்..!! அன்று காலை ப்ரியா ஆபீஸுக்கு வந்து அவளுடைய அறைக்குள் நுழைந்ததுமே, அவளுடைய செல்போனுக்கு ‘டிடிங்.. டிடிங்..’ என்று இரண்டு மெசேஜ்கள் அடுத்தடுத்து வந்து விழுந்தன. எடுத்து பார்த்தாள். ஒன்று அசோக்கிடம் இருந்து.. இன்னொன்று செண்பகத்திடம் இருந்து..!! ஆனால்.. இரண்டிலும் இருந்த விஷயங்கள் ஒன்றுதான்..!!

“காலைல எனக்கு கொஞ்சம் பர்சனல் வேலை இருக்கு.. ஆபீஸுக்கு வர்றதுக்கு ரெண்டு மணி நேரம் லேட் ஆகும்.. தேங்க்ஸ் ப்ரியா..!!”

?????????????????????????????????

இரண்டு பேரும் ஒரே நேரத்தில் ஒரே மாதிரியான மெசேஜ்களை அனுப்பியதை பார்த்ததும், என்னவென்று சொல்ல முடியாத ஒருவித எரிச்சலுக்கு ப்ரியா உள்ளானாள். ‘இவர்கள் இருவரும் ஜாலியாக ஊர் சுற்ற.. என்னிடமே அனுமதி கேட்கிறார்களா..??’ என்று அவளுடைய மனதில் இருந்த பொசசிவ்னஸ், ஒரு கற்பனையை ஓட்டி பார்த்தது. அவளுடைய ஈகோவை சுண்டிவிட்டது. அவர்களுடைய திட்டத்தை எப்படியாவது கெடுக்கவேண்டும் என்று நினைத்தாள். ‘என்ன செய்யலாம்..??’ என்று சுட்டுவிரலால் நெற்றியை தட்டியவாறே சில வினாடிகள் வில்லத்தனமாக யோசித்தாள். யோசனை சிக்கியதும்,அசோக்கின் நம்பருக்கு கால் செய்தாள். அவன் எடுத்து ஹலோ சொன்னதும் சீற்றமாக கேட்டாள்.

“எங்க இருக்குற..??”

“பிக்பஸார்ல..!!”

“செண்பகம்..??”

“ஹ்ம்ம்.. இந்தா பக்கத்துல நிக்கிறா..!!”

அசோக் இயல்பாக சொல்ல, ‘ஹ்ம்ம்.. நான் நெனச்சது சரிதான்..!!’ என்று ப்ரியா முடிவு செய்தாள். ‘பக்கத்துல நிக்கிறாளோ.. இல்ல அவன் நெஞ்சுல படுத்து கெடக்குறாளோ..??’ என்று கற்பனையை மேலும் ஓட்டினாள்.

“அங்க என்ன பண்ணிட்டு இருக்குறீங்க ரெண்டு பேரும்..??”

“செண்பகம் இன்னைக்கு பி.ஜி. ஷிஃப்ட் ஆகுறா ப்ரியா.. சில திங்ஸ் வாங்க வேண்டி இருந்தது.. அதான் பர்சேஸ் வந்தோம்..!! ரெண்டு பேரும் லெவன் ஓ க்ளாக் போல ஆபீஸ் வந்துடுவோம்.. சரியா..??”

அசோக் சொன்ன காரணத்தில் ப்ரியாவுக்கு திருப்தி இல்லை. காதலியுடன் ஊர் சுற்ற, பொய்யாக ஒரு காரணம் சொல்கிறான் என்றே எண்ணினாள். சற்றுமுன் தான் யோசித்த திட்டத்தின்படி..

“அந்த அக்கவுன்ட் ஸ்விட்ச் ஃபங்ஷனாலிட்டி பத்தி.. க்ரிஸ்டோஃபர்ட்ட அப்ரூவல் வாங்க சொன்னனே.. என்னாச்சு..??” என்று ஆரம்பித்தாள்.

- தொடரும்

மேலும் செக்ஸ் கதைகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் :

தமிழ்காமவெறி தளம்


ஐ ஹேட் யூ, பட் – பகுதி 34

$
0
0

“இ..இன்னும் வாங்கலை ப்ரியா..!! அவன் டெமோ வேணுன்னு கேட்டான்..!!” அசோக் சற்று தடுமாற்றமாகவே சொன்னான்.

“எப்போ அவனுக்கு டெமோ கொடுக்க போற..??”

“நா..நாளைக்கு..!!”

மேலும் செக்ஸ் கதைகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் :

தமிழ்காமவெறி தளம்

“அவன் நாளைல இருந்து ரெண்டு நாள் லீவ்ல போறான்..!! தெரியுமா..??”

“ஓ..!! அப்போ சரி.. அவன் திரும்ப வந்தப்புறம் குடுக்குறேன்..!!”

“நோ வே..!! ரெண்டு நாள்லாம் அந்த இஷ்யூ பெண்டிங்லபோட முடியாது.. அது ரொம்ப க்ரிட்டிக்கல் இஷ்யூ..!!” ப்ரியா பொய் சொன்னாள்.

“ப்ச்.. இப்போ என்ன பண்ணலாம்னு சொல்ற..??” அசோக் இப்போது சற்று எரிச்சலுற்றவனாய் கேட்டான்.

“பர்சேஸ்னா.. பக்கெட்டு, மக்கு வாங்கணும்.. அவ்ளோதான.. அதை அவளே தனியா வாங்கிக்கட்டும்..!! நீ உடனே கெளம்பி வா.. அவன் நைன் ஓ க்ளாக் போல கெளம்பிடுவான்.. அதுக்குள்ளே வந்து அவனுக்கு டெமோ குடுத்து அப்ரூவல் வாங்கு..!!”

“நைன் ஓ க்ளாக்’குக்கா..?? என்ன வெளையாடுறியா..?? நான் மடிவாலால இருக்குறேன்டி.. இன்னும் டென் மினிட்ஸ்ல எப்படி எலக்ட்ரானிக் சிட்டி வர்றது..??”

“அதுலாம் எனக்கு தெரியாது.. அவன் கெளம்புறதுக்குள்ள நீ ஆபீஸ்ல இருக்கணும்.. அவ்ளோதான்..!!”

“ப்ச்.. இதெல்லாம் நேத்தே சொல்றதுக்கு என்ன..?? திடீர்னு வந்து இப்படி கிரிட்டிக்கல் இஷ்யூன்னா என்ன அர்த்தம்..??” அசோக் சூடாக கேட்க,

“நீ இப்படி திடீர்னு ஊர் சுத்த கெளம்புவேன்னு எனக்கு எப்படி தெரியும்..??” ப்ரியாவும் பதிலடி கொடுத்தாள்.

“போடீ.. என்னால முடியாது..!!”

“பாரு அசோக்.. அந்த இஷ்யூ இன்னைக்கு முடியலைன்னா.. அப்புறம் நான் மேட்டரை எஸ்கலேட் பண்ணவேண்டி இருக்கும்.. பிரச்சினையை நீ தான் ஃபேஸ் பண்ணனும்.. பாத்துக்கோ..!! நான் சொல்ல வேண்டியதை சொல்லிட்டேன்.. அப்புறம் உன் இஷ்டம்..!!”

மிரட்டலாக சொல்லிவிட்டு ப்ரியா காலை கட் செய்தாள். செல்ஃபோனை தூக்கி ஓரமாய் போட்டாள். இரண்டு கைகளையும் விரித்து, முகத்தை அதில் கவிழ்த்துக் கொண்டாள். தான் செய்தது சரியா தவறா என்று மனதுக்குள்ளேயே பட்டி மன்றம் நடத்தினாள்.

ஒரு ஐந்து நிமிடம் ஆகியிருக்கும். அவளுடைய செல்போன் கிணுகிணுத்தது. எடுத்து பார்த்தாள். ‘அசோக் காலிங்..’ என்றது டிஸ்ப்ளே..!! கால் பிக்கப் செய்து காதில் வைத்தாள். எரிச்சலாகவே கேட்டாள்.

“ப்ச்.. எதுக்கு இப்போ கால் பண்ணிட்டு இருக்குற.. கெளம்புனியா இல்லையா..??”

ஆனால்.. இப்போது அடுத்த முனையில் அசோக்கின் குரலுக்கு பதிலாக இன்னொரு ஆளின் குரல் கரகரப்பாக ஒலித்தது.

“ஏம்மா.. இந்த செல்போன் வச்சிருந்த தம்பியை உங்களுக்கு தெரியுமா..??”

“தெ..தெரியும்.. நீ..நீங்க..??” ப்ரியா பட்டென குழப்புமுற்றவளாய் கேட்டாள்.

“இந்த தம்பிக்கு ஆக்சிடன்ட் ஆயிடுச்சுமா.. லாரில போய் மோதிடுச்சு..!!”

அந்த ஆள் சொல்ல, வாழ்நாளின் மிக மோசமான அதிர்ச்சியை ப்ரியா உள்வாங்கினாள்.

“வாட்..?????” என்று விழிகள் விரித்து கத்தினாள்.

“ஃபோன்ல கடைசியா இந்த நம்பருதான்மா இருந்தது.. அதான் இதுக்கு கால் பண்ணினேன்..!! சென்ட் ஜான்சுக்கு தூக்கிட்டு போறோம்.. இவரு வீட்டுக்கு தகவல் குடுத்து.. உடனே கெளம்பி வர சொல்லும்மா..!!”

ப்ரியாவுக்கு இப்போது கண்கள் செருகிக்கொண்டன. மயக்கம் வருவது போலிருக்க, தலையை பிடித்துக் கொண்டாள். அவளுடைய கையில் இருந்த செல்ஃபோன் நழுவி தரையில் விழுந்தது. அது நழுவுவதற்கு முன் அந்த ஆள் சலிப்பாக சொன்ன வார்த்தைகள், ப்ரியாவின் காதில் தெள்ளத் தெளிவாக வந்து விழுந்தன.

“சிக்னல் விழுறதுக்குள்ள அப்டியே பறக்குறாரு..!! ஹ்ஹ்ம்ம்.. அப்படி என்னதான் அவசரமோ..??”

ஸாரி ஃப்ரண்ட்ஸ்..!! மொத்தம் ஆறு எபிசோடுகளாக மெகா அப்டேட் கொடுத்து இந்தக்கதையை முடிக்க திட்டமிட்டிருந்தேன்..!! ஆனால்.. சற்று முன்பு வரை என்னால் ஐந்து எபிசொடுகளே எழுத முடிந்தது..!! காத்திருக்கும் நண்பர்களை ஏமாற்றவும் விருப்பம் இல்லை..!! அதனால்.. அப்டேட்டை இரண்டு பாகங்களாக பிரித்து.. இன்று, மூன்று எபிசொடுகளுடன் ஒரு பாகமாகவும்.. நாளையோ, நாளை மறுநாளோ.. மீதம் மூன்று எபிசொடுகளுடன் இன்னொரு பாகமாகவும்.. வெளியிட முடிவு செய்திருக்கிறேன்..!! நண்பர்களின் ஒத்துழைப்பை நல்குகிறேன்..!! இதோ.. கதைக்கடைசியின் முதல் மூன்று எபிசோடுகள்..!!

அத்தியாயம் 21

நீங்கள் அன்பு கொண்டிருப்பவரை தன்முனைப்புடன் அணுகுவது.. அளவற்ற வேதனையையே அள்ளித்தரும்.. அவருக்கு மட்டுமல்லாது உங்களுக்கும் சேர்த்து..!! தான் காதலிப்பவருக்கு சிறு கஷ்டம் நேர்ந்தாலே இதயம் பதைபதைத்து போகிறது.. கட்டுப்பாடின்றியே கண்கள் நீரை உகுக்க ஆரம்பிக்கின்றன.. அன்று நேத்ரா அழுதாளே.. அது மாதிரி..!! காய்ச்சலில் படுத்திருக்கும் காதலனுக்காவே நேத்ரா அந்த மாதிரி உருகிப் போனாள் என்றால்.. விபத்தில் காயம்பட்டு வீழ்ந்திருக்கும் காதலனை எண்ணி ப்ரியா எந்த மாதிரி உடைந்து போயிருப்பாள்..?? அதுவும் அந்த விபத்திற்கு காரணமே அவள்தான் என்று உணர நேருகையில்..!! அசோக்குடைய உடலில் பட்ட காயத்தின் அளவை விட.. ப்ரியாவின் உள்ளத்தில் ஏற்பட்ட காயத்தின் அளவுதான் பெரிதாக இருந்தது..!!

இதயத்தில் இடி விழுந்த மாதிரி இருக்க.. இரு கண்களும் இருட்டிக்கொண்டு வர.. மயங்கி சரிந்து.. சேரை தள்ளிவிட்டவாறு.. தரையில் வீழ்ந்தாள் ப்ரியா..!! அவளுடைய அறைக்கு மிக அருகில் அமர்ந்து வேலை பார்ப்பது கவிதாதான். அறைக்குள் ‘தட்..!!!’ என்று சேர் கவிழும் சப்தம் கேட்டதுமே படக்கென்று எழுந்து பார்த்தாள். ஒருவித பதட்டத்துடனே அறைக்குள் நுழைந்தவள், உள்ளே மயக்கமுற்று கிடந்த ப்ரியாவை காண நேரிட்டதும், அலறியே விட்டாள். கவிதாவின் அலறலை கேட்டு அனைவருமே எழுந்து ஓடி வந்தனர். அவசரம் தொற்றிக்கொன்றவர்களாய் ப்ரியாவின் மயக்கத்தை தெளிய வைத்தனர்.

கண் விழித்த ப்ரியா கண்ணீருடனே விபத்து பற்றிய விஷயத்தை எல்லோருக்கும் தெரிவித்தாள். பதறிப்போன ஹரி உடனே அசோக்கின் வீட்டிற்கு கால் செய்து விபரம் சொன்னான். கோவிந்த் பாலாவின் அறைக்கு ஓடி அவருடைய காரை இரவல் வாங்கி வந்தான். டீமில் இருக்கும் ஐந்து பேருமே அசோக்கை காண ஆபீசில் இருந்து பரபரப்பாய் காரில் விரைந்தனர். வழிநெடுக ப்ரியா புலம்பிக்கொண்டே வந்தாள்.

“எல்லாம் என்னாலதான்.. எல்லாம் என்னாலதான்..!!” தலையில் அடித்துக்கொண்டு அழுகிற ப்ரியாவை அருகிலிருந்த கவிதா ஆறுதலாக அணைத்துக் கொண்டாள்.

“ப்ச்.. அழாத ப்ரியா.. ப்ளீஸ்.. அவனுக்கு ஒன்னும் ஆகாது..!!”

கார் ஓட்டுகிற ஹரியும், அவனுக்கு பக்கத்தில் அமர்ந்திருந்த கோவிந்தும், பின்புறமாக திரும்பி ப்ரியாவை ஒருமுறை இரக்கமாக பார்த்தார்கள். ‘ப்ரியாவுடைய அழுகை, வெறும் நட்பினால் பிறந்ததா.. இல்லை.. அதையும் தாண்டிய உணர்வினாலா..?’ என்ற சந்தேகம் இப்போது எல்லோருக்குமே வந்திருந்தது. நேத்ராவுக்கு மட்டும், அன்று அழுதுகொண்டே அவள் கோவிந்தின் வீட்டுக்கு ஸ்கூட்டியில் பறந்தது நினைவுக்கு வந்து போனது.

கோவிந்த் அசோக்கின் செல் நம்பருக்கு கால் செய்து, அசோக்கை ஹாஸ்பிட்டலில் சேர்த்தவரிடம் பேசிக்கொண்டே வந்தான். அசோக்கின் நிலைமை பற்றி விசாரித்து தெரிந்து கொண்டான்.

“பயப்படுறதுக்குலாம் ஒண்ணும் இல்லையாம்.. ஹெல்மட் போட்டிருந்ததால தலை எதுவும் அடி இல்ல.. கைலதான் எலும்பு ஃப்ராக்சர் ஆயிருக்கும் போல.. ஆனா.. பெருசா கவலைப்படுறதுக்கு எதுவும் இல்லன்னு சொல்றாரு..!!”

கோவிந்தின் வார்த்தைகள் கொந்தளித்துக் கொண்டிருந்த ப்ரியாவின் மனதுக்கு ஓரளவு நிம்மதியை வார்த்தன. இருந்தாலும் அவளுடைய கண்கள் தொடர்ந்து நீரை சிந்திக்கொண்டேதான் இருந்தன.

கார் மருத்துவமனை சென்றடைந்தது. காரில் இருந்து இறங்கிய ஐந்து பேரும் அசோக் அனுமதிக்கப்பட்டிருக்கும் நான்காவது தளத்திற்கு அவசரமாய் விரைந்தார்கள். தம்பு பள்ளியிலும், ராஜேஷ் அலுவலகத்திலும் சிக்கிக்கொண்டதால், அவர்கள் இன்னும் வந்து சேர்ந்திருக்கவில்லை. தீவிர சிகிச்சைப் பிரிவை சார்ந்த அறை ஒன்றுக்கு வெளியே.. அதிர்ச்சியில் உடைந்து போனவளாய்.. அழுது ஓய்ந்து உறைந்து போனவளாய்.. செல்வி அமர்ந்திருந்தாள்..!! மருத்துவர்கள் அழைப்பிற்கும்.. மருந்து வாங்க அலைவதற்குமாய்.. செண்பகம்தான் அங்கும் இங்கும் ஓடிக் கொண்டிருந்தாள்.

“அ..அசோக்குக்கு என்னாச்சு..?? எப்படி இருக்கான் இப்போ..??”

கண்களில் நீருடன் தன் முன் நிற்கிற ப்ரியாவை செல்வி அதிர்ச்சியும் ஆச்சரியமுமாய் ஏறிட்டாள். ப்ரியாவும் செல்வியும் சந்தித்துக் கொண்டனர். ‘அசோக்குடன்தான் ப்ரியா ஆறு வருடங்களாக வேலை பார்த்திருக்கிறாள்’ என்ற விஷயம் செல்விக்கு தெரிய வந்தது. ‘அசோக்கிற்கும் ப்ரியாவுக்கும் திருமணப்பேச்சு நடந்திருக்கிறது’ என்ற விஷயம் மீதம் உள்ளவர்களுக்கும் தெரியவந்தது. அனைவருக்குமே ஆச்சரியம்..!! ஆனால் அந்த ஆச்சரியத்தை வெளிப்படுத்த முடியாதவாறு, அங்கு நிலவிய இறுக்கமான சூழ்நிலை அவர்களை தடுத்திருந்தது.

4

அசோக்கை மருத்துவமனையில் சேர்த்திருந்தவர் இவர்கள் அங்கே சென்றடைந்தபோது கிளம்பியிருந்தார். அவர் சொன்னதைப் போலவே, விபத்தினால் அசோக்கிற்கு பெரிய அளவு சேதம் எதுவும் இல்லை. இடது முழங்கை எலும்பு முறிவும்.. இரண்டு கால்களிலும் சிராய்ப்புகளும் மட்டுமே..!! முறிந்த எலும்பின் நகர்வு சற்று சிக்கலாகிப் போனதால்.. அறுவை சிகிச்சை மூலமே எலும்பை பொருத்தி நிலை நிறுத்த முடியும் என்றாகிப் போனது. ஆபரேஷன் தியேட்டருக்குள் அசோக் அடைபட்டிருக்க, அதற்கு வெளியே அனைவரும் கவலை தோய்ந்த முகத்துடன் காத்திருந்தனர்.

இவர்கள் சென்று சேர்ந்த அரை மணி நேரத்திற்கெல்லாம், ராஜேஷ் தம்புவுடன் ஹாஸ்பிடல் வந்து சேர்ந்தான். கணவனை கண்டதுமே, அதுவரை எங்கேயோ வெறித்த பார்வை பார்த்தபடி அமர்ந்திருந்த செல்வி, ‘என்னங்க..’ என்று கத்தியவாறு எழுந்து ஓடினாள்.

“அ..அவனுக்கு.. அவனுக்கு..” என்று வார்த்தை வராமல் திணறினாள். உடைந்து போய் அழ ஆரம்பித்தாள்.

“அழாதம்மா.. ஒண்ணுல்ல.. ஒண்ணுல்ல..!!” ஆறுதலாய் சொன்னவாறே ராஜேஷ் அவளை அணைத்துக் கொண்டான்.

“நைட்டு ஒரு கெட்ட கனவுன்னு காலைலேயே சொன்னனேங்க.. இப்படி ஆயிடுச்சே..??”

“அழாத செல்வி.. ப்ளீஸ்..!!”

“அவன் கை காலெல்லாம் ஒரே ரத்தங்க..!!”

சொல்லிவிட்டு செல்வி கண்ணீரை சிந்த ஆரம்பித்தாள். மனைவியின் அழுகை ராஜேஷையும் பாதித்தது. அவனுடைய கண்களும் மெல்ல கசிய ஆரம்பிக்க, அதை அவசரமாய் துடைத்துக் கொண்டான். அவர்களையே இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்த ப்ரியாவுக்கு, ‘சண்டை போடுறது எங்களுக்கு ஹாபி மாதிரி..!!’ என அசோக் அன்று புன்னகையுடன் சொன்னது ஞாபகம் வந்தது. வெளியே சண்டை போட்டுக்கொண்டாலும் உள்ளுக்குள் அவர்களுக்குள் இருக்கும் பாசப்பிணைப்பை அவளால் புரிந்து கொள்ள முடிந்தது. ‘இந்த குடும்பத்தில் ஒருத்தியாக எனக்கு கொடுத்து வைக்கவில்லையே..’ என்பது மாதிரியான ஒரு ஆதங்கம் அவளையும் அறியாமல் அவளுக்குள் எழுந்தது.

“ஹை.. ப்ரியா சித்தி..!!”

தம்பு கத்திக்கொண்டே அப்பாவின் கைகளில் இருந்து விடுபட்டு, ஓடிவந்து ப்ரியாவை கட்டிக்கொண்டான். சற்றே ஆச்சரியத்தில் திளைத்த ப்ரியாவும், உடனே அவனை ஆரத்தழுவிக் கொண்டாள். ‘ப்ரியாவின் புகைப்படத்தை காட்டி இவள்தான் உன் சித்தி என யாரோ சொல்லியிருக்கிறார்கள்’ என்பது மட்டும் எல்லோருக்கும் புரிந்தது. ஆனால்.. செல்வியாயிருக்கும் என ராஜேஷும்.. ராஜேஷாய் இருக்கும் என செல்வியும்.. அவர்கள் இருவருமாயிருக்கும் என அடுத்தவர்களும் நினைத்துக் கொண்டார்கள்..!! ‘இவள் எப்படி இங்கே..?’ என்று குழம்பிய ராஜேஷுக்கு ப்ரியா பற்றி செல்வியே எல்லாம் சொன்னாள்..!!

நண்பகல் ஒரு மணி அளவில்.. நல்லபடியாக அறுவை சிகிச்சை முடிந்து.. அசோக் பொது வார்டுக்கு மாற்றப்பட்டான்..!! ஆனால் சிகிச்சைக்காக அளிக்கப்பட்டிருந்த செடேட்டிவ் அவனை மயக்கத்துடனே வைத்திருந்தது. இடையில் ஒருமுறை அரைகுறை மயக்கத்துடன் அவன் விழித்தபோதே, அவனிடம் ஆறுதலாக ஓரிரு வார்த்தைகள் பேசிவிட்டு, காரில் வந்த அனைவரும் திரும்ப ஆபீஸ் கிளம்பினார்கள்.

‘நான் வரல.. நீங்க கெளம்புங்க..’ என்று ப்ரியா மட்டும் அங்கேயே தங்கிவிட்டாள். மயக்கத்தில் இருக்கிற அசோக்கின் அருகில் அமர்ந்தவாறு, அவனுடைய முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தாள். தனது முட்டாள்த்தனமான கோவத்தினால் கைமுறிந்து சுனங்கிப்போய் படுத்திருக்கும் காதலனை இரக்கத்துடன் பார்த்தாள். அவ்வப்போது அவளையும் அறியாமல் கண்களில் வழிந்த நீரை ரகசியமாய் துடைத்துக் கொண்டாள். யாரும் கவனிக்கவில்லை என்று தோன்றும்போது, தனது கையால் அசோக்கின் கையை பற்றி வாஞ்சையுடன் தடவினாள். ப்ரியாவின் இந்த செய்கைகளை எல்லாம் கவனித்த செல்வி, அவளை சற்றே வியப்பாகவும் வித்தியாசமாகவும் பார்த்தாள்.

மாலையில் அசோக் கண்விழித்து எழுந்ததும்.. எழுந்ததுமே அவன் சகஜமாக பேச ஆரம்பித்ததும்.. அதுவரை அங்கு நிலவிய இறுக்கமான சூழ்நிலை தளர்ந்து.. ஒரு இலகுவான சூழ்நிலை மெல்ல திரும்பியது..!! ப்ரியா மட்டும் அங்கேயே தங்கிவிட்டது அசோக்கை சற்றே ஆச்சரியமுற செய்தது. ஆனால் அவனுடைய மனமோ அவள் மீது ஒருவித வெறுப்பில் உழன்றதால், முகத்தில் எந்தவித உணர்ச்சியும் அவன் காட்டிக்கொள்ளவில்லை. கடந்த சில நாட்களாகவே கொஞ்சம் கொஞ்சமாய் ப்ரியாவின் மீது ஏறியிருந்த வெறுப்பு, இன்று உச்சபட்சத்தை எட்டியிருந்ததுதான் காரணம்.

அசோக் ப்ரியாவின் முகத்தை நேரிடையாக பார்ப்பதையே தவிர்த்தான். ஒருமுறை எதேச்சையாக பார்க்க நேர்ந்தபோது, அவள் பார்வையாலேயே பரிதாபமாக கெஞ்ச.. இவன் அவளை அலட்சியம் செய்தான்..!!

அசோக்கிற்கு ஸ்பூனில் சாப்பாடு ஊட்டிக்கொண்டே.. செல்வி அவன் மீதிருந்த அன்பை வெளிப்படுத்தினாள்.. அவளுடைய பாணியில்.. அவளுக்கு தெரிந்த விதத்தில்.. அதிகாரமும், கோபமுமாக..!!

“என்னைக்காவது யார் சொல்றதையாவது காது குடுத்து கேட்டாத்தான.. பொறுமையா போடா பொறுமையா போடான்னு.. எத்தனை நாள் சொல்லிருப்பேன்..?? பைக்கு ஓட்டுறதுனா எதோ ப்ளைட்டு ஓட்டுறது மாதிரி நெனைப்பு.. அப்படியே எடுத்த வாக்குல விர்ர்ருனு பறக்குறது..!!” என்று குழைத்த சாதத்தை அவனுடைய வாயில் திணித்தவாறே முறைப்பாக சொன்னாள்.

“ஷ்ஷ்ஷ்.. ப்பாஆஆஆ.. ஆரம்பிச்சாச்சா..??” அசோக் சலிப்பாக சொன்னவாறே சாதத்தை மென்றான்.

“அப்படி என்ன தலை போற அவசரம்னு கேக்குறேன்..?? எந்த கோட்டையை புடிக்க அம்புட்டு வேகம்..??” செல்வி அவனிடம் கேட்கும்போதே, ப்ரியாவுக்கு இங்கே சுருக்கென்று இருந்தது.

- தொடரும்

மேலும் செக்ஸ் கதைகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் :

தமிழ்காமவெறி தளம்

ஐ ஹேட் யூ, பட் – பகுதி 35

$
0
0

“ப்ச்.. இப்போ எதுக்கு அதுலாம்.. விடுங்க அண்ணி..!!” அசோக் ப்ரியாவை காட்டிக் கொடுக்கவில்லை.

“ஹ்ம்ம்.. அந்த பைக்கை யார்ட்டயாவது வித்துடுங்கன்னு உங்க அண்ணன்ட்ட சொல்லிப்புட்டேன்..!!”

“ஹையோ.. என்ன அண்ணி இது..?? பைக் இல்லாம நான் எப்படி ஆபீஸ் போறது..??”

மேலும் செக்ஸ் கதைகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் :

தமிழ்காமவெறி தளம்

“பஸ்ல போ.. வீட்ல இருந்து அஞ்சு நிமிஷம் நடந்தா கம்பனி பஸ் வரப்போகுது.. ஏறி போகப் போற..!! என்ன கஷ்டம் இருக்கு உனக்கு..??”

“ப்ச்.. பஸ்லலாம் என்னால போக முடியாது..!!”

“ஓஹோ.. முடியாதா..?? இனி நீ பைக்ல கெளம்புறதை பாத்துட்டு.. என்னாலையும் வீட்ல நிம்மதியா இருக்க முடியாது..!! எந்த சாமி புண்ணியமோ.. இந்த அளவோட போச்சு..!! நாங்க இனிமே நிம்மதியா இருக்கணும்னு நீ நெனச்சியின்னா.. ஒழுங்கா பஸ்லயே ஆபீஸ் போ..!!”

“இப்போ ஏன் தேவை இல்லாம பயப்படுறீங்க.. அதுலாம் திரும்ப இதுமாதிரி நடக்காது..!!”

“உனக்கு என்ன.. எல்லாம் வெளையாட்டுத்தான்..!! காலைல இருந்து நாங்க பட்ட வேதனை எங்களுக்குத்தான தெரியும்..!! இனிமே அந்த பைக்ல நீ காலை வையி.. கால் ரெண்டையும் ஒடைச்சு போட்டுர்றேன்..!!”

“ஏன்.. கை உடைஞ்சு படுத்து கெடக்குறது பத்தாதாக்கும்..??”

“ம்க்கும்.. இந்த லொள்ளுப்பேச்சுக்கு ஒன்னும் கொறைச்சலு இல்ல.. சொல்லுப்பேச்சு மட்டும் கேக்காத..!!”

அசோக்கும் செல்வியும் அந்த மாதிரி இயல்பாகவும் இலகுவாகவும் பேசிக்கொண்டது, அவர்களை பார்த்துக் கொண்டிருந்த ப்ரியாவையையும் செண்பகத்தையும் சற்றே இறுக்கம் தளர்ந்து புன்னகைக்க செய்தது. செல்வி காலையில் தன் கணவனிடம் காட்டிய கண்ணீர் முகத்திற்கும்.. இப்போது அசோக்கிடம் காட்டுகிற முறைப்பு முகத்திற்கும் நிறைய வேறுபாடுகள்.. ஒரே ஒரு ஒற்றுமையை தவிர..!! அசோக் மீது அவள் வைத்திருக்கும் பாசம்தான் அந்த ஒற்றுமை..!!

சிறிது நேரத்தில் நேத்ரா மீண்டும் மருத்துவமனைக்கு வந்தாள். அசோக்கின் மெடிக்கல் இன்ஷ்யூரன்ஸ் சம்பந்தமான டாகுமண்டுகளை ஆபீசில் இருந்து எடுத்து வந்திருந்தாள். அவர்களுடன் அமர்ந்து கொஞ்ச நேரம் பேசிக்கொண்டிருந்தவள், அப்புறம் அவசர வேலை இருக்கிறது என அங்கிருந்து கிளம்பினாள். அவள் ஆபீஸில் இருந்து வருகையில் எடுத்து வந்திருந்த ப்ரியாவின் ஸ்கூட்டி சாவியை ப்ரியாவிடம் ஒப்படைத்துவிட்டு சென்றாள்.

பிறகு ராஜேஷும், செல்வியும் சிறிது நேரம் ப்ரியாவிடம் பேசிக்கொண்டிருந்தார்கள். அவளுடைய குடும்பத்தை பற்றி விசாரித்து அறிந்து கொண்டார்கள். நின்று போன திருமணத்தைப் பற்றி பேச விரும்பாதவர்களாய், அந்தப் பேச்சை தவிர்த்தார்கள். அதனால் அப்போதும் கூட.. ‘ப்ரியாதான் தனக்காக பார்க்கப்பட்ட பெண்’ என்பது அசோக்கிற்கு தெரிய வரவில்லை. தன்னைப் பார்க்க வந்த அலுவலக தோழியை பற்றி அண்ணனும், அண்ணியும் விசாரித்து தெரிந்து கொள்கிறார்கள் என்று சகஜமாகவே எடுத்துக் கொண்டான்.

அப்புறம் வானம் இருட்டிய பிறகுதான் ப்ரியா அங்கிருந்து கிளம்பினாள். அவள் கிளம்புகையில்தான் செல்வி திடீரென ஏதோ ஞாபகம் வந்தவளாய் தன் தங்கையை பார்த்து சொன்னாள்.

“ஏய் செண்பகம்.. நீயும் ஹாஸ்டலுக்கு போகணும்லடி.. அக்கா கூடவே போயிடேன்..!!”

“இ..இல்லக்கா.. நான் அப்புறம் போய்க்குறேன்.. அ..அவங்களுக்கு எதுக்கு சிரமம்..??” செண்பகம் தயங்கினாள்.

“பரவால செண்பகம்.. வா.. நான் ட்ராப் பண்றேன்..!!” ப்ரியா இதமான குரலில் சொன்னாள்.

“இ..இல்லக்கா.. இட்ஸ் ஓகே..!!”

“ஏய்.. கூப்பிடுறாங்கல்ல.. போடீ..!!”

தங்கையின் தயக்கத்திற்கான அர்த்தம் புரியாமல் செல்வி எரிச்சலாக சொன்னாள். ஒரு சில வினாடிகள் அவஸ்தையாக நெளிந்த செண்பகம், அப்புறம் எழுந்து கொண்டாள். ப்ரியாவுடன் கிளம்பினாள்.

செண்பகமும் ப்ரியாவும் நான்காவது தளத்தில் இருந்து படிக்கட்டில் கீழே இறங்கினார்கள். இருவருக்குள்ளும் இப்போது ஒருவித இறுக்கம் நிறைந்திருந்தது. இயல்பாக பேசிக்கொள்வதில் ஒரு தயக்கம் இருந்தது. எதுவும் பேசிக்கொள்ளாமலே அமைதியாக ஒவ்வொரு படியாக இறங்கிக் கொண்டிருந்தார்கள். செண்பகம் அசோக்கை காதலிக்கிறாள் என்பது ப்ரியாவின் நம்பிக்கையாக இருந்ததால், அவனுக்கு நேர்ந்த இந்த விபத்தினால், தன்னைப்போலவே ஒரு தாங்க முடியாத வலியை அவளும் இப்போது அனுபவித்துக் கொண்டிருப்பாள் என்றே கருதினாள். ஓரக்கண்ணால் ஒருமுறை சென்பகத்தை பார்த்துக் கொண்டாள்.

செண்பகத்துக்கோ வேறொரு விதமான உணர்வு. ப்ரியாவின் அடக்குமுறையான அணுகுமுறையால் அசோக் இப்படி அடிபட்டு கிடக்கிறானே என்பது மாதிரியான உணர்வு. கொஞ்ச நேரத்திலேயே அந்த உணர்வை அடக்க முடியாமல், பட்டென ப்ரியாவிடம் கேட்டுவிட்டாள்.

“ஏ..ஏன்க்கா இப்படிலாம் பண்றீங்க..??”

????????????????????????????

அவ்வளவுதான்..!! அந்த ஒற்றை கேள்விக்கே ப்ரியா துடித்துப் போனாள். அவ்வளவு நேரம் காணாமல் போயிருந்த அந்த குற்ற உணர்வு, இப்போது குப்பென வந்து அவள் மனதை அப்பிக்கொண்டது. அம்பு தைத்த பறவையை போல, செண்பகத்தை மருட்சியாக ஒரு பார்வை பார்த்தாள். தடுமாற்றமாய் சொன்னாள்.

“ஸா..ஸாரி செண்பகம்.. நா..நான் ஏதோ.. தெ..தெரியாம..”

“நான் உங்களை குத்திக்காட்டனும்னு கேக்கலைக்கா..!! ஆக்சிடன்ட்டுக்கு நீங்கதான் காரணம்னு நான் சொல்லல.. ஆனா.. அவசரமும் டென்ஷனுமா மாமா இன்னைக்கு கெளம்புனதுக்கு நீங்கதான் காரணம்.. அந்த டென்ஷன்தான் இந்த ஆக்சிடன்ட்டுக்கு காரணம்..!! ‘வேணுன்னே எல்லாம் பண்றா செண்பகம்.. ஏன் இப்படிலாம் பண்றான்னே எனக்கு ஒன்னும் புரியலை..’னு வெறுப்பா சொல்லிட்டுத்தான் பைக்ல கெளம்பினாரு..!!”

“…………………..”

“அவரை ஏன் இப்படி டென்ஷனாக்கி வேடிக்கை பாக்குறீங்க..?? அவர் மேல அப்படி என்ன உங்களுக்கு வெறுப்பு..??”

“சேச்சே.. அ..அவன் மேல எனக்கு வெ..வெறுப்புலாம் எதுவும் இல்ல செண்பகம்..!! நெ..நெஜமாவே இன்னைக்கு ஒரு க்ரிட்டிக்கல் இஷ்..” ப்ரியா சமாளிக்க தடுமாறினாள்.

“இன்னைக்கு நடந்ததை மட்டும் வச்சு நான் சொல்லலைக்கா.. நானும் வந்ததுல இருந்து எல்லாம் கவனிச்சுட்டுத்தான் இருக்குறேன்.. நீங்க அவர்ட்ட எப்படி நடந்துக்குறீங்கன்னு நானும் பாத்துட்டுத்தான் இருக்குறேன்..!! அவரை வெரட்டி வெரட்டி அடிக்கிறீங்க நீங்க..!! ஆனா..” செண்பகம் சொல்ல வந்ததை பாதியிலேயே நிறுத்தினாள்.

“ம்ம்..?? ஆனா..??”

“மாமாவுக்கு உங்களை ரொம்ப பிடிக்கும்க்கா.. உங்களை பத்தி எப்போவும் நல்லவிதமாத்தான் பேசுவாரு.. அவருக்கு உங்க மேல எந்த வெறுப்பும் இல்ல..!! ஒருதடவை.. நானே உங்களை திட்டி பேசுனப்போ.. ‘ப்ரியா பத்தி இனி இப்படிலாம் பேசாத’ன்னு.. என் மேல கோவப்பட்டிருக்காரு..!! ஆனா.. உங்களுக்கு மட்டும் ஏன் அவர் மேல இவ்வளவு கோவம்..?? உங்க கோவத்தால அவரு இப்போ எப்படி கெடக்குறாருன்னு பாத்தீங்களா..??”

“…………………..” ப்ரியா பேச வார்த்தையின்றி சிலையாக நின்றிருந்தாள்.

“ப்ளீஸ்க்கா.. இனிமே இப்படிலாம் பண்ணாதீங்க.. மாமாவை புரிஞ்சுக்கங்க.. ப்ளீஸ்..!!”

செண்பகம் சொல்லிவிட்டு ப்ரியாவின் முகத்தை ஏக்கமாக பார்க்க, ப்ரியாவுக்கு என்ன பதில் சொல்வதென்றே புரியவில்லை. தேவையற்ற பொறாமை உணர்வால்.. தேவையற்ற வெறுப்பினை சிந்தி.. தேவையற்ற வேதனையை அனைவருக்கும் கொடுத்து.. தானுமே அந்த வேதனையில் சிக்கித்தவிக்கிறோம் என்று தெளிவாக புரிந்தது அவளுக்கு..!! அசோக்கின் நிலையை நினைக்க நினைக்க அழுகை வரும்போல இருந்தது. உதடுகளை கடித்து கட்டுப்படுத்திக் கொண்டாள்.

“ஸாரி செண்பகம்.. ஸாரி.. எல்லாத்துக்கும்..!! நான் செஞ்சது தப்புதான்..!!”

என்று கெஞ்சலாக சொன்னாள். செண்பகம் அப்புறம் அவளை எதுவும் கேட்கவில்லை. இருவரும் அதற்குமேல் எதுவும் பேசிக்கொள்ளாமல், அமைதியாக அந்த மருத்துவமனையின் கீழ்த்தளத்துக்கு வந்து சேர்ந்தார்கள். நுழைவாயில் விட்டு வெளியே வந்ததும், செண்பகம் வேறுபக்கமாய் திரும்பி நடக்க, ப்ரியா அவளை அவசரமாய் அழைத்தாள்.

“ஹேய்.. செண்பகம்.. பார்க்கிங் ஏரியா இந்தப்பக்கம்..”

“இல்லக்கா.. நான் ஆட்டோலேயே போய்க்குறேன்.. அதுதான் பெஸ்ட்.. அவன்தான் பாதில இறக்கிவிட மாட்டான்..!!”

செண்பகம் திரும்பிக்கூட பாராமல் சொல்லிவிட்டு, விடுவிடுவென நடையை தொடர்ந்தாள். போகிற போக்கில் ஒரு கூர்மையான அம்பாக பார்த்து எறிந்துவிட்டு செல்கிற செண்பகத்தை, ப்ரியா திகைப்பாய் பார்த்தவாறே சிறிது நேரம் நின்றிருந்தாள்.

அன்று இரவு.. அண்ணனும் அண்ணியும் தனக்காக பார்த்த பெண் ப்ரியாதான் என்ற விஷயம் அசோக்கிற்கு தெரியவந்தது. அவனுடைய கால் சிராய்ப்புக்கு மருந்து தடவிக்கொண்டே செல்விதான் ஆரம்பித்தாள்.

“அந்தப்பொண்ணு உனக்கு நல்ல பழக்கமாடா..??”

“எந்தப்பொண்ணு..??” அசோக் புரியாமல் கேட்டான்.

13

“அதான்.. உனக்கு கட்டிவைக்கிறதுக்காக நாங்க பாத்த பொண்ணு.. நல்ல பழக்கம் மாதிரிதான் தெரியுது.. அப்புறம் ஏன் நீ எங்ககிட்ட சொல்லவே இல்ல..??” செல்வி இயல்பாக பேசிக்கொண்டே போக, அசோக் குழப்பமாய் அவளை ஏறிட்டான்.

“என்னாச்சு உங்களுக்கு..?? எனக்கு கைல அடிபட்டிருக்குன்னா.. உங்களுக்கு தலைல ஏதாவது அடிபட்ருக்கா..??” அசோக் அந்தமாதிரி கிண்டலாக கேட்கவுந்தான் செல்விக்கு நடந்த விஷயம் நினைவுக்கு வந்தது.

“ஓ.. ஆமால்ல.. நீதான் அவ ஃபோட்டோவே பாக்கலைல..?? சரி சரி.. இப்போ எனக்கு புரியுது..!!”

“ப்ச்.. என்ன புரியுது.. எனக்கு ஒரு எழவும் புரியல..!!”

“ஹையோ.. அ..அந்த ப்ரியா இருக்கால்ல.. உன் கூட வேலை பாக்குறவ..”

“ஆமாம்..!!”

“அவதான்டா நாங்க உனக்கு பாத்த பொண்ணு..!!” செல்வி கேஷுவலாக சொல்ல, அசோக் அப்படியே அதிர்ந்து போனான்.

“எ..என்ன அண்ணி சொல்றீங்க..??” என்று நம்பமுடியாதவனாய் கேட்டான்.

“ஆமாண்டா..!! நாலு மாசம் முன்னாடி.. உனக்கு பாத்திருக்குற பொண்ணுன்னு உன் அண்ணன் உன்கிட்ட ஒரு ஃபோட்டோ நீட்டுனார்ல.. அது இந்த ப்ரியாதாண்டா..!! அப்போ நீ வேணான்னு சொல்லிட்ட.. அவரும் அதை அப்படியே கெடப்புல போட்டாரு..!! அப்புறம் நீயாவே பொண்ணு பாருங்கன்னு சொன்னதும்.. திரும்பவும் பேசி.. இந்த ப்ரியா அப்பாகிட்ட ஜாதகம் வாங்கி.. பொருத்தம்லாம் பார்த்து..”

செல்வி சொல்லிக்கொண்டே இருக்க, அசோக் ஒரு உச்சபட்ச குழப்பத்திலும், திகைப்பிலும் திளைக்க ஆரம்பித்தான். அண்ணி சொன்ன விஷயத்தை முழுமையாக உள்வாங்கிக் கொள்ளவே அவனுக்கு சிறிது நேரம் பிடித்தது. உள்வாங்கிக்கொண்ட விஷயத்தை அவனது மூளை உற்று ஆராய, பலவித குழப்ப எண்ணங்கள் மளமளவென அவனுக்குள் கிளம்ப ஆரம்பித்தன.

‘ப்ரியாவா..?? ப்ரியாவையா எனக்காக பெண் பார்த்தார்கள்..?? ‘இவளை கட்டிக்கப் போறியா.. இல்லையா..’ என இவர்கள் கண்டிப்புடன் கேட்டது ப்ரியாவைத்தானா..?? ‘முடியவே முடியாது..’ என நான் ஒற்றைக்காலில் நின்று ஒதுக்கியதும் ப்ரியாவைத்தானா..?? என்ன ஒரு குழப்பம் இது..?? அப்படியானால்.. அவர்.. அந்த வரதராஜன்.. ப்ரியாவின் அப்பாவா..?? ‘என்னை விட நல்ல மாப்பிள்ளை கிடைப்பான்..’ என நான் வாழ்த்து வழங்கியது ப்ரியாவிற்கா..??’

அடுக்கடுக்காய் கேள்விகள் எழ, அசோக்கிற்கு தலையை வலிப்பது போல இருந்தது. இந்த விஷயத்தையும் ப்ரியாவையும் இணைத்து யோசித்து பார்த்தான். ‘இந்த கல்யாண ஏற்பாடு விஷயம் எல்லாம் ப்ரியாவிற்கு தெரிந்திருக்குமா..?? இல்லையே.. தெரிந்திருந்தால் என்னிடம் சொல்லியிருப்பாளே..??’

“அ..அவளுக்கு இந்த விஷயம் தெரியுமா அண்ணி..?? ஐ மீன்.. நான்தான் மாப்ளைன்னு..??”

“ம்ம்.. தெரிஞ்ச மாதிரிதான் காட்டிக்கிட்டா.. அதான எனக்கும் கொழப்பம்..?? அந்த பொண்ணு உன்கிட்ட சொல்லவே இல்லையா..??”

“இ..இல்ல அண்ணி.. சொல்லல..!!”

“ஆமாம்.. நீதான் புடிச்ச புடில வேணான்னு சொல்லிட்டியே.. அதை அவ அப்பா அவட்ட சொல்லிருப்பாரு.. அதான் அவளும் அதைப்பத்தி பேசல போல..!! ஆனா.. நான் கூட என்னவோ நெனச்சன்டா.. பெங்களூர்லயே பொறந்து வளந்த பொண்ணு.. என்ன குணமோ.. எப்படி இருக்காளோன்னு..”

செல்வி தொடர்ந்து பேசியதை கவனியாமல் அசோக் மீண்டும் சிந்தனையில் மூழ்க ஆரம்பித்தான். ‘ஓ.. எல்லாம் தெரிந்து கொண்டுதான் இத்தனை நாளாய் அவள் எதுவும் சொல்லவில்லையா..?? ஏன் அப்படி செய்தாள்..?? ஆமாம்.. காரணமே இல்லாமல் உன்மீது இவ்வளவு வெறுப்பை உமிழ்கிறாள்.. அவளா வந்து கல்யாண செய்தியை உரைக்கப் போகிறாள்..?? அவளுக்கு இந்த கல்யாணத்தைப் பற்றி எந்த அக்கறையும் இருந்திருக்கப் போவதில்லை..!! நான் வேண்டாம் என்று சொன்னதும் ‘விட்டொழிந்தது சனியன்’ என்று மறந்திருப்பாள்..!!’

“…………………….. ரொம்ப அமைதியான குணம்.. எளகுன மனசு.. ரொம்ப அப்பாவியா இருக்குறாடா..” செல்வி பேசிக்கொண்டே இருக்க,

“யா..யாரை சொல்றீங்க..??” அசோக் இடையில் புகுந்து கேட்டான்.

“அந்த ப்ரியாவைத்தாண்டா சொல்றேன்..!! பேருக்கு ஏத்த மாதிரி எல்லார்ட்டயும் எவ்வளவு ப்ரியமா நடந்துக்குறா..?? ரொம்ப நல்ல புள்ளைடா..!!” வெகுளியாக சொன்ன அண்ணியை அசோக் முறைப்பாக பார்த்தான்.

“ம்க்கும்.. ரொம்ப நல்ல்ல்ல நொள்ளைதான்.. நாட்டுலயே கெடைக்காது..!!” அசோக் வெறுப்பாக சொன்னான்.

“ஏண்டா அப்படி சொல்ற..?? உனக்கு ஆக்சிடன்ட்னு தெரிஞ்சு அவ எப்படி துடிச்சு போயிருக்கா தெரியுமா..?? வர்றப்போவே ஓ’ன்னு அழுதுட்டேதான் வந்தா..!! நீ தூங்குனப்போ உன் பக்கத்துல உக்காந்து உன் மூஞ்சியவே பாத்துட்டு இருந்தா..!! உன் மேல அவளுக்கு ரொம்ப ப்ரியம் போலடா..!!”
‘அதான் அந்த ப்ரியம்.. புண்ணாக்கு.. புடுங்கி பிராண்டுனதுலாம் பார்த்தாச்சே..?? கல்லை விட்டு அடிச்சுட்டு.. காயத்துக்கு மருந்து போட வந்திருக்கா.. நீலிக்கண்ணீர் வடிக்கிறா.. அது புரியாம நீங்க பேசிட்டு இருக்கீங்க..!!’ அசோக் மனதில் நினைத்தை வெளியே சொல்லவில்லை. அமைதியாகவே இருந்தான். அவனுடைய மனநிலை புரியாது செல்விதான் கேட்டாள்.

“ஏண்டா.. ஒருவேளை இந்த ப்ரியாதான் பொண்ணுன்னு முன்னாடியே தெரிஞ்சிருந்தா.. நீ இந்த கல்யாணத்துக்கு சம்மதிச்சிருப்பியா..??”

“ஏ..ஏன் அப்படி கேக்குறீங்க..??” அசோக் சற்று தடுமாற்றமாகவே கேட்டான்.

“இல்லடா.. எனக்கு அப்படி தோணுச்சு..!! நான் வேணுன்னா உன் அண்ணன்ட்ட சொல்லி.. மறுபடியும் அவ அப்பாட்ட பேச சொல்லவா..??”

“ஹையோ.. சும்மா இருங்க அண்ணி.. உள்ள கொழப்பம் போதும்.. நீங்க வேற ஏதாவது பண்ணிட்டு இருக்காதீங்க..!!”

“நான் என்ன பண்ண பண்றேன்..??”

“எதுவும் பண்ண வேணாம்னுதான் சொல்றேன்.. எல்லாம் நான் பாத்துக்குறேன்.. விடுங்க..!!”

அதேநேரம் ப்ரியாவின் வீட்டில்.. அசோக்கிற்கு நேர்ந்த விபத்து பற்றி ப்ரியா தன் அப்பாவிடம் சொல்லிக்கொண்டிருந்தாள். விஷயம் கேட்டு வரதராஜன் பதறிப் போனார். அடுத்த நாள் மருத்துவமனை சென்று, அசோக்கை நேரில் பார்க்க விரும்புவதாக கூறினார். ப்ரியா அவரை அவசரமாய் தடுத்தாள்.

“ஐயோ.. வேணாம் டாடி..!! அவன் ஏற்கனவே என் மேல பயங்கர கோவத்துல இருக்கான்.. இந்த நேரத்துல நீங்க அவனை பாக்க வேணாம்..!!”

“உன் மேல கோவமா..?? ஏன்மா..??”

“ப்ச்.. அதெல்லாம் சொன்னா உங்களுக்கு புரியாது டாடி..!! எல்லாம் நான் பாத்துக்குறேன்.. விடுங்க..!!”

என்ற ப்ரியா மனதுக்குள் ‘அவன்கூட மனசு விட்டு பேசணும் டாடி.. மன்னிப்பு கேக்கணும்.. நான் செஞ்ச தப்பை உணர்ந்திட்டேன்னு சொல்லி கெஞ்சனும்..’ என்று நினைத்துக் கொண்டாள்.

அன்று நள்ளிரவு தாண்டியும் அசோக்கும் ப்ரியாவும் உறக்கம் வராமல் மிகவும் சிரமப்பட்டனர். ப்ரியாதான் தனக்காக பார்த்த பெண் என்ற விஷயம் அசோக்கிற்கு ஆச்சரியத்தை கொடுத்திருந்தது. ஆனால் அவனிருந்த சூழ்நிலையிலும், மனநிலையிலும் அந்த ஆச்சரியம் அவனுக்கு ஏனோ மகிழ்ச்சியை கொடுக்கவில்லை. ப்ரியாவின் செய்கைகள் அவன் மனதில் ஏற்படுத்தியிருந்த வெறுப்பு, அந்த ஆச்சரியம் தந்த சந்தோஷத்தை சாப்பிட்டிருந்தது. கட்டுப்போட்டிருந்த கையை ஒருமுறை தடவிப் பார்த்துக் கொண்டான்.

அதே நேரம் ப்ரியாவோ.. ‘தன்னால் அசோக்கிற்கு இவ்வாறு நேர்ந்துவிட்டதே’ என்று எண்ணி எண்ணியே, இருட்டுக்குள் ரகசியமாக அழுதாள். மனதுக்குள்ளேயே அசோக்கை வரவழைத்து ‘மன்னித்துவிடு..!!’ என்று மன்றாடினாள். அவனிடம் மனம் விட்டு பேசவேண்டும் என்று மீண்டும் மீண்டும் நினைத்துக் கொண்டாள். கண்ணீர் பொங்கும் கண்களை தலையணையிலேயே துடைத்துக் கொண்டாள்.

- தொடரும்

மேலும் செக்ஸ் கதைகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் :

தமிழ்காமவெறி தளம்

ஐ ஹேட் யூ, பட் – பகுதி 36

$
0
0

அத்தியாயம் 22

ப்ரியா நினைத்துக்கொண்ட மாதிரி அவ்வளவு எளிதாக அசோக்கிடம் மனம்விட்டு பேசி விட முடியவில்லை. அவர்கள் இருவரும் தனித்திருக்கும் நேரமே வாய்க்கவில்லை. அசோக் அந்த மருத்துவமனையில் ஐந்து நாட்கள் இருந்தான். அந்த ஐந்து நாட்களும் ப்ரியா காலையில் ஒருமுறை, மாலையில் ஒருமுறை அவனை சென்று பார்த்து வருவாள். ஆனால் எந்த நேரமும் அவனுடன் யாரவது ஒருவர் உடனிருப்பார்கள். மனதில் நினைத்தை சுதந்திரமாக பேசிக்கொள்ள முடியாமல் போகும்.

மேலும் செக்ஸ் கதைகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் :

தமிழ்காமவெறி தளம்

“இப்போ எப்படிடா இருக்கு..?? பரவாலையா..??” என்று ஃபார்மலாகத்தான் கேட்க முடியும். அதற்கு அவனும்

“ம்ம்..?? இருக்கு இருக்கு..!!” என்பான் முகத்தை முறைப்பாக வைத்துக்கொண்டு.

“ஸாரிடா..!!” ப்ரியா கிசுகிசுப்பான குரலில் கெஞ்சலாக சொல்வாள்.

“ப்ச்..!!” அசோக் சலிப்பாக சொல்லிவிட்டு முகத்தை வேறுபக்கம் திருப்பிக் கொள்வான்.

தினமும் காலையிலே கோவிலுக்கு சென்று அசோக்கின் பெயரில் அர்ச்சனை செய்து, அவன் நெற்றியில் வந்து திருநீறு பூசுகிற ப்ரியாவை செல்விக்கு மிகவும் பிடித்து போனது. மாலையில் ஆபீஸை விட்டு கிளம்ப எவ்வளவு நேரம் ஆனாலும், ஆஸ்பத்திரிக்கு வந்து கொஞ்ச நேரமாவது அவர்களுடன் செலவழித்து சென்றது செல்வியை கவர்ந்துவிட்டது. ப்ரியா வந்துவிட்டாலே, அவளை அருகில் அமர்த்தி வைத்து, அவளுடைய கையை வாஞ்சையாக தடவிக் கொடுத்தவாறே, ஏதாவது ஸ்னேஹமாக பேசிக்கொண்டிருப்பாள்.

ஆறாம்நாள் காலை.. அசோக் ஹாஸ்பிட்டலில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டான். வீட்டுக்கு அழைத்து செல்லப்பட்டான். ‘வீட்டுக்கு அடிக்கடி வாம்மா..!!’ என்று சொன்ன செல்வியின் நட்பு கிடைத்ததால், ப்ரியா அசோக்கின் வீட்டுக்கு செல்வதிலும் எந்த தடையும் இருக்கவில்லை. ஆஸ்பத்திரிக்கு விட்டது போலவே அசோக்கின் வீட்டுக்கும் தினம் இரண்டு முறை விசிட் விட்டாள். ஆனால் அவர்கள் தனித்து பேசிக்கொள்ளத்தான் சந்தர்ப்பம் கிட்டவில்லை..!! அசோக்கின் மனதிலோ வெறுப்பு.. ப்ரியாவின் மனதிலோ ஏக்கம்.. வெளிப்படுத்திக்கொள்ளத்தான் வாய்ப்பு அமையவில்லை.. காத்திருந்தனர் இருவரும்..!!

அசோக் வீட்டுக்கு சென்ற மூன்றாம் நாள் காலை..!! அன்று விடுமுறைதான்.. ப்ரியா சற்று தாமதமாகவே தனது வீட்டில் இருந்து அசோக்கை பார்த்துவர கிளம்பினாள்..!! அசோக்கின் வீட்டை அடைந்தபோது மணி ஒன்பதரை ஆகி இருந்தது..!! வீட்டுக்குள் நுழைந்தவள்.. ‘இது அசோக்கின் வீடுதானா..?’ என்று ஒருகணம் குழம்பிப் போக நேர்ந்தது..!! ஏதோ சந்தைக்கடைக்குள் நுழைந்தாற்போல சலசலவென்று ஒரே சத்தம்..!! இருபது.. இருபத்தைந்து பேர்கள்.. அசோக்கின் உறவினர்கள்.. விபத்தில் சிக்கிய அசோக் வீடு திரும்புவதற்காக காத்திருந்தவர்கள்.. அவன் வீடு திரும்பியதும் கிராமத்தில் இருந்து கிளம்பி வந்திருந்தனர்..!! இப்போது ஹாலில் கும்பலாக அமர்ந்து ஆளாளுக்கு ஏதேதோ கதையடித்துக் கொண்டிருந்தார்கள்..!! அசோக்கை மட்டும் அந்த கூட்டத்தில் காணோம்..!! அவர்களை பார்த்து ப்ரியா சற்றே திகைத்துப்போய் நின்றிருக்க..

“இதோ வந்துட்டால..?? இவதான் ப்ரியா..!!” என்று செல்விதான் முதலில் இவளை கவனித்து கத்தினாள்.

அவ்வளவுதான்..!! உக்காந்திருந்த ஏழெட்டுப் பெண்கள் உடனே எழுந்து வந்து ப்ரியாவை பிடித்துக் கொண்டார்கள். ‘நீதானாம்மா.. வா.. வா..’ என்று அவளை அழைத்து சென்று அவர்களுக்கு நடுவில் அமர்த்தி வைத்துக் கொண்டனர். இந்த திடீர் சூழ்நிலையை சற்றும் எதிர்பாராத ப்ரியா திருதிருவென விழித்தாள். ஒருமாதிரி மிரட்சியாக எல்லோரையும் பார்த்தாள். அதை யாரும் புரிந்து கொள்ளாமல் ஆளாளுக்கு அவளுடைய கன்னத்தை தடவி பிய்த்து எடுத்தனர். ஏதேதோ கேள்வி கேட்டு துளைத்தெடுத்தனர்.

“செவசெவன்னு சினிமாக்காரி மாதிரில இருக்குறா..!!” என்று கமென்ட் அடித்தாள் ஒரு கிழவி.

“ஏம்மா.. இந்த தலைக்கறில சின்ன வெங்காயம், மொளகா வத்தல் போட்டு பெரட்டி எடுத்தா.. எனக்கு ரொம்ப உசுரு.. தாத்தாவுக்கு வச்சு குடுப்பியா..??” என்று கேட்டது ஒரு பெருசு.

“உங்களுக்கு அஜித் புடிக்குமா.. விஜய் புடிக்குமா..??” என்றாள் ஒரு ஆறு வயது சிறுமி.

“இது என்னடி அதிசயமா இருக்கு..?? வளையலை போய் காதுல மாட்டிருக்காக..?? இதுதான் பெங்களூர் மாடலாக்கும்..??” ப்ரியாவின் காது வளையத்தை பிடித்து இழுத்தாள் ஒரு பெண்.

“ஏத்தா.. என் பேரனை கட்டிக்க உனக்கு சம்மதந்தானா..??” இதை கேட்டது அசோக்கின் பாட்டி. ப்ரியா இன்னும் மிரட்சி தெளியாமலே இருக்க, செல்வியே அதற்கு பதில் சொன்னாள்.

“ம்க்கும்.. இந்தப்புள்ளையா வேணாஞ்சொல்லுச்சு..?? உன் பேரப்புள்ளைதான் உச்சானிக்கொம்புல ஏறி ஒக்காந்திருக்காப்புல.. அவன்ங்கிட்ட போய் கேக்க வேண்டியதான..??”

“அடிப்போடி.. அவன்ங்கிட்ட போய் என்னத்த கேக்க சொல்றவ..?? பொண்ணு பாக்கவான்னு கேட்டதுக்கே.. ‘போறியா.. இல்ல.. பொதைகுழில எறக்கிப்புடவா’ன்ல கேட்டான்..??”

“அப்புறம் என்ன.. வாயை மூடிக்கிட்டு ச்சும்மா கெட..!!”

இப்போது அசோக்கின் அம்மா எழுந்து வந்து ப்ரியாவுக்கு அருகில் அமர்ந்து கொண்டாள். ப்ரியாவின் கன்னத்தை பிடித்து வாஞ்சையாக தடவியவாறே, மலர்ந்த முகத்துடன் கேட்டாள்.

“வீட்ல அப்பா, தம்பிலாம் சவுக்கியமாம்மா..??”

“ம்ம்.. ச..சவுக்கியம்..!!”

“நீயும் என் புள்ளை வேல பாக்க அதே கம்பெனிலதான் வேல பாக்கியாக்கும்..??

“ம்ம்.. ஆ..ஆமாம்..!!”

“செல்விதான் சொன்னா..!! அசோக்கு அடிபட்ட அன்னைக்கு நீ எப்படி துடிச்சு போயிட்டேன்னு.. அன்னைக்கு பூரா அவன் கூடவே இருந்து பாத்துக்கிட்டியாமே..?? என் புள்ளை மேல உனக்கு அவ்வளவு பிரியமாம்மா..??”

“ம்ம்..!!”

ப்ரியா அவஸ்தையாக நெளிந்தவாறே சொன்னாள். ஒருமுறை பார்வையை சுழற்றி செண்பகத்தை தேடினாள். அவளோ இங்கே நடப்பது எதையுமே கண்டுகொள்ளாமல், அசோக்கை பார்க்க வந்தவர்கள் அவனுக்கு கொண்டுவந்திருந்த பலாச்சுளைகளை, ‘லபக் லபக்’ என்று வாய்க்குள் திணித்து அசைபோட்டுக் கொண்டிருந்தாள். ப்ரியா இப்போது சற்றே எரிச்சலாக செண்பகத்தை பார்த்தாள். ‘ச்சே.. என்ன பெண் இவள்..?? அவளுடைய காதலனை பிடித்திருக்கிறதா என்று இங்கே ஆளாளுக்கு என்னை மொய்க்கிறார்கள்.. கல்யாணப்பேச்சு பேசுகிறார்கள்.. இவள் என்னவென்றால் கவலையே இல்லாமல் பலாப்பழம் விழுங்குகிறாள்..??’

“என்னம்மா.. அப்படி பாக்குற..??” அசோக்கின் அம்மா அன்பாய் கேட்க,

“ஒ..ஒண்ணுல்ல ஆண்ட்டி.. அ..அசோக்.. அசோக் எங்க..??” ப்ரியா திணறலாக கேட்டாள்.

“அப்படியே காத்து வாங்கிட்டு வரேன்னு மொட்டை மாடிக்கு போனான்..!! ஏன்மா.. அவனை பாக்கணுமா..??”

“ம்ம்..!!”

“சரி போ.. மேலதான் இருக்கான்.. போய்ப்பாரு..!!”

‘விட்டால் போதும்..’ என்பது போல ப்ரியா படக்கென எழுந்து கொண்டாள். அவளுடைய முதுகுக்குப்பின், அவளை கிண்டல் செய்து எல்லோரும் கெக்கேபிக்கே என்று கனைக்க, இவள் அதை கண்டுகொள்ளாமல் வெளியே வந்தாள். படியேறி மொட்டை மாடி சென்றாள். தூரத்தில் முதுகு காட்டி நின்றவாறு பூங்காவை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த அசோக் கண்ணில் பட்டான். மெல்ல நடந்து அவனை நெருங்கினாள்.

31

ப்ரியா வந்ததை அசோக் கவனிக்கவில்லை. அவனுக்கு அருகில் சென்ற ப்ரியா, ஓசை ஏதும் எழுப்பாமல், கைப்பிடி சுவற்றில் ஊன்றியிருந்த அவனது வலது கையை, தனது கையால் இதமாக பற்றி ஒரு அழுத்தம் கொடுத்தாள். உடனே படக்கென திரும்பி பார்த்த அசோக், ப்ரியா என்று தெரிந்ததும் வெடுக்கென தனது கையை உருவிக் கொண்டான். சற்றே சீற்றமாக கேட்டான்.

“ப்ச்.. என்ன..??”

“என் மேல கோவம் இன்னும் போகலையா..??”

“உன் மேல கோவப்பட நான் யாரு..??” அசோக்கின் வார்த்தைகள் ப்ரியாவை வன்மையாக தாக்கின.

“ஏண்டா இப்படிலாம் பேசுற..??”

“இனிமே எல்லாம் அப்படித்தான்..!! என்ன விஷயம்னு சொல்லு..!!”

அசோக் கடுமையாக சொன்னான். வெறுப்பு கொப்பளிக்கும் அவன் முகத்தையே ப்ரியா பரிதாபமாக பார்த்தாள். சில வினாடிகள் தயங்கியவள், அப்புறம் மெல்ல ஆரம்பித்தாள்.

“கீ..கீழ.. அவங்க எல்லாம் என்னன்னவோ பேசுறாங்க அசோக்..!!”

“என்ன பேசுறாங்க..??”

“நம்ம கல்யாணப் பேச்சை திரும்ப ஆரம்பிச்சுட்டாங்க.. உன்னை கட்டிக்க சம்மதமான்னு எங்கிட்ட கேக்குறாங்க..!!”

“ஓஹ்..!! அவங்களுக்கு வேற வேலையே கெடயாது.. அவங்க எய்ம்லாம் ஏதோ ஒரு கழுதையையோ குரங்கையோ புடிச்சு எனக்கு கட்டி வச்சிடணும்.. அவ்ளோதான்.. ச்ச..!!” அசோக் சலிப்பாக சொல்ல,

“என்னது..???” ப்ரியா முகத்தை சுளித்தவாறு அவனை பார்த்தாள்.

“ஹ்ம்ம்.. அதுக்கு நீ என்ன சொன்ன..??”

“நான் என்னத்த சொல்றது..?? நீதான் அவங்ககிட்ட போய் சொல்லணும்..!!”

“நானா..?? நான் என்ன சொல்லணும்..??”

“இங்க பாரு அசோக்.. இனிமேயும் நீ காலம் கடத்துறது கொஞ்சம் கூட சரி இல்ல.. அல்ரெடி ரொம்ப லேட்..!! போய் அவங்ககிட்ட உன் மனசுல இருக்குறதை பளிச்சுன்னு சொல்லிடு..!!”

“ப்ச்..!! என்ன சொல்றேன்னே எனக்கு ஒன்னும் புரியல..!!”

“ஹையோ.. ‘செண்பகத்தைத்தான் நான் கட்டிக்கப்போறேன்’னு.. அவங்ககிட்ட போய் சொல்லுன்னு சொல்றேன்..!!”

ப்ரியா சொன்ன விஷயத்தை சரியாக புரிந்து கொள்ளவே அசோக்கிற்கு சில வினாடிகள் பிடித்தன. பிறகு புரிந்ததும் எரிச்சலாக கேட்டான்.

“என்ன உளர்ற..?? செண்பகத்தை எதுக்கு நான் கட்டிக்கணும்..??”

“அவளைத்தான நீ லவ் பண்ற..??”

“உனக்கென்ன லூசா..?? அவளை நான் லவ் பண்றேன்னு உனக்கு யாரு சொன்னது..??” அசோக் முறைக்க, இப்போது ப்ரியா நெற்றியை சுருக்கினாள்.

“செ..செண்பகத்தை லவ் பண்றேன்னு.. நீ..நீதான அன்னைக்கு என் அப்பாகிட்ட..” ப்ரியா தடுமாற்றமாய் சொல்லி முடிக்கும் முன்பே அசோக் புரிந்து கொண்டான்.

“ப்ச்.. நான் லவ் பண்றேன்னு மட்டுந்தான் சொன்னேன்.. அவராத்தான் ‘அன்னைக்கு உங்ககூட வந்த பொண்ணா’ன்னு கேட்டாரு..!! அந்த நேரம் பாத்து.. நீ வேற இந்தப்பக்கம் அவசரப் படுத்தின.. நானும் கால் கட் பண்ற அவசரத்துல ஆமாம்னு சொல்லிட்டேன்..!!” என்று அவன் படபடவென சொல்ல,

“ஓ..!!”

அதிர்ச்சியில் ப்ரியாவுக்கு வாய் ‘ஓ’வென பிளந்து கொண்டது. ஒரு கையால் அந்த வாயை மூடிக்கொண்டாள். விழிகளை அகலமாய் விரித்து, உறைந்து போனவளாய் அசோக்கையே பார்த்தாள். அவன் சொன்னதை இன்னும் நம்ப முடியாதவளாகவே சிலவினாடிகள் திகைப்பாய் பார்த்தாள். அப்புறம் சற்றே திணறலாக கேட்டாள்.

“அ..அப்போ நீ செண்பகத்தை லவ் பண்ணலையா..??”

“ம்ஹூம்..!!’

“ஐயோ.. என்னடா நீ..??? நீ அவளை லவ் பண்றேன்னு நெனச்சுல நான் எல்லாம் பண்ணிட்டேன்.. தேவை இல்லாம உன் மேல கோவத்தை காட்டிட்டேன்.. வேணுன்னே வெறுப்பை கொட்டிட்டேன்.. இந்த ஆக்சிடன்ட்க்கு கூட..”

ஏதோ ஒரு அவசரத்தில் படபடவென பேசிவிட்ட ப்ரியா, பட்டென நாக்கை கடித்துக் கொண்டாள். உடனே அமைதியாகிப் போனாள். அவஸ்தையாய் அசோக்கின் முகத்தை ஏறிட்டாள். ஆனால் அவள் சொன்னதை கேட்டு அதிர்ச்சியுற்ற அசோக், அந்த வார்த்தைகளை பிடித்துக் கொண்டான்.

“ம்ம்.. சொல்லு ப்ரியா.. இந்த ஆக்சிடன்ட்கு கூட..??” அசோக் கூர்மையாக கேட்க, ப்ரியா இப்போது சுதாரித்துக் கொண்டாள்.

“அ..அசோக்.. ப்ளீஸ்.. நான் உனக்கு ஆரம்பத்துல இருந்து சொல்றேன்..!!”

“இல்ல.. இதை மொதல்ல சொல்லு.. இந்த ஆக்சிடன்ட்கு கூட..?? என்ன பண்ணின..??”

“அ..அசோக்.. ப்ளீஸ்..!!” ப்ரியா கெஞ்சினாள்.

“சொல்லுடி..!!” அசோக் கத்தினான். ப்ரியாவுக்கு வேறு வழி இருக்கவில்லை.

“அன்னைக்கு வேணுன்னேதான் அப்படி பண்ணினேன்.. அது ஒன்னும் க்ரிட்டிக்கல் இஷ்யூலாம் இல்ல.. பொய் சொல்லித்தான் உன்னை உடனே ஆபீஸ் கெளம்பி வர சொன்னேன்..!!”

ப்ரியா சொல்ல சொல்லவே, அசோக்கின் மனதுக்குள் அவள் மீது ஒரு ஆத்திரம் குபுகுபுவென பொங்க ஆரம்பித்தது. அவள் சொன்னதை நம்பி.. பைக்கை எடுத்துக்கொண்டு பறந்து.. லாரியை முந்தி செல்ல நினைத்து.. வேகத்தால் கட்டுப்பாட்டை இழந்து.. லாரி மீது மோதி.. ரோட்டோரமாய் தூக்கி வீசப்பட்டது.. அவனுடைய கண்முன் படமாக ஓடியது..!!

“ஓ..!! நெனச்சேன்..!!” என்றான் வெறுப்புடன்.

“ப்ளீஸ்டா அசோக்.. நான் ஏன் அப்படிலாம் செஞ்சேன்னு புரிஞ்சுக்கோ.. எல்லாத்துக்கும் காரணம் இருக்கு..!!”

“என்ன காரணம் இருக்கு..?? உனக்கு உடம்பு பூரா கொழுப்புன்றதை தவிர..??”

“ஹையோ.. நான்..” ப்ரியா சொல்ல முடியாமல் தவித்தாள்.

“ம்ம்.. சொல்லு..!!”

தன் காதலை எப்படி எப்படி எல்லாம் அசோக்கிடம் சொல்லவேண்டும் என்று ப்ரியா எத்தனையோ நாள் கனவு கண்டிருக்கிறாள். எந்தெந்த வார்த்தைகள் எல்லாம் உபயோகித்து அலங்காரத்துடன் சொல்லவேண்டும் என்று திட்டமிட்டிருக்கிறாள். ஆனால்.. அந்த வார்த்தைகள் எல்லாம் இப்போது அவளுக்கு கைகொடுக்காமல் போக,

“நா..நான் உன்னை லவ் பண்றன்டா..!!” என்றாள் அலங்காரமற்ற வார்த்தைகளால்.. சற்றே பரிதாபமாக..!!

அசோக்கும் எத்தனையோ நாள் ப்ரியாவின் வாயிலிருந்து இந்த வார்த்தைகளை கேட்க ஏங்கியிருக்கிறான். அவள் தன் காதலை சொல்லும்போது, தன் மனம் எப்படி எல்லாம் பூரித்துப் போகும் என்று கற்பனை வளர்த்திருக்கிறான். ஆனால்.. அந்த நேரத்தில் ப்ரியாவின் மீது அவனுக்கிருந்த அளவற்ற ஆத்திரம்.. அவள் காதல் சொன்ன மகிழ்ச்சியை மங்கிப் போக செய்திருந்தது..!! சீறினான்..!!

12

“ஓ..!! லவ் பண்ணினா என்ன வேணா பண்ணுவியா..?? ஏதோ நல்ல நேரம்.. கையோட போச்சு..!! உசுரு போயிருந்தா..??”

“எனக்கு புரியுதுடா.. நான் செஞ்சது தப்புதான்..!! என்னை மன்னிச்சுடு.. ப்ளீஸ்..!!” பரிதாபமாக சொன்னவாறு ப்ரியா அசோக்கின் கையை பற்றினாள். அவன் வெடுக்கென அவளுடைய கையை உதறினான்.

“ச்சீ.. கையை விடு..!! என் கண் முன்னாடியே நிக்காத.. போயிடு..!!”

“ப்ளீஸ் அசோக்.. நான் சொல்றதை கொஞ்சம் பொறுமையா கேளு..!!”

“என்ன சொல்லப் போற..??”

“நான் உன் மேல உயிரையே வச்சிருக்கேன்டா..!! ஆறு வருஷத்துல இந்த லவ் எப்போ ஆரம்பிச்சதுன்னு கூட எனக்கு தெரியல.. கொஞ்சம் கொஞ்சமா உள்ள வந்து.. இப்போ என் மனசு பூரா நீதான் இருக்குற..!! நீ எனக்கு சொந்தமானவன்னு நான் முடிவே பண்ணிட்டேன் அசோக்.. அதான் செண்பகம் நமக்குள்ள வந்ததை என்னால தாங்கிக்க முடியல..!! அவ மேல பொறாமை.. பொசசிவ்னஸ்..!! அதான் இப்படிலாம் நடந்துக்கிட்டேன்.. எல்லாத்துக்குமே உன் மேல இருந்த லவ்தாண்டா காரணம்..!!” ப்ரியா இரக்கமாக சொல்ல,

“பொய்..!! எல்லாத்துக்கும் உன்னோட ஈகோதான் காரணம்.. நான் நெனச்சா என்ன வேணா பண்ணுவேன்ற உன் திமிர்தான் காரணம்..!! பண்றதெல்லாம் பண்ணிட்டு.. இப்போ லவ் மேல பழியை போடுறியா..?? இதுல என்னை ஈகோ புடிச்சவன்னு கிண்டல் பண்றது..?? என் ஈகோலாம் சும்மா வெளையாட்டுத்தனமாதான் இருக்கும்.. இப்படி கையை முறிச்சு ஹாஸ்பிட்டல் அனுப்பாது..!! இன்னைக்கு நீ டெக்லீடா இருக்குறேன்னா அதுக்கு காரணம் நான்.. ஆனா நீ.. அந்த அதிகாரத்தை வச்சுக்கிட்டு.. என் உசுருக்கே உலை வச்சிட்ட.. இல்ல..??” அசோக் சூடாக கேட்டான்.

“இல்லடா.. சத்தியமா இல்ல.. நான் அப்படிலாம் நெனைக்கவே இல்ல..!!”

“நடிக்காத..!! ‘உன்னை டீமே விட்டே தூக்குறேன் பாரு’ன்னு வெரல் சொடுக்கி சவால் விட்டவதான நீ..?? ‘எனக்கும் நேரம் வரும்.. அப்பா நான் யாருன்னு காட்டுறேன்’னு சொன்னவதான நீ..?? இன்னும் கொஞ்சம்னா இந்த உலகத்தை விட்டே தூக்கிருப்ப..!!”

“ஹையோ.. உனக்கு புரியலை.. அது வேற.. இது வேற..!!”

“என்ன வேற வேற..?? எனக்கு எல்லாம் ஒண்ணாத்தான் தெரியுது..!!”

“இப்படி புரிஞ்சுக்கவே மாட்டேன்னு அடம் புடிச்சா நான் என்ன பண்ணட்டும்..?? நான் பண்ணினது தப்புதான்னு நான் ஒத்துக்கிட்டேன்.. நான் செஞ்ச தப்பை திருத்திக்க எனக்கு ஒரு சான்ஸ் குடுக்க மாட்டியா..?? என்னை கொஞ்சம் பேச விடு.. ப்ளீஸ்..!!!” ப்ரியா அந்த மாதிரி அழுகுரலில் கேட்கவும், அசோக் இப்போது சற்றே ஆத்திரம் தணிந்தான்.

“சொல்லு..!!”

“நான் உனக்கு ஒரு ப்ராமிஸ் பண்ணி தர்றேன்.. ஓகேவா..??”

“என்ன..??”

“உனக்கு ஆக்சிடன்ட் ஆனது தெரிஞ்சதுமே.. என் ஈகோ செத்துப் போச்சு அசோக்..!! இனிமே சத்தியமா அந்தமாதிரி நடந்துக்க மாட்டேன்.. எந்த வகையிலையும் உன் மேல வெறுப்பு காட்ட மாட்டேன்.. ஆபீசுக்கு உள்ளேயும் சரி.. ஆபீசுக்கு வெளிலயும் சரி.. சத்தியமா உனக்கு இனி எந்த கஷ்டமும் கொடுக்க மாட்டேன்டா..!! இட்ஸ் எ ப்ராமிஸ்.. என்னை நம்பு.. ப்ளீஸ்..!!”

ப்ரியா அசோக்கின் தலை மீது கைவைத்து உறுதியான குரலில் சொன்னாள். அவள் சொன்னதைக்கேட்டு அசோக் எந்த உணர்ச்சியும் காட்டாமல் நின்றிருந்தான். இப்போது ப்ரியா அசோக்கின் தலை மீது இருந்த கையை மெல்ல கீழிறக்கி, அவனுடைய நெற்றியை மென்மையாக வருடினாள். கலைந்திருந்த அவனது தலை முடியை காதோரத்திற்கு ஒதுக்கிவிட்டாள். பிறகு அவனது கன்னத்தை கனிவாக தாங்கிப்பிடித்தவாறு, பரிதாபமான குரலில் சொன்னாள்.

“நீ எனக்கு வேணுண்டா அசோக்..!! நீ என்னை லவ் பண்ணாட்டாலும்.. என் லைஃப் லாங் நீ எனக்கு வேணும்.. ஒரு ஃப்ரண்டா..!! நான் என்னை மாத்திக்கிட்டேண்டா.. நான் இதுவரை செஞ்சதுக்காக என்னை நீ வெறுத்து ஒதுக்கிடாத ப்ளீஸ்.. என்னால அதை தாங்கிக்க முடியாது.. நீ எனக்கு எப்போவும் வேணும்..!!”

ப்ரியாவின் கெஞ்சலில் அசோக் சற்றே நெகிழ்ந்து போனான். அன்று ஸ்குவாஷ் கோர்ட்டில் அவளிடம் அடிபட்டுவிட்டு, அப்புறம் அவள் ஒத்தடம் தந்தபோது.. அவனுக்கு எந்த மாதிரி ஒரு உணர்வு இருந்ததோ.. அதே மாதிரியான ஒரு உணர்வு இப்போது மெகா சைஸில் அவன் மனதை நிறைத்திருந்தது..!! ‘இவளிடம் ஒத்தடம் பெறுவது இதமாகத்தான் இருக்கிறது.. ஆனால் ஒத்தடத்துக்கு முன் இவள் அடித்த அடியின் வலி.. அதை விட அதிகமாக இருக்கிறதே..??’

“சரி விடு.. இதை இத்தோட விட்ரலாம்..!!”

- தொடரும்

மேலும் செக்ஸ் கதைகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் :

தமிழ்காமவெறி தளம்

ஐ ஹேட் யூ, பட் – பகுதி 37

$
0
0

அசோக் சாந்தமாக சொன்னான். அவனுடைய ஆத்திரம் தணிந்து போயிருந்ததில் பிரியாவுக்கும் இப்போது நிம்மதியாக இருந்தது. அப்புறம் கொஞ்ச நேரத்திற்கு அவர்கள் எதுவும் பேசிக் கொள்ளவில்லை. புயலடித்து ஓய்ந்த மாதிரி இருந்தது. கைப்பிடி சுவற்றில் சாய்ந்தவாறு.. கைகளை மார்புக்கு குறுக்காக கட்டியவாறு.. வானத்தை வெறித்துக் கொண்டிருந்தனர்..!!

மேலும் செக்ஸ் கதைகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் :

தமிழ்காமவெறி தளம்

சிறிது நேரம் கழித்து ப்ரியா முகத்தை பக்கவாட்டில் திருப்பி, அசோக்கை பார்த்தாள். அவனுடைய முகத்தில் எந்தவித சலனமும் இருக்கவில்லை. ப்ரியாவின் இதழ்களில் இப்போது மெலிதாக ஒரு புன்னகை அரும்பியது. தனது கையால் அசோக்கின் கையை தேடிப்பிடித்தாள். அவனது விரல்களோடு தனது விரல்களை கோர்த்துக் கொண்டாள். மென்மையாக நெறித்தாள். அசோக் இப்போது அவளுக்கு எந்த எதிர்ப்பும் காட்டவில்லை. அவன் அமைதியாய் நின்றிருக்க, ப்ரியாதான் மெல்லிய குரலில் கேட்டாள்.

“யார் அந்தப்பொண்ணு..??”

“எ..எந்தப்பொண்ணு..??”

“அதான்.. நீ லவ் பண்ற அந்த லக்கி கேர்ள்..!! செண்பகம் இல்லைன்னு சொல்லிட்ட.. அப்படினா வேற யாரு..??”

இப்போது அசோக் திரும்பி ப்ரியாவின் முகத்தை ஏறிட்டான். ஓரிரு வினாடிகள் அவள் கண்களையே கூர்மையாக பார்த்தான். அப்புறம் என்ன நினைத்தானோ.. ஒரு பெருமூச்செறிந்துவிட்டு, சுரத்தற்ற குரலில் சொன்னான்.

“நான் யாரையும் லவ் பண்ணல..!!”

“ப்ச்.. அப்புறம் ஏன் அன்னைக்கு அப்பாட்ட அப்படி சொன்ன..??”

“அது.. சும்மா அவரை சமாளிக்க பொய் சொன்னேன்..!!”

“இல்ல.. இப்போ நீ சொல்றதுதான் பொய்..!! நீ யாரையோ லவ் பண்ற..!!”

“ப்ச்.. அதான் இல்லன்னு சொல்றேன்ல..??”

“கமான் அசோக்.. ஏன் மறைக்கிற..?? இத்தனை நாளா நீ எங்கிட்ட மறைச்சதுக்கே உனக்கு நல்ல பனிஷ்மன்ட் கொடுக்கணும்..!! சொல்லு.. யாரை லவ் பண்ற..?? எனக்கு இப்போ தெரிஞ்சாகனும்..!!”

“……………..”

“ஹ்ம்ம்ம்… எங்கிட்ட சொல்றதுல என்னடா தயக்கம்..?? இதுதான் நீ என் ப்ரெண்ட்ஷிப்கு தர்ற மரியாதையா..?? யாரை லவ் பண்ணாலும் உடனே எங்கிட்ட வந்து சொல்லிருக்க வேணாமா..?? ம்ம்..??” ப்ரியா புன்னகையுடன் கேட்க, அசோக்கும் ஏதோ ஞாபகத்தில்..

“ப்ச்.. வேற யாரையாவது லவ் பண்ணிருந்தாத்தான் உடனே உன்கிட்ட சொல்லிருப்பேனே..!!” என்று அவசரமாக சொல்லிவிட்டான். ப்ரியாவிற்கு உடனே சுருக்கென்று இருந்தது. ‘என்ன சொல்லுகிறான் இவன்..??’

“எ..என்ன..?? இப்ப என்ன சொன்ன.. திரும்ப சொல்லு..??” என்று நெற்றியை சுருக்கியவாறு கேட்டாள். அசோக் இப்போது சுதாரித்துக்கொண்டவனாய்..

“யா..யாரையாவது லவ் பண்ணிருந்தாத்தான் உடனே உன்கிட்ட சொல்லிருப்பேனேன்னு சொன்னேன்..!!” என்று சற்று முன் சொன்னதை சற்றே மாற்றி சொன்னான்.

“இல்ல இல்ல.. வேற யாரையாவதுன்னு சொன்ன..?? அப்படின்னா என்ன அர்த்தம்..??”

“ப்ச்.. அப்படிலாம் நான் சொல்லவே இல்ல..!!”

“ம்ஹூம்.. எனக்கு தெளிவா கேட்டுச்சு..!! வேற யாராவதா இருந்தா எங்கிட்ட உடனே சொல்லிருப்ப.. அப்போ யாரா இருந்தா எங்கிட்ட சொல்ல தயங்கிருப்ப..?? யோசிச்சு பாத்தா.. ம்ம்ம்.. ம்ம்ம்..”

ப்ரியாவின் மூளை இப்போது சுர்ரென சுறுசுறுப்பாக இயங்கியது. ஆறு வருடங்களாக அசோக்குக்கும் அவளுக்குமான நிகழ்வுகள்.. அப்போது அவனுடைய பேச்சு.. பார்வை.. நடவடிக்கைகள்.. எல்லாம் பளிச் பளிச்சென மின்னல் போல அவளுடைய நினைவில் வந்து போயின..!! அவள் தலையை சற்றே கவிழ்த்தவாறு அந்த மாதிரி யோசித்துக்கொண்டிருக்க, அசோக் அவளுடைய முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தான். எல்லாவற்றையும் அவசரமாய் ஆராய்ந்த ப்ரியாவின் புத்தி.. அவளுக்கு ஒரு முடிவை அறிவிக்க.. அவள் இப்போது தனது கருவிழிகளை மேலே உருட்டி.. அசோக்கின் முகத்தை ஒரு மேல்ப்பார்வை பார்த்து.. பட்டென்று கேட்டுவிட்டாள்..!!

“நீ என்னைத்தான லவ் பண்ற..??”

“ஹேய்.. அ..அதுலாம் ஒண்ணுல்ல..!!” அசோக் தடுமாற்றமாய் சொன்னான்.

“இல்ல இல்ல.. நீ என்னைத்தான் லவ் பண்ற..!! மறைக்காத அசோக்.. உண்மையை சொல்லு.. ப்ளீஸ்..!!” ப்ரியா தவிப்பாக கேட்டாள்.

“ஏய்.. அதான் இல்லைன்னு சொல்றேன்ல..??” அசோக் சொல்லும்போதே அவனையும் அறியாமல், ஒரு சிறு புன்னகை அவனுடைய இதழ் வழியே கசிந்தது.

“பாரு பாரு.. சிரிக்கிற பாரு..!! இட்ஸ் கன்ஃபார்ம்ட்.. யு ஆர் இன் லவ் வித் மீ..!!” ப்ரியா முகமெல்லாம் பரவசமாய் சொல்ல, அசோக் இப்போது பட்டென முகத்தை இறுக்கமாக்கிக் கொண்டான்.

“ஒய்.. உனக்கென்ன லூசா..?? சொன்னா புரியாதா..?? நான்தான் இல்லைன்னு சொல்றேன்ல..?? அப்புறமும் நாந்தான நாந்தானன்னு கேட்டா என்ன அர்த்தம்..?? நான் யாரையும் லவ் பண்ணலை.. லவ் பண்ணலை.. லவ் பண்ணலை..!! போதுமா..???”

அசோக் அப்படி பெரிய குரலில் கத்த, ப்ரியா இப்போது சோர்ந்து போனாள். அவனுடைய முகத்தையே ஒருமாதிரி ஏக்கமாய் பார்த்தாள். ‘ஏண்டா இப்படி என்னை சித்திரவதை செய்கிறாய்..??’ என்பது போல இருந்தது அந்தப்பார்வை. அசோக்கும் அவளுடய முகத்தையே குறுகுறுவென பார்த்துக் கொண்டிருந்தான். அவனுடய பார்வையில் ஒரு குறும்பு மிளிர்ந்ததை ப்ரியா சில வினாடிகளிலேயே புரிந்து கொண்டாள். அதுவரை அவனை ஏக்கமாக பார்த்துக் கொண்டிருந்தவள், இப்போது பட்டென முகம் மாற்றிக்கொண்டு முறைத்தாள்.

“நீ என்னைத்தான் லவ் பண்ற.. எனக்கு நல்லா தெரிஞ்சு போச்சு..!! ஆனா.. அதை சொல்றதுக்கு உன் ஈகோ இடம் குடுக்கலைல..?? இத்தனை நாளா நான் ஈகோ பாத்துட்டு உன்னை கஷ்டப்படுத்தினேன்னு.. நீ இப்போ என்னை கஷ்டப்படுத்தி பாக்க நெனைக்கிறல..?? பரவால.. இட்ஸ் ஓகே..!! நானும் பாக்குறேன்.. எத்தனை நாள் நீ இப்படி இருக்குறேன்னு பாக்குறேன்..!! ‘என் லவ்வை அக்சப்ட் பண்ணிக்கோ ப்ரியா’ன்னு உன்னை எங்கிட்ட வந்து கெஞ்ச வைக்கிறனா இல்லையான்னு பாரு..!!”

ப்ரியா சவால் விடுவது மாதிரி சொன்னாள். மார்பில் புரண்ட கூந்தலை தூக்கி பின்புறம் வீசியவள், விடுவிடுவென படிக்கட்டை நோக்கி வேகமாய் நடந்தாள். அசோக்கும் இப்போது மெல்ல அவன் நின்றிருந்த இடத்தை விட்டு நகர்ந்தான். படிகளில் தபதபவென்று கோபமாக இறங்குகிற ப்ரியாவை, மேலிருந்து பார்த்தான். அவ்வளவு நேரம் தயங்கி தயங்கி சிந்திய புன்னகையை, அவன் உதடுகள் இப்போது தாராளமாய் சிந்தின. ‘போடீ லூசு.. சவால் விடுற ஆளைப்பாரு..!!’ என்று முணுமுணுத்தன.

அத்தியாயம் 23

ப்ரியா அன்று வீட்டுக்கு சென்றதுமே தன் அப்பாவை பார்த்து முதலில் பேசிய வார்த்தைகள்..

“உங்களுக்கு சிக்கன் பிரியாணி பண்ண தெரியும்ல டாடி..??”

அடுத்த நாள் காலையில் ஐந்து மணிக்கெல்லாம் வரதராஜன் எழுந்துவிட்டார். மகளுக்கு திடீரென என்னாயிற்று என்ற குழப்பத்துடனே, மணக்க மணக்க சிக்கன் பிரியாணி தயார் செய்தார். எழுந்து குளித்து ஆபீசுக்கு கிளம்பிய ப்ரியா, அப்பா செய்து வைத்திருந்த பிரியாணியை ஒரு பெரிய டப்பாவில் அடைத்து எடுத்துக் கொண்டாள்.

“எனக்கு எதுவும் புரியலைம்மா.. திடீர்னு ஏன் உனக்கு சிக்கன் பிரியாணி மேல ஆசை..?? அதுவும் காலாங்காத்தால..??”

அப்பாவின் கேள்விக்கு ப்ரியா பதில் சொல்லாமல் புன்னகைத்தாள். ஷோல்டர் பேகுக்குள் அந்த டப்பாவை திணித்து, ஜிப் இழுத்து மூடினாள். பேகை தோளில் மாட்டிக்கொண்டாள்.

அடுத்து ஒரு மணி நேரம் கழித்து.. அவர்கள் ஆபீஸ் கேஃபிட்டீரியாவில்.. அந்த பிரியாணி டப்பா மூடி திறக்கப்பட்டு கிடந்தது..!! ஒருவித தயக்கத்துடனே.. ஓரக்கண்ணால் ப்ரியாவை மிரட்சியாக பார்த்துக்கொண்டே.. ஒரு கையால் பிரியாணி அள்ளி.. மெல்ல வாயில் திணித்துக்கொண்டாள் செண்பகம்..!!

6

“உ..உங்களுக்கு..??” அசை போட்டுக்கொண்டே ப்ரியாவிடம் கேட்டாள்.

“ச்ச.. அக்காக்கு வேணாண்டா.. எல்லாம் உனக்குத்தான்.. சாப்பிடு..!! இந்தா.. முட்டை எடுத்து வச்சுக்கோ..!!”

கனிவுடன் சொல்லிக்கொண்டே, தனியாக இருந்த அவித்த முட்டையை எடுத்து, தட்டில் வைத்தாள் ப்ரியா. செண்பகம் மெல்ல அதை கையில் எடுத்து, ஒரு கடி கடித்துக்கொண்டே கேட்டாள்.

“என்னால நம்ப முடியலைக்கா.. நெஜமாவே நீங்க அசோக் மாமாவை லவ் பண்றீங்களா..??”

“ஆமாண்டா..!! இப்போ இல்ல.. ரொம்ம்ம்ப நாளா லவ் பண்றேன்.. அவன் எனக்குத்தான் சொந்தம்னு என் மனசுக்குள்ள ஒரு பொசஸிவ்னஸ்..!! அந்த பொசஸிவ்னஸ்லதான் அக்கா அப்படி எல்லாம் நடந்துக்கிட்டேன்.. தேவை இல்லாம உனக்கு நெறைய கஷ்டம் கொடுத்திட்டேன்.. அக்காவை மன்னிச்சுடுடா.. ப்ளீஸ்..!!”

“சேச்சே.. பரவாலக்கா.. உங்க மேல எந்த தப்பும் இல்ல.. உங்க பொசிஷன்ல இருந்திருந்தா நானும் இதைத்தான் செஞ்சிருப்பேன்..!!” என்று சொன்ன செண்பகம் அடுத்த நொடியே செய்தது, லெக்பீஸை வாயால் கவ்வி இழுத்ததுதான்..!!

“ஹையோ.. ஹவ் ஸ்வீட் ஆஃப் யூ..!!! உன்னைப்போய் இப்படி கஷ்டப்படுத்திட்டனே.. அதை நெனச்சாத்தான் அக்காவுக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு செண்பகம்..!!”

“இட்ஸ் ஓகேக்கா..!!” என்று வெகுளியாக புன்னகைத்த செண்பகம், உடனே..

“பிரியாணி சூப்பரா இருக்குக்கா..!!” என்று பல் இளித்தாள்.

“ஓ..!! உனக்கு புடிச்சிருக்கா..??”

“ஹ்ம்ம்.. ரொம்ப பிடிச்சிருக்கு.. நல்லா பண்ணிருக்கீங்க..!!”

“ஹாஹா.. ஆக்சுவலா இதை விட பிரம்மாதமா பண்ணுவேன் செண்பகம்.. இன்னைக்கு காலாங்காத்தால எழுந்து.. தூக்க கலக்கத்தோடவே பண்ணினனா.. அதான் கொஞ்சம் சரியா வரல..!! பிரியாணி பண்றதுல என்னை அடிச்சுக்க ஆளே இல்ல.. தெரியுமா..??” ப்ரியா வாய் கூசாமல் பொய் சொன்னாள்.

“ஓ.. அப்படியாக்கா..??” அதையும் நம்பி, செண்பகம் அப்பாவியாக வாய் பிளந்தாள்.

“ஹ்ம்ம்..!! அசோக்குக்கும் எனக்கும் மேரேஜ் மட்டும் ஆகட்டும்.. அக்கா உனக்கு டெயிலி பிரியாணி பண்ணித் தரேன்.. சரியா..??” ப்ரியா ஆசை வார்த்தை காட்ட,

“ம்ம்ம்ம்.. தேங்க்ஸ்க்கா..!!” செண்பகத்தின் கண்களில் இப்போதே கலர்கலராய் பிரியாணி கனவு.

“ஹ்ம்ம்.. ஊர்ல இருந்து வந்தவங்கலாம் என்னைக்கு கெளம்புறாங்க..??”

“இன்னைக்கு கெளம்பிடுவாங்கக்கா.. அத்தையும் மாமாவும் மட்டும் ரெண்டு நாள் இருந்துட்டு கெளம்புவாங்க..!! வீட்ல எல்லாருக்கும்..” செண்பகம் பாதியிலேயே நிறுத்திவிட்டு பிரியாணியை அசை போட..

“ம்ம்..?? எல்லாருக்கும்..??” ப்ரியா பொறுமை இல்லாமல் கேட்டாள்.

“எல்லாருக்கும் உங்களை ரொம்ப பிடிச்சு போச்சுக்கா..!! உங்களைத்தான் மேரேஜ் பண்ணிக்கனும்னு.. அசோக் மாமாவை எல்லாரும் நேத்து கம்பல் பண்ணாங்க..!!”

“ஓ..!! இவன் என்ன சொன்னான்..??”

“நானே கை உடைஞ்சு கெடக்குறேன்.. இப்போ வந்து கல்யாணம் பத்தி பேசுறீங்க.. எல்லாம் கொஞ்ச நாள் போகட்டும்’னு சொன்னாரு..!!”

“பாத்தியா.. பாத்தியா..?? வேணாம்னும் சொல்லல.. வேற பொண்ணு பாருங்கன்னும் சொல்லல..!! இதுல இருந்தே தெரியல.. அவன் என்னைத்தான் லவ் பண்றான்னு..??”

“ஆமாக்கா.. நீங்க சொல்றது சரிதான்..!! கொஞ்ச நாளாவே.. எனக்கு கூட அந்த சந்தேகம் மைல்டா இருக்குது..!!”

“எ..எப்படி சொல்ற..??”

“மாமா அடிக்கடி அவர் லேப்டாப்ல.. உங்க போட்டோஸ்லாம் எடுத்து.. மொறைச்சு மொறைச்சு பாத்திட்டு இருப்பாரு..!!” செண்பகம் சொல்ல, ப்ரியாவின் மனதில் அப்படி ஒரு புல்லரிப்பு.

“ஆஹா.. இது எப்போ இருந்து..??”

“நான் வந்ததுல இருந்தே கவனிச்சுட்டுத்தான்க்கா இருக்குறேன்..!!”

“ஓஹோ..?? அதுசரி.. என் ஃபோட்டோஸ் எப்படி அவனுக்கு கெடைச்சது..??”

“நீங்கதான் ஷேர் பண்ணினதா சொன்னாரு..??”

“நானா..?? நான் எங்க ஷேர் பண்ணினேன்..?? ஹ்ம்ம்… இப்போ புரியுது..!! அவனுக்கு என் மெஷின் அக்சஸ் கொடுத்திருந்தேன்ல.. அப்போ லவட்டிருப்பான்.. திருட்டுப்பய..!!”

“ஹாஹா..!!”

“ஹ்ம்ம்.. சந்தேகமே இல்ல செண்பகம்.. அவன் என்னைத்தான் லவ் பண்றான்..!!”

“ம்ம்.. எனக்கும் அப்படித்தான்க்கா தோணுது..!! ஆனா.. நீங்க லவ் பண்றேன் சொன்னப்புறமும்.. மாமா ஏன் இப்படி பிகு பண்றாரு..??”

“எல்லாம் கொழுப்புதான்.. வேறென்ன..?? ஈகோ புடிச்ச பய..!! நான் இத்தனை நாளா அவனை கஷ்டப்படுத்தினேன்ல.. அதான் அவன் கொஞ்ச நாள் என்னை காய விடலாம்னு நெனைக்கிறான்..!! ஹ்ம்ம்.. என் மேல எவ்வளவு பிரியமா இருப்பான் தெரியுமா.. எப்படி இழைவான் தெரியுமா.. என்னெல்லாம் ஹெல்ப் பண்ணிருக்கான் தெரியுமா..?? என்னைக்கு அந்த நாசமாப்போன அவார்ட் எனக்கு குடுத்தாங்களோ.. அன்னைக்கு ஆரம்பிச்சது எல்லாம்..!! இல்லனா.. நானும் அவனும் சேர்றதுல எந்த பிரச்சினையும் வந்திருக்காது..!!”

“கவலைப்படாதீங்கக்கா.. மாமாவை எப்படியும் நம்ம வழிக்கு கொண்டு வந்துடலாம்..!!” செண்பகம் சொல்ல, ப்ரியாவுக்கு லேசாக முகம் சுருங்கியது.

“எ..என் வழிக்குன்னு சொல்லேன்..??”

“ஓகே ஓகே.. உங்க வழிக்கு கொண்டு வந்துடலாம்..!!” இப்போது ப்ரியாவின் முகத்தில் இப்போது மீண்டும் பல்பு எரிந்தது.

“நல்லா அள்ளி சாப்புடு செண்பகம்.. குருவி மாதிரி கொறிச்சுட்டு இருக்குற..?? நீ வந்தப்போ இருந்ததுக்கு.. இப்போ ரொம்ப எளைச்சு போயிட்ட..!!” என்று பாசத்தை பொழிந்தாள்.

“ம்ம்.. ஆமாக்கா.. பெங்களூர் சாப்பாடு எனக்கு புடிக்கவே இல்ல..!!” செண்பகமும் மனசாட்சியே இல்லாமல் கவலைப்பட்டாள்.

- தொடரும்

மேலும் செக்ஸ் கதைகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் :

தமிழ்காமவெறி தளம்

ஐ ஹேட் யூ, பட் – பகுதி 38

$
0
0

“ஹ்ம்ம்.. உன் மாமனை வழிக்கு கொண்டு வர்றதுக்கு.. நீதான் அக்காவுக்கு ஹெல்ப் பண்ணனும் செண்பகம்..!!”

“சொல்லுங்கக்கா.. என்ன ஹெல்ப்பா இருந்தாலும் பண்றேன்..!!”

“உனக்கு ஏதாவது ஐடியா தோணுச்சுனா சொல்லேன்..??”

மேலும் செக்ஸ் கதைகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் :

தமிழ்காமவெறி தளம்

“ஐடியாவா..??”

செண்பகம் பிரியாணியை அசை போட்டுக்கொண்டே யோசித்தாள். ‘என்ன பண்ணலாம்.. என்ன பண்ணலாம்..’ என்று முணுமுணுத்தவாறே நெற்றியை கீறிக்கொண்டாள். ப்ரியா செண்பகத்தின் முகத்தையே ஆர்வமாய் பார்த்துக்கொண்டிருக்க.. அவள் இப்போது திடீரென முகம் மலர்ந்து போய் கேட்டாள்.

“ஆங்.. உங்களுக்கு சொறாப்புட்டு பண்ணத் தெரியுமாக்கா..??” செண்பகம் அப்படி கேட்டதுமே, ப்ரியாவின் முகம் காற்றுப் போன பலூன் மாதிரி ஆனது.

“ஏன் கேக்குற..?? சொறாப்புட்டு தின்னாத்தான் உனக்கு ஐடியா வருமோ..??” என சற்று கடுப்புடனே கேட்டாள்.

“ஐயோ.. அதுக்கு இல்லக்கா.. உங்களுக்கு பண்ண தெரியுமா.. தெரியாதா..??”

“தெ..தெரியும்..!! என்ன மேட்டர்னு சொல்லு..!!”

“மாமாவுக்கு சொறாப்புட்டுன்னா ரொம்ப புடிக்கும்க்கா..!!”

“அதுக்கு..????”

“எனக்கு பிரியாணி பண்ணி கொண்டு வந்த மாதிரி.. மாமாவுக்கு சொறாப்புட்டு பண்ணி கொண்டு போய் குடுங்க.. மாமா மனசு மாறிடுவாருன்னு நெனைக்கிறேன்..!!”

செண்பகம் படுசீரியசாக சொல்லிவிட்டு பற்களை காட்ட.. ப்ரியா அவளை கேவலமாக ஒரு பார்வை பார்த்தாள்..!! ‘முடியல..’ என்பது போல சலிப்பாக தலையசைத்தாள். ‘சொறாப்புட்டுக்கு மயங்குறவனா உன் கேடிப்பய மாமன்..?? உன்கிட்ட வந்து ஐடியா கேட்டேன் பாரு.. என்னை சொல்லணும்..!!’ என்று மனதுக்குள்ளேயே நொந்து கொண்டாள்.

“என்னக்கா.. ஒன்னும் சொல்ல மாட்டேன்றீங்க..??”

“ஒண்ணுல்ல..!! ஐடியாலாம் அக்காவே யோசிச்சுக்குறேன்.. நீ தேவை இல்லாம உன் ப்ரயினை போட்டு பிராண்டாத.. சரியா..?? பாரு.. பிரியாணி அப்படியே இருக்கு.. சாப்பிடு சாப்பிடு.. காலி பண்ணு..!!”

செண்பகம் மீண்டும் சுறுசுறுப்பாய் பிரியாணி சாப்பிட ஆரம்பித்தாள். அவள் சாப்பிட்டு முடிக்கும்வரை.. அவளுடைய முகத்தையே.. கன்னத்தில் கைவைத்தவாறு.. கவலையுடன் ப்ரியா பார்த்துக் கொண்டிருந்தாள்.

அசோக்கைப் பற்றி ப்ரியா நினைத்தது சரிதான். அவள் கணித்த மாதிரியான ஒரு மனநிலையில்தான் அசோக் இருந்தான். அவனுக்கு ப்ரியா மீது காதல் இருந்தாலும், அதற்கு போட்டியாக எரிச்சலும், கோபமும் இருந்தது. கை முறிந்து போனதினால் வந்த ஆத்திரம் வேறு. அதனால்தான் ப்ரியா வந்து மன்னிப்பு கேட்டும், மனதை திறந்து காட்டியும், அவனது காதலை உடனே வெளிப்படுத்திவிட அவனுடைய ஈகோ தடுத்தது. ‘இத்தனை நாளா என்னை என்ன பாடுபடுத்தின.. நீ கொஞ்ச நாள் என் பின்னாடி அலை..!!’ என்பது மாதிரியான எண்ணம்..!!

ஒரே நாளில்.. ஒரே பிரியாணியில்.. ப்ரியாவும் செண்பகமும் ஒன்றுக்குள் ஒன்றாக ஆகிப் போனார்கள்..!! அன்று இரவு அசோக்கின் வீட்டிற்கு ஒன்றாக ஸ்கூட்டியில் சென்று இறங்கினார்கள். ஏதோ பேசி சிரித்துக்கொண்டே இருவரும் வீட்டுக்குள் நுழைய, அதைப் பார்த்த அசோக், சற்றே டென்ஷன் ஆகிப் போனான். அப்புறம் தனிமையில் செண்பகத்திடம் கேலியாக கேட்டான்.

“என்ன செம்பு.. அக்கா அக்கான்னு ரொம்பத்தான் அவகிட்ட குழையுற.. ஒரே நாள்ல.. க்ளோஸ் பிரண்ட்ஸ் ஆயிட்டிகளோ..??”

“ம்ம்.. ஆமாம் மாமா..!!”

“ஹ்ம்ம்.. பாத்து ஜாக்கிரதையா இருந்துக்கோ..!!”

“ஜாக்கிரதையாவா..?? எதுக்கு..??”

“நானும் ஒரு காலத்துல அவகூட இந்த மாதிரி க்ளோஸா இருந்தவன்தான்.. இப்போ நெலமையை பாத்தேல..??” என்று அசோக் கட்டுப்போட்டிருந்த கையை ஆட்டி காட்டினான்.

“ம்ம்ம்ம்..” செண்பகம் சற்றே மிரட்சியாய் அந்த கையை பார்த்தாள்.

“உனக்கு எந்த லாரி ரெடி பண்ணி வச்சிருக்காளோ..?? ஹ்ம்ம்ம்… நாளைக்கு மொத வேலையா.. உன் பேர்ல பத்து லட்ச ரூபாய்க்கு.. ஒரு இன்ஷ்யூரன்ஸ் பாலிசி எடுக்கணும் செம்பு..!!” அசோக் கேஷுவலாக செண்பகத்திற்கு கிலி கிளப்பிவிட்டு சென்றான்.

உள்ளுக்குள் சற்றே உதறல் எடுத்தாலும் ப்ரியாவின் நட்பை, செண்பகம் உதறிவிடவில்லை. தினமும் மாலை ஒன்றாகவே ப்ரியாவுடன் அசோக்கின் வீட்டுக்கு வருவாள். சிறிது நேரம் அங்கே செலவழித்துவிட்டு, அப்புறம் ப்ரியாவே அவளை ஹாஸ்டலில் கொண்டு விடுவாள். ப்ரியாவுக்கும் அசோக்குக்கும் இடையிலான இந்த நட்பு, காதல், மோதல் எல்லாம் செண்பகம் மூலமாக செல்விக்கும் ராஜேஷுக்கும் மேலோட்டமாக தெரிந்து போனது. அசோக்கின் ஈகோதான் இப்போது இடையில் நிற்கும் ஒரே ஒரு தடைக்கல் என்பதை அவர்களும் புரிந்து கொண்டார்கள். அவனை வழிக்கு கொண்டுவர அவர்களும் முயற்சித்தார்கள். அசோக்கிற்கும் ப்ரியாவிற்கும் திருமணம் நடப்பது உறுதி செய்யப்பட்டு விட்டது போலவே அவனிடம் பேசி, அவனுக்கு டென்ஷன் கிளப்புவார்கள்.

அசோக் அவனுடைய அறைக்குள் அமர்ந்திருக்கும்போதே, செல்வியும் ப்ரியாவும் உள்ளே நுழைந்து, அவனை கண்டுகொள்ளாமல், அவர்களுக்குள்ளேயே பேசிக்கொள்வார்கள்.

“இந்த ரூமையே எடுத்துக்கங்க ப்ரியா.. இதுதான் உங்களுக்கு ரொம்ப வசதியா இருக்கும்..!! இந்த வீட்டுலயே ரெண்டு ஜன்னல் இருக்குற ஒரே ரூம் இதுதான்.. நல்ல வெளிச்சமா, காத்தோட்டமா இருக்கும்..!!” என்பாள் செல்வி.

“ஹையோ.. ஜன்னல்லாம் எதுக்குக்கா..?? எந்த நேரமும் அடைச்சுத்தான் வச்சிருக்க போறோம்..?? அதனால என்ன யூஸ்..??” ப்ரியா ஒரு தொலைநோக்கு பார்வையுடன் சொல்வாள்.

“ஹ்ம்ம்.. அதுவும் சரிதான்..!!”

“இந்த ரூம் ஓகேதான்க்கா.. ஆனா ஒரே டன்ஜனா இருக்குற மாதிரி இருக்கு..!!”

“ஐயையே.. இந்தப்பய ரூமை அந்த மாதிரி போட்டு வச்சிருக்கான் ப்ரியா..!! எல்லாத்தையம் ஒதுங்க வச்சு அக்கா உனக்கு அரேஞ்ச் பண்ணி தரேன்..!!”

“ஓ.. தேங்க்ஸ்க்கா..!!” ப்ரியா குழைந்துகொண்டு சொல்ல, அசோக்கால் அதற்கு மேலும் பொறுக்கக்க முடியாது.

“யார் வீட்டுல வந்து.. யார் ரூம் செலக்ட் பண்ணிட்டு இருக்கீங்க.. வெளில ஓடிப்போங்க ரெண்டு பேரும்..!!” என்று ஆத்திரமாக கத்தி அவர்களை விரட்டுவான்.

மற்றவர்கள் இப்படி என்றால், ப்ரியாவின் அணுகுமுறை வேறு மாதிரி இருந்தது. அசோக் குடும்பத்தார் அனைவருடனும் ஏற்பட்டிருந்த ஸ்னேஹம் அவளுக்கு ஒரு புது தைரியத்தை அளித்திருந்தது. அசோக் தன்னை காதலிக்கிறான் என்பது உறுதிப்பட்டு போனதால், அதிரடியாகவே அவனை அணுகினாள். எப்படி என்றால்..

அன்று.. அசோக்குக்கு கை உடைந்து போய் இரண்டு வாரங்களுக்கு மேல் கியிருந்தது. இரண்டு வாரங்களாக மழிக்கப்படாத தாடி சொரசொரவென அவனுடைய தாடையில் உறுத்தியது. ஒற்றை கையுடனே ஷேவ் செய்துகொள்ள கிளம்பினான். சோப்பு நுரையை முகத்தில் தடவிவிட்டு நிமிர்ந்தபோது, அறை வாசலில் நிழலாட, நிமிர்ந்து பார்த்தான். கைகளை மார்புக்கு குறுக்காக கட்டியவாறு ப்ரியா நின்றுகொண்டிருந்தாள். நுரை பொங்கும் இவனுடைய முகத்தையே, கண்களில் ஒரு குறும்பு கொப்பளிக்க பார்த்துக் கொண்டிருந்தாள். இவன் அவளை பார்த்து ஒரு ஏளனப் பார்வையை வீசிவிட்டு, ரேசர் எடுத்து கன்னத்தில் இழுத்துக்கொள்ள ஆரம்பித்தான்.

ஒற்றை கையுடன் ஷேவ் செய்து கொள்வது அவ்வளவு எளிதல்ல என்பது ஓரிரு இழுப்பிலேயே அவனுக்கு புரிந்து போனது. அடர்த்தியாய் வளர்ந்துவிட்ட மயிர்கள் ப்ளேடுக்குள் சிக்கி வெட்டுப்பட மறுத்தன. அவஸ்தையாய் நெளிந்த அவனுக்கு உதவி செய்ய ப்ரியா முன்வந்தாள்.

“குடு.. நான் பண்ணி விடுறேன்..!!” என்றாள் அன்பாக.

“வேணாம் விடு.. நானே பண்ணிக்கிறேன்..!!” அசோக் சலிப்பாக சொன்னான்.

“ப்ச்.. குடுன்றேன்ல..?? இது ஜஸ்ட் ஒரு ஃப்ரண்ட்லி ஹெல்ப்.. இதுக்காகலாம் உன்கிட்ட இருந்து ஸ்பெஷலா எதுவும் எதிர்பார்க்க மாட்டேன்..!!”

“வே..வேணாம் ப்ரியா..!!”

“அடச்சை.. குடுடா..!!”

ப்ரியா அவன் கையில் இருந்த ரேசரை பிடுங்கிக் கொண்டாள். அசோக் முகத்தை உர்ரென்று வைத்தவாறு நின்றிருக்க, இவள் அவனுக்கு சவரம் செய்துவிட ஆரம்பித்தாள். ஒரு கையால் அவனுடைய கன்னத்து தோலை அழுத்தி பிடித்துக்கொண்டு, இன்னொரு கையால் ரோமங்களை நுரையுடன் சேர்த்து அழகாக மழித்தெடுத்தாள். ப்ரியாவின் அருகாமை அசோக்கிற்கு ஒரு கிறக்கத்தை கொடுக்க ஆரம்பித்தது. அவளுடைய மேனியில் இருந்து வந்த இனிய வாசனை அவனது நாசியில் போதையாய் ஏறியது. தேனில் ஊறிய செர்ரி துண்டுகளாய் அவளுடைய உதடுகளை க்ளோசப்பில் பார்த்து, அவனுடைய இதயத்துடிப்பு படபடவென எகிறிக்கொண்டிருந்த போதுதான்..

15

“மொகரையை கொஞ்சம் லிஃப்ட் பண்ணு..!!” என்றாள் ப்ரியா.

அசோக் தன் தலையை உயர்த்தி தாடையின் அடிப்பாகத்தை அவளுக்கு காட்டினான். அவனுடைய மோவாயில் இருந்து கீழ்நோக்கி ரேசரை ஓட்டிவந்த ப்ரியா, சரியாக அவனது தொண்டைக்குமிழ் வந்ததும் நிறுத்தினாள். அதே நேரம் அவளுடைய இன்னொரு கையால் அசோக்கின் பின்னந்தலையை தாங்கி பிடித்துக் கொண்டாள். அசோக்கிற்கு ஒன்றும் புரியவில்லை.

“ஏ..ஏய்.. என்னாச்சு..??” தொண்டைக்குமிழ் அசையாத வண்ணம் மிக சிரமப்பட்டு பேசினான்.

“எங்க.. சொல்லு பார்ப்போம்..!!” என்றாள் ப்ரியா.

“சொ..சொல்லவா..?? என்ன சொல்ல..??”

“ஐ.. லவ்.. யூ..!! சொல்லு பார்ப்போம்.. ஐ.. லவ்.. யூ..!!” குழந்தைக்கு பேச சொல்லி தருவது போல ப்ரியா சொல்ல, அசோக் இப்போது டென்ஷன் ஆனான்.

“ஏ..ஏய்.. எ..என்ன.. வெளையாடுறியா..?? கையை எடுடி..!!” பதற்றமாக சொன்னான்.

“மவனே.. இப்போ மட்டும் நீ ஐ லவ் யூ சொல்லல.. இங்க புடைச்சிருக்கு பாரு.. இதுலயே ப்ளேடால சரக் சரக்னு கோடு போடப்போறேன்..!! மரியாதையா என்னை லவ் பண்றதை ஒத்துக்கோ..!!”

“நா..நான் ஒன்னும் உன்னை லவ் பண்ணலை..!!”

“அப்புறம் என்ன ஹேர்-க்கு என் ஃபோட்டோவை.. திருட்டுத்தனமா உன் லேப்டாப்ல வச்சு பாத்துட்டு இருக்குற..??”

“உனக்கு யார் சொன்னது..??”

“யார் சொன்னா என்ன..?? உண்மையா இல்லையா..??”

“நீ..நீயுந்தான் என் ஃபோட்டோவை திருட்டுத்தனமா வச்சு பாத்துட்டு இருந்திருக்குற..??”

“ஆமாம்.. நான் உன்னை லவ் பண்றேன்.. பாக்குறேன்..!! நீ என்ன டேஷ்-க்கு பாக்குற..??”

“மொ..மொதல்ல நீ கையை எடு.. நான் சொல்றேன்..!!”

“இல்ல.. நீ சொல்லு.. நான் கையை எடுக்குறேன்..!!”

“ஹேய்.. எடுடி.. பேசுறதுக்கே கஷ்டமா இருக்கு.. கட் ஆயிடுமோன்னு பயமா இருக்கு..!!” அசோக் கெஞ்ச, ப்ரியா அவளது உடும்பிப்பிடியை தளர்த்தினாள்.

“ஹ்ம்ம்.. இப்போ சொல்லு..!! என்னை லவ் பண்றதான..??”

“நா..நான் ஒன்னும் உன்னை லவ் பண்ணல.. லவ் பண்ணலாம்னு ஒரு காலத்துல ஒரு ஐடியா இருந்தது.. அந்த ஆசைலதான் உன் ஃபோட்டோஸ்லாம் சுட்டேன்..!!” அசோக் தனது கழுத்தை தடவிக்கொண்டே சொன்னான்.

“ஹ்ம்ம்.. கழுத்துல கத்தியை வச்சதுந்தான்.. உண்மை கொஞ்சம் கொஞ்சமா வெளில வருது..!! சரி.. என்னை லவ் பண்ற அந்த ஐடியா இப்போ எந்த ஸ்டேஜ்ல இருக்கு..??”

“ஆங்..?? என்னைக்கு நீ டெக்லீட் ஆகி.. ஈகோ வெறியாட்டம் போட ஆரம்பிச்சியோ.. அன்னைக்கே அந்த ஐடியாலாம் தூக்கி தூரமா போட்டாச்சு..!!”

“ப்ச்.. அதான்.. இனிமே நான் அப்படிலாம் நடந்துக்கமாட்டேன்னு அன்னைக்கே ப்ராமிஸ் பண்ணேன்ல ..?? இனிமே உன்னை எந்த வகைலையும் ஹர்ட் பண்ண மாட்டேன் அசோக்..!! இட்ஸ் ப்ராமிஸ்.. என்னை நம்பு ப்ளீஸ்..!!” ப்ரியா இப்போது ஏக்கமான குரலில் சொன்னாள்.

“ம்க்கும்.. உன் ப்ராமிசை தூக்கி குப்பைல போடு..!! ஹர்ட் பண்ண மாட்டாளாம்..?? இப்போ என் கழுத்துல ப்ளேடு வச்சு மெரட்டுனியே.. இதுக்கு பேர் என்ன..?? இந்த ஈகோ உன்கூடவே பொறந்தது.. அது என்னைக்கும் உன்னை விட்டு போகாது..!!”

“அட ராமா.. இது ஈகோவால செஞ்சதா.. உன் மேல இருக்குற லவ்வால அப்டி நடந்துக்கிட்டேன்டா..!! இட்ஸ் ப்யூர்லி லவ்..!!”

“ம்ம்.. ம்ம்..!! உன் லவ் ப்யூர்னு எனக்கு மொதல்ல நம்பிக்கை வரட்டும்.. உன்னை லவ் பண்ற ஐடியாவை அப்புறம் கன்சிடர் பண்றேன்..!!” அசோக் விடாப்பிடியாக சொல்ல, ப்ரியா இப்போது கடுப்பாகி போனாள்.

“உ..உன்னல்லாம்..?? உன்னல்லாம் திருத்தவே முடியாதுடா.. எப்படியோ போ..!!”

எரிச்சலாக கத்தியவள், ரேசரை அசோக்கின் கையில் ஆத்திரமாக திணித்தாள். திரும்பி அறை வாசலை நோக்கி விடுவிடுவென வேகமாக நடந்தாள். அவள் செல்வதையே பார்த்துக் கொண்டிருந்த அசோக், திடீரென ஏதோ ஞாபகம் வந்தவனாய் அவளுடய முதுகை பார்த்து கத்தினான்.

“ஏய்.. என் ஃபோட்டோவை MM-னு ஒரு ஃபோல்டர்ல போட்டு வச்சிருந்தியே.. MM-னா என்ன அர்த்தம்..??”

“ஆங்..?? மானங்கெட்ட மடப்பயன்னு அர்த்தம்..!!” ப்ரியா வெறுப்பாக கத்திவிட்டு அந்த அறையை விட்டு வெளியேறினாள்.

அதைக்கேட்டு அசோக் அப்போது முறைத்தாலும், அவனுடைய உள்மனம் இதையெல்லாம் ரசித்தது என்றுதான் சொல்லவேண்டும். ப்ரியா இந்த மாதிரி வலிய வந்து அவனிடம் வழிவது.. அவனுக்காக உருகுவது.. காதல் சண்டை இடுவது.. எல்லாமே அவனுக்கு பிடித்திருந்தது..!! இத்தனை நாளாய் அவனுடன் முட்டிக்கொண்டு நின்ற காதலி.. இப்போது அவனுடைய காதலுக்காக கையேந்தி நிற்பதை.. அவனுடைய இயல்பான ஈகோ மனம் மிகவும் விரும்பியது..!!

அவனுடைய மனம் அதையெல்லாம் ரசித்ததால்தான்.. அவனுக்கு கை சரியாகி, கட்டெல்லாம் அவிழ்த்தபிறகு.. அவன் திரும்ப ஆபீஸ் கிளம்புகிற நாளன்று நடந்த சம்பவத்தின்போது கூட.. அவன் அதிகப்படியான எதிர்ப்பொன்றும் காட்டவில்லை..!! அசோக்கை தனது ஸ்கூட்டியில் ஆபீஸ் அழைத்து செல்ல, அன்று காலையிலேயே ப்ரியா அவன் வீட்டிற்கு வந்து நின்றாள். அசோக் ஆரம்பத்தில் பிகு செய்தான். அவளுடன் வர மறுத்தான். தனது வண்டியில் சென்றுகொள்வதாக கூறினான். ப்ரியா செல்வியிடம் சென்று முறையிட, அவள் அசோக்கின் பைக் சாவியை எடுத்து மறைத்து வைத்துக் கொண்டாள்.

“அண்ணி.. வெளையாடாதீங்க அண்ணி.. பைக் சாவியை குடுங்க..!!” அசோக் செல்வியிடம் கெஞ்சினான்.

“எதுக்கு..?? மறுபடியும் ஏதாவது லாரியை போய் முட்டிப் பாக்குறதுக்கா..?? ஒழுங்கா அந்தப்புள்ள கூட போ.. பூப்போல கூட்டிட்டு போய்.. பூப்போல வந்து எறக்கி விடும்..!!”

“இவ கூடலாம் என்னால போக முடியாது..!!”

“அப்போ பஸ்ல போ..!!”

“பஸ்ஸா..?? பஸ்லலாம் போக முடியாது அண்ணி..!!”

“அப்போ இவ கூட போ..!!”

“அடச்சை.. என்ன இது.. சின்னப்புள்ளத்தனமா..?? எ..என்னால முடியாது..!!”

“அப்போ வீட்லயே கெட..!! எங்கயும் போக வேணாம்..!!”

“ஐயோ.. என்ன அண்ணி இது..?? வெளையாடாம சாவியை குடுங்க..!!”

“சாவியைலாம் தர முடியாது.. உன்னால முடிஞ்சதை பாத்துக்கோ..!!”

செல்வி தனது முடிவில் உறுதியாக இருக்க, அசோக்கிற்கு வேறு வழி இருக்கவில்லை. இவர்களுடைய மொத்த உரையாடலையும், புன்னகையுடனே பார்த்து ரசித்துக் கொண்டிருந்த ப்ரியாவிடம் திரும்பி சொன்னான். வேண்டா வெறுப்பாக ஒத்துக்கொள்பவன் மாதிரி நடித்தான்.

“சரி வா.. கெளம்பலாம்..!!”

இருவரும் வீட்டில் இருந்து கிளம்பினார்கள். அவர்கள் கிளம்புமுன், ப்ரியாவை தனியாக அழைத்து சென்று ராஜேஷ் ரகசியமான குரலில் சொன்னான்.

“பைக்ல ஒண்ணா போறது முக்கியம் இல்ல ப்ரியா.. லைஃப்ல நீங்க ஒண்ணா சேரனும்.. அதுதான் முக்கியம்..!! என்ன சொல்றேன்னு புரியுதா..??”

“ம்ம்.. புரியுது மாமா..!!” ப்ரியா புன்னகையுடன் கூறினாள்.

ப்ரியா வண்டியை ஸ்டார்ட் செய்ய, அசோக் பின் சீட்டில் ஏறி அமர்ந்து கொண்டான். வண்டியை கிளப்புமுன் ப்ரியா சொன்னாள்.

“பேலன்சுக்கு வேணா என் இடுப்பை புடிச்சுக்கோ.. நான் ஒன்னும் சொல்ல மாட்டேன்..!!”

“போ போ.. அதுலாம் ஒன்னும் வேணாம்.. ஐயா எப்போவும் ஸ்டெடி..!!”

அசோக் வீராப்பாக சொல்லி முடிக்கும் முன்பே, ப்ரியா ஆக்சிலரேட்டரை பிடித்து சரக்கென முறுக்க, ஸ்கூட்டி ஜிவ்வென்று சீறியது. அதை சற்றும் எதிர்பாராத அசோக், ‘ஆஆஆவ்..!!’ என்று கத்திக்கொண்டே முன்பக்கமாக பாய்ந்தான். ஆட்டோமெடிக்காக அவனுடைய கைகள் ரெண்டும்.. ப்ரியாவுடைய இடுப்பை இரண்டு புறமும் அழுத்தி பற்றிக்கொண்டன..!!

- தொடரும்

மேலும் செக்ஸ் கதைகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் :

தமிழ்காமவெறி தளம்

Viewing all 849 articles
Browse latest View live